பிரபஞ்சம் ஒரு பார்வை......

பிரபஞ்சம் (universe) என்றவுடன் உங்களின் மனதில் தோன்றுவது என்ன என்பதை சில நிமிடம் சிந்தித்து பாருங்கள். சரி நீங்கள் என்ன நினைத்திருக்கிறிர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு இதை படிக்க ஆரம்பியுங்கள் நிங்கள் நினைத்ததும் இங்கு நான் கொடுத்ததும் ஒன்று என்றால் உங்களுக்கு ஒரு சபாஷ்.



பிரபஞ்சம் என்ற வார்த்தைக்கு அறிவியலில் அதிக அர்த்தங்கள் உள்ளன. இங்கு நான் அதற்கு இவ்வாறு விளக்கம் அளிக்க விரும்புகிறேன். பிரபஞ்சம் என்பது பல கலாக்ஸ்சி (galaxy) களை கொண்டது.இதன் அமைப்பு (flat)தட்டை என நம்பப்படுகின்றது.மேலும் சற்று வளைந்தது அல்லது கோல வடிவம் உடையது என்றும் நம்பப்படுகின்றது.

இதுவரை சில galaxy கள் கண்டு பெயரிடிடப்படிருகின்றன.galaxy என்பது gravity force,stars quasars,,stellar ornaments,gas,dust, energy, dark energy ,planets .....etc பொதுவாக இவைகளை கொண்டது. ஆனால் ஒரே ஒரு galaxy மட்டும் ஒரு சிறப்பு அம்சத்தை பெற்று உள்ளது அது milky way galaxy ஏனென்றால் அது நம்முடையது. இது வரை எந்த ஒரு galaxy லும் உயிர் இருப்பதாக கண்டுபிடிக்கவில்லை. இந்த galaxy ல் மட்டும் தான் பூனைக்குட்டி,நாய்க்குட்டி,மனிதன், என் வருங்கால காதலி போன்ற உய்ரினங்கள் இருக்கின்றன.

சிலர் கடவுள் என்ற ஒன்று இருப்பதாகவும் சொல்கிறார்கள் அவர் தான் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கினார் என்று கூறுகிறார்கள். அது எந்த அளவிற்கு உண்மை என்று எனக்கு தெரியாது ஏனென்றால் நாய்க்குட்டி பூனைக்குட்டி போன்றவற்றை நான் நேரில் பர்த்து ஏன் தொட்டு கூட பார்த்திருக்கின்றேன் ஆனால் கடவுள் என்ற ஒன்றை மட்டும் பார்க்க வில்லை. சரி இதை விட்டு விடுவோம் இதை பற்றி நான் பேச ஆரம்பித்தால் எளிதில் முடிக்க மாட்டேன் மற்றொரு பக்கத்தில் இதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.



இந்த galaxy கலில பல வகை உள்ளன. இவை பொதுவாக spiral arm galaxy கள் அதிகம்..அப்படி ஒரு spiral galaxy தான் நம்முடையதும்.அந்த galaxy ல் ஒரு சிறிய சூரியக்குடும்பத்தில் தான் நாம் இந்த ஆட்டம் போடுகிறோம்.நம் பூமியை பிரபஞ்சத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் இமய மலையில் ஒரு கடுகு இருந்தால் எப்படியோ அதுதான் நம் பூமியும். அதில் தான் இத்தனை ஆட்டங்கள் ஓட்டங்கள்.



பிரபஞ்சத்தின் தொடக்கம் என்ன?



என்னைப் பொறுத்தவரையில் கடவுள் கண்டிப்பாக இதனை படைத்து இருக்க முடியாது. கடவுள் மீது அதிக நம்பிக்கை வைத்து உள்ளவர்களின் மனம் புண் படமால் இறுக்க வேண்டுமென்றால் இப்படி வைத்துக்கொள்ளலாம் இந்த பிரபஞ்சம் உருவாகும் போது கடவுளும் சேர்ந்து உருவாகியிருக்கலாம் அவ்வளவே என்னால் நம்ப முடியும்.



பிரபஞ்சம் உருவான விதமாக பெரும்பான்மையினரால் நம்பப்படுவது இதுதான். அது big bang theory.இது நடந்த்ததாக கூறப்படுவது 13.70 billion ஆண்டுகளுக்கு முன்னர். அந்த நேரத்தில் ஒரு மிகப்பெரிய வெடிப்பு ஏறப்பட்டது.அந்த வெடிப்பில் இருந்து தான் இந்த பிரபஞ்சம் உருவானது என கணித்து உள்ளனர்.அந்த வெடிப்பில் அளவுக்கு அதிகமான வெப்பம் வெளியாகியுள்ளது. இதன் விளைவாக inflation நடந்துள்ளது.அதே வேளையில் அங்கு மாற்றங்கள் நிகழ்த் தொடங்கின.(இந்த நிலையில் இருந்தே time அதாவது space time தொடங்கி இருக்கின்றது) மாற்றங்கள் என்றால் particle,(electron,proton,neutron) anti particle,gas ,rays போன்றவைகள் தோன்றியிருக்கின்றன. இவை அனைத்தும் வெடிப்பு நடந்த 3 நிமிட நேரத்தில் நடந்தத்வைகள்.



