தெரியலை.....

     ஆற்றை கடக்கும்போது தண்ணீர் முனங்கால் அளவிற்குத்தான் போனது... மழைக்காலம்...அந்த ஆறும் காட்டாறு..எப்போது மழை பெய்யுமோ அப்போதுதான் தண்ணீர் வரும்..அதுவும் சில நேரங்களில் அதிகமாக..குறைவாக..இப்படித்தான்.......முற்றிலும் மழை நின்றபிறகுதான் படிப்படியாக குறையும்..

     ஆற்றில் நீர் வந்தாலும் வராவிட்டாலும்  மிக பிடித்தமான இடம் அதுதான்..நிறைய பேசி இருக்கிறோம்..விளையாடியிருக்கிறோம் ...

    போனமுறை பார்த்ததுக்கு இப்போது இன்னும் அழகாயிருந்தாள்.....அதை அவளிடம் சொன்னால் திட்டுவாள்..என்பதால் ரசிக்க மட்டும் செய்தேன்...ஊரில் நடந்த எல்லா விசயங்களையும் முடிந்தால் நடித்துக்காட்டி ஒன்றுவிடாமல் அழகாய் சொல்லுவாள்...நான் அதிகம் பேசுவது இல்லை..அவளின் அந்த அழகான பேச்சை கேட்பதற்காகவே...

    "நான் எவ்வளவு பேசுகிறேன் நீ ஏன் எதுவுமே என்னிடத்தில் சொல்லமாட்டிக்கிறே?"

"சொல்வதற்க்கு ஒன்றும் இல்லையே" என்றேன்

"வேண்டாம் நீ வாய் திறக்காமல் இருப்பதே நல்லது..அறிவியல் பேசுவாய்..அதுக்கு இப்படியே இரு" என்றாள்

கிழே கிடந்த ஒரு கல்லை எடுத்து தூரத்தில் இருந்த கிணற்றை காட்டி...

   "இங்கு இருந்தபடியே அந்த கிணற்றுக்குள் கல்லை எறிந்தால் என்ன தருவாய்?" என்றேன்

    "நீ போடு இல்லை போடாமல் போ.... நான் எதுக்கு உனக்கு எதுவும் கொடுக்கணும்"

"இல்லை இது ஒரு பந்தயம் மாதிரி"

    "நீ எதுக்கு இதை ஆரம்பிக்கிறே....... இந்த தனிமையில் பந்தயத்திற்கு நீ என்ன கேட்பாய் எல்லாம் எனக்கு தெரியும்..நான் வரவில்லை " என்றாள்

"எப்பதான் நீ திருந்துவே?"

"திருமணத்திற்கு பிறகு" என்றாள்


    நீர் ஓடும இடத்திற்கு அருகில் உடகார்ந்து ஊற்றை தோண்டி அதில் தெளிந்த நீர் வரும் வரை தண்ணீரை கையால் இறைத்து ஊற்றி கொண்டு இருந்தாள்...நான் அருகில் அமர்ந்து பார்த்துகொண்டு இருந்தேன்...

"உனக்கு பயமாக இல்லையா?

"எதுக்கு பயம்?" கேட்டாள் தண்ணீரை இறைத்து ஊற்றியபடியே

"நம் காதல் திருமணத்தில் முடியுமா இல்லையா என்பதை பற்றி?"

"இல்லை?"என்றாள்

"ஏன்?"

     "உன்னை உணமையாக காதலிக்கிறேன் ..வீட்டில் சொல்லி பார்ப்பேன்..தடுத்தால் உன்னோடு வந்துவிடுவேன்..இதில் என்ன பயம் வேண்டியதிருக்கு"என்றாள்

"நான் உன்னை வேண்டாம் என்றால்?"

    சட்டென்று அவளின் கண்ணில் நீர் அரும்பியது...ஏதும் பதில் சொல்லாமல் மறுபக்கம் திரும்பிகொண்டாள்.

  அபோதுதான் நான் கவனித்தேன்..அவள் தோண்டிய ஊற்றின் மீது தண்ணீர் சென்று கொண்டு இருப்பதை..காரணம் புரிந்தது..ஆற்றில் தண்ணீர் கூடுகின்றது...

    எங்காவது கண்மாய் உடைந்து விட்டாலோ....அல்லது திறந்து விட்டாலோ இப்படி நிகழும்..இதை மேல்தண்ணி என்று சொல்வார்கள்..மிக ஆபத்தானது..எப்போது வரும் என்று தெரியாததால் குளிப்பவர்கள்,கடப்பவர்கள் பாதிக்கபடுவார்கள்...


    தண்ணீர் கணிசமாக உயர்ந்து இருந்தது...இப்போது இடுப்புக்கு மேலே போய் கொண்டு இருந்தது..

"எப்படி போக?"

     "சீக்கிரம் போக வேண்டும் ..இல்லையென்றால் இன்னும் தண்ணீர் கூடும" என்றேன்

    அக்கரையில் இருப்பது ஒரு ஒற்றையடி பாதை...அதன் இருபுறங்களிலும் தண்ணீரில் அடித்து வரப்பட்ட முட்புதர்கள்....நேராக பயணித்தால் சரியாக பாதையை அடைவதென்பது முடியாத காரியம்..நீரால் இழுத்து செல்லப்பட்டு வேறு இடம் சேர்வோம்...

    பாதை இருக்கும் இடத்தில இருந்து கொஞ்சம் முன்னாடி இறங்கினால் மட்டுமே நீரால் தள்ளிக்கொண்டுபோய்  பாதைக்கு அருகில் சேரமுடியும்.....

