இன்னும் எழுதுவேன்.

          இன்னும் கொஞ்சம் தொடர்ச்சியாக எழுதலாம் என்று இருக்கிறேன். நீண்ட இடைவெளிதான் நான் எழுதாமல் இருந்த காலம். குறிப்பிட்டு சொல்ல உருப்படியான காரணம் எதுவுமில்லை. சென்னை வந்தபிறகு எழுதுவது குறைந்தது. புதிய இடம் புதிய வேலை, நண்பர்கள் என்பதோடு மட்டுமில்லாமல் படிக்க நிறைய புத்தகங்கள் கிடைத்ததும் ஒரு காரணம்.

      சுஜாதாவின் தீவிர ரசிகன் என்பதால் அவரது பத்துகட்டளைகளில் ஒன்றான தினமும் ஒருபக்கமவாது படிக்கவேண்டும் என்பதை கடைபிடிப்பவன்.  இடைப்பட்ட காலத்தில் நிறையவே படித்தேன் புத்தகத்தையும், வாழ்க்கையும். இந்த இரண்டையும் நேராக உங்களோடு பகிர்ந்துகொண்டு குழப்பபோவதில்லை.

         என்ன எழுத போகிறோம் என்ற யோசனை வருவதுக்கு  சாத்தியமில்லை. வழக்கம் போல அறிவியல் புனைவுதான். இதை எழுதத்தான் எனக்கு சிரமம் இல்லாமல் இருக்கிறது. மற்றபடி காதல் கதையோ, சமுக சீர்திருத்த கட்டுரைகளோ, கதைகளோ எழுத என்னால் நிறைய மெனக்கெட  முடியாது. என்னால் அறிவியல் புனைவு எளிதாக எழுதப்பட்டுவிடுகிறது என்பதால் அதையே தொடர்கிறேன்.

          வழக்கம்போல யாரும் படிக்க மாட்டார்கள் என்ற புலம்பல் ஒருபுறம் இருந்தாலும், இருக்கின்ற நான்கு வாசகர்களுக்காவது எழுதுகிறோம் என்கிற  ஒரு சந்தோசம் இருக்கிறது. இதில் இப்போதைய பிரச்சினை நீண்ட இடைவெளியில் அந்த நான்கு பேர்களும் இருக்கிறார்களா? இல்லையா? என்பதே. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.

        அதிகம் எழுதாவிட்டாலும் கதைக்கான சிறு குறிப்புகள் நிறையா எடுத்து வைத்துள்ளேன். ஒவ்வொன்றையும் கொஞ்சம் விரிவு படுத்தினால் கொஞ்சமாவது படிக்கின்ற வகையில் கதைகளாக  தேறும் என்ற நம்பிக்கை உள்ளது. உடனே இல்லாவிட்டாலும் வேலைநேரம் போக, மின்வெட்டுக்கு தப்பித்து எழுதியதை பகிர்கிறேன். முடிந்தால் படித்துவிட்டு சொல்லுங்கள். பார்க்கலாம் இந்த சுற்று கதைகள் எப்படி இருக்கின்றன என்று.