சில விசயங்கள் - 9


  நெருங்கியே விட்டார்கள். முழுமையான humanoid robot  ஐ விண்வெளியில் சோதனைக்கு அனுப்பும் முயற்சியில் ஒரு முக்கியமான கட்டம் இது. கிட்டதட்ட 15 வருட கனவு இப்போது நிறைவேறியிருக்கிறது.

   இந்த வருட தொடக்கத்தில் விண்ணுக்கு அனுப்பட்ட Robonaut 2  ரோபோட்க்கு உயிர் கொடுத்து சோதித்து இருக்கிறார்கள். இது தகவல்களை சரியாக பகிர்ந்ததோடு இல்லாமல் அதில் கண்களாக பொருத்தப்பட்ட camera வில் எடுக்கப்பட்ட படங்ககள் சரியாக வந்து சேர்வதாக சொல்கிறார்கள். எல்லாம் நினைத்தது போலவே திட்டமிட்டபடி அதான் செயல்பாடு இருப்பது சந்தோசம் அளிப்பதாக அதனை சேர்ந்தவர்கள் சொல்லும்போது அதை உருவாக்குவதில் இருந்த கஷ்டம் புரிகிறது.


  இந்த Robonaut 2  ரோபோட் நாசா மற்றும் General Motors உதவியுடன் இதை செய்து முடித்து இருக்கிறார்கள்.இதே போன்று Robonaut 1 ம் இருப்பது குறிப்பிட தக்கது.ஆனால் robonaut 2 க்கு கால்கள் இல்லாமல் சக்கரங்ககள் பொருத்தியிருகிறார்கள். இந்த வகை ரோபோட்களில் இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று அதை ஈர்ப்புவிசைக்கு ஏற்றபடி சாமளித்து தனது வேலைகளை செய்ய வைப்பது. ஆனால் நான்கு சக்கரங்கள் என்றால் அது எளிது. கால்களும் விரைவில் பொருத்துவார்கள்.

   இதில் இந்த அளவு வெற்றியை அடைந்ததை தொடர்ந்து இன்னும் பல முன்னேற்றங்களை கொண்டு வர திட்டம் வைத்து இருக்கிறார்கள்.நான் கற்பனை செய்ததுபோல மனிதர்களையே அனுப்பாமல் வெறுமனே ரோபோட் ஐ கொண்டே விண்வெளியில் எல்லா வேலைகளையும் முடிக்குமாறு வசதிகள்  சீக்கிரம் வந்துவிடுமென நினைக்கிறேன்.

    அதாவது எல்லாம் செய்வது என்றால் இரண்டு வாசல்கள் உள்ள வீட்டின் ஒரு வாசலில் இருந்து அம்மா மறு வாசலில் இருக்கும் சிறு மகளிடம் ஒரு பொருளை எடுத்துவர சொன்னால் எப்படி இருக்கும் என்பதின் ஒரு கற்பனை இதே போலத்தான் நான் சொல்லும் எல்லாம் வல்ல ரோபோட்டும்

“இடது பக்கம் திரும்பேன்

“ம்ம் திரும்பிட்டேன்மா

“அங்க என்ன இருக்கு?

“மஞ்சள் ,நீல கலர்ல செருப்பு...அப்புறம் ஒரு  சருவத்தால் அப்புறம் எண்ணெய் பாட்டிலு

“ம்ம்சரி அந்த எண்ணெய் பாட்டிலை எடுத்துட்டு வா

“அம்மா இதானு பாருங்க

“ம்ம் அதான் கொண்டு வா கொட்டிராதே

   இதில் அந்த குழந்தை விண்வெளியில் இருக்கும் ரோபோட் என்று வையுங்கள் நாம் இங்கு இருந்து கட்டளைகள் மூலம தகவல்களை பெற்று அதை வைத்தே அதனை இயக்கி காரியங்ககளை செய்ய வைப்பது. அனேகமாக இதுக்கும் அதிக நாள்கள் இல்லையென நினைக்கிறேன் பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

                                 *****

   கோள்கள எல்லாம் ஏன் சூரியனை ஒரே மாதிரியாக அதுவும் சூரியன் சுழலும் திசையில் சுற்றுகிறது என்பதுக்கு ஒரு புது விளக்கம் அளித்து இருக்கிறார்கள். பொதுவாக எல்லா நடச்சதிரங்களை சுற்றும் கோள்களும் நமது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களை போல சுற்றுவதில்லை. சில தனது நடச்சதிர சுழலும் திசைக்கு எதிராகவும் சுற்றும்.

