விரிகோணம் - 2


  இதற்கு  முந்தைய பாகங்கள் படிக்க...
  

  

    இருந்தாலும் இது சம்பந்தமான மற்றொரு முறை அவருக்கு சாத்தியம் என பட்டது. அது தேறினால் கண்டிப்பாக இரண்டாவதாக யோசித்து வைத்து இருக்கும் ஒளியின் வேக பயணம் தேவையில்லை.  

   அது எந்த விதத்திலாவது வயதாகுவதை குறைப்பது. இதன்மூலம் கிட்டதட்ட மரணமில்லா மனிதர்களை உருவாக்குவது சாத்தியம் என்பது அவரின் எண்ணம். செல்களின் பிரிதலை கட்டுபடுத்தி அதனை கட்டுக்குள் கொண்டுவருவது இந்த மாதிரி ஏதவது செய்து அதிக காலத்துக்கு மரணத்தை தள்ளி போடுவதே நோக்கம். வைத்தியை கடிதத்துடன் தொடர்பு கொண்டதும் இந்த ஒரு விசயத்துக்காகத்தான்.

   அதே நேரத்தில் அவரது இரண்டாவது முறையில் இருந்த சில சிக்கல்கள்களும் வைத்தியின் உதவியை நாட காரணமாக இருந்தது. அவருக்கே அந்த இரண்டாவது முறையான ஒளியின் வேக பயணத்தில் நம்பிக்கை இல்லை. இதுவரை அறிவியலில் தீர்க்கபடாத சிக்கல்கள் நிறைந்த ஒன்று.

    ஒளியின் வேகபயணம் என்பது ஒருபக்கம் இருந்தாலும் அதன் அடிப்படையில் வேறொன்றை செய்ய முயன்றுகொண்டு இருந்தார். wormhole ஐ வைத்து வேகமாக பயணிப்பது. இந்த wormhole  கற்பனை வடிவில் மட்டும் இருந்தாலும் ஒளியின் வேக பயணத்தை முயல்வதை விட இதன் மேல்  அவருக்கு நம்பிக்கை இருந்தது. காரணம் ஐன்ஸ்டீன் relativity theory ன் மூலம் இதை விளக்கியிருப்பதே.


    எப்படி கருந்துளைகள் இருக்கிறது என்பதை ஐன்ஸ்டீன் சொன்னபோது முதலில் கற்பனை மட்டும் என்று நம்பி பின் அது இருப்பதை உணர்ந்ததை போல இந்த wormhole விசயமும் இருக்கலாம் என்பது அவரது நம்பிக்கை. relativity theory ள் சொல்லியபடி space time ல் அதிக ஈர்ப்பு விசை மாற்றத்தினால் ஏற்ப்படும் ஒரு துளை அல்லது ஒரு வெளிப்பகுதி என்று இதை சொன்னாலும் பெரிய அளவிலான இரண்டு பிரப்ஞ்சங்களுக்கு இடையே இது இருக்ககூடும் என்பது புத்திக்கு சரியாகப்படவில்லை.

    இரண்டு பிரப்ஞ்சங்களுக்கு இடையே இருக்ககூடும் என் நம்பியதுக்கு காரணம் அந்த அளவிற்கு அதிக ஈர்ப்பு விசை செயல்பட்டால்தான் இந்த துளைகளை ஏற்ப்படுத்தமுடியும். அதோடு இதை ஏற்ப்படுத்தும் அணுக்களும் அதை சார்ந்தவற்றையும் மனிதன் இன்னும் சரியாக கண்டுபிடித்து புரிந்துகொள்ளவில்லை.

    இவற்றை ஏற்படுத்த காரணமாக இருப்பதை அந்நியமானது அல்லது விசித்திரமானது என்பதே மனிதனின் இன்றைய கணிப்பு. இந்த அளவு ஈர்ப்பு விசையை செயற்கையாக ஏற்ப்படுத்தி சோதிப்பது என்பதும் இயலாத காரியம் என்பதால் இது சம்பந்தமான எந்த ஒரு சோதனை முயற்சியும் இல்லை.

    ஆனால் அது சாத்தியமாக்குவதில் நம்பிக்கை வைத்து இருந்தார் புத்தி.அதாவது தேவையான திசையில், பாதையில் warm hole ளை உருவாக்கி அதில் வேகமாக பயணிப்பது. அது விண்கலத்துக்கு சற்று முன் தோற்றுவிக்கப்பட்டு விண்கலத்தை தனது வழியில் இழுத்து செல்லும் ஆனால் அதன் கட்டுப்பாடு விண்கலத்தில்தான் இருக்கும்.

    எப்படியென்றால் ஒரு பெரிய காந்தம் ஒரு குண்டூசியை தனது பக்கம் இழுக்கிறது ஆனால் அது ஒட்டுவதுக்கு முன்னால் அது நகர்ந்து செல்கிறது மீண்டும் இழுக்கிறது குண்டூசி நகர அந்த காந்தமும் தொடர்ந்து நகரும். இதுதான் புத்தி செய்ய போவதும். காந்தத்திற்கு பதில் அதிக அளவிலான ஈர்ப்பு விசையை பயன்படுத்த திட்டம்.அந்த ஈர்ப்பு விசை warm hole உள்ளத்துக்கு நிகராக இருந்து விண்கலத்தை தனதுபாதையில் இழுத்துசெல்லும்.


    அந்த அளவுக்கு ஈர்ப்பு விசையை ஏற்படுத்த புத்தி வைத்திருக்கும் திட்டம் மிக எளிதானதுதான்.ஆனால் இதுவரை யாரும் யோசித்து முயற்சிக்காத ஒன்று.  

                            ************

   புனி ஆய்வுகூடத்திற்கு வரும்போது வைத்தி இல்லை.நேராக சோதினை கூடத்தில் இருந்த ஆய்வு குடுவைகளில் தன எடுத்துவந்த லில்லியின் tissue களை பத்திரபடுத்தி அதனை சோதிப்பதுக்கான வேலைகளில் இறங்கினாள்.வைத்தி வரும் முன் செய்து விட்டால் அவருக்கு பதில் சொல்லும் வேலை மிச்சம் என்பது அவளது எண்ணம்.

    முதலில் அவளது சந்தேகம் எதாவது வைரஸ் தாக்கி இருக்கலாம் அதனால் லில்லிக்கு சோர்வு போன்ற நோய் இருக்கும் என்பதுதான்.ரத்தத்தை சோதித்து பார்த்தாள் பொதுவான சில சோதனைகள் செய்து பார்த்ததில்  ரத்தத்தில் அதிக அளவில் வைரஸின் தாக்கம் இருந்தது.

    அடுத்த கட்டம் அந்த வைரஸின் தன்மையை அறியும் சோதனை. சில மணி நேரத்தில் முடிந்து இருந்தது. முடிவு புனி எதிர்பார்க்காத ஒன்று. அரிதாக பூனைகளை தாக்கி உயிரிழப்புகளை ஏற்ப்படுத்தும் Feline leukemia virus (FeLV) என்ற ஒன்று தாக்கியிருந்தது. இது பூனைகளில் இருந்து எளிதாக மனிதர்களுக்கும் பரவுவதோடு. மனிதர்களுக்கு இது உயிர்கொல்லி நோய் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை படித்து இருக்கிறாள்

   உடனே லில்லியை குணப்படுத்தவேண்டும் அதுவரை அதை கவனமாக கையாள வேண்டும். அம்மாவுக்கு தெரிந்தால் இன்றே எங்காவது காட்டில் விட்டுவிட்டு வந்து விடுவார்கள். எப்படி குணபடுத்துவது என்ற குழப்பத்தில் புனி இருந்தாள்.

கண்டிப்பாக புனியை காப்பற்ற வைத்தியின் உதவி தேவை. அவரிடம் சொல்ல நினைத்து இருந்தாள். அந்த வைரஸின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

    இது சம்பந்தமாக அங்கு இருந்த புத்தகம் மற்றும் கணினியில் தேடினாள். குணப்படுத்தும் மருத்துவ முறை இருந்தது. Lymphocyte T-Cell Immune Modulator என்ற முறையில் ரத்தத்தில் உள்ள பாதிக்கபட்ட செல்களை நீக்கிவிட்டு செல்களை புதுப்பிக்கும் முறைகளில் ஒன்று. இது இங்கு சாத்தியமகுவது சந்தேகமே. 

