பொற்கொடி - 3

   ((இதை ஒரு தொடர்கதையாகத்தன் எழுத நினைத்தேன்..ஆனால் என் கால தாமதத்தால் இது ஒரு நெடுந்தொடராக போகின்றது....பொற்கொடி-1,பொற்கொடி-2...நீங்கள் ..படித்துவிட்டால் நல்லது...இல்லை என்றால் பொற்கொடியை அறிய ஒரு சிறிய அறிமுகம் போதுமானது...அவள் வேற்றுகிரகத்தில் இருந்து வந்து அவர்களின் கிரகம்,அவளுக்குள் இருக்கும் சில சிறப்பு அம்சங்களை பற்றி சொல்லுகிறாள்...அவளுக்கு இருக்கும் சில குறைபாட்டால் என்னையே அழிக்க வருகிறாள்...இனி...))

     முரட்டுத்தனமாக அவள் என் மீது பாய்வாள் என்று நான் கொஞ்சம் கூட எதிர்ப்ர்க்கவில்லை என்பதால்...அவளால் எளிதாக என் கழுத்தை இரண்டு கைகளால் பிடிக்க முடிந்து இருந்தது....

   ”என்ன செய்கின்றாய்? ஏன் என்னை இப்படி....”என்று நான் தொடரும்போதே என் குரல்வளை கொஞ்சம் நசுங்க ஆரம்பித்து இருந்தது..

   அவளின் முழுத்திறனையும் என் மீது செலுத்துவதில் இருந்தாள்..இப்போதைக்கு எப்படியாவது இந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க வேண்டும்...என் திறனை கொஞ்சம் காட்டி அவளது கைகளை விளக்க முயன்றேன் முடியவில்லை...கொஞ்சம் என்னைவிட பலசாலியாக இருந்தாள்...

    என்னை அறியாமல் கண்ணில் தண்ணீர் வந்தது...என்ன செய்ய என்று யோசிக்கக்கூட அப்போது எனக்கு நேரம் இருப்பதாக தெரியவில்லை..நான் யோசிக்கும் அந்த நேரத்தில் அவள் என்னை முழுவதும் செயல் இழக்க வைக்கமுடியும்...அந்த நேரத்தில்..என் மனதில் தோன்றிய ஒரு எண்ணம...நான் உயிர் பிழைக்க கடைசி முயற்சியும் கூட..அது..

     நான் என் மனதில் "பொற்கொடி இப்படி செய்ய மாட்டாள்..நான் அவளுக்கு அடைக்கலம் கொடுத்து இருக்கின்றேன்..அவள் திரும்பி கிரகம்போக என்னால் உதவ முடியும்..அதை கண்டிப்பாக நான் செய்வேன்...என்னை ஒன்றும் செய்ய மாட்டாள்...விட்டுவிடுவாள்...." இந்த எண்ணங்களை ஓட விட்டேன்...

    அவளது முகத்தில் .....செயலில் ஏதாவது மாற்றம் தெரிகின்றதா என்று பார்த்தேன்....மாற்றம் இருந்தது...அவளின் பிடி கொஞ்சம் தளர்ந்தது...

    சில வினாடிகளில் என்னை விட்டு முழுவதுமாக விலகி இருந்தாள்..நான் எனது கழுத்தை சரி செய்துகொண்டு இருக்கும்போது...அவள் தன் தலையை கிழே குனிந்து ஏதோ செய்து கொண்டு இருப்பதை நான் பார்த்தேன்....

    அவளிடம் ஒன்றும் பேசாமல் எழுந்து கதவை திறக்கும் போது அவள் மேலே நிமிர்ந்து பார்த்தாள்...

”வெளியே போ..என்னையே கொல்ல பார்த்தியே??”

     “இல்லை கணேஷ் எனக்கு என்ன ஆயிற்று என்று எனக்கே தெரியவில்லை...ஒருவேளை அந்த ஹோர்மொன்கள் பிரச்சினையாக இருக்கலாம்...உணமையில் நான் தெரிந்து செய்யவில்லை...”

