நான் அல்லாத நான்

    எனது விண்கலம் முழுவதும் தானாக இயங்கும் விதத்தில் அமைக்கப்பட்டது..சில கட்டுப்பாடுகள் என்னிடமும், பிரதான கட்டுப்பாடு பூமியிலும் இருந்தது...

    கண்ணிமைக்கும் நேரத்தில் .....என் ருபுறம் அந்த விண்கலம் திடிரென்று தோன்றியது...அது தோன்றியதில்  இருந்து  கண்டிப்பாக அது ஒளியின் வேகத்தில் பயணித்து இருக்க வேண்டும்...அடுத்த இரண்டு நிமிடங்களில் என்னோடு இருந்த பூமியின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு முழு விண்கலமும் அவர்களின் கட்டுபாட்டுக்குள் போனது..நான் சில கட்டளைகள் பிறப்பித்தும்...பயனில்லை...அந்த  கலத்தை தொடந்து   எனது கலம்  பயணித்தது...

   தரையிரங்கியவுடன்...அந்த கலத்தில் இருந்து..இரண்டு பேர் என்னை நோக்கி வந்தார்கள்.......என்ன ஆனாலும் எனது கலத்தின் கதவை திறக்க கூடாது என்றுதான் இருந்தேன்....ஆனால் அவர்கள் கிட்டே வர அது தானாக திறந்தது....


   பயணத்தின் தொடக்கத்திலியே முடிவாகியிருந்தது...இது வேற்று கிரக ஆய்வு பயணம்..என்னவேண்டுமானாலும் நடக்கலாம் ......இருந்தாலும் அந்த நேரத்தில் உயிரின் மேல் பயம் வந்தது...என்ன செய்வார்கள்..எப்படி சாமாளிப்பது...??

   வெளியில் நின்று இருந்தார்கள..சைகை காட்ட கிழே இறங்கினேன்...விமானத்தில் இருந்து நான் சுவாசித்து கொண்டு இருந்த உயிர்வாயு இப்போதும் என் முகத்தோடு இணைக்கப்பட்டு இருக்க..... ஒருவன் வந்து அதை நீக்கினான்...அவ்வளவுதான் கதை முடிந்தது என நினைத்தேன்...என் சுவாசம் தொடர்ந்தது..அப்படியென்றால் அங்கு உயிர்வாயு இருக்கின்றது...

   ஏதும் உரையாடாமல் அழைத்து சென்றார்கள்...அவர்களுக்குள் பேசிக்கொள்ளவில்லை..கட்டடங்கள் போல இருந்த எல்லாம் ஒருவித தகடு போன்ற பொருளால் இருந்தது...அந்த அறைக்குள் நுழையும் போது மெல்லிய ஒரு சத்தம் ......

   அந்த நாற்காலி போன்ற ஒன்றில் கட்டாயபடுத்தி அமர வைத்தார்கள்...தலைக்கவசம் போல இருந்த ஒன்றை ஒருவர் மாட்ட..அங்கு இருந்த இன்னொருத்தன்...அவனது மேசையில் எதையோ அழுத்தினான...

   எனது தலையில் சிறிய அளவிலான மின்சாரம் பாய்ந்தது போல இருக்க..நினைவிழந்தேன்...

    கண்விழித்த போது...எதிரில் சிலர் அமர்ந்து இருந்தார்கள்....ஆச்சர்யம் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது எனக்கு புரிந்தது....மேலும் அந்த கிரகத்தை பற்றிய எல்லா அறிவுகளும் இருந்தது...


        “இப்போது உனது மூளையில் இருந்த உனது அறிவு மற்றும் தகவல்களை நீக்கி விட்டு எங்களின் கிரகத்துக்கு ஏற்றாற்போல் உனது மூளையில் மாற்றம் செய்து இருக்கிறோம்...உனது பழைய எல்லா தகவல்களும் ஒரு கோப்பில் இருக்கின்றது அதை திரும்பவும் நீ பெற முடியும்...இப்போது நீ எதையாவது எங்களுக்கு உணர்த்த அதை நீ நினைத்தாலே போதுமானது என்று அவர்கள் உணர்த்தினார்கள்.