      வைத்தி வாசலில் வந்து கொண்டு இருந்தார். கதவில் இருந்த பெட்டியில் அந்த கடிதம் இருக்க வரும்போது எடுத்து பிரித்தபடி வர அவரை பார்த்தவுடன் புனி எழுந்து அந்த சோகத்திலும் மெல்ல சிரித்து வைத்தாள்.

   கடிதம் எங்கு இருந்து வந்தது என்பதை பார்த்த வைத்திக்கு ஆச்சர்யம் வேகமாக பிரித்து படித்தார். அது அரசாங்கத்திடம் இருந்த வந்த ஒன்று. வைத்தி செயற்கை முறையில் சோதனை முறையில் உயிர்களை உருவாக்கி சோதனை செய்ய அனுமதி கேட்டு இருந்தார் அது சம்பந்தமான அரசிடம் இருந்து வந்த பதில் கடிதம்தான் அது.

   அரசு சோதனை செய்வதுக்கு அனுமதி அளித்து இருந்தது. இதில் வைத்திக்கு சந்தோசம்தான் என்றாலும் அதில் இருந்த ஒரு நிபந்தனை வைத்திக்கு முட்டுகல்லாக இருந்தது.

 

(தொடரும்)

விரிகோணம் - 1


   இதுக்கு  முந்தைய பாகம்

   “நாம் oxygen வாயுவை தவிர வேற எதாவது ஒன்றை சுவாசிப்பவர்களாக இருந்தால் எப்படி இருந்து இருப்போம்?

“ஏன் திடிர்னு கேட்கிரிங்க?

“உனக்கு தெரிஞ்சு அப்படி இருந்தால் எப்படி இருக்கும்னு சொல்லு போதும்

    “நான் படிச்சதை மட்டும் வச்சி பார்த்தா அதுக்கு வாய்ப்பு இல்லை ஏன்னா நமது செல்கள் எல்லாமே oxygen வச்சிதான் உயிர் வாழமுடியும். அதுவுமில்லமா சுவாசிக்கும்போது 75% nitrogen, இன்னும் பிற வாயுக்கள உள்ளே சென்றாலும் நுரையீரலில் உள்ள alivoli எனும் வாயு மாற்றம் செய்யும் அமைப்பு oxygen க்கு பதிலாக வேற வாயுவை எடுத்துக்கொண்டு கார்பன் டை ஆக்ஸ்டை வெளியிடாது. இது தவிர நமது மூளையில் இருக்கும் சுவாசத்துக்கான சென்சார்கள் எப்போதுமே ரத்தத்தில் உள்ள oxygen அளவை வைத்து நமது சுவாசத்தை கட்டுபடுத்தும் அதனால அதுவும் ஒத்துழைக்காது. எல்லாத்தையும் வச்சி பார்க்கும்போது வாய்ப்பு இல்லைன்னு தோணுது என்று முடிக்கும்போது அவளின் சத்தம் கொஞ்சம் குறைந்து இருந்தது. வைத்தியின் மீது இருந்த  பயமே காரணம்.

   “சரி நீ மேலே சொன்ன எல்லா விசயத்தையும் சரிபண்ணிட்டா சாத்தியம்தானே?” என்றார்

   “கண்டிப்பாக ஆனால் நான் சொன்னதை மாற்றம் செய்வது எப்படி? அதுதானே நமது பிறப்பின் ரகசியம்?

“மாற்றலாம் எல்லாத்தையும்என்றார் வைத்தி மெல்ல சிரித்து கொண்டே

“எனக்கு தெரிஞ்சு அது மனித நிலையில் சாத்தியம் இல்லைன்னு தோணுது

   “அதான் கேட்டேன் உன்னிடம் வேறு வாயுவை சுவாசித்தால் அந்த உயிரினம் எப்படி இருக்கும்னு மனிதர்கள் மாதிரி இல்லாம?

   “கற்பனை பண்ணி பார்க்கவும் எந்த வாயுவை சுவாசித்தால் என்று தெறிய வேண்டுமே?

“சரி இப்ப கார்பன் டை ஆக்ஸ்சடை சுவாசிக்குமாறு இருந்தால்?

   “ம்ம... என்ன கார்பன் உடம்பில் அதிகமாகி சதைகளுக்கு பதில் மிக கடினமான ஒரு அமைப்பு இருக்கும். ரத்தம் இருப்பது சந்தேகம். அதுக்கு பதில் உணவை கடத்த வேறேதாவது தனியாக இருக்கும். உருவ அமைப்பு சொல்ல முடியலை. ஆனால் சுவாசம் நம்மை போல இருக்கணும்னு இல்ல சுவாச இடைவெளி அதிகமாக இருக்கலாம். கிட்டதட்ட மணி நேரத்துக்கு ஒன்று அல்லது அதுக்கு மேல் அதனால் வாழ்நாள் அதிகமாகும். வேற இனபெருக்க முறை கண்டிப்பாக மாறியிருக்கும். எனக்கு தெரிஞ்சு இவ்வளவுதான் யோசிக்க முடியுது என்றாள்

   “ம்ம நீ சொன்னதுல எதுவுமே நடக்கமா வேற மாதிரியும் இருக்கலாம் என்று சொல்லி விட்டு அவரது அறைக்குள் போனார் வைத்தி.

   புனிக்கு குழப்பமாக இருந்தது. அவரது பதிலால் கொஞ்ச பயமும் கூட எங்கே தவறாக ஏதும் சொல்லி விட்டோமோ என்று. உண்மையில் அவர் சொன்ன விசயத்தை கற்பனை செய்து பார்க்க கஷ்ட்டமாகத்தான் இருந்தது அவளுக்கு. இயல்பாக நடந்து வரும் ஒன்றை அதுக்கு முரணாக வேறு விதத்தில் யோசிக்க சொன்னதே காரணம்.

   மாலைவரை  வைத்தி அவரது அறையில் ஆய்வுகள் சம்பந்தமாக எதையோ படித்து கொண்டு இருக்க புனி நேரம் போகாமல் வெளியில் கொஞ்ச நேரம் புத்தகம் படிப்பதும் சோதனை கூடத்தில் சென்று வைத்தி முன்செய்த சில ஆய்வு முறைகளை பார்த்து நேரத்தை போக்கினாள்.

   அன்று வீடு திரும்பும்போது பாதிவழியில்தான் அவளுக்கு நினைவுக்கு வந்தது காலையில் லில்லி காணமல் போனது. என்னவாயிருக்கும் எனறு யோசித்தபடியே வீடு வந்து சேர்ந்தவள்.

 “அம்மா லில்லி வந்துச்சா? பார்த்தியா?

“ஆமாம் இப்ப அதான் குறைச்சல்?”

“சொல்லுமா பார்த்தியா இல்லியா?

“வந்துச்சி சத்தம் ஏதும் இல்ல கொஞ்ச நேரம் சுத்திட்டு போயிருச்சு

“எங்கே?”

“வேற வேலை இல்ல அது பின்னாடிபோறதுதனா என்ன?

    சோகமாக லில்லியை வீட்டுக்கு உள்ளேயே தேட ஆரம்பித்தாள். மத்தபடி அவளது குரலை கேட்டாலே காலை சுற்றி வரும் இப்போது வீட்டில் இருந்தால் வந்திருக்கும். எங்காவது வெளியில் போயிருக்கும் அல்லது அம்மா அடித்து இருப்பார்கள் என்ற எண்ணம் அவளுக்கு.

   பழைய துணிகள் வைத்து இருந்த இடத்தில சுருண்டு படுத்து இருந்தது லில்லி. பார்த்தவுடன் தூக்கினாள் வேறு எங்கோ பார்த்து மெதுவாக கத்தியது. பழைய நிலையில் அது இல்லை என்பதை பார்க்கும்போதே அவளுக்கு தெரிந்தது. கிண்ணத்தில் பால் ஊற்றி வைத்தாலும் சுத்தமாக குடிக்க மறுத்தது. என்ன நடந்தது என்று ஒரு பக்கம் குழப்பமாக இருந்தாலும் ஏன் இந்த லில்லி இப்படி செய்கிறது என்ற கோபம வேறு அவளுக்கு.

