ஓடிப்போகலை..

   அழைத்து இருந்தாள்...எப்பையாவதுதான் இது நடக்கும்.....தோழியின் அலைபேசியில் இருந்து பேசினாள்..

கணேஷ் பெரிய பிரச்சினைஎன்றே ஆரம்பித்தாள்..

என்ன ஆச்சு?

   “எங்கள் வீட்டில் திருமண பேச்சை நேற்று எடுத்தார்கள்.....அப்போது நான் உன்னை காதலிப்பதை சொல்லி விட்டேன்என்றாள்

  அடிப்பாவி ஏன் உனக்கு இந்த அவசரம்...........என்ன நாளைக்கேவா உன்னை கல்யாணம் செய்து வைக்க போகிறார்கள்...........சரி வீட்டில் என்ன சொன்னார்கள்?

  இந்த காதல் பேரிக்காய் எல்லாம் காரணமாக சொல்லாதே நாங்கள் பார்க்கும் பயனைத்தான் திருமணம் செய்யணும் என்று  சொல்லிவிட்டார்கள்..

அதற்கு நீ என்ன சொன்னே?

நான் முடியாது உன்னை காதலிப்பதாக சொன்னேன்...ஆனால் அவர்கள் மறுத்து விட்டார்கள்

என்ன காரணம்? கேட்டியா?

கேட்கலையே. இப்ப என்ன செய்ய? என்றாள்

எப்ப திருமணம்னு பேசிகிட்டங்களா?

இல்லை ஆனால் உன்னை காதலிக்கிறேன்னு தெரிஞ்சபிறகு சீக்கிறம் வச்சிருவாங்க என்றாள்

உன் முடிவு என்ன? என்றேன்

அதான் உன்கிட்டே கேட்கிறேன் நீ தான் ஏதாவது செய்யணும் எனறாள்

சரி நான் கொஞ்ச நாளில் வருகிறேன் உங்க அப்பாகிட்டே பேசுறேன் என்றேன்


சீக்கிரம் வா..இல்லேன்னா நான் அங்கே வந்துவிடுவேன் என்றாள்

அவ்வளவு தைரியாமா உனக்கு என்றேன்

பின்னே உன்னை காதலிச்சதுக்கு நான்தான் ஏதாவது செய்ய வேண்டும் என்றாள்


விரைவில் வருவதாக சொல்லி முடித்தேன்


   ஊருக்கு செல்லும் முன் என் வீட்டில் இருந்து கேட்டார்கள் என்ன விசயம் அவளின் அப்பா வந்து இங்கு சண்டை போட்டார் என்று..

   நான் அவளை காதலிக்கிறேன்..திருமணம் செய்துகொள்ள ஆசை என்று சொல்ல..அவர்களது குடும்பம்தான் மறுக்கின்றார்களே பின்னே எப்படி என்றார்கள்...

நான் வந்து பார்த்து கொள்வதாக சொல்லி சமாதானம் செய்தேன்..

  அவளின் அப்பாவை சந்திக்க போகும் முந்தைய நாள் இரவில் அவளோடு நான் கொடுத்த ஜடைமாட்டியில் பேசினோம்...உறுதியாக இருந்தாள் என்னை திருமணம் செய்வதில்...கொஞ்சம் தைரியம் வந்தது...

மறுநாள் தனியாக அவளின் அப்பாவை பார்த்தேன்....வந்த காரணத்தை பார்த்ததும் புரிந்து கொண்டார்...

உனக்கு திருமணம் செய்துவைக்க இஷ்டம் இல்லை என்றார்

ஏன் என்ன காரணம்

எங்கள் இஷ்டம் அதன்படி நாங்கள் செய்வோம் என்றார்

அதற்கு அவளின் சம்மதம் வேண்டுமே? என்றேன்


அவள் எங்கள் மகள் நாங்கள் சொல்வதை கேட்டுத்தான் ஆக வேண்டும் என்றார்.....அதற்குள் அவள் வெளியில் வந்து இருந்தாள்

இவனிடம் சொல் காதல பேரிக்காய் ஏதும் இல்லையென்று என்றார் கோபமாக அவளிடம்...

இல்லை எனக்கு அவனை பிடிக்கும் என்றாள்

அவரால் ஏதும் உடனடியாக பேசமுடியவில்லை அவளின் இந்த பதிலால்..