அதற்க்கு பின் அதன் வெப்பம் மெதுவாக குறைந்து குளிர தொடங்கியது.அதற்க்கு பின் அனுத்துகள்கள் தங்கள் வேலைகளை காட்ட தொடங்கின. அவைகளுக்குள் இறுக்கும் ஈர்ப்பு விசை காரணமாக பல மாற்றங்கள் நிகலத்தொடங்கின.(particles மற்றும் anti particles இரண்டும் மோதி பலவகையான மாற்றங்கள் ஏற்பட்டன)



அதன் பின் சிதறிய பாகங்கள் galaxy களாக, வெடிப்பில் வந்த தூசுகள் ஒன்றோடொன்று உரசி அதில் உள்ள அணுக்கள் வினை புரிந்து (collision) நட்சத்திரங்கள் உருவாகின.galaxy கள் அமையத்தொடங்கியது பிரபஞ்சம் தோன்றி சுமார் 1 billion ஆண்டுகளுக்கு பின்தான். ஏனென்றால் நம் milky way galaxy யின் வயது 13.6 billion வருடங்கள் ஆகும். galaxy யின் வயது அதில் உள்ள நட்சத்திரங்களை கொண்டு கணக்கிடப்படும்.





அப்படி உருவான milky way galaxi யில் வெறும் 4.6 billion ஆண்டுகளுக்கு முன்னர் உருவானதே நம் சூரியக்குடும்பம். அதில் சுமார் 4.5 billion ஆண்டுகளுக்கு முன்னர் வந்ததுதான் நம் பூமி. அந்த பூமியில் உயிரினங்கள் உருவகத் தொடங்கியது 1 billion ஆண்டுகளுக்கு முன்னர்தான்.(இந்த பூமி கதையை மற்றொரு பக்கதி விரிவாக பர்ர்போம்)



மேலும் உங்கள் கேள்வி பிரபஞ்சம் வெடிப்பிலே உருவானது என்றால் அந்த வெடிப்புக்கு காரணம் என்ன என நீங்கள் கேட்டால் அது இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது.(அது தான் கடவுள் என்று சொள்ளதிர்கள்) அதை singularity என்கிறார்கள். அதை விளக்கும் விதி இன்னும் கண்டு பிடிக்க படவில்லை அவ்வளவே. stephen hawking தனது புத்தகத்தில் அந்த விதியும் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டுவிடும் என தெரிவித்துள்ளார்.



இப்போது உள்ள விதிகள் அனைத்தும் big bang ற்கு அடுத்து நடந்த அனைத்தையும் விளக்க முற்படுகின்றன.



இருந்தும் இன்னும் பிரபஞ்சத்தில் நம்மால் கண்டு அறிந்து கொள்ளாமல இருக்கின்றன பல. அவற்றை dark matter என்ற பெயரிட்டு இறுக்கின்றனர். அது உணடாக்கும் விசைக்கு dark energy எனப்படும்.



இந்த dark energy தான் அனைத்தையும் மூடி இழுத்து வைத்துள்ளன என நம்பப்படுகின்றது. என்னைப் பொறுத்தவரையில் singularity யை விளக்கும்,போது இந்த dark enegy யும் விளக்கப்படும் என நினைக்கிறேன்.காத்து இருப்போம். (இவை தான் பிரபஞ்சத்தில் 73% இருக்கின்றன)



சரி இது வரை பிரபஞ்சம் தொடக்கம் அது சம்பந்தமானவைகளை பார்த்தோம். இப்போது பிரபஞ்சம் எவ்வாறு முடியும் என பார்ப்போம்.



பிரபஞ்ச தொடக்கத்தை big bang என்பது போல பிரபஞ்சத்தின் முடிவை big crunch என்று சொல்லுகிறார்கள். ஆனால் இது big bang போல் அனைவராலும் ஏற்று கொள்ளபட்வில்லை. இது வந்த்ததற்கு முக்கிய காரணம் உண்டு அது நம் பிரபஞ்சம் விரிவடைகின்றது. அப்படி விரிவடைந்த்தால் அந்த விரிவுக்கு ஒரு முடிவு ஒன்று உண்டு அது தான் big crunch. (இதை stephen hawking தனது breif histry of time என்ற புத்தகத்தில் விரிவாக விளக்கியுள்ளார் சிரமம் பாராமல் அதை வங்கி படிக்க வேண்டுகிறேன்)



கவலை வேண்டாம் அது நடப்பதற்கு இன்னும் மிலியன் வருடங்கள் இறுக்கின்றன. இந்த கட்டுரையை படித்து கொண்டிருப்பவர்களுக்கு பிரபஞ்சத்தின் அழிவை பற்றி கவலை வேண்டாம் அதற்கு நான் உத்திரவதாம். உங்கள் வாழ்க்கை சுபமாய் கழியும் ஆனால் யார் கடவுள் நம்பிக்கையில் திளைத்து மனிதர்களுக்கு பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அடுத்த பிறவிகள் உண்டு என நம்புவர்கள் பிரபஞ்சம் அழியும் போது ஒரு மனிதனாகவோ , ஒரு பறவையாகவோ பிறந்து இருந்தால் அப்போது என்னை திட்ட வேண்டாம்.





நான் இங்கு விளக்கியது cosmology இன் அடிப்படையான கருத்துக்கள் மட்டுமே. என்னால் விரிவாக விலக்க முடியும். அனால் அதை படிக்கும் நண்பர்களுக்கு சற்று சிரமமாக இருக்கலாம்.ஆகவே இனி வரும் பக்கங்களில் ஒவ்வொன்றையும் சிறிது சிறிதாக விளக்குகிறேன்.





என்னடா இவன் வெறும் அறிவியல் அறிவியல் என்றே புலம்பிக்கொண்டே இருக்கின்றானே இவனுக்கு வேறொன்றும் எழுத தெரியாதா? என நிங்கள் நினைத்தால் அது தவறு.