   லில்லியால் அன்றைய இரவு முழுதும் சோகமாகவே கழித்தாள்.அருகில் படுக்க வைத்து இருந்தாலும் காலையில் பார்க்கும்போது எங்கோ போய் இருந்தது. தேடிபார்க்க எண்ணி பழைய துணிகள் போடும் இடத்தில பார்க்க இருந்தது. “லில்லி என்று கத்தியவுடன் தலையை தூக்கி பார்த்துவிட்டு மீண்டும் படுத்துவிட்டது. காலையிலயே அதை கொஞ்சினால் அம்மா திட்டுவார்கள் என்பதால் வேலைக்கு கிளம்பபோனாள்.

   வெளியேறும் போதுதான் நினைவுக்கு வந்தது லில்லிக்கு என்ன ஆயிருக்கும் என்பதை அறிவதுக்கு அதன் ரத்தத்தை ஆய்வுக்கு எடுத்து செல்லலாம் என்று எண்ணி கொஞ்சம் ரத்தம் மற்றும் tissues எடுத்துக்கொண்டு கிளம்பினாள். அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும் ஏன் இப்படி செய்கின்றது என்றாவது அவளால் தெரிந்து கொள்ளமுடியும்.

                                                                           ********

   புத்தி அந்த கரும்பலகைக்கு முன் உடகார்ந்தபடி புகைத்து கொண்டு இருந்தார்.அவரது எண்ணம் முழுவதும் அந்த பலகையில் இருந்த விசயத்தில் இருந்தது.

    புத்தி விண்ணியல் துறையில் குறிப்பிட்டு சொல்பவர்களில் ஒருவர் என்பதோடு தனியாக பல ஆராய்ச்சிகள் செய்து அறிவியல் துறையில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து இருப்பவர். அவரது இப்போதைய ஆராய்ச்சியான வேற்றுகிரக உயிரன வாழ்க்கை பற்றி ஏற்க்கனவே வைத்திக்கு கடிதம் எழுதிய நிலையில் அடுத்த கட்ட நிலைமையை பற்றித்தான் அவரது யோசனை. அந்த பலகையில் இருந்ததும் அதுதான்.

   விண்ணில் எப்படி அதிக நாள்கள் மனிதன் ஆராய்ச்சிக்காக உயிரோடு பயணிப்பது அல்லது அதிக நாள்கள் என்பதை குறைக்க  பயண வேகத்தை ஒளியின் வேகத்திலியோ அதைவிட அதிகமாகவோ வைத்து பயணம் செய்வது  இதுதான் அவர் தேர்ந்து எடுத்த இரண்டு வழிகள்.

    முதல் ஒன்று அவரை பொருத்தவரை சாத்தியமாக தெரியவில்லை. இறப்பில்லாத மனிதன் முடியாத காரியம். பல ஒளியாண்டுகள் தள்ளி இருக்கும் கிரகங்ககளுக்கு செல்ல கண்டிப்பாக மனிதன் சாதாரண வாழ்நாளை விட அதிகமாக உயிர் வாழ்வது அவசியம்.

    அதற்கு உண்டான வாய்ப்புகள் என்று அவர் பார்த்தது மனிதனுக்கு சாகாமல் இருக்க எதாவது ஒன்று கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் அல்லது அவனை அப்படியே உயிரோடு உறைய வைத்து தேவைபடும்போது எழுப்பிவிட்டு தேவை பூர்த்தி ஆனதும் மீண்டும் உறைய வைக்கும்முறை. கடைசியாக உடல் தனியாக உயிர் தனியாக அனுப்பி தேவைபடும்போது இணைத்துக்கொண்டு வேலையை பார்க்கும்படியாக இது எல்லாமே அவருக்கு எது ஒரு கற்பனை உலகத்தில் மிதப்பது போல தோன்றவே எல்லாவற்றையும் கைவிட்டார்.

   இருந்தாலும் இது சம்பந்தமான மற்றொரு முறை அவருக்கு சாத்தியம் எனபட்டது. அது தேறினால் கண்டிப்பாக இரண்டாவதாக யோசித்து வைத்து இருக்கும் ஒளியின் வேக பயணம் தேவையில்லை.  

தொடரும்....

விரிகோணம்


   சில அறிவியல் விசயங்களை மையமாக வைத்து  கற்பனைசெய்து  சிறு திருப்பத்தோடு முடியும் சிறுகதைகளை இதுவரை எழுதிவந்தேன். இரண்டு தொடர்கதைகள் எழுதியிருக்கிறேன். அதே வரிசையில் ஒரு தொடர்கதை. கொஞ்சம் வித்தியாசமாக நீளமாக எழுத எண்ணம் இருக்கிறது.

    முக்கியமாக இதில் வைத்தி,புனி,லில்லி பூனை,புத்தி, கணேஷ் என அனைவரும்  ஒன்று சேருகிறார்கள்.இதுவரை இவர்கள் நான் எழுதிய கதைகளில் தனித்தனியாக வந்த கற்பனை கதாபாத்திரங்கள். இதில் பல அறிவியல் விசயங்களை ஒரே கோர்வையாக வைத்து கதை நகரும்.

    ஏற்க்கனவே நான் இதுவரை எழுதிய கதைகளுக்கு அவ்வளவாக கருத்துக்களோ விமர்சனங்களோ சொல்லாமல், அந்த கதைகள் யார் எப்படி படித்தார்கள்,அதை எப்படி புரிந்து கொண்டார்கள் என்பதை பற்றிய கவலை எனக்கில்லாமல் செய்து இருந்தார்கள். அதே  வரிசையில் எனது மற்றுமொரு கதை.

   அதனால் இதையும் நீங்கள் எப்படி புரிந்து கொள்கிறீர்கள்,எந்த விதத்தில் சேர்த்துகொள்ளபட்டது என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை அதை நீங்கள் எனக்கு சொல்லாத வரை. என்னைபொறுத்தவரை வழக்கம்போல அண்மைய அறிவியல் விசயங்களை உள்ளடக்கிய என் கற்பனை கதை அவ்வளவே.

                              ************

                              விரிகோணம் 




அன்பின் வைத்தி,
    இல்லை என்பதை முழுமையாக ஒத்துக்கொண்டு விளக்கிவிட முடிகிறது. ஆனால் இருக்கலாம் என்ற விசயத்தில் அதை “இல்லை “இருக்கும் என் இரண்டு முடிவுகளில் கொண்டுவந்து விடாமல் என்னால் இருக்க முடியவில்லை.

    அப்படியொரு விசயத்தைபற்றிதான் ஒரு புதிய ஆராச்சியை தொடங்குகிறேன்.கடவுளின் அனுக்கிரகம் இரண்டாவது பட்சமாக இருந்தாலும் உங்களை போன்றோரின் உதவி இருந்தால் இன்னும் பக்கபலம். இது சம்பந்தமாக பல ஆராய்ச்சிகளை என் வாழ்நாளில் செய்து அதில் இருந்து சில அனுபவங்களையும் பெற்று இருக்கிறேன்.

      அதன்படி இப்போது நான் செய்ய போவதுக்கு உங்கள் மற்றும் குழுவின் உதவி எனக்கு கண்டிப்பாக தேவை. எனது ஆய்வு என்னதான் முழுமையாக விண்ணியல் சம்பந்தமாக இருந்தாலும் உங்கள் மருத்துவ துறையின் சாதனைகள் பற்றி நன்கு அறிவேன்.

    நீங்களும் என்னைபோலவே காசுக்காக வேலைபார்ப்பதை விட்டுவிட்டு வாழ்க்கை லட்சியத்துக்காக ஆய்வுகள் செய்து பல சாதனைகளை செய்துள்ளீர்கள். அந்த ஒரு காரணத்துக்காகவே இந்த உதவியை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.

     அனேகமாக இனி என் வாழ்நாள் அதிக பட்சம் பத்து வருடங்கள் குறைந்தது இருக்கும் அதற்குள் எதாவது ஒன்றை வாழ்வின் அர்த்தமாய் செய்துவிட நினைக்கிறேன்.