   இதற்கு காரணமாக சொல்வது பொதுவாக ஒரு நடச்சதிரம் உருவாவதின் தொடக்கம் தூசுகள் அடைந்த மேக கூட்டதில் (gas,dust cloud) இருந்தே ஆரம்பிக்கிறது. அவை கொஞ்சம் நெருங்கி உரசி atom fusion ஏற்ப்பட்டு கொஞ்சம் எரிய ஆரம்பித்து இப்படியே தொடர்ந்து ஒரு நடச்சதிரமாக மாறும். இந்த நிலையில் அந்த மேக கூட்டம் ஈர்ப்பு விசையில் ஒரு பக்கமாக சுற்ற ஆரம்பித்து அதோடு இருக்கும் பெரிய அளவிலான பொருள்களையும் தனது திசையில் இழுத்து சென்று நாளடைவில் அந்த தூசு மேகங்கள் முழுவதும் எறிந்தோ அல்லது காணமல் போய் அதில் சிக்கி இருந்த பெரிய அளவிலான கோள்கள் மட்டும் இன்னும் அதே திசையில் சுற்றுவதாக சொல்கிறார்கள்.

   எப்படியோ நமது பூமி சரியான தூரத்தில் சிக்கி கொண்டதால் இதை நான் எழுதி கொண்டு இருக்கிறேன். இது எப்படி சரியாக நடந்தது என்ற கேள்விக்கு எல்லாம் தற்செயல்தான் என்ற பதில்தான் இருக்கும். எப்படி இந்த பிரபஞ்சம் தோன்றியிருக்கும் என்ற கேள்விக்கு இருக்கும் இப்போதைய பதிலை போல.

                         **********

     எல்லாம் சரியாய்,நேர்த்தியாய் அழகாய் எந்த வித குறையும் இல்லாமல் இருப்பது போல தோன்றுவது விடுமுறைகளில் வீட்டுக்கு போகும்போது பேருந்தில் ஊரை நெருங்கையில் கடைசியாக இருக்கும் சில மணி நேரங்கள்தான். சந்தோசத்தை விட வேறுவித உணர்வே இதுக்கு காரணம். நானும் பலமுறை அனுபவித்து இருக்கிறேன்.

    பயணத்தில் சாலையில் பார்க்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் கட்டாயம் நமது சிறு வயது நிகழ்வுகளையோ அல்லது ஏதோ ஒரு இனிமையான ஒன்றையே நினைவூட்டும். கண்டிப்பாக யாருடனும் பேசும் எண்ணம் அப்போது இருக்காது.

   அதே நேரத்தில் சுற்றியுள்ள பகுதிகளை நிகழ்ந்துள்ள மாற்றங்களை பார்த்து முதலில் இப்படி இருந்தது, அது இப்படி கிடந்தது இப்ப எப்படி ஆகியிரிச்சு, அதோடு இல்லாமல் ஆட்களின் பழக்க வழக்கங்களில் உள்ள சிறு மற்றங்களையும் நான் அதிகமாக உற்று பார்ப்பதுண்டு. எல்லாமே ஒரு வித புது உணர்வுதான் என்னதான் அதே இடம் அதே ஊர் என்றாலும் ஒவ்வொரு முறை போகும்போதும் இந்த மாதிரியான புதியமாற்றங்கள் நிகழத்தான் செய்கிறது.

                      **********

     விரிகோணம் என்ற கதை தொடங்கிய வேகத்திலியே நின்று விட்டது. காரணமாக நேரம் இல்லை என்று பொய் சொல்ல விரும்பவில்லை. கதையின் முடிவு அதில் என்னென்ன சேர்த்து எழுத வேண்டும் போன்ற குறிப்புகள் எழுதி வைத்து இருந்தாலும் அதை விரிவாக்கி எழுதும் எண்ணம் இல்லாமல்  இருக்கிறது.