    “உனது விளக்கம் ஏதும் தேவை இல்லை..நீ இப்போது வெளியில் போ.. “ என்று சொன்னாலும் மனதுக்குள் கொஞ்சம் பயம் இருந்தது..மீண்டும் அவள் என்னை தாக்கிவிட்டால்...


    அவள் ஒன்றும் சொல்லாமல்..மெதுவாக எழுந்து வெளியே சென்றாள்..”கணேஷ் ....”என்று ஏதோ சொல்ல அவள் முயலும்போது நான் கதவை மூடி இருந்தேன்...

     சில நிமிடங்கள் கழித்து அவள் இருக்கின்றாளா இல்லையா என்று பரிதாபத்தில் பார்க்க முயன்றாலும் ...ஒரு எண்ணம பார்க்க வேண்டாம் என்று தடுத்தது..பார்க்கவில்லை...

      மறுநாள் காலையில் சென்று வெளியில் பார்த்தேன் அவள் இல்லை..போய் இருந்தாள்...கொஞ்சம் நிம்மதியாக இருந்தாலும் மனதுக்குள் அவள் எங்கு போவாள்..பாவம் கஷ்ட்டபடுவாள் என்ற எண்ணம இருந்தது...

     இதை நான் நினைத்து கொண்டு இருக்கும்போதே எங்கு இருந்து வந்தாள் என்று நான் கணிக்கும் முன்னே என் முன்னாடி வந்து நின்று"எனக்கு தெரியும் கணேஷ் நீ என்னை அப்படி ஒன்றும் துரத்திவிட்டு சந்தோசமாக இருக்க மாட்டாய் என்று"..என்றாள்

     நான் ஒன்றும் பதில் அளிக்காமல் வீட்டிற்கு உள்ளே வந்தேன்..கதவை பூட்டவில்லை...அவள் வரட்டும் என்றுதான்..

     பின்னாடியே வந்தாள்.."அதான் சொன்னேன்ல என்னை அறியாமல் நடந்த ஒன்று அதற்கு அந்த ஹோர்ர்மோன்தான் காரணம்..நம்பு கணேஷ் என்றாள்..

”சரி அந்த நேரத்தில் என் உயிர் போய் இருந்தால் ?”

    அவளிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை...இருவருக்கும் இடையே மௌனம்......

"அதான் நீதான் புத்திசாலித்தனமாக தப்பித்து விட்டாயே" என்றாள்..

    நான் ஒன்றும் சொல்லவில்லை...இருவருக்கும் கொஞ்சம் துரம் இருந்தது..முகம் பார்க்கவில்லை...

     "சரி கணேஷ் இனிமேலும் உன்னை தொந்தரவு செய்ய விரும்பவில்லை..நான் போகிறேன்...என்னை பொறுத்தவரையில்...உங்கள் கிரகத்தில் என்னால் நீண்ட நாள் வாழ முடியும் என்ற நம்பிக்கை இல்லை..இங்குள்ள ஏதோ ஒரு வாயு எனக்கு ஒத்துபோகவில்லை..கண்டிப்பாக இனி கொஞ்சம் நாள்தான்...அதுவரை என்னால் வெளியில் சமாளிக்க முடியும்” என்று சொல்லி கொண்டே வெளியில் போனாள்....

    “சரி நான் உன்னை அப்படியே இங்கு தங்க வைத்தாலும் என் உயிருக்கு என்ன உத்திரவாதம்..திரும்பவும் நீ என்னை தாக்கினால்..??”.

    “அதான் உனக்கு எப்படி தப்பிப்பது என்று தெரிந்து விட்டதே அப்படி தப்பித்து கொள்” என்றாள்

     அவள் சொல்ல வருவது .... என்னை தாக்கியபோது என் மனதில் நினைப்பதை அவளால் உணரமுடியும் என்பதை தெரிந்து இருந்த நான்... அவளை பற்றி சில நல்ல விசயங்களையும்,அவளை அவள் கிரகத்துக்கு திரும்ப அனுப்புவதாகவும் மனதில் நினைத்தேன்..அதை அவள் உணர்ந்துகொண்டு என்னை தாக்குவதை நிறுத்தினாள்... இதே போல அப்படி இன்னொருமுறை தாக்க நேர்ந்தாலும் அதையே செய்ய சொல்லுகிறாள்...