    எல்லோரும் அவர்களின் அறிவுக்கு ஏற்ப வித்தியாசமான முறைகளில் ஆய்வுகள் மேற்கொண்டு வேற்று கிரகத்தில் உயிர்களை பற்றி ஆராய்கிறார்கள். அவர்கள் இதுவரை முன் நிறுத்தும் ஆதாரம் எல்லாம் “இருக்கலாம் என்பதே.எனது ஆராச்சியின் நோக்கம் இந்த இருக்கலாம் என்பதை இல்லை அல்லது இருக்கு என்று மாற்றுவதே.

   அது ஒன்றும் சுலபம் இல்லைதான்.அறிவியல் கடவுளுக்கே தகுந்த விளக்கமான ஆதாரம் கேட்கும்நிலையில் நான் சில நம்பும் ஆதாரங்களை முன்வைத்து என் முடிவை சொன்னால் கண்டிப்பாக நிற்க்காமல் போவது உண்மை.

    ஒரு திடமான உணமையான முடிவு வேண்டும் இந்த விசயத்தில். இது சம்பந்தமான ஆய்வு கட்டங்களை மனதில் செயல்படுத்தி பார்த்தபொழுது என் விண்ணியல் அறிவுக்கு அப்பாற்பட்டு உயிரியல் துறையில் உள்ளவர்களின் அறிவும் அதிகம் தேவை.இங்குதான் உங்களின் உதவி தேவை.

   இப்போது நீங்கள் எதாவது ஆராய்ச்சிகள் செய்து கொண்டு இருந்தால் அது எப்போது முடியும், முடிந்த பிறகு என்னோடு இணைய முடியுமா? போன்ற விசயங்களை தெரிவியுங்கள்.

    அதுவரை எனது தரப்பில் எல்லா விசயங்களையும் தயார் செய்கிறேன்.ஒரு நீளமான யோசனையின் பின்னேதான் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.உங்களின் உதவியை விரைவில் நாடும்

                                                அன்புடன்,
                                                   புத்தி.

                      **********

    காலையில் எழுந்ததில் இருந்து லில்லி கண்ணில்படததால் தேடிபர்க்க தொடங்கியிருந்தாள். எப்போதும் அவளது காலை ராகம் போட்டபடி கத்திக்கொண்டு சுத்திவரும் லில்லி பூனை காணமல் போனது எதையோ இழந்தது போல இருந்தது அவளுக்கு.

“அம்மா லில்லி எங்கே?

“தெரியாது நீ வேலைக்கு கிளம்பலியா அதை எதுக்கு இப்ப தேடுறே?

   “இதோ கிளம்பிட்டேன் என்றவளின் மனது லில்லி எங்கே என்றே தேடியது.       

   புனி மருத்துவ படிப்பை முடித்துவிட்டு வைத்தியின் ஆய்வுகூடத்தில் வேலை பார்ப்பவள். நண்பர்களோடு வீண் அரட்டை,ஊர் சுத்தும் இளமையான வயதுதான் என்றாலும் அதில் அவளுக்கு சுத்தமாக விருப்பம் இருந்தது இல்லை.அதனால்தான் படிப்பு முடிந்தவுடன் அருகில் இருக்கும் வைத்தியிடம் சேர்ந்தாள்.

    முதலில் அவளின் துறுதுறு கண்களையும், சுறுசுறுப்பையும் பார்த்த வைத்தி கண்டிப்பாக இவள் ஏதவது சேட்டைகள் செய்வாள் என்று எண்ணி தனது ஆராச்சி விசயங்களில் புனியை கொஞ்சம் கவனமாகத்தான் பார்த்துகொண்டார் .. ஆனால் போக போக அவளின் அறிவுகூர்மை கண்டு வைத்தியே வியந்ததுதான் உண்மை.

    வைத்தியின் அய்வுகூடம் மொத்தம் மூன்று அறைகளை கொண்டது. கொஞ்சம் நீளமான அகன்ற அறையில் ஆய்வுக்காக தேவைப்படும் எல்லா இயந்திரங்களும்,பொருள்களும் வைக்கபட்டு இருந்தது. உள்ளே நுழைந்ததும் தென்படும் அறையில் உட்கார்வதுக்கு சில நாற்காலிகள் பக்கவாட்டில் புத்தக அலமாரி. அதன் இடது பக்கம் ஒரு சிறிய அறை அதுதான் வைத்தியோடையது.

    மருத்துவதுறையில் சாதனைகள் புரிந்தவர்களில் மிக முக்கியமானவர்களில் இவரும் ஒருவர். என்னதான் உலகத்தில்  மதிப்பு மரியாதை இருந்தாலும்  இவரின் எண்ணங்களுக்கு ஏற்ப சில ஆராய்ச்சிகளை சுதந்திரமாக மருத்துவமனைகளில் செய்ய முடியாததே இவரின் தனிப்பட்ட ஆய்வுகூடத்திற்கு காரணம்.

    தொடக்கத்தில் ஒரு பணியாள் உட்பட தனியாகவே ஆய்வுகள் செய்துவந்தார்.இரண்டுவருடங்களுக்கு முன்பே புனி வந்து கேட்க  மிகுந்த கெஞ்சல்களுக்கு பிறகு சேர்த்துகொண்டார். எப்போதுமே புனிக்கு வைத்தியின் மீது ஒரு பயம் உண்டு.அவரின் அறிவுக்கு மரியாதை கொடுத்தாலும் மனநிலை அறிந்து அவரை கிண்டலும் செய்வாள்.வெறுமனே சிரித்துமட்டுமே வைப்பார் வைத்தி.

   ஆய்வுகூடத்தில் நுழைந்தபோது வைத்தி அவரது அறையில் எதையோ படித்து கொண்டு இருந்தார்.சில வாரங்களாக புனிக்கு ஏதும் வேலை கொடுப்பதில்லை.சொல்லப்போனால் பேசுவதுகூட இல்லை. அவளுக்கு முன்னரே வந்தது இருப்பார் எப்போது போவார் என்பது அவளுக்கு தெரியாது.

    புனி தனக்கு தெரிந்த விசயங்களை சோதனைகூடத்தில் செய்து பார்த்துவந்தாள் அதுவும் நேரம் போக வேண்டுமே என்பதுக்காக.சில நாள்களில் வைத்தி சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களை படிப்பாள்.

   இன்று லில்லி காணமல் போன கவலைவேறு ஏதும் பெருசாக செய்ய தோணாமல் வந்ததும் அங்கு இருந்த புத்தகத்தை திறந்து உட்கார்ந்தாள் படிக்கவில்லை. கொஞ்ச நேரத்தில் உள்ளே இருந்து வைத்தி வெளியில் வந்தார்.

“புனி மனிதர்கள் வேறு வாயுவை சுவாசித்தால் என்னாயிருக்கும்?

“புரியலியே என்ன சொல்ரிங்கன்னு?

    “நாம் oxygen வாயுவை தவிர வேற எதாவது ஒன்றை சுவாசிப்பவர்களாக இருந்தால் எப்படி இருந்து இருப்போம்?”+


(தொடரும்) 

அறுவடை


    இப்படித்தான் மனிதர்களா ? என்று நினைத்து தொடக்கத்தில் அவர்களோடு சேராமல் தனித்தே இருந்தேன்.சில வருடங்களில் இப்படித்தான் மனிதர்கள் என்பதை உணர்ந்த போது அவர்களோடு சேரும் எண்ணம் வந்தது.எங்களது தலமையின் அறிவுறைப்படி மனிதர்களுக்கு என்மீது எந்த ஒரு சந்தேகமும் வரக்கூடாது. அதற்கு நான் மனிதர்களோடு சகஜமாகப் பழகுவது ரெம்ப முக்கியம்.

    மனிதர்களின் சில குணங்களை வெறுத்தாலும் என்னை ஈர்த்தவையும் அவர்களிடம்  இருந்தன. உண்மையான அன்பு,பாசம்,பரிவு, முக்கியமாகக் காதல் எனும் உணர்ச்சி இது எல்லாமே எங்கள் இனத்திற்கு புதியதான ஒன்று.