ஒருகாலத்தில் என்னுள் காதலுக்கு உண்டான hormon வேலை செய்ததால் காதல் கவிதைகள் பலவற்றை எழுதினேன். ஆனால் என்ன அதை கொடுப்பதற்கு ஒரு காதலியும் அமையவில்லை என்பதே உண்மை. நான் காதல் கவிதைகள் எழுதி அதை என நண்பர்களுக்கு கொடுத்து படிக்கச்சொல்லி அவர்கள் என்னைக் கண்டாலே தலை தெறிக்க ஓட வைத்து..........சில நண்பர்கள் அவர்களின் காதலிக்கு கொடுத்து நல்ல பெயர் வாங்கியும் உள்ளனர். இதை விட கொடுமை என கவிதைக்கு வேண்டாம் என எண்ணித்தான் அதை எழுதுவதை குறைத்துக்கொண்டேன்.



அதை விட நான் படித்த அறிவியல் சம்பந்த்தமானவற்றை சிலர்க்கு தெரிவிப்பதில் எனக்கு சந்தோஷம். இந்த சந்தோஷம் முழுமையடைவது உங்களது கருதுக்களில்தான்.எனவே உங்களது கருத்துக்களை கொடுங்கள்.





இதை பற்றி விரிவாக படிக்க



brief histry of time



black holes universe



brocas mind



போன்ற புத்தகங்களை படியுங்கள்.

ஒரு எஜமான்.......

     நான் கடந்த சில  வருடங்களாக ஒருவருக்கு அடிமையாகி இருக்கிறேன். அவர் என்னை அடிமை ஆக்கினர் என்பதைவிட நானாக அவருக்கு அடிமை ஆனேன் என்பதுதான் உண்மை. அடிமைகள் பல வகையில் உருவாகலாம் அல்லது உருவாக்கப்படலாம்.நானும் ஒருவிதத்தில் அவரால் அடிமை ஆக்கப்பட்டேன் என்றே சொல்ல வேண்டும்.

    நான் அப்போது cosmology பற்றி கற்றுகொள்வதில் தொடக்கத்தில் இருந்தேன். அப்போது நான தேர்ந்து எடுத்து படித்த புத்தகங்களில்  அதிகம் பார்த்து படித்தது இந்த பெயரைத்தான். எந்த ஒரு விளக்கங்கள் வேண்டும் என்றாலும் இவர் உருவாக்கிய சார்பியல் கோட்பாடு மற்றும் இவர் விரிவு படித்திய quantom mechanics , மேலும் சில விதிகள் இவற்றை சொல்லியே விளக்க வேண்டியது இருந்தது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அதுவரையில் இவரை பற்றி அடிப்படை அறிவு மட்டுமே என்னிடம் இருந்ததது. நான் cosmology பற்றி சற்று விரிவாக படிக்க முற்பட்ட போதுதான் தெரிந்தது அதில் மொத்த பங்கில் முக்கால் வாசி இவருடையது என்று.


அதன் பின் என் ஆர்வம இவரின் மீது முழுமையாக பதிய ஆரம்பித்தது. பின் இவரை பற்றி தேட ஆரம்பித்தேன். இவரின் அறிவியல் அறிவு மற்றும் இவர் அணுகுமுறை அனைத்தையும் கண்டு வியந்தேன். ஏனென்றால் அது எனக்கு ஓர் புதிய அனுபவமாக இருந்தது. இவர் சம்பந்த்தமான புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன். படித்தேன். புரிந்தது கொஞ்சமே ஆனால் கற்று கொண்டது அதிகம்.


நான் இந்த இடத்தில் ஒன்றை சொல்ல்லிக்கொள்ள விரும்புகிறேன் இன்றுவரை அவரின் அறிவியல் சம்பந்தமான முழுவதையும் புரிந்து கொண்டேன் என்றால் என்னை நனே முட்டாளாக்கிக்கொள்கிறேன் என்றே அர்த்தம்.வெறும் அவரின் மேர்க்கோல்களை (quote) மட்டுமே கடைப்பிடிக்க முயற்சித்து வருகிறேன். மேலும் அவரின் அறிவியல் தகவல்களை ஓரளவு நான் புரிந்துகொண்டிருக்கிறேன். அதனால்தான் அவரின் மீது இத்தனை ஆர்வம. அவரைப் பற்றி கண்டிப்பாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம பல நாட்களாகவே என்னுள் இருந்து கொண்டே இருந்ததன. அதன் வெளிப்பாடு அவரின் கருத்துக்களை என் அறையில் ஒட்டி வைத்துக்கொள்வது, கணினியில் வைத்துக்கொள்வது நண்பர்களிடம் அவரைப்பற்றி உரையாடுவது போன்றாவைகளாக இருந்ததன.

சில நேரங்களில் என் நண்பர்களிடம் பேசும்போது அவர்கள் தலைதெறிக்க ஓடியும் இருக்கிறாக்கள், சிலவற்றை காதுகொடுத்து கேட்டும் இருக்கிறார்கள். சிலர் இவர் எந்த படத்தில் நடித்து இருக்கிறார் எனக்கேட்டு என்னை கோபத்தின் உச்சிக்கே கொடுசென்றவர்களும் உண்டு. என்ன இருந்ததாலும் அவரைப்பற்றி இருக்கும் ஆர்வம் தொடக்கத்தில் எவ்வாறு இருந்த்ததோ அதே அளவில் இன்னும் இருக்கின்றது. அதன் வெளிப்பாடுதான் இங்கு நீங்கள் படித்து கொண்டிருப்பது.

என்னைப்பொறுத்தவரை அவரை அறிவியலின் தந்தை என்று சொல்வதே பொருந்தும். அவரின் தாக்கம் என்னில் இருந்த எல்லா விதமான வெளிப்பாடுகளிலும் இருந்தது. அவரின் வார்த்தைகள் எனக்கு வேதமாய் மாறியது என்று சொன்னால் அது உண்மை.