அவனை மறந்துவிடு...தேவையில்லை நான் சொல்வதைகேள்

  அவன் ஒன்னும் நாய் குட்டியோ பூனை குட்டியோ இல்லை மனதில் இருந்து இறக்கி விடுவதற்கு..அவன் நல்லவன் எனக்கு அவனை பிடிக்கும் என்றாள்

எனக்கே ஆச்சர்யம் இவளா இப்படி பேசுவது என்று...

  அப்பாவுக்கு கோபம்...ஒன்றும் நீ சொல்ல தேவைஇல்லை நங்கள பார்த்துகொள்கிறோம்..என்று அவளை உள்ளே அழைத்து சென்று விட்டார்..

அன்றைய இரவில் ஜடைமாட்டியில்பேசினோம்...

முதன்முறையாக அழுதாள்...இருவருக்குள்ளும் நிறைய அமைதி ....

கணேஷ் எங்கேயாவது போய்விடுவோம் என்றாள்..


அவசரபடதே...யோசிக்கலாம் என்றேன்

இல்லை.....எனக்கு நம்பிக்கை இல்லை உனக்கு திருமணம் செய்து வைப்பார்கள் என்று

சரி இப்படி சொல்லாமல் போவது சரியாக இருக்காதே என்றேன்

அப்ப என்னதான் செய்வது?என்றாள்

இரண்டு நாள்கள காத்திரு இதற்கு ஒரு வழி செய்கிறேன் என்றேன்

அவளது வீட்டில் இரண்டு நாட்களுக்குள் பெரியதாக ஒன்றும் நடக்கவில்லை..

 மூன்றாவது நாள் ஜடைமாட்டியில் பேசும்போது...நாளைகாலை சீக்கிரம் எழுந்து வா...நாம் ஊரைவிட்டு போகலாம் என்றேன்

எங்க போகபோறோம் என்றாள்

எனது முடிவை சொன்னேன் ஆச்சர்யபட்டாள்

   காலையில் இருவரும் சேர்ந்தோம்...மாலை ஆறு மணிக்கு விமானம்..வேகமாக.. போகவேண்டும் வா என்று அழைத்து கொண்டு இருவரும் போனோம்...அந்த இடத்தை நெருங்க நேரம் சரியாக இருந்தது...

   உள்ளே அந்த விமானம் நின்று இருந்தது...வாசலில் இருந்த கவாலாளி பயண உரிமத்தை கேட்க காட்டினேன்...

எங்கு போக வேண்டும்? என்றாள்

செவ்வாய் கிரகம் என்றேன்

ஒரு திசையை காட்டி வேகமாக போங்கள் கிளம்ப போகின்றது என்றான்

அவள் கையை பிடித்தபடி.. அந்த திசையை நோக்கி ஓடினோம்

வீட்டில் வரும்போது ஏதாவது எழுதிவைத்துவிட்டு வந்தியா என்ன?”” என்றேன்

ஆமாம்..பின்னே இவ்வளவு நாள் வளர்த்த பெற்றோருக்காக இதை கூட செய்யலேன்னா எப்படி? என்றாள்

என்ன எழுதிவச்சே நீ?

விமானம் ஏறின பிறகு சொல்கிறேன் என்றாள்

மேலே எம்பிபறக்க ஆரம்பித்தது.....கேட்டேன்..என்ன எழுதினாய்? என்று

நான் ஓடிப்போகலை" என்றாள்

6 comments:

ஆனந்தி.. said...

//எங்கு போக வேண்டும்?” என்றான்

“செவ்வாய் கிரகம்” என்றேன்//
ஓகே...ஓகே...அதான பார்த்தேன்...என்னடா அறிவியலை காணோமேனு..:) லாஸ்ட் வரி சூப்பர்..:))

கணேஷ் said...

ஆனந்தி.. said//

லாஸ்ட் வரி சூப்பர்..:))///

அப்ப முழு கதை)))

ஆனந்தி.. said...

இப்படி எல்லாம் குண்டக்க மண்டக்க கேள்வி கேட்க படாது...:)))

ஆனந்தி.. said...

செவ்வாய் கிரகம் போயி சாக வழி சொன்னமாதிரி இருக்கே:)) அதுக்கு இங்கயே அவங்க செத்து தொலஞ்சுருக்கலாமே:)))

கணேஷ் said...

அப்படி சொல்லாதீங்க பாவம் அவங்க)))

ஆனந்தி.. said...

நான் அந்த கணேஷ் ஐ சொன்னேன்...ஹ ஹ...