   சொந்த ஊருக்கு போகும் சந்தோசம் ஒரு பக்கம் இருந்தாலும் அதை எழுத முழு மனது இல்லை. ஆர்வம் இல்லாமல் எழுதி இதை படியுங்கள் என்று கொடுக்க விரும்பவில்லை. திரும்பிவந்து நீளமாக எழுதி பல பதிவுகளாக ஒரே நேரத்தில் போடும் எண்ணம் இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு பெரிய தொடர்கதையை ஒரே நேரத்தில்  படிக்கும் வகையில்.

   கண்டிப்பாக அதுவரை இதற்கு முன்னாடி எழுதின பகுதிகளில் உள்ள கதை மறந்துவிடும். முன்கதை சுருக்கம் வேறு எழுதவேண்டும் என் நினைக்கிறேன். வந்து தொடர்ந்து எழுதுகிறேன்.

  

சில விசயங்கள் - 8


   இதுவரை நமது மனித மண்டையை குழப்பியது மட்டுமில்லாமல் செயற்கையாக ரோபோட்கள் வைத்தும் பிரபஞ்சத்தில் சோதனைகள் செய்ய தயாரகி விட்டார்கள்.

   காரணம் நான் விரிகோணம் கதையில் சொன்னதுதான். மனிதனால் விண்ணில் இருக்கும் எதிர்பாராத அபாயங்ககளை எதிர்கொண்டு நீண்ட நாள் உயிரோடு பயணிப்பது கஷ்டம். அந்த அபாயம் எந்த வடிவம் என்று தெரியாது எனபது வேறு விசயம். இந்த இடத்தில மனித உயிர்களை இழப்பதுக்கு பதில் ரோபோட்களை கட்டுபாட்டுகளுடன் செயல்படுத்துவதுதான் இவர்களின் எண்ணம்.

   சொல்லபோனால் எல்லாவிதமான ஆராய்ச்சிகளுக்கும் பயன்படுத்தும் சாத்திய கூறுக்கள் இருக்கவே செய்கிறது. சில தகவல்களை வைத்து செயல்படும் விதத்தில் ரோபோட்டை விண்ணுக்கு அனுப்பி அங்கு சென்ற பிறகு அங்குள்ள சூழ்நிலையை தெரிந்து கொண்டு அதுக்கு ஏற்ப நாம் இங்கு இருந்தே புதிய ப்ரோக்ரம் வடிவமைத்து  அதன்மூலம் அவற்றின் பணியை செய்ய வைக்கலாம் என நினக்கிறேன்.அவ்வளவு சுலபமும இல்லை.பார்ப்போம் என்ன செய்கிறார்கள் என்று


    இது சம்பந்தமாக நிறையா யோசிக்கிறார்கள். வேற்று கிரக மனிதர்களை கண்டறியும் நீண்ட பயணத்திற்கு கூட இதை பயன்படுத்தலாம் என்ற ஒரு கருத்து இருக்கிறது. எத்தனை தலைமுறை ஆனாலும் பதில் கிடைக்கும் அனுப்பிய ரோபோட்டிடம் இருந்து. இது மட்டும் சீக்கிரம் நடந்தேறினால் நமது சொந்தக்காரர்கள் இந்த பிரபஞ்சத்தில் வேறு எங்காவது இருந்தால் கண்டுபிடித்துவிடலாம்.

                        *************

   என்னதான் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எழுதுகிறேன் என்று சொன்னாலும் எழுதிய விசயங்களை யார் எப்படி புரிந்து கொண்டார்கள் என்பதை அறியும் ஆவல் இருக்கத்தான் செய்கிறது. இதன் காரணமாகவே எழுதியதை பற்றி சிலர் சேர்ந்து விவாதிப்பது ரெம்ப பிடிக்கும்.

   காரணம் அறிவியல் விசயம் அதுவும் இல்லாமல் நான் எழுதிய விசயங்களில் எல்லாம் முழுதும் தேர்ச்சி பெற்றவனும் இல்லை. புத்தகங்களில் கொஞ்சம் படித்து அதை சரியாக புரியும் வரை இணையத்தில் தேடி கற்றுகொள்வது வழக்கம்.  இந்த நிலையில் அதே விசயத்தை சிலர் சேந்து விவாதிக்கும்போது அது சம்பந்தமான அறிவு இன்னும் கொஞ்சம் விரிகிறது அவ்வளவுதான்.