ஐன்ஸ்டீன் இவர்தான் என்னை அடினமையக்கி இருப்பவர். சிலர் நினைக்கலாம் இவர் உன்னை அடிமை ஆக்க எப்படி சாத்தியம் இவருக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் என்று. அப்படி கேட்பவர்கள் ஒரு முறை அவரின் சுயசரிதையை படிக்க வேண்டுகிறேன் அதற்க்கு பின்னும் உங்களில் மாற்றம் இல்லை என்றால் என்னிடம் கேளுங்கள் நான் சொல்கிறேன் என்ன காரணம் என்று. அவரைப்பற்றி einstein life and time (ronlad w. clark) என்ற புத்தகத்தில் படிக்கலாம். படியுங்கள்.

இங்கு நான் சொல்ல விரும்புவது அவரிடத்தில் நான் வியந்த விஷயங்கள் தான். அவரைப்பற்றி பரவலாக அனைவரும் தெரிந்தது இருந்தாலும் மீண்டும் சொல்கிறேன். என்னை பொறுத்த வரையில் அவரை இந்த உலகம் சரியாக முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்றே சொல்வேன் காரணம் இதன் கடைசியில் சொல்கிறேன். இப்போது அவரைப்பற்றி சிலவரிகள்.

(இது நான் முன்பு படித்ததை நினைவுகூர்ந்து சொல்கிறேன் அதனால் விரிவான துல்லியமான தகவல்களை இங்கு தருவது கடினம் எனவே நான் சொன்ன புத்தகத்தை படிப்பது சிறந்ததது)

இவர் ஜெர்மனியில் 1879 ஆம் ஆண்டு march மாதம் 14 ஆம் தேதியன்று பிறந்தார்.அவர் பிறந்ததபோது அவரின் அப்பாவிடம் இருந்தது ஒரு சிறிய electrical கடை மட்டுமே.

அவரது சிறு வயதைப்பொறுத்தவரையில் அவர் எதிர்காலத்தில் ஒரு தலை சிறந்த விஞ்ஞானியாக வருவார் என்பதற்கான எந்த ஒரு அறிகுறியும் இருக்கவில்லை. அவர் தன 9 வயதில்தான் சரளமாக பேசும் தன்மையை பெற்றார். அவரது பள்ளி படிப்பு சொல்லிக்கொள்ளும் அளவிற்க்கு இல்லை. ஒருமுறை அவரது அப்பா பள்ளிக்கு சென்று ஆசிரியரிடம் அவரைப்பற்றி கேட்ட போது அதற்க்கு அந்த ஆசிரியர் “இவனால் எந்த ஒரு செயலையும் உருப்படியாக செய்து முடிக்க முடியாது” என்று சொல்லி இருக்கிறார்.

ஒரு வழியாக இரண்டுக்கும் மேற்பட்ட பள்ளிகள் மாற்றி அவரது பள்ளி படிப்பு முடிந்தது. அதற்க்கு பின் கல்லூரி படிப்பு தொடர்ந்தது.

இவரது அப்பா இவரை electrical சம்பந்த்தமான படிப்பை படிக்க சொல்லியதால் இவரும் சென்றார். நுழைவுத்தேர்வில் இவர் தேர்ச்சி அடையவில்லை. அதற்க்கு இரண்டு கரணங்கள் இருந்ததன ஒன்று இவரின் வயது இரண்டு இவருக்கு கணக்கு பாடம் சரியாக வராது. ஒரு வழியாக சில மாதங்கள் பயிற்சிக்குப் பின் ஒருவழியாக அந்த படிப்பில் சேர்ந்தார். ஆனால் உண்மையில் அவர்க்கு அதில் முழு ஈடுபாடு இல்லை.. பிற்காலத்தில் அவர் தன பள்ளி படிப்பை பற்றி சொல்லும் போது ஆசிரியர்களை போர்ப்படை தளபதிகளாக வர்ணித்து இருப்பார். இதில் இருந்தே தெரிந்தது கொள்ளலாம் அவரின் மேலான கருத்து மற்றவரை கட்டுபடுத்தாமல் அவர்கள் வழியிலேயே விடவேண்டும் என்பதே.

அவருக்கு voilin தெரியும். காதலும் தெரியும். அவருக்கு காதல் அனுபவம் ஒரு இனிமையானதாக இருந்து இருக்க வேண்டும் ஏனென்றால் பின் வந்த நாளில் அவர் அதை மிகுந்த இன்பமான நினைவுகளாக பகிர்ந்து இருக்கிறார். ஒரு தனிமையான இடத்தில் அவர் voilin வசித்து கொண்டிருக்கும் போதுதான் அவரின் காதலியை கண்டார். இருவரும் பின் நாளில் திருமணம் செய்து கொண்டனர். பின் விவாகரத்தும் நடந்து முடிந்தது. அவர் தன காதல மனைவியின் மீது அதிக காதல கொண்டு இருந்தார் என்பதற்கு ஆதாரமாய் இவருக்கு கிடைத்த noble prize ன் பணம் முழுவதையும் தன மனைவிக்கே கொடுத்திருந்தார். பின் இரண்டாவதாக திருமணமும் செய்து கொண்டார்.மொத்தம் இரண்டு மனைவிகள் அவரது வாழ்வில். (பொதுவாக அவரது முதல் காதல திருமணம் அவருக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை எனக் கூறப்படுகின்றது ஆனால் காதல் அல்ல.).