    “சரி என்னை ஒருவழி செய்யாமல் நீ போகமாட்டே..எப்படியோ இங்கேயே இரு நடப்பதை பார்க்கலாம்” என்றேன்..

     போக நினைத்தவள் திரும்பி வந்து..”எப்படி கணேஷ் அந்த நேரத்தில் உனக்கு அந்த எண்ணம வந்தது..??” என்றாள் கொஞ்சம் சாதரணமாக...

    அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை...நீங்கள் எப்படி மனதில் நினைப்பதை தெரிந்து கொள்கின்றிகளோ..அதேபோல எங்கள் கிரகத்திலும் சில விசயங்களை நம்புகின்றார்கள்....

    அதாவது எங்களது மூளையில் கிட்டத்தட்ட 97% உபோயோகிக்காமல் இருக்கின்றதாம்..அதை எல்லாம் உபோயோகித்தால்..எல்லாமே சாத்தியம் என்கிறார்கள..

     இதை NOETIC SCIENCE என்கிறார்கள்..அதாவது மனதுக்கு நிகரான ஒன்று இந்த பிரபஞ்சத்தில் இல்லை என்கிறார்கள்...MIND OVER MATTER...நாங்கள் மனது வைத்தால் எல்லாமே முடியுமாம்..

     அது தவிர எங்களால் எல்லாவற்றையும் மனதால் எங்களுக்குள்ளேயே உணர்ந்து அறியா முடியுமாம்...இது போன்ற நிறைய விசயங்கள் உள்ளன...எல்லாமே உள்ளுணர்வு மூலம் செயல் படுத்த முடியும் என்பதே...

    “அப்படிஎன்றால் இன்னும் சில காலத்தில் உங்களுக்குள் ஒரு மாற்றம் வரும்”என்றாள்

“ஆமாம்” என்றேன்..


    “சரி கணேஷ் நான் இங்கு இருக்கபோவது கொஞ்ச நாள்தான் என்னை உபோயோகித்து கொள்” என்றாள்..

    “இல்லை இதுவரை உன் மீது அப்படி ஒரு எண்ணம வந்தது இல்லை..அதிலும் நீ வேற்றுகிரகவாசி எப்படி நீ இப்படி கேட்கின்றாய் என்று எனக்கு தெரியவில்லை என்றேன்...”அவளின் முகம் பார்க்காமல்


    “உனக்கு புத்தி எப்படி போகின்றது பார் ..எப்போதும் இனபெருக்கத்துக்கான ஹோர்மோன்கள் சுரந்தால் இதுதான் பிரச்சினை...நான் சொன்னது என்னிடம் இருக்கும் அறிவுதிறமையை உபோயோகித்துகொள் என்று”...என்றாள்..

    “அப்படியா!!!! எல்லாம் என் வயசுதான் காரணம்” என்பதை தவிர வேறொன்றும் சொல்லவில்லை..

“எங்களது இனபெருக்க முறை தெரிந்தால் நீ அப்படி சொல்லி இருக்க மாட்டே”

“அப்படி என்ன வித்தியாசம் உங்களது இனபெருக்க முறையில்” என்றேன்..

    “அது உனக்கு தேவை இல்லை..இப்பொது என்னை எப்படி சரியாக பயன்படுத்தி கொள்வது என்பதை பற்றி யோசி” என்றாள்

    “எனக்கு ஒரு கனவுத்திட்டம் உள்ளது..இப்போது உன்னை பார்த்த பின் அதில் சில மாற்றங்களை செய்து முயற்சிக்கலாம் என நினைக்கிறேன்” என்றேன்...

“எதுவாக இருந்தாலும் சொல் நான் உனக்காக கண்டிப்பாக செய்கிறேன்” என்றாள்..

   “நான் ஒரு வித்தியாசமான உயிர் ஒன்றை உருவாக்க ஆசை படுகிறேன்..அது சாதரணமாக இருக்ககூடாது...கொஞ்சம் வித்தியாசமாக இருக்க வேண்டும்..”.

“அப்படி என்ன மாதிரி வித்தியாசத்தை நீ எதிர்பர்கின்றாய்...”