என்னை என்ன செய்வீர்கள்? எப்போது நான் திரும்புவேன் நினைத்தேன்

பிரச்சினை இல்லை..உன்னை ஒன்றும் செய்யபோவதில்லை...நலமாக திரும்பி போகலாம்

பின்னே எதற்கு என்னை இங்கே வைத்து இந்த மாற்றம் எல்லாம்

    உங்களின் கிரகத்துக்கு நாங்களும் அடிக்கடி வந்து போய் இருக்கிறோம்...ஆனால் உங்களால் எங்கள் இனத்தவரை பிடிக்க முடியவில்லை...இப்போது முதன் முறையாக அங்கிருந்து வந்து இருக்கிறாய்...இந்த கிரகத்தை பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டு போகத்தான் இந்த வழி....உங்களது அறிவால் எங்களை தெரிந்து கொள்வது என்பது இயலாத காரியம்...அதனால் இங்கு இருக்கும் சில பொதுவான விசயங்களை உனது மூளைக்குள் கொடுத்து இருக்கிறோம் உணர்த்தினார்கள்

எவ்வளவு காலம் இருக்க வேண்டும் நினைத்தேன்

     “உனது விருப்பம்...நீ இங்கு சுற்றி திரியலாம்..எப்போது போகவேண்டும் நினைக்கிறாயோ..உனது பழைய எண்ணங்கள் உனக்கு திரும்பி வழங்கபடும்... நீ உனது கிரகத்துக்கு பயணிக்கலாம்

    வெளியில் போனேன்...இது என்ன புதிய திருப்பம் என்று நினைத்து கொண்டே நடந்தேன்..யாரும் என்னை கண்டுகொள்ளவில்லை..எல்லாம் அவரவர் வேலையில் இருந்தார்கள்...

   அருகில் அமர்வதறக்கான இடம்  இருந்தது...அமர்ந்தேன்..அதன் மேசையில் பார்த்தால் ஒளிரியது..நமது கணினி போல அதை மேசையோடு வைத்து இருந்தார்கள்....அதில் எல்லா விதமான புத்தகம், யார் யாருக்கு என்னென்ன வேலை...போன்ற கிரகத்தின் எல்லா தகவல்களும் தெரிந்து கொள்ளும்படியிருந்தது..

   அந்த கிரகத்தில் யாரும் தனியில்லை..நாடு இல்லை..பிரிவு இல்லை..கிரகமே ஒன்றாய் இருந்தார்கள்..எல்லோர்க்கும் பொதுவான விதிகள்...யாருடைய ஆட்சியும் இல்லை..அவர்களுக்கு தெரிந்த வேலைகளை பார்த்தார்கள்...சம்பளம் என்று எதுவும் இல்லை..

    அவர்களின் உணவு என்றால் ஒரு திரவம்தான்....அந்த கிரகத்தில் இருந்தே கிடைத்தது...அவர்களிடத்தில் முனேற்றம் என்பதைவிட நமது சாதாரண மூளையால் புரிந்து கொள்ள முடியாத வகையில் இருந்தது...தனக்கு தெரிந்த வேலையை ஒரு குழுவாக சேர்ந்து செய்தார்கள்..

   எங்கும் போக மனமில்லாமல் மீண்டும் அதே அறைக்கு திரும்பினேன்...அமர்ந்து இருந்த அவர்களிடம் சென்று

எப்படி சாத்தியம் மூளையில் உள்ளவற்றையே மாற்றுவது என்று நினைத்தேன்

    “எங்களை பொறுத்தவரை எல்லாம் இயந்திரம்தான்...எதையும் எங்களால் செயற்கையாக கட்டுப்படுத்த முடியும்....இப்போது நாங்கள் உன் மூளையில் சேர்த்தது சில அடிப்படையான விசயங்கள்தான்... உனக்கு புரிந்து கொள்ளமட்டும். உணர்த்தினார்கள்

என்னை விட்டு விடுங்கள் நான் போகிறேன் நினைத்தேன்

    “சரி போகலாம் உதவுகிறோம்..எங்கள் விமானத்தை உபோயோகிக்கலம்..இங்கு இருந்து நீ போவதற்கு எங்களின் அறிவு உனக்கு தேவை என்பதால் இப்படியே நீ போகலாம்..உனது பழைய நினைவு கோப்பு உன்னோடு இருக்கட்டும்..எப்போது உன் கிரகம் போகின்றயோ அப்போது விமானத்தில் இதே போன்று ஒரு இயந்திரம் இருக்கு அதில் அந்த கோப்பை உட்செலுத்தி அதை உனக்குள் மாற்றிகொள்ளலாம்

    “இல்லை எனது நினைவையும் கொடுங்கள் எனது கிரகத்தை நெருங்கும்போது மனிதர்களிடம் இருந்து தகவல்களை பெற்று அதற்கு பதில் அளிக்க உதவியாக இருக்கும்..இல்லைஎன்றால் அவர்கள் என்னை அழித்து விடுவார்கள் அவர்களிடம் ஒற்றுமை இல்லை  நினைத்தேன்