நான் அவரிடம் இருந்து அறிவியலை மட்டுமே கற்று கொள்ள முற்பட்டேன். அதனால் தன அவர் காதல செய்து இருந்ததும் இன்றுவரை நான் அதற்க்கு முயலவில்லை. ஏன் இதை சொல்கிறேன் என்றால் சரியாக ஒரு வருடம் முன்னால் ஐன்ஸ்டீன் தாகம அதிகம் இருந்தததால் அவரை போல சிலவற்றை நானும் முயன்றேன். சரி அவரைப்போல் தலைக்குள் இருப்பதைத்தான் வளர்க்க முடியவில்லை (மூளை) தலைக்கு வெளியில் இருப்பதையாவது (தலை முடி) வளர்ப்போமே என்று வளர்ர்க்க முயன்றேன்.

முயன்றதின் விளைவு எனக்கு அருகில் அமர்ந்து வேலை பார்த்த என் நண்பன் (நான் ஐன்ஸ்டீன் பற்றி எவ்வளவு பேசினாலும் அவன் கேட்டுகொண்டே இருப்பான் ரெம்ப நல்லவன்.....) அழுகாத குறைதான் அவன் என்னிடம் நி என்ன வேண்டுமானாலும் சொல் கேட்கிறேன் அதற்க்காக ஐன்ஸ்டீன் போல் முடிவளர்க்கிறேன் என்று சொல்லி இப்படியா? எனக்கே பயமாக இருக்கின்றது என்று சொல்லி முடி வெட்ட காசு கொடுக்காத குறைதான். நான் வெட்டவில்லை என்றால் பின் நான் சொல்வதை கேட்க மாட்டன் என்பதற்காக நான் செய்தேன். சரி என் புராணம் போதும்


ஒருவழியாக அவரின் கல்லூரி படிப்பு முடிந்தது. அந்த நேரங்களில் கூட physics சம்பந்த்தமான சிந்தனைகள் அவரிடம் இருந்தது அவர் சில thermo dyanamics (atom magnet field) சம்பந்த்தமான கட்டுரைகளை எழுதினார்.

படிக்கும் போது ஒருமுறை மலையில் சுற்றுலா செல்லும் போது ஒரு சரிவில் அவரது கால வழுக்கி விழுந்திருப்பார் அப்படி விழுந்து இருந்தால் அவர் உடல் சிதறுவது உறுதி. ஆனால் அவர் பின்னால் வந்த நண்பன் ஒருவன் அவரை பிடித்து இழுத்து காப்பாற்றினான். அன்று அவன் காப்பாற்றவில்லை என்றால் இன்று சில முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்புகள் இல்லை, atom bomb இல்லை, நான் இதை எழுதி உங்களை துன்புறுத்தி இருக்க மாட்டேன். நீங்கள் உங்கள் விருப்பப்படி கால மேல் கால போட்டு பவானி, மேகலா தெக்கத்தி பொண்ணு போன்ற நெடுந்த்தொடர்களை பார்த்துக்கொண்டிருக்கலாம்.(அநத நண்பரை பின்னாளில குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார்)



ஒரு முறை அவர் விரிவுரையாளராக பணிபுரியும் போது அவர் சில கட்டுரைகள் எழுதி அவருக்கு மேலுள்ள அதிகாரியிடம் கொடுத்த போது அவர் அதை வாங்கி படித்தது விட்டு அதை அங்கிகரிக்க வில்லை. அன்று அவருக்கு இது தெரியாமல் போனது அது தான் ஐன்ஸ்டீன் உலகப் புகழுக்கு காரணமாய் இருந்த realative theory க்கு அடிப்படைதான் அது. அந்த கட்டுரைதான் பின்னாளில் அவர் உருவாக்கிய realative theory ல் முக்கிய பங்கு வகித்தது என்பது உண்மை.

அதற்கு பின் அவரது வாழ்வில் முழுவதும் அறிவியலாக மாறியது. அடுத்ததாக அவர் விரிவாக்கியது quantom theory ஏற்க்கனவே சிலர் அதை விரித்து கொண்டு இருந்தாலும் அதில் முக்கிய பங்கை வகித்தவர் இவரே. இவரின் electron jump and photon rays போன்றவைகள் குறிப்பிட தக்கவைகள்


அடுத்து வந்த காலங்களில் இவரின் பங்களிப்பு அறிவியலில் அவருக்கு relativity theroy ல் கிடைத்த பெயரை மென்மேலும் பெரிதாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருக்கும் நேரம். ஒவ்வொரு நாடுகளும் தங்களின் ஆயுதங்களை பெறுக்கும் முயற்சியில் தீவிரமாய் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நேரம் அது அதில் முக்கியமானது அமெரிக்கா. அது அணு ஆயுத பரிசோதனையில் இருந்தது. அதில் முக்கிய மாணவர் ஐன்ஸ்டீன் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த manhattan project ல் முக்கிய பங்கு வகித்தவர் இவரே. (manhatten project என்பது அமெரிக்கா அணு ஆயுதம் கண்டுபிடிப்பதற்கு உருவாக்கிய ஒன்றாகும் இதன் வெற்றிதான் atom bomb)

இவர் atom bom கண்டுபிடித்த பின்புதான் அதிகமான பிரச்சனைகளையும் மன உளைச்சலையும் அடைந்தார் என்பது உண்மை. ஏனெறால் போரின் போது அமெரிக்கா ஜப்பான் மீது போட்ட குண்டே காரணம்.