    “அது எங்களை போல பேசவேண்டும்,எப்படி உனக்கு உடம்பில் சில செல்கள் இறந்தால்,அல்லது நீக்க பட்டால் அது தானாக வளர்ந்து பூர்த்தியாகின்றதோ அதே மாதிரி, ...அப்புறம் தனியாக மேம்படுத்த பட்ட சில தகவல்களை MEMORY CHIP போன்ற ஒன்றை அதன் மூளையோடு தேவையான போது இணைக்கும் விதத்தில் இருக்க வேண்டும், முக்கியமாக நாம் இணைக்கும் அந்த MEMORY CHIP ல் இருந்து தானாகவே சில தகவல்களை பெற்று அது செயல்பட வேண்டும். அப்புறம் சில தாக்குதல்களை சமாளிக்கும் வகையில் ..கதிரியக்கம்,லேசர் போன்ற தாக்குதல் அதை ஒன்றும் செய்ய கூடாது...”

     “இது நீ நினைப்பது போல சாதாரணம் இல்லை கணேஷ்..ஆனால் நான் முயற்சி செய்தால் முடியும்..எங்கள் கிரகத்தில் நான் கற்றவற்றை வைத்து முயற்சித்து பார்க்கிறேன்..”.

    “உண்மையாகவே இது சாத்தியமா?” என்றேன் ஆச்சர்யம் கலந்த சந்தோஷத்தில்..

“சாத்தியம்தான் முயற்சிக்கிறேன்” என்றாள்.

    “அப்படி என்றால் இனிமேல் நீ இருக்கவேண்டிய இடம் இது இல்லை” என்று சொல்லி அவளை என் ஆய்வுகூடத்திற்கு அழைத்து சென்றேன்..

“இந்த வசதிகள் போதுமா என்று பார் உனது ஆராய்ச்சிக்கு” என்றேன்

“அவள் கொஞ்சம் சுற்றி பார்த்து விட்டு போதும் என நினைக்கிறேன்” என்றாள்..

     “சரி அந்த உயிரினம் எந்த உயிரினத்தின் GENOME அடிப்படையில் இருக்கவேண்டும்” என்றாள்

“நாய்” என்றேன்..

    “சரி அதற்கு உரிய GENOME யை நீங்கள் படித்து இருக்கின்றிர்களா? அப்படி என்றால் அது சம்பந்தமான எல்லா தகவல்களையும் எனக்கு கொடு..அப்புறம்..அது எந்த அளவில் இருக்க வேண்டும்,என்ன வண்ணம் போன்ற தகவல்களையும் கொடு..”என்றாள்...

    என்னிடம் இருந்த நாயின் GENOME பற்றிய தகவல்களையும்,நாய் உருவம் ,வண்ணம் எல்லாவற்றையும் கொடுத்தேன்...

“அதற்கு முன் இதை எப்படி செய்ய போகின்றாய் என்பதை கொஞ்சம் சொல்லேன்” என்றேன்..

    “அந்த நாயின் GENOME யை கொஞ்சம் செயற்கையாக மாற்றம் செய்து முதலில் அதன் ஸ்டெம் செல்களை உருவாக்கும் பண்புகளை மாற்றுவேன்.இதன் மூலம் உருவாக்க படும் ஸ்டெம் செல்கள் இந்த உயிர் வாழும் வரை தனது வேலையை செய்யும்..எப்படி எனக்கு இருக்கின்றதோ அதே மாதிரி...அப்புறம் பேசுவதற்கு காரணமான சில GENE களை இதற்குள் சேர்ப்பேன் இதன் மூலம் பேசும்.அப்படியே இது உருவாக்கும் உடல் செல்கள் நீ சொன்ன கதிரியக்கம்,லேசர் போன்றவற்றிக்கு எதிராக செயல்படும்படி மாற்றுகிறேன்...அவ்ளவுதான்...”என்றாள்..

எனக்கு நம்பிக்கை இருந்தது இவள் இதை உருவாக்கி விடுவாள் என்று..

     “என்னை நீ தொந்தரவு செய்யாமல் இருந்தால் எனது வேலைகளை வேகமாக பார்ப்பேன்” என்றாள்..