    சற்று தூரம் சென்று  இறங்கினோம்..என் கையை இருக்க பிடித்து இருந்தாள்.....சிறிது தூராம் சென்றவுடன் நீரின் தள்ளும் விசை கொஞ்சம் தள்ளியது.......

     திடிரென்று என் கால் நீரால் உருவான பள்ளத்தில்செல்ல..சட்டென்று குனிய நேர்ந்தது..அந்த நேரத்தில் அவளின் கை விடுபாட்டதொடு இல்லாமல்...நானும் அதிகமாக குனிய என்னை நீர் புரட்டி உள்ளே இழுத்து உருட்ட ஆரம்பித்தது...முயற்சி செய்து வெளிவர பார்த்தாலும் இழுத்துச்செல்வதில் இருந்து தப்பிக்க முடியவில்லை..

    நீரின் போக்கிற்கு ஏற்ப மேலே வருவதும் பின் உள்ளே இழுத்து செல்வதும் தொடர்ந்துநடக்க..அவளை விட்டு  தொலைவாக போய் இருந்தேன்...

      கொஞ்சம் முயற்சி செய்து நீந்தி கரையருகில் சென்றால்  முட்புதர்கள்....ஒருவழியாக முள்குத்தும் வலியையும் பொறுத்துக்கொண்டு......அந்த இடத்தில ஒதுங்க என் முகம் ,கால் உட்பட முட்கள் தைத்து ரத்தம் வழிந்தது...

     அவள் அந்த பாதையில் சரியாக சேர்ந்து இருந்தாலும்...நான் எங்கே போனேன் என்பதை பார்க்க கொஞ்சம் ஆற்றில் இறங்கி நான் இருக்கும் இடத்தை பார்ப்பது தெரிந்தது...

      நான் தூரத்தில் முட்களுக்குள் இருப்பதை பார்த்தவுடன் அவளும் கரையையொட்டி என்னை நோக்கி ஓடிவர ஆரம்பித்தாள்..அவள் வரும் வழியில் நீருக்குள் இருந்த முட்கள் அவளின் காலில் குத்த அதை குனிந்து பிடுங்கிவிட்டு பின் ஓடிவந்துகொண்டு  இருந்தாள்...

   கரையோரத்தில்  முள் இல்லாத இடத்தை பார்த்து நின்று இருக்க..முகம் மற்றும் கையில் முள் கீறல்களோடு என்னருகே வந்து சேர்ந்தாள்...

"ஒன்னும் ஆகலியே" கேட்டாள்

    "நீ ஏன் இங்கு வந்தாய்..அதான் நான் அங்கு வருவேன்ல..பார் ரத்தம் வருகின்றது" என்று அவள் கையில் முட்களால் வந்த ரத்தத்தை காட்டி இயல்பாய் கேட்டேன்...

     சிறிது நேரம் எனது கண்களை பார்த்து கொண்டு இருந்தவள்..தனது இருகைகளால் முகத்தை மூடிக்கொண்டு அழுதுகொண்டே  நின்று இருந்த இடத்தில அப்படியே உட்கார்ந்தாள்..

     எதுக்கு இப்ப அழுகிறே? என்று கேட்டுக்கொண்டே கிழே அமறும்போதுதான் பார்த்தேன் அவள் காலில் இருந்து ரத்தம் வழிந்து நீரோடு கலந்து கொண்டு இருந்தது...

"முள் குத்தியது வலிக்குதா என்ன?"

இல்லை என்று தலையாட்டினாள் அழுதுகொண்டே...

    "பின்ன என்ன?"என்று கேட்டுக்கொண்டே அவளது கைகளை விளக்கி முகம் பார்க்க..கண்ணீர் வழிந்தோடியது...

"ஏன் அழுகிறே சொல்லேன்?"

 மீண்டும் ஒன்றுமில்லை என்பது போல தலையசைத்தாள்..

    முள் இல்லாத இடம் பார்த்து கடந்து நல்ல பாதைக்கு வந்து இருவரும் மௌனமாக நடந்து கொண்டு இருந்தோம்........

"அப்ப ஏன் அப்படி அழுதே?"

"தெரியலை" என்றாள் என்விழி பாராமல்.

8 comments:

Arun Prasath said...

"தெரியலை" என்றாள் என்விழி பாராமல். //

இந்த ஒரு லைன் போதும் அந்த லவ் புரிஞ்சுக்க... நல்ல நடை...

கணேஷ் said...

Arun Prasath said...//

உணமைதான்..

கருத்துக்கு நன்றி..

கவிநா... said...

என்ன சொல்றதுனே "தெரியலை"
ஆழமான காதல்....

ஆனா, ரொம்ப பதட்டப்படுத்திட்டீங்க கணேஷ்...

கவிநா... said...

ஆனா, ரொம்ப பதட்டப்படுத்திட்டீங்க கணேஷ்...

கணேஷ் said...

கவிநா... said...

என்ன சொல்றதுனே "தெரியலை"///

ஏன் கதை புரியலையா என்ன?

கணேஷ் said...

என்ன சொல்றதுனே "தெரியலை///

ஒ இப்பதான் பார்க்கிறேன்...கவி கவியா பெசுரிங்களோ)))))))

..தலைப்பை வச்சு கமென்ட போடுறிங்க...))))

கவிநா... said...

ஆமாங்க உண்மையிலேயே ரொம்ப நல்லா இருக்கு கதை.... இது நல்லாருக்கு, அது நல்லாருக்குன்னு தனித்தனியா சொல்லத் "தெரியலை..." அதைத் தான் சொன்னேன்.

கணேஷ் said...

திரும்பவும்..கவியா)))

நன்றிங்க..