ஏற்கனவே ஐன்ஸ்டீன் அன்றைய அமெரிக்கா அதிபர் ரூஸ்வெல்ட்டிடம் கெஞ்சிக் கேட்டு இருந்தார் அவர் கேட்டது இதுதான் அதாவது குண்டு போடும் முன் ஒருமுறை அவ்ர்களுக்கு அதை சொல்லி இறுதி எச்சரிக்கை விடுக்குமாறு கேட்டார். ஆனால் நடந்ததது தலை கீழ.


அமெரிக்கா குண்டு போட்டது அதற்க்கு பின் போர் ஒய்ந்தது என்பது உண்மைதான் ஆனால் உலகின் அனைத்து கவனமும் கோபமும் ஐன்ஸ்டீன் பக்கம் திரும்பியது. அங்கு நடந்ததற்க்கு இவரே கராணம் என்று வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார்கள். இதனால் ஐன்ஸ்டீன் மிகவும் மனம் வருந்தினார்.

அவர் urenium தாதுவில் இருந்து வரும் அனுக்கதிர்கள் ஒன்றும் புதியது இல்லை அது இயற்கையாகவே இருப்பதுதான். எப்படி சூரியனில் இருந்து கதிர்கள் வெளிப்படுகின்றன்வோ அதேபோல் தான் இதுவும் நான் ஒன்றும் புதியதாக கண்டுபிடிக்கவில்லை என்று விளக்க முயன்றார். ஆனால் அதற்க்கு பயனில்லாமல் போனதுதான் உண்மை.

((( அவர் அன்று சொன்னது உண்மைதான், இன்று அதே atom bomb முறையைத்தான் அனுசக்தியாக பயன்படுத்துகிறோம. ஒரு சிறு வித்தியாசம் atomb bomb ல் electron கலை கட்டு படுத்தமால் விட்டால் அது பெருகி அதிக சக்தியை கணக்கில்லாமல் வெளியிடும் அதே electron களை முறையாக கட்டுபடுத்தி சக்தியை பெறுவதால் இன்று உங்கள் வீட்டில் விளக்கு எரிகிறது. மற்ற வேலைகள் நடக்கின்றன.)))) (அனுமின் நிலயங்களில் இந்த முறையைத்தான் பின்பற்றுகிறார்கள்)))


அநத நேரத்தில், ஒரு தலை சிறந்த விஞ்ஞானி அறிவியலின் பக்கம் இல்லாமல் அரசியலின் பக்கம் சென்றுவிட்டார் அதன் விளைவுதான் இது என்று சக விஞ்ஞானிகளே சொல்லியது அவரை மிகவும் பாதித்தது.


அதற்க்கு பின் வந்த காலங்களை அவர் அமெரிக்காவிலே கழித்தார். அவரின் இறுதி காலத்தில் இந்த உலகதிற்கு ஒரு உன்னதமான படைப்பை அவரது அறிவின் மூலம் விவரித்தார் . அதுதான் space and time. இது newton க்கு எப்படி புவிஈர்ப்பு விசையோ அதேபோல் ஐன்ஸ்டீன் க்கு space and time. அதற்க்கு பின் வந்த்தவர்கள் இதை விரிவு படுத்தி இன்று நல்ல முனேற்றம் கண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

((ஆனால் இன்றுவரை நம் universe க்கு எத்தனை dimension என்பது தீர்க்கபடாத ஒரு கேள்வி. பொதுவாக நம்பபடுவது four dimensions அதாவது length,width, height and time. அனால string theory போன்றவைகள் நம் universe க்கு 10 க்கும் மேற்பட்ட dimensions தேவை என்கின்றன. இதைப்பற்றி கண்டிப்பாக நான் தனியாக கொஞ்சம் சொல்ல வேண்டும் ஏனென்றால் என் தூக்கத்தை கெடுத்தவைகளில் இதுவும் ஒன்று. மற்ற ஒன்றில் இதைப்பற்றி விரிவாக விவரிக்கிறேன்)))



பின் 1955 ஒரு நாளில் அவருக்கு மிகுந்த உடல் வலி வந்தது அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அவரை அணுகியபோது அவர் முதலில் முழுமையாக மறுத்து பின் அவரின் நெருங்கியவர்களின் வற்ப்புறுத்தலால் அவர் சம்மதித்தார்.

கொண்டு செல்ல வாகனம் வந்தது. செல்லும் வழியில் அருகில் அமர்ந்து இருந்த மருத்துவ ஊழியரிடம், மருத்துவர்களை பற்றி கிண்டலடித்து சிரித்து பேசிக்கொண்டே சென்றார்.

மருத்துவமனை சென்றவுடன் அவர் வலிக்கு நிவாரணியாக சில சிகிச்சைகள் அளிக்கப்பட பின் சற்று சரியனார்.

இன்றுவரை நான் படித்தவற்றில் இப்போது நினைத்தாலும் சற்று மனம் கலங்குவது இரண்டு விசயங்களுக்காக.

அதில் ஒன்று stephen hawking தன இளம் வயதிலேயே ALS (motor neuron disease) என்ற நோயாள பாதிக்கப்பட்டு அவருடைய உடல் பாகங்கள் அனைத்துமே செயலிலந்த்தன. அதனால் அவரின் பேச்சும் போனது. இருந்தும் அவரின் அறிவியலின் பங்களிப்பு உயர்ந்தது. அவர் பாதிப்படைந்த பின்னர் விண்வெளி பயணம் மேற்க்கொண்டர்ர் என்பது குறிப்பிட தக்கது. அவர் அந்த நோயின் பாதிப்பை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொல்ள்ளவிலை என்பது அவரின் புத்தகங்களை படிக்கும் போது நான் புரிந்து கொண்டேன். ஏனென்றால் அவரின் நகைச்சுவை கலந்த பேச்சுக்கள் மற்றும் அறிவியலை எளிமையாக (நகைச்சுவை கலந்த உரையாடலின் மூலம்) விளக்குவார். என் கவலை அவருக்கு அந்த நோய் இல்லை என்றால் இன்னும் சற்று அதிகமாக அவர் முயற்சி செய்து இருந்திருப்பார்.