    “சரி நான் தொந்தரவு செய்யமாட்டேன் ஏதாவது உதவி என்றால் மட்டும் கேள்” என்றேன்..

      அவள் சில நாட்கள் தனிமையாக வேலை செய்தால்..சில நேரங்களில் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும் நான் சீக்கிரம் இறக்க போவதாகவும் சொல்லி கொண்டாள்..நான் அப்படி ஒன்றும் நடக்காது என்று மட்டும் சொல்லி வைத்தேன்...

    அதற்கு பிறகு என்னை அவள் தாக்கவில்லை.சமத்தாக அவளது ஆராய்ச்சியில் இருந்தாள்...மிக குறைவாக பேசினோம்...

     சில நாட்கள் கழித்து அந்த உயிற்கான செல்லை உருவாக்கி விட்டதாகவும் அதை இனி வளர வைக்க வேண்டும் என்பதை சொன்னாள்..

     எனக்கு சந்தோசம்...”நீ என்ன நினைக்கின்றாய் இது நன்றாக வளர்ந்து வருமா” என்றேன்..

    “பார்க்கலாம் முதல் 500 முதல் 1000 செல்கள் வளர்ந்து விட்டால் அப்புறம் ஒன்றும் பிரச்சினை இருக்காது என நினைக்கிறேன்...வளரும்வரை காத்து இருக்கவேண்டும்” என்றாள்..

    அந்த செல்களில் சில முறை அது நன்றாக வளருகின்றதா என்பதை தெரிந்து கொள்ள சில முறை அதை சோதித்து பார்த்த நேரம் போக நாங்கள் நிறைய பேசினோம்..

     அவள் முன்னர் சொல்லாமல் விட்ட அவர்களது இனப்பெருக்க முறை பற்றி சொன்னாள்..நம்மை போல பத்து மாதம் சுமக்க வேண்டிய அவசியம் ஏதும் அவர்களுக்கு இல்லையாம்,அதற்கு என்று தனியாக மருத்துவமனைகள் இருக்குமாம்..அங்கு சென்று விருப்பத்துக்கு தகுந்த மாதிரி உருவம் வண்ணம் கொண்ட ஒரு வரைபடத்தை தேர்ந்து எடுத்து கொடுத்தால் அதற்கு ஏற்ப செல்களை உருவாக்கி குழந்தையாக வளரவைத்து கொடுப்பார்களாம்..

   நான் விளையாட்டாக நீ அப்படி எத்தனை குழந்தை வாங்கி இருக்கின்றாய் என்றேன்..
அவள் இதுவரைக்கும் இல்லை என்றாள்

    ஒருவேளை நீ திரும்பி போனால் அங்கு போன பிறகு என்னை போல உருவம் கொண்ட ஒரு குழந்தைக்கு விண்ணப்பிபாயா? என்றேன்...

    உனக்கு இன்னும் அந்த ஹோர்மோன் செய்யும் சேட்டை போகவில்லை என்றாள்...

    எப்படியோ சில நாட்கள் நகர்ந்தது..அந்த உயிரின் கரு நன்றாக வளர்ந்தாலும் இவள் சில முறை மயங்கி விழுந்தாள்...என்ன காரணம் என்று அவளுக்கே தெரிந்து இருக்கவில்லை...கொஞ்சம் கவலையாக இருந்தது...

     “இன்னும் சில நாட்களில் அந்த செயற்கையாக உருவாக்கபட்ட நாயை பர்க்க முடியும்” என்றாள்..

     சேர்ந்து பார்த்தோம்..வெள்ளை நிறத்தில் முடியோடு அழகாய் இருந்தது...இன்னும் சில நாட்களில் வெளியில் வரலாம் என்றாள்..அதற்கு பின் அதனை சோதனை செய்வதாக அவளுடைய எண்ணம,

    ஒரு முறை மயங்கி விழுந்து நெடுநேரம் அவள் எழ முடியாமல் நினைவற்று கிடந்தாள்...