   வேற்று இனத்தவனான எனக்கு கொடுக்கபட்ட வேலை பூமியில் சென்று "செல் விளைச்சலை"  மேர்ப்பார்வையிடுவது. நாங்கள் விதைத்த ஒரு செல் மனிதர்களாக வளரும்வரை காத்து இருப்போம். அதுவும் அவர்களின் பரிணாம வளர்ச்சியில் குறிப்பிட்ட காலம் கடந்து இருக்க வேண்டும். அதாவது மனிதர்கள் தோன்றிய காலத்தில் இருக்கும் மூளைதான்  இப்போதும் அவர்களிடம் இருக்கும் என்றாலும் அதன் சிந்திக்கும் திறன், செயல்படும் திறன் வேறு. அதுதான் எங்களுக்கு முக்கியம்.

   இந்த செல் வளர்ச்சியில் எங்காவது குறை நடந்தால் எனது குழுவுக்கு அறிவிக்க வேண்டும். அப்படித்தான் கொஞ்சகாலம் முன் மனிதர்களையே அளிக்க கூடிய டைனோசர்கள் தவறுதலான ஒரு செல் பரிணாம வளர்ச்சியில் உருவாக அதை அழிக்க எங்களது இனம் பெரும்பாடுபட்டது. ஒருவழியாக எரிகற்களை பூமி பக்கம் செயற்கையாகத் திருப்பி அதை அழித்தோம். இதுபோல் மனித இனத்திற்கு எந்த ஒரு இடையுறும் இல்லாதவகையில் பார்த்துவருவது என்னைப் போன்றவர்களின் வேலை.  

   இதற்காக கிட்டத்தட்ட மனிதனாகவே மாறி வாழ்ந்து வந்தேன்.  படிப்பது, வேலையில் அமர்ந்து காசு சம்பாரித்து வாழ்க்கை நடத்துவது என எல்லாமே மனித வாழ்க்கை. இது ஒன்றும் எனக்கு கஷ்டமாக தெரியவில்லை. எங்களின் அறிவுத்திறனோடு ஒப்பிடும்போது மனிதன் தூசுதான்.

   இருந்தும் இந்த மனித விளைச்சலுக்கு காரணம் அவர்களின் மூளையில் இருக்கும் நியூரான்கள், மற்றும் சில கிலியல் செல்கள். இந்த அமைப்பு எங்களுக்கு இல்லை.எப்படி மனித மூளைக்குள் வேதிவினையில் தகவலை கடத்துகிறதோ அதே வேலைக்குத்தான் எங்களுக்கும் அது தேவை.

    மனிதர்களைப் போல எங்களுக்கு பேசும்பழக்கம் இல்லை.தகவலை பரிமாற இந்த நியூரான்கள் தான் அவசியம்.போதுமானவரை எங்கள் கிரகத்திலியே உற்பத்தி செய்தாலும் எங்களின் இனப்பெருக்கத்தால் வேற்று கிரகத்தில் நியூரான் விளைச்சலுக்கு திட்டமிட்டு கிட்டதட்ட மூன்று கிரகங்களில் செயல்படுத்துகிறோம்.

   இது சுழற்சிமுறையில் நடக்கும்.எங்களின் தேவையை இந்த நடைமுறைகள் பூர்த்தியும் செய்தும் வந்தது. பூமி என சொல்லப்படும் இங்கு அறுவடைக்கான காலம் நெருங்கி இருந்தது. இந்த தருணத்தில் தான் என் மனதில் கொஞ்சம் மாற்றம். எங்கள் இனத்துக்கு மனம் ,உடல்,ஆத்மா என்று மனிதர்கள் சிந்தித்து வைத்து இருக்கும் விசயங்கள் தெரியாது. இன்னும் இந்த சித்தர்கள்,மந்திரம்,கடவுள், என்னவோ சொல்கிறார்கள் எனக்கு யோசிக்கவே கஷட்டமாக இருக்கிறது. எங்களுக்கு தேவை நீயுரான்கள் அதுக்கு இவை எந்த ஒரு தீங்கும் இல்லையென்பதால் கண்டுகொள்ளவில்லை. 


   ஆனால் எனது நோக்கத்தையே மாற்றும் சம்பவம் என்னையறியாமல் என்னுள் நடந்து வந்திருக்கிறது. அதை மனிதர்கள் காதல் என்கிறார்கள்.அவர்கள் சொல்வதை விட அனுபவிக்கும் போதுதான் சுகமாய் இருந்தது. காரணம் இதுவரை ஆணிடம் பழகியது போல் பெண்களிடம் பூமியில் பழகியது இல்லை. எல்லா பெண்களும் மனதில் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதில்லை என்பதை எனக்கு உணர்த்தினாள் அவள். சம்பளத்திற்காக ஒரு நிறுவனத்தில்  வேலை பார்த்து வருகிறேன். அங்குதான் அவளை பார்க்க நேர்ந்தது. எனக்கும் மனித ஆண் நண்பர்கள் நிறையா உண்டு. அவர்கள் சொல்லும்போது எல்லாம் இந்த காதல்  மீது பெரியதாக ஆர்வமோ ஆசையோ வந்தது இல்லை.

  அவளின் துறுதுறு கண்கள்,அதைசிமிட்டி  பேசும் அழகு எல்லாமே சேர்ந்து என்னை ஏதோ செய்தது.மற்ற பெண்களிடத்தில் பார்த்தது போல இல்லாமல் வர்ணம் வித்தியாசமாக இருந்ததும் ஒரு காரணம். என் மனித நண்பர்கள் அதை பூனை கண், பாம்பு கண் என்றார்கள். என்னவோ எனக்கு அது பிடித்து இருந்தது.

   அவளை பார்ப்பதுக்கு சுற்றிய தினங்களில் எனக்கு கொடுக்கபட்ட வேலையே முற்றிலும் மறந்தேன். ஒருவழியாக அவளிடம் நட்பு கொண்டு பேசும் அளவுக்கு தேரியிருந்தேன். இருந்தாலும் இந்த மனித உணர்வுகள் பெண்களிடம் பழகும்போது மட்டும் ஏன்தான் இப்படி இருக்கிறதோ தெரியவில்லை.

   இதை எல்லாமே அவள் கண்கள்தான் செய்ய வைத்தது. நிறையமுறை சொல்லியிருக்கிறேன் உனது கண்கள் அழகாய் இருக்கு என்று அதுக்கு  அவள் வெட்கம் என்ற சொல்லும் ஒன்றால் தரையைப்பார்த்து குனிவது பிடிக்கும். இருவரும் ஏற்கனவே ஒருவருக்குள் ஒருவர் உணர்ந்து இருந்ததால் நான் முதலில் காதலை சொன்னபோது ஏதும் சொல்லாமல் முன்பு போலவே தரைபார்த்து “நானும் என்று மட்டும் சொன்னாள்.

    அடுத்து வந்த நாள்களில் என்நினைவு மட்டுமில்லாமல் எல்லாவற்றையும் ஆக்கிரமித்து இருந்தாள். அவள் இல்லாத நிமிடங்கள் கண்டிப்பாக தவிர்க்க முடியாத ஒன்றாகத்தான் இருந்தது.எல்லாமே புதிய ஒரு உணர்ச்சிகள்.சுகமானதும்கூட.இந்த நேரங்களில் நான் வந்ததுக்கான நோக்கம், என் பணி எல்லாமே மறந்து அவளுக்கான ஒரு தனி வாழ்க்கை வாழ ஆரம்பித்தேன்.

    இருட்டியிருந்தது. மாலையில் அவளின் நினைவுகளில் கலந்து இருந்த சமயம்.  நான் பார்த்து பழகின உருவம். திடுக்கிட்டு எழுந்தேன். இப்போதுதான் எனது வேலையை நான் முற்றிலும் மறந்து இருக்கிறேன் என்பது நினைவுக்கு வந்தது. எங்களின் தகவல் பரிமாற்றம் நியூரான்கள்வழி என்பதால் சத்தம் இருக்காது. நாங்கள் உள்ளுக்குள் உணர்ந்தாலே அதுக்கேற்ப விகிதத்தில் நியுரான்கள் வெளிப்பட்டு மற்றவர்களை அடையும் அதை உள்வாங்கி அதை வேறொரு தகவலாக புரிந்து கொள்ளும் அமைப்பு எங்களது.