இரண்டாவதாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஐன்ஸ்டீன் முதல் சிகிச்சைக்கு பின் சற்று தேர்ந்தார். உடனே அவர் அருகில் இருந்த்தவர்களிடம் கேட்டது அவரின் வீட்டில் இருந்து அவரின் மூக்கு கண்ணாடி, மற்றும் அவர் கடைசியாக எழுதிக்கொண்டிருந்த அறிவியல் தகவல்களையும் தான். அவரது எண்ணம அதை தொடர்வது.

ஆனால் அவருக்கு இது தெரியாமல் போனது அடுத்த சில மணி நேரங்களில் அவரின் உயிர் பிரியபோகின்றது என்று.

என்னை பொறுத்தவரை அவரது எண்ணம இன்னும் தான் கண்டுபிடிக்கவேண்டியது அதிகம் இருக்கின்றது என்றே இருந்து இருக்கவேண்டும். அதற்காக தன மரணப்படுக்கையிலும் அவர் முயற்சி செய்தது. என்னை மிகவும் பாதித்தது.

மீண்டும் அவருக்கு சற்று வலிவந்ததால் மருத்துவர் மருந்து கொடுத்தார். அதற்க்கு பின் அவர் சற்று நிம்மதியாக உறங்கினார்.

ஆனால் சில மணி நேரம் கழித்து அவர் சுவாசிப்பதில் சற்று சிரமமம் ஏற்ப்பட்டது. அருகில் இருந்த பணியாளர் அருகில் சென்று பார்த்திருக்கிறார். அவர் தன வாயில் ஜெர்மன் மொழியில் எதையோ முனங்கி இருக்கிறார். அந்த் பணியாளுக்கு ஜெர்மன் தெரியாது என்பதால் அவர் கடைசிவார்த்தை என்னவென்று தெரியாமலேயே போனது. அடுத்த சிலநிமிடங்கள்தான் அவர் உயிர் இருந்தது. சில ஆழ்ந்த சுவாசங்களுக்கு பின் அவர் உயிர் பிரிந்ததது .


என்னைப்பொறுத்தவரை அவரது அந்த இறுதி வார்த்தைகள் , அவர் இறுதியாக எழுதிக்கொண்டிருந்த வற்றைப் பற்றி அவர் தூங்கிகொண்டிருக்கும் போது யோசிதது (கற்ப்பனை செய்து ) இருப்பார் அவருக்கு அது சம்பந்த்தமான சில தகவல்கள் அவரின் மூளையில் தோன்றியிருக்கும் அதை சொல்ல முற்பட்டு இருப்பார் ஆனால் அது முடியாமல் போனது.


ஏனென்றால் புத்திசாலிதனத்தை விட கற்பனை சக்தியே சிறந்ததது என்று சொல்லி அதற்க்கு ஆதாரமாய் வாழ்ந்து காட்டியவரின் மூளை அவருடையது.

நான் முதலில் சொல்லி இருந்தேன் இவரை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று. அதற்கு இவரே ஒரு காரணம்தான். இவர் தன்னை வெளிப்படுத்துவதில் சற்றும் விருப்பமிலாதவர். இவரது வேண்டுகோள் தனது தங்கி இருந்த இடத்தை மற்றும் எனது சம்பந்த்தமான எந்த ஒன்றையும் ஒரு பெரிய இடமாக பாவித்து யாருக்கும் காட்டகூடாது. என்பதே. அதாவது அவர் சொன்னது “do not let the house become a museum.” மேலும் தொடக்கத்தில் இருந்தே அவரிடத்தில் தனிமை கலந்த அறிவியல் ஆராய்ச்சி அதிகம் இருந்தது. அவரது தனி மனித சமுக வாழ்க்கை என்பது அவரிடத்தில் குறைவே. அதனால் தான் அணு குண்டு விஷயத்தில் மற்றவர்கள் சொன்ன வார்த்தைகள் அவரை மனதளவில் பெரிதும் பாதித்தன.


அவர் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் எழுதிய கடிதங்களில் இருந்தே அவரை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள முடிகிறது.எந்த அளவிற்கு அவர் தன அறிவியல் படைப்பை தெரிவித்தரோ அந்த அளவு தன்னை வெளிப்படுத்த வில்லை என்பதே உண்மை

பின் வந்த காலங்களில் அவர் வெளியிட்ட relativity theory யை சிலர் குறை சொல்லி அதை கலங்க படுத்த முயற்ச்சித்து பின் தன தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளனர். என்பதே உண்மை.


இப்போது உள்ள modern science பல்வேறு சொதனைகளுக்கு பின் ஆச்சர்யத்துடன் பார்ப்பது ஐன்ஸ்டீனின் அறிவுத்திறமையைத்தான்.

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் இதுவரை அவரைப்போன்ற ஒரு அறிவுத்திறமை கொண்ட ஒருவர் பிறக்கவில்லை என்றே சொல்லலாம்.

அதற்க்கு ஆதாரம் உள்ளது. 1955 ஆம் ஆண்டு அவரின் மரணத்திற்கு பின் அவரது மூலையை எடுத்து ஆராய்ந்து பார்த்தபோது அனைவரும் வியந்தது அவரது மூலையில் இருந்த சாமச்சரங்கள்தான்.