     “என்வென்று கேட்டேன்..இல்லை என்னால் இன்னும் சில நாட்கள்தான் உயிர் வாழமுடியும்..அது எனக்கு தெரியும்...அப்படியே நான் போனாலும் உனக்கு ஒன்றும் பிரச்சினை இருக்காது கணேஷ்..எங்கள் உடல் அமைப்பு அப்படி ..எங்களின் செல்களுக்கு தேவையான உணவு வழங்கபடவில்லை என்றால் அதுவே எங்களின் உடம்பை அரித்து காற்றோடு கரைத்துவிடும்....இப்பொது நான் உணர்கிறேன் ...சில பகுதிகளின் செல்களுக்கு செல்லும் பாதை செயல் இழந்து விட்டது...வரும் நாளில் ஒவ்வொன்றாக செயல் இழக்கும் ..அதற்குள் உன் அதிசய நாய் நல்லபடியாக வெளிய வந்துவிட்டால் எனக்கு கொஞ்சம் சந்தோசம்” என்றாள்..

    எனக்கு என்ன சொல்வது என்று புரியாமல் நின்று இருந்தேன்...இவ்வளவு நாள் என்னோடு இருந்தவள் ..உதவி செய்து இருக்கின்றாள்...இப்போது சாகபோகின்றேன் என்கிறாள்..நிறைய வருத்தம்...

“நீ பிழைக்க வேறு வழியே இல்லையா?” என்றேன்..

    அவள் “இல்லை” என்பது போல தலையை அசைத்தாள்...அதற்குபிறகு நாங்கள ஒன்றும் பேசவில்லை...அவள் தனிமையில் ஒரு இடத்தில உட்கார்ந்து இருந்தாள்..அடிக்கடி போய் அந்த நாயை சோதித்துவிட்டு வந்தாள்..

    அன்றைய நாள் கொஞ்சம் முக்கியமான நாள் செயற்கையாக வளர்த்த அந்த நாயை அவள் வெளியில் எடுத்தாள்...சாதாரணமாகத்தன் இருந்தது... அவள் சில சோதனைகளை செய்துவிட்டு என கையில் கொடுத்தாள்...

    மென்மையாக இருந்தது..இது எப்போது பேசும்,மற்ற திறன்கள் எல்லாம் இதற்கு எப்போது வரும் என கேட்டேன்

    “நீ பொறுத்த வேண்டிய அந்த MEMORY CHIP ல் இது பேச வேண்டிய தகவல்களை சேர்த்து இதன் மூளையில் பொறுத்தினால் இப்போதே இது பேசும்..மற்றபடி அது தானாக கற்றுகொண்டுதான் பேசவேண்டும், மற்ற பண்புகள் எல்லாம் இப்போது இருந்தே வேலை செய்யும்” என்றாள்..

    “இல்லை அந்த MEMORY CHIP யை அப்புறம் நான் பொறுத்தி கொள்கிறேன்...”என்றேன்..

    அதற்கு பிறகு வந்த நாள்களில்.. அந்த நாய் அவளது கண்காணிப்பில் இருந்தது..அந்த நாட்களில் நான் குறைவாகவே பேசினேன்....கொஞ்சம் கவலை..அவள் இன்னும் சில நாட்களில் காற்றோடு கலக்க போகிறாள் .....

    எப்போதும் போல என் அருகில் வந்தாள் ...மிகவும் வித்தியசமாக உணர்வதாக சொன்னாள்..எப்படி உணர்கிறாய் என்று நான் கேட்டும் அவள் ஏதும் பதில் அழிக்கவில்லை...

    அப்படியே உட்கார்ந்து இருந்த இடத்தில சரிந்து விழுந்தாள்..நான் அவளை எழுப்பவதற்கு முயற்சி செய்யும் விதமாக அவளை பற்றி குலுக்கினேன் ..எந்த வித சலனமும் இல்லை..

     சிறிது நேரத்தில் அவளை நான் தொடும்போது மிகவும் மென்மையாக உணர்ந்தேன்...அதாவது அவள் சொன்னது போல அவள் உடலுக்குள் இருக்கும் அந்த திரவம் அவளை கொஞ்சம் கொஞ்சமாக அரிது காற்றில் கரைத்து கொண்டு இருந்தது....

     கொஞ்ச நேரத்தில் அவள் விழுந்த கிடந்த இடத்தில அவள் இருந்ததுக்கான எந்த ஒரு அடையாளமும் இல்லை....