    “அதுவும் சரிதான்..உனது முழு நினைவை கொடுத்தால் உன் வழியில் நீ சிந்திக்க தொடங்குவாய்..அது உனது பயணத்திற்கு சரியல்ல..உனது சில அடிப்படையான வேலைகள் செய்யும் நினவை மட்டும் இப்போது கொடுக்கிறோம்

    சரி என்று நாற்காலியில் அமர்ந்தேன்..மீண்டும் அதே தலைகவசம்..கொஞ்சம் வலி..இப்போது எனக்கு என்ன  நடந்தது ...எந்த நிலமையில் இருக்கிறேன் என்பதை உணர முடிந்தது...பூமியோடு தொடர்பு கொண்டால் பதில் அளிக்க முடியும்...எனது நிலையை விளக்க முடியும்..வேறொன்றும் செய்ய முடியாது..மீதம் இருப்பது அவர்கள் என் மூளையில் செலுத்தியது...


     “இது நீ செல்லும் விண்கலம் ஒளியின் வேகத்தில் பயணிப்பது...இதில் சில மாற்றங்களை செய்து இருக்கிறோம்...நீ போய் இறங்கியவுடன் இது தானாகவே எங்களிடம் வந்து சேரும்...பயணிக்கும் போது சில கட்டளைகள் பிறப்பிக்க வேண்டும் அது உன் மூளையில் இருக்கிறது..நீ போகலாம்.

   அமர்ந்தேன்...கிளம்பியது...ஒளியின் வேகத்தில் பயணம்...பூமி கட்டுப்பாட்டில் பேசி..தரையிறங்கியவுடன் கதவை அடைக்க அந்த விண்கலம் வேகமாக எம்பி பறந்து கண்ணில் இருந்து
மறைந்தது...இப்போது புரிந்தது.. ஒரு முறை கதவை திறந்து முடின உடனே அது திரும்பும் படி செய்து இருக்கிறார்கள்........

    அப்போதுதான் நினைவுக்கு வந்தது...அந்த விமானத்தில் என் பழைய நினைவுகள் அடங்கிய கோப்பு,மற்றும் அதை என் மூளைக்குள் ஏற்ற தேவையான இயந்திரம் இருந்தும் அதை ஏற்ற மறந்து நான் அவசரமாக இறங்கிவிட்டு  கதவை அடைத்தது....

   இப்போது நான் இருக்கும் நிலை...கொஞ்சம் வேற்றுகிரக வாசி..கொஞ்சம் பூமி வாசி...அதாவது அந்த கோப்பு என்னிடம் கிடைக்கும்வரை நான் ஒரு....."நான் அல்லாத நான்"



13 comments:

ம.தி.சுதா said...

அருமையாக இருக்கதுங்க...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.

Philosophy Prabhakaran said...

வழமை போல கலக்கல்... மறுபடியும் ஒரு சிறிய வேண்டுகோள்... உங்கள் வலைப்பூவிற்கு தமிழில் ஏதாவது அழகிய பெயரினை சூட்டலாமே...

கணேஷ் said...

விரைவில் சூட்டுகிறேன்

நன்றி

ஆனந்தி.. said...

தலைப்பு வித்யாசமா இருக்கு...அவதார் ரீமிக்ஸ் பார்த்த மாதிரி இருந்தது...நல்லா இருக்கு கணேஷ்..:)))

கணேஷ் said...

ஆனந்தி.. said...

தலைப்பு வித்யாசமா இருக்கு..///

அப்ப தலைப்பை மட்டும் படிச்சி இருக்கீங்க???)))

Anonymous said...

இந்திய வரலாற்றிலயே புதுமையான ஒரு தலைப்பு . . . . ..

கணேஷ் said...

ANKITHA VARMA said...வாய்ப்பு இல்லையே...எனக்கு வரலாறு சரியாக தெரியாதே))))

அப்ப நீங்களும் கதையை படிக்க வில்லையா??))

Arun Prasath said...

நல்லா கற்பனை சார்

கணேஷ் said...

Arun Prasath said... //

நன்றி சார்..))

ஆமினா said...

நல்லா இருந்ததுங்க!!!!

கணேஷ் said...

ஆமினா said...//
நன்றிங்க..))

கவிநா... said...

வாவ்.... என்ன ஒரு அருமையான கற்பனை...!!!! சூப்பர்...

கணேஷ் said...

கவிநா... said...

வாவ்.... என்ன ஒரு அருமையான கற்பனை...!!!! சூப்பர்...///

கருத்துக்கு நன்றிங்க..))