அவரது மரணத்திற்கு பின் அவரது மூளை தனியாக எடுத்து பாதுகாக்கப்பட்டது. இந்த உண்மை வெளிவந்தது 1978 ஆம் ஆண்டுதான் என்பது ஒரு ஆச்சர்யமானது.

அவரது மூளையை எடுத்து பதுகாத்ததற்க்கு கராணம் கடந்த 20 ஆம் நுற்றாண்டில் ஒரு தலைசிறந்த அறிவுத்திறன் கொண்டவர் என்பதே.

மூளை நரம்பியல் வல்லுனர்கள் சொல்வது என்னவென்றால் பேச்சு, மற்றும் மொழி சம்பந்தமானவற்றை கட்டுபடுத்தும் பகுதி ஒருவேளை சிறியதாக இருக்குமானால் விண்வெளி மற்றும் எண்கணிதம் சம்பந்த்தமானவற்றில் மூளையானது சிறப்பாக செயல்படும் என்பதைத்தான். இதுதான் ஐன்ஸ்டீன் வாழ்விலும் நடந்ததது.


மேலும் அவரது மூலையில் glial cell அதிகமாக இருந்தததாக கூறப்படுகிறது
இந்த் glial cell களின் வேளை என்னவென்றால் புலன்களில் இருந்து கிடைக்கும் தகவல்களை எடுத்துசெல்லும் neuron களுக்கு சற்று ஊட்டம் அழிப்பது, மூலை செய்யும் வேலைகளுக்கு துணை நின்று உதவுவது இவையே.( புலன்களில் இருந்து தகவல்களை எடுத்துச்செல்லும் neuron கள் குறைந்த அளவு மின்சார விசையை உண்டாக்கும் என்று நான் படித்தது உண்டு மேலும் அந்த மின்சார விசையின் தொடர்பிலேதான் ஒரு neuron ல் இருந்து மற்றொரு neuron தகவல்களை கடத்துகின்றன)


அவரது மூலையில் உள்ள glial செல்களின் அமைப்பு மற்றவற்றை வைத்து பார்க்கும்போது ஐன்ஸ்டீன் ஒருவருடைய மூளை கிட்டத்தட்ட 11 மனிதர்களின் மூலைக்கு சமமானது என்று கணக்க்கிட்டுயிருக்கிறார்கள்.


(அவரது மூளையைப் பற்றி இன்னும் விரிவாக விளக்க முயன்றால் உங்களுக்கு மூளை சற்று குழம்புவதற்கு சிறிது வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன். இன்னும் நிறைய இருக்கின்றன அவரது மூளை பற்றி) .



இப்போது சொல்லுங்கள் இதுவரை இவர் போன்ற அறிவுத்திறன் கொனடவரை நிங்கள் பார்த்தோ அல்லது படித்தோ இருந்ததால் எனக்கு தயவுசெய்து தெரியப்படுத்துங்கள் அவரைப்பற்றியும் நான் அறிய ஆர்வமாக இருக்கிறேன்.

மேலும் இதுவரை இந்த தகவல்களை படித்து வந்திருந்ததால் நான் உங்களுக்கு கண்டிப்பாக நன்றி சொல்ல கடமை பற்றிருக்கின்றேன். ஏனென்றால் நிங்களோ அல்லது நானோ ஐன்ஸ்டீனை பற்றி படிப்பது நாம் ஒன்றும் மற்றுமொறு relative theory படைக்கலாம் என்ற எண்ணத்தில் இல்லை.

இன்றும் நம்மை சுற்றி உள்ளவர்கள் கிருஷ்ணன் தன வாயில் உலக உருண்டையை காட்டியதாகவும், அனுமான் தான் விளையாடுவதற்காக சூரியனை பிடித்தார் என்றும் கடவுள் இந்த பூமியை காப்பற்ற அதை தன வாயில் எடுத்துக்கொண்டு சென்று கடலுக்கு அடியில் ஒழித்து வைத்து நம்மை காப்பாற்றினார் (இந்த அவதாரம் கூர்ம அவதாரம் என வர்ணிக்கப்படுகிறது மேலும் கவனியுங்கள் கடல் என்பதே பூமியில் இருப்பதுதான் ஆனால் இங்கு கடவுள் பூமியையே எடுத்து கடலுக்கு அடியில் செல்கிறார்.) என நம்புகிறவர்கள் மத்தியில் mercury யின் ஓட்டத்தை துள்ளியமாக கணக்கிட்டவர், அவரது ஒரு relativity theory ன் மூலம் இந்த பிரபஞ்சத்தையே (universe) அவரது கண்களால் காண வழிவகுத்தவரை, பற்றி படிக்க உங்களின் நேரத்தை இதுவரை செலவிட்டது மேலே சொன்னவர்களை காட்டிலும் நீங்கள் நல்ல செயலையே செய்து இருக்கிறிர்கள்.. என்பது என் கருத்து. அதுவே உணமையும் கூட.



இங்கு நான் ஐன்ஸ்டீன் அறிவியல் கருத்துக்களை கண்டுபிடிப்புகளை ஆழமாக சொல்லவில்லை அப்படி சொல்லி இருந்தால் நீங்கள் இதுவரை படித்துவ்ந்து இருப்பிர்கள் என்பது சற்று சந்தேகமே. எனவேதான் சற்று மேலோட்டமாக சொல்லியிருக்கின்றேன்.அவரைப்பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக. அவரது அறிவியல் கண்டுபிடிப்புகளையும் என்னால் முடிந்தத அளவு கண்டிப்பாக விளக்குவேன் மற்றொன்றில்..
என்னைப்போல் ஐன்ஸ்டீனை விரும்புவர்களுக்காக. அதை நான் செய்வேன்.



நன்றி,

கணேஷ்