  மனிதர்கள் எப்படி ஒலியை பயன்டுத்துகிறார்களோ நாங்கள் நியூரான்களை பயன்படுத்துவோம். சத்தமாக பேச அதிக நியூரான்கள் செலவழியும், சிதறிபோகும் அவற்றை எங்கள் இனத்தவர் யார் வேண்டுமானாலும் கேட்கலாம். எப்படி மனிதன் கத்தி பேசுகிறானோ அந்த மாதிரி.

“என்ன திடீர் விஜயம் என்று கேட்டேன்.

   “உன்னிடம் இருந்து எந்த ஒரு தகவலும் இல்லியே ஏன்? அறுவடை காலம் வேறு நேருங்கி விட்டது அதான் தலைமை உன்னை பார்த்து விட்டு வரும்படி உத்தரவு என்றான்  அவன்

   “ஒன்றுமில்லை எல்லாம் சரியாகதான் போகின்றது அதான் ஏதும் தெரிவிக்க வில்லை

   “ஏன் உன் நீயுரான்கள் ஒரு சுழற்சியில் வருகிறது மனிதர்களோடு சேர்ந்து நீயும் பொய்யை கத்துகொண்டியா?

“பொய் இல்லை” என்றேன் சமாளிக்கும் விதத்தில்.

   “சரி அறுவடை தேதி முடிவாகிவிட்டது நாளை அல்லது அடுத்த நாள் இருக்கும் அதுக்குள் நீ உன் உருவத்தை மாற்றிவிட்டு நமது இடம் வந்தது சேர். கொஞ்ச ஓய்வுக்கு பிறகு வேறு கிரகம் போக வேண்டியது இருக்கும்

“இல்லை இப்போதைக்கு அறுவடை இங்கு வேண்டாம்

  “ஏன் எல்லாம் சரியாதானே இருக்கு இதுதான் போதுமான சமயம். இதுக்குமேலும் மனிதனின் தரம் உயர்ந்து விட்டால் அவர்களது நீயுரன்களில் எதாவது மாற்றம் ஏற்ப்பட வாய்ப்பு இருக்கிறது அதை நம்மால் சாமாளிப்பது கஷ்டம உனக்கு தெரியும்தானே

“தெரியும் அறுவடை செய்யுங்கள் ஆனால் நான் இங்குதான் இருப்பேன்

   “என்னாச்சு உனக்கு அறுவடையின் போது என்ன நடக்கும் என்று தெரியும் தானே?’

   “தெரியும் வழக்கம்போல ஒருவித  ஒளிக்கற்றைகள் வைத்து நியுரான்களை எடுத்துவிட்டு அடுத்த சில நிமிடங்களிளியே நெருப்பால் அழிப்போம் நான் நெருப்பில் அழிகிறேன் இங்கேயே நீ அறுவடையை சொன்ன தேதியில் ஆரம்பி

   “இதை தலைமைக்கு சொன்னால் இங்கேயே உன்னை அழிக்க ஆணை வரும் தெரியும்தானே?

   “அதான் நானும் சொல்கிறேன் இங்கேயே அழிகிறேன் என்று.இதற்கு மேல் ஏதும் பகிரவேண்டாம்

“சரி உன் இஷ்டம் முடிந்தால் முடிவை மாற்று.

   “இல்லை. எனக்கு ஒரு உதவி செய் எப்போது அறுவடை நேரம் எப்போது என்பதை சொல்

“நாளை மாலை

   போய் இருந்தது அந்த உருவம். பூமிக்கு வந்த பிறகு நான் அடையாத வருத்தம் துக்கம் அப்போது எனக்குள். எதுமே இல்லாமல் எல்லாமே அவலாகவே இருந்தாள்.

   மறுநாள் மதிய உணவு இடைவேளையில் நான் ஏதும் பேசாமல் இருக்க அவள் மட்டுமே பேசினாள். ஒருகட்டத்தில் காரணம் கேட்க ஒன்றுமில்லை என்றுமட்டும் சொல்லிவைத்தேன். வழக்கம்போல் உதட்டை சுழித்து கண்ணை சிமிட்டினாள்.

எப்போதும் சந்திக்கும் பூங்காவில் அமர்ந்து இருக்க அவளிடம்

“இந்த பூமி அழியும்போது என் பக்கத்தில் நீ இருந்தால் என்ன பண்ணுவே?

“பெருசா என்ன பண்ண உன் கையை இருக்க பிடிச்சிக்குவேன்

“இப்ப பிடிச்சிக்கோ

   “அடப்பாவி சும்மா பிடிக்க சொல்லு பிடிச்சிட்டு போறேன் அதுக்காக இந்த உலகத்தை எதுக்கு அழிய சொல்றே என்றாள் சிரித்து கொண்டே

   “இல்லை இப்ப அழியப்போகுது என்னுடைய ஆசையும் அதுதான் என்று சொல்லி அவளது கைகளை பற்றினேன்.

   “ஏன் ஏதேதோ பேசுறே? கவலையா என்னவோ மாதிரி இருக்க என்னாச்சு?” என்றாள்

    பதில் சொல்லவில்லை அறுவடைக்கான அறிகுறிகள் எனக்கு தெரிய ஆரம்பித்தன என் இனத்தவர்கள் செய்யும் வேலைகளை புரிந்து கொள்வது சிரமமாய் இருக்கவில்லை

   “பதில் சொல்லு ஏன் இப்படி....என்று சொல்லி முடிக்கும்போது அந்த ஒளிக்கற்றை எங்களை கடந்து சென்றது அதுக்கு பிறகு நியூரான்கள் இல்லாததால் தகவல் ஏதும் கடத்தாமல் பிரம்மை பிடித்தவள் போல அப்படியே அமர்ந்து இருந்தாள்.  அந்த அழகான பாம்பு கண் என்னையே பார்த்து கொண்டிருந்தது. கைகளில் கொஞ்சம் தளர்ச்சி. தூரத்தில் பெரிய நெருப்புவளையம் சுழன்று வருவது அவளது கண்களில் தெரிந்தது. அவளது பிடி தளர்ந்து இருந்தாலும் அவளது கைகளை  விரல்களுக்கு இடையில் அழுத்தமாகப் பிடித்திருந்தேன்.  கடைசியான அவளின் ஆசைக்காக.



(இந்த கதையின் மஞ்சள் கரு பிரபல பதிவர் டெரர் பாண்டியன் எழுதிய இந்தகதையில் இருந்து எடுத்தது. வெள்ளைகரு என்னுடையது ஒரு அழகான அறிவியல் புனைவை எழுதிய அவருக்கு நன்றிகள்)))






சில விசயங்கள் - 7


    தில் மொத்தம் மூன்று விசயங்கள். இரண்டு படித்த அறிவியல்,ஒன்று சொந்த சோக கதை.

    பூமிக்கு வேற்று கிரகத்தில் இருந்தோ அல்லது விண்வெளியில் வேறு எங்கு இருந்தோ  உயிர்கள் தோன்றுவதுக்கான மூலகூறுகள் வந்து இருக்கலாம் என்பதை திடமாக நம்பி அதன் மீது ஆராச்சி செய்கிறார்கள்.

    அதன் முன்னேற்றமாக சில நுண்ணியிரிகள் பல ஆண்டுகள் விண்ணில பயணிக்கும் தன்மை கொண்டவை என தெறிய வந்துள்ளது. இதை சோதனையாகவும் செய்து பார்த்து இருக்கிறார்கள்.

   இது சாத்தியமாகவே, விண்வெளிகளில் காணப்படும் தூசுகளின் வழியாக கூட இந்த மாதிரியான நுண்ணுயிரிகள் பூமிக்கு வந்து இருக்கலாம் என்பது அவர்களின் கருத்து. ஏனென்றால் இந்த வகை நுண்ணுயிரிகள் பிரச்சினை இல்லாமல் பல நூறு வருடம் விண்வெளியில் பயணிக்கும் தன்மை கொண்டவை என்கிறார்கள்.

   அப்படி என்றால் கண்டிப்பாக நாமெல்லாம் எங்கு இருந்தோ காற்றில் அடித்துவரப்பட்டவர்கள் என்பதுதான் உண்மை. காற்றில் வந்த தூசுகள் வேறு கிரகங்களின் மீது விழுந்து இருந்தாலும் அங்கு நிலவும் தட்ப வெட்ப சூழலில் பிழைத்து வாழ முடியாமல் போய் இருக்க கூடும.