     தனிமையில் உட்கார்ந்து இருந்தேன்...அப்போது அந்த நாய் மெதுவாக நடந்து என் அருகில் வந்தது....அவள் உருவாக்கிய நாய்..அவளின் நினைவாக இன்னும் சில காலங்கள் என்னோடு இருக்கும்....

     அதை பார்த்த போதுதான் அவள் கேட்ட கேள்வி ஒன்று எனக்கு நினைவு வந்தது..இந்த அழகான நாய்க்கு என்ன பெயர் வைக்கபோகிறாய் என்று கேட்டு இருந்தாள்..


    அப்போது இருந்த நிலையில் அவளிடம் அதை சொல்லவில்லை...இப்போது அந்த நாயை பார்த்து "ஜீனோ இங்கே வா" என்றேன் அது வாலை ஆட்டியபடி என்னிடம் ஓடி வந்தது...

3 comments:

ஆனந்தி.. said...

இந்த எபிசொட் ரொம்ப பிடிச்சு இருந்தது..கொஞ்சம் professional டச் writing இல் நல்லா தெரிந்தது..

//நான் என் மனதில் "பொற்கொடி இப்படி செய்ய மாட்டாள்..நான் அவளுக்கு அடைக்கலம் கொடுத்து இருக்கின்றேன்..அவள் திரும்பி கிரகம்போக என்னால் உதவ முடியும்..அதை கண்டிப்பாக நான் செய்வேன்...என்னை ஒன்றும் செய்ய மாட்டாள்...விட்டுவிடுவாள்...." இந்த எண்ணங்களை ஓட விட்டேன்.//

வெரி clever டர்னிங் பாய்ண்ட்..பொற்கொடியின் ஸ்பெஷல் feature ஐ இங்கே கொண்டுவந்தது இண்டரஸ்டிங்..

//“சரி கணேஷ் நான் இங்கு இருக்கபோவது கொஞ்ச நாள்தான் என்னை உபோயோகித்து கொள்” என்றாள்..
“இல்லை இதுவரை உன் மீது அப்படி ஒரு எண்ணம வந்தது இல்லை..அதிலும் நீ வேற்றுகிரகவாசி எப்படி நீ இப்படி கேட்கின்றாய் என்று எனக்கு தெரியவில்லை என்றேன்...”அவளின் முகம் பார்க்காமல்
“உனக்கு புத்தி எப்படி போகின்றது பார் ..எப்போதும் இனபெருக்கத்துக்கான ஹோர்மோன்கள் சுரந்தால் இதுதான் பிரச்சினை...நான் சொன்னது என்னிடம் இருக்கும் அறிவுதிறமையை உபோயோகித்துகொள் என்று”...என்றாள்..“அப்படியா!!!! எல்லாம் என் வயசுதான் காரணம்” என்பதை தவிர வேறொன்றும் சொல்லவில்லை..//

ஹ ஹா..பக்கா...சுஜாதா'ஸ் ஸ்டைல்..அதான் சொன்னேன் உங்ககிட்டே writing இல் நல்லா professionalism வந்துருக்குனு...குட் கணேஷ்!!

பொற்கொடி செத்து போயிருச்சு..ஆனால் ஜீனோ வை கொண்டுவந்தது நல்லா டெக்னிக் தான்...பாப்போம் ஜீனோவின் அட்டகாசங்களை...!!

கணேஷ் said...

பொற்கொடி செத்து போயிருச்சு..ஆனால் ஜீனோ வை கொண்டுவந்தது நல்லா டெக்னிக் தான்...பாப்போம் ஜீனோவின் அட்டகாசங்களை...!!///

உங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி..

கருடன் said...

என்னா கணேஷ் இப்படி ஒரு சூப்பர் பிகர அநியாயமா கொன்னுடிங்க... சொல்ல போன இப்படி ஒரு கதை எழுதி என்னையும் கொன்னுடிங்க. ஒரே மூச்சில உங்க ப்ளாக்ல 6 பதிவு படிச்சிடேன் எல்லாம் சூப்பர்... இன்னும் படிச்சிட்டு தான் இருக்கேன்... :))