   இதை படித்து முடித்தவுடன் இன்னொரு கேள்வியும் வருவது சகஜம்தான் அந்த தூசில்(aerial dust) வந்த நுண்ணுயிரி எங்கு இருந்து வந்தது? அதுவந்தது என்றால் அந்த இடத்தில கண்டிப்பாக உயிர்கள் இருக்கனுமே. கண்டிப்பாக இருக்கும். அதையும் கண்டுபிடிப்பார்கள். இவளவு தூரம் வரவே நிறையா நாட்களை செலவழித்து இருக்கிறோம்.  கொஞ்சம் பொறுத்து இருக்கத்தான் வேண்டும்.

    அவர்கள் ஒன்றும்  கடவுள் சம்பந்தமான வெறும் புத்த்கங்களை படித்துவிட்டு எல்லாமே அவன் செயல் என்று அறிவுக்கு தீனி கொடுக்காமல் தனிவழியில் போகவில்லை.எதாவது ஒன்று தான் படித்ததோடு ஒத்துபோயவிட்டால் இதைத்தான் எங்கள் மதநூலில் சுமார் 100000000..வருடம் முன்னே  சொல்லிவிட்டார்களே என்று நக்கலாக சிரிக்காமல் நிறையா குழம்புகிறார்கள் பின் தெளிகிறார்கள்.

********

  ந்த பிரபஞ்சத்தின் அமைப்பை பற்றி இன்னும் ஒரு தெளிவான முடிவு இல்லை. எல்லோரும் தனது அனுமானத்தை இதுவரை  சொல்லி வந்து இருக்கிறார்களே தவிர இதுதான் உண்மை என்று நிரூபிக்கவில்லை.

    உருவ அமைப்பு என்று தனியாக இருந்தாலும் அதற்கு அடுத்ததாக அது எந்த நிலையில் இருக்கிறது என்பதில் கொஞ்சம் தெளிவு இருந்தாலும் முழுதும் இல்லை அதாவது Hubble சொன்னது போல expanding universe இந்த மாதிரி.

    இது சம்பந்தமாக இன்னொரு அனுமானம் வந்து இருக்கிறது.இந்த பிரபஞ்சம் ஒரு மைய அச்சை கொண்டு சுழலும் நிலையில் இருப்பதாக.அதற்கு காரணம்  Michael Longo என்பவரும் இவரோடு சேர்ந்து சிலரும் கிட்டதட்ட பத்தாயிரம் spiral galaxy களை வைத்து ஆராய்ச்சி செய்து இருக்கிறார்கள்.

   அப்படி பார்த்தபோது எல்லா galaxy களுமே ஒரே மாதிரி clockwise திசையிலியே சுற்றிவருகிறதை  வைத்து இவர்கள் கொண்ட அனுமானம் தான் இந்த பிரபஞ்சம் சுற்றுகின்றது என்பது.

   இவர்கள் சொல்ல வருவது சொல்லிவைத்தாற்போல எல்லா galaxy லும் ஒரே திசையில் சுற்றுவதுக்கு இந்த பிரபஞ்சத்தின் சுற்றும் விசையை தவிர  வேற காரணம் இருக்க முடியாது என்பதே.    

    இது இப்போதைக்கு ஒரு சிறிய அனுமானம்தான். ஏனென்றால் சில முக்கியமான விதிகள் இதை ஏற்றுகொள்வதில்லை. இன்னும் இதில் ஆராய்ச்சிகள் தொடருகிறது.

**********

    சென்னையில் இருக்கும்போது “சுஜாதாவின் மளிகை கடை சீட்டை கூட படிக்க தயாராக இருக்கிறார்கள் ஆனால் எங்கள் கதையை படிக்க மறுக்கிறார்கள் என சில எழுத்தாளர்கள் சொன்னதாக சுஜாதா அவர்கள் சொல்லியிருந்தார்.

    இதை படித்தவுடன் சிரிப்புவந்தது அந்த எழுத்தாளர்கள் சொன்னது சரிதான். அப்படி  சீட்டை யார் படிக்க தயார் என்றால் முதலில் கை தூக்குவது நானாகத்தான் இருப்பேன் என்பதை நினைத்துதான் சிரிப்பு. அப்போதைக்கு சுஜாதா என்றால் அப்படி. இப்பையும்தான்.
அவர்கள் சொல்லவருவது சுஜாதா என்ன எழுதினாலும் படிக்கிறார்கள் என்பதே. உண்மைதான் அவர் என்ன எழுதினாலும்  எழுத்து எழுத்தாக ரசித்து படிப்பதுதான் என் வழக்கம். ஏன்? என்ன காரணம்? எல்லாம் தெரியாது அவர் எழுத்துக்கு மட்டுமே அப்படி.

     இதுக்கு பதிலாக அமையும் விதத்தில் சுஜாதா அவர்கள் மற்றொன்றில் சொன்னது  “எல்லோரும் என்ன வசிய மை ஊத்தி எழுதுகிறீர்கள்? என்று கேட்கிறார்கள் ஆனால் எனக்கு இருக்கும் எழுத்துக்கு மை பேனா வைத்து எழுதினால் யாருக்குமே புரியாது என்பதில் தொடங்கி அவர் எப்படி எழுதுவார் என்பதை விளக்கியிருப்பார். அருமையாக இருக்கும். உண்மையில் அவரிடம் ஏதோ வசியம் இருக்குமோ என்றுகூட யோசித்தது உண்டு.

    அவரின் எழுத்தில் இதுதான் பிடிக்கும் இது பிடிக்காது என்று சொல்ல தெரியாது. ஜவ்வு மிட்டாய் விக்காமல் சட்டென்று நேரடியாக விசயத்தை சொல்லும் முறை எனக்கு ரெம்ப பிடிக்கும்.

    அவர் இருந்தவரை ஏதோ ஒரு வித்தியாசமான உணர்வு நம்மோடு சுஜாதா இருக்கிறார் என்பது போல.  இப்போது அவர் இல்லை என்பதை நினைப்பதே கடினாமாக இருக்கிறது. இத்தனைக்கும் அவர் இருக்கும்போது நான் இந்த மாதிரி எல்லாம் வலைப்பூவில் எழுத ஆரம்பிக்கவில்லை. வசியம் செய்தாரோ இல்லையோ ஆனால் பல இளைஞ்சர்களை தனது பக்கம் கட்டிவைத்து  ஒரு முன் மாதிரியாக இருந்தார் என்று சொல்ல முடியும்.

     நானும் எனது எழுத்துக்களை பலர் நிறையா தடவை திரும்பி திரும்பி படிப்பதாக கேள்விபட்டேன்.காரணம் நான் செய்த வசியம் இல்லை. எழுதிய கதைகள் ஒருதடவையில் படித்து புரியாமல் இன்னொருமுறை நிறுத்தி நிதானமாக புரிந்து படிப்பதற்காக. கிட்டதட்ட இதுவும் ஒரு முறைதான் மீண்டும் படிக்க வைக்க.

யாரு?



                                           25:09:2555 – 9:00 am
                                                               

   இந்த கடிதத்தை படித்தவுடன் கிழித்துபோடுவதுடன் இதை பற்றி தொடர்ந்து சிந்திப்பதை உடனே நிறுத்தவும்

    இப்படியொரு கடிதத்தை எழுதுவது யாரென்ற அறிமுகம் தேவையில்லை கிட்டத்தட்ட அழியும் நிலையில் அடித்து ஒடுக்கப்பட்ட மனித இனத்தில் இருந்து வரும் கடிதம்தான்.

   நமது இனத்திற்கு இந்த நிலமை வரும் என்று ஒருபோதும் நினைத்துப்பார்த்தது இல்லை. நாம்தான் எல்லா சக்திகளையும் கொண்டவர்கள் எல்லாம் செய்யமுடியும்,இந்த பூமி நமது கட்டுபாட்டில் இருக்கிறது என்ற எண்ணத்திலேயே வாழ்ந்து விட்டோம்.

   ஆனால் இயற்கை ஒன்று இருக்கிறது, மாற்றம் நிகழும் என்பதை கொஞ்சம் முன்னரே யோசித்து பார்த்து இருந்தால் இந்தநிலை இப்போது இருந்து இருக்காது.

   பரிணாம வளர்ச்சியில்தான் மனித இனம் வந்தது என நம்பிய நாம் இந்த மனித இனத்திற்கும் மேல் ஒரு பரிணாமம் இருந்தால்? எனபதை கற்பனைகூட செய்யாமல் விட்டதுதான் பெரிய தவறு. அதுதான் இன்று நடந்து நம்மை அழித்துவிட நினைக்கிறது.

   இப்போதைய மனித இனத்தின் நிலை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நமது இனம்போலவே நமக்குள்ளவே சேர்ந்து வளர்ந்த அவர்கள் நம்மை அடக்கி ஒரு அடிமையை போல வைத்து இருப்பது எல்லோரும் அனுபவிக்கும் ஒன்றுதான்.

   எப்படி நமக்கு கீழ் வாழ்ந்த பிந்தைய உயிரினங்களை அடக்கி ஏன் கொன்று தின்றுகூட வாழ்ந்தோம்.அதே நிலமைதான் இன்று நமக்கு.

  எதிலும் உரிமை இல்லை,எந்த விசயத்திலும் தலையிடகூடாது அவர்கள் கொடுக்கிற உணவையும் பொருளையும் வைத்துக்கொண்டு வாழ்கையை நடத்த வேண்டும். மீறினால் தண்டனை.

   தொடக்கத்தில் புரட்சிகள் செய்து பார்த்தாலும் அவர்களின் அறிவுக்கு முன்னால் நம்மால் முடியவில்லைதான். முழுமையாக ஒடுக்கிய பின் நாம் வாழுகின்ற பகுதிகளில் ராடர் போன்ற சில உபகரணங்களை வைத்து நாம் மூளையில் இருந்து வெளிவரும் மின்அலைகளை படித்து நாம் என்ன யோசிக்கிறோம் என்பதை கண்டுபிடித்து விடுகிறார்கள்.இதனால் புரட்சி பற்றி யோசித்தாலே அடுத்த சில நிமிடத்தில் வந்து தூக்கி போகிறார்கள்.

   தண்டனை என்ற பெயரில் அடைத்து வைக்கப்பட்டு கிட்டதட்ட 2000 பேர் சேர்ந்த பிறகு மொத்தமாக ஒரு விண்கலத்தில் பூட்டி எரிபொருள் முழுவதும் நிரப்பி மேலே பறக்கவிட்டுவிடுகிறார்கள்.அந்த விண்கலம் எரிபொருள் தீரும்வரை மேல்நோக்கி மட்டுமே போகும்.தீர்ந்தபின் அங்கேயே மிதக்கும். மனித இனம் மற்றொரு முறை தவறுதலாககூட இந்த பூமியில் வந்துவிடகூடாது என்பதுதான் அவர்களின் நோக்கம்.

   இந்த உலகமே அவர்களின் கட்டுபாட்டில்.காரணம் அவர்களின் ஒற்றுமை.நாம் பிரிந்து கிடந்தோம் அழிந்தோம். அவர்கள் அறிவால் சேர்ந்து இருக்கிறார்கள்.நமது அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் அவர்களின் அறிவுக்கு முன் மதிப்பற்று கிடக்கிறது.தோல்விக்கு இதுவும் ஒரு காரணம்.

   அவர்களின் முதல்வேற்றியே மனிதர்களோடு மனிதனாக வாழ்ந்து கடைசியில் நம்மை வென்றதுதான்.

   இதை தொடக்கத்தில் மனிதன் உணர்ந்து அவர்களை பற்றிய உண்மைகளை அறிய முயலும் முன்னரே ஒன்று சேர்ந்து நம்மை வீழ்த்தி விட்டார்கள்.நம்மைவிட நான்கு குரோமோசோம்கள் அதிகம்,சிந்திக்கும்திறன், மூளையின் அளவு என சின்ன சின்ன மாற்றங்கள்.இதுதான் மனித இனத்தில் கால்பங்குகூட இல்லாத அவர்கள் நம்மை ஆள்வதுக்கு காரணம்.

   எல்லா இடங்களிலும் ராடர் வைத்து இருப்பதால் புரட்சி பற்றி யோசிப்பதே சிரமம்.நான் தெருவில் இறங்கி புரட்சி செய்ய இந்த கடிதத்தை அனுப்பவில்லை.அவர்களை அறிவால் வெல்லுவோம்.கடிதத்தை படிக்கும் எல்லோரும் அதை எப்படி சாதிக்கலாம் என்பதில் கவனம் செலுத்துங்கள்.

   வெகு நாட்களாக இந்த கடிதத்தை நான் எழுத காத்து இருந்தேன். இன்றுதான் எனது தெருவில் வைக்கப்பட்டு இருக்கும் ராடர் பழுதடைந்து அதை சரிபார்க்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.  இது உண்மையா தெரியவில்லை இப்படித்தான் போனமுறை பக்கத்துக்கு தெருவில் இப்படி செய்தி பரவியது. மனிதர்கள் எல்லாம் கிடைத்த நேரத்தில் ஒன்று கூடி புரட்சி பற்றி யோசிக்க அந்த தெருவே விண்கலத்தில் ஏற்றப்பட்டது. அந்த செய்தி அவர்களால் பரப்பப்பட்ட தவறான செய்தி.

   இந்த செய்தியும் உண்மையா தெரியவில்லை. பொய்யாக இருந்தால் நானும் விண்கலம் ஏற வேண்டும்.கவலை இல்லை இந்த கடிதம் உங்களுக்கு கிடைத்து புரிந்து கொண்டு செயல்படுத்தும்போது நான் இல்லாவிட்டாலும் அதுக்கு காரணமாக நான் இருந்ததுக்கு சந்தோசப்பட்டு கொண்டே விண்வெளி போவேன்.

   முதன்மை உயிரினம் என்பது போய் நமக்கு மேல் உள்ள அவர்களுக்கு கட்டுப்பட்டு கிடக்கிறோம். அவர்களை வெல்வது சுலபம் இல்லை. ஆனால் முடியும் அவர்களிடமிருந்தே பல விசயங்களை கற்று அதையே எதிராக பயன்படுத்துவோம்.அவர்கள் நம்மில் இருந்து வந்தவர்களே.

   இவ்வளவு விளக்கமாக சொல்வதுக்கு காரணம் என்னைபோன்ற பழமையான மனிதர்களுக்கு தெரியும் மனித இனம் முன்னர் எப்படி வாழ்ந்தது என்று.ஆனால் அடிமைபடுத்திய பின்னர் பிறந்த சிலருக்கு நம்மின் முந்தைய நிலை தெரியாது. அவர்களை பொறுத்தவரையில் மனிதன் என்பவன் தனக்கு மேல் உள்ள ஒரு இனத்திற்கு அடிமை என்பதே. இந்த கடிதத்தின் நோக்கமும் இந்த நிலை மாறவேண்டும் என்பதே.

   அதே நேரத்தில் உணர்ச்சி கொண்டு புரட்சி என்ற பெயரில் எதாவது செய்து விண்கலம் ஏறுவதைவிட நல்லதொரு வாய்ப்புக்கு காத்து இருப்போம்.கண்டிப்பாக அறிவை தவிர வேறொன்றை கொண்டும் இவர்களை ஜெயிக்க முடியாது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

  இந்த ராடர் சாதனம் இன்னம் சில நாள்களுக்கு சரியாகவில்லை என்றால் இன்னும் சில முக்கியமான விசயங்களை பற்றி கடிதம் எழுதுகிறேன்

   எழுதிய கடிதத்தை வேகமாக மடக்கி பையில் வைத்து கிளம்பும் வேளையில் வெளியில் அவர்களின் அந்த அறிவுப்பு வந்தது
உங்கள் தெருவில் பழுதடைந்து இருந்த ராடர்,மற்றும் தானியங்கி பொருள் வழங்கும் இயந்திரம் சரியாக 8:45 am முதல் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. இனிமேல் தவறுகள் நடக்காமல் பார்த்து கொள்கிறோம் என்று ஒலித்த சில நிமிடங்களில்.கடிதம் எழுதி  போக தயராக இருந்தவரின் கதவு அவசரகதியில் தட்டபட்டது.