    ஒரு  விசயத்தை பலபேர் விவாதிக்கும்போது தெரிந்ததுக்கு மேல் அது சம்பந்தமான புதிய புரிதல்கள் கிடைக்கவே செய்கின்றன.எப்படி brain storming என்ற பெயரில் யோசிப்பதாக நினைத்து  ஒரு அறையில் சம்பளம் வாங்கிக்கொண்டு உட்கார்ந்து   யோசிக்காமல் இருப்பதை போல இல்லாமல் நண்பர்களாக சேர்ந்து கருத்துகளை சந்தேகங்களை பகிர்ந்து கொள்ளுதல் முக்கியமானதும்கூட
                            **********

   கோபம பொத்துக்கொண்டு வருகிறது சுஜாதாவை பற்றி யார் தவறாக சொன்னாலும். அவரது எழுத்து ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு அருமையான மனிதராக மனதில் பதிந்து இருப்பதே காரணம்.

   சிலருக்கு அவரை  பிடிக்கதாதுக்கு என்னதான் கரணங்கள் இருந்தாலும் நான் பார்த்தவரை பொறாமைதான்.அதுவும் தன்னுடைய எழுத்து சுஜாதாவின் எழுத்தோடு ஒப்பிடகூடியது, அவரது எழுத்தை இலக்கிய வகையில் சேர்க்க முடியாது அல்லது வராது இந்த மாதிரி.

   இன்னும் சிலர் சில அறிவியல் கதைகளை எழுதிவிட்டு அதை வைத்து அவரை வம்புக்கு இழுக்கிறார்கள். இதில் அவ்ர்களுக்கென்று குழு வேறு கொடுமை.

   அவர்கள் முன்னிறுத்தும் கருத்துக்கள் அவரது எழுத்துக்களை இலக்கியத்தில் சேர்க்க முடியாதாம், வணிக எழுத்தாளர் இந்த மாதிரியே. என்னை பொறுத்தவரையில் இது பொறாமையின் உச்சகட்டம்தான்.
அவரும் இலக்கியம் எழுதியிருந்தால் கண்டிப்பாக நாம் தமிழ் எழுத்துலகில் அறிவியல் சம்பந்தமான எழுத்தை இழந்திருப்போம் என்றே தோன்றுகிறது. நிறைய அறிவியல் விசயங்கள் எளிமை படுத்தபட்டு கதைகளில் கட்டுரைகளில் வாயிலாக கொடுத்தவர் சுஜாதா. கண்டிப்பாக எந்த ஒரு இலக்கியவாதியும் செய்து இருப்பார்களா தெரியவில்லை.

   சுஜாதா இருந்த காலத்திலும் சரி இப்போதும் சரி எல்லோரையும் தனது எழுத்தால் கட்டி போட்டவர்.பொறாமை பிடித்தவர்களுக்கும் இது தெரிந்தும் அதை மறைத்து குறை சொல்லுகிறார்கள். ஒருவேளை அவர் இல்லாத காரணமாக இருக்கலாம் என் தோன்றுகிறது.

   அவர் இருந்து அதை படிக்க நேரிட்டாலும் அவரின் கருத்து “எனக்கு சிரிப்பு வருகிறது இவர்களை பார்க்கும்போது என்றேதான் இருக்கும். அவருக்கு இது ஒன்றும் பெரிய விசயம இல்லை. இவர்கள் திருந்தினால் சரி அல்லது அந்த மாதிரி விசயங்கள் என் கண்ணில் படாமல் இருந்தாலே போதும்.

சிறு சிறு .. - 2

    சின்னதாக கதைகள் எழுத நான் எடுத்துக்கொண்ட முயற்சிதான் இந்த சிறு சிறு. இதை விட சுவராசியமாக சுஜாதா அவர்கள் சொன்ன 55 வார்த்தைகள் அடங்கிய கதையை "என் பக்கம்" த்தில் படிக்க நேர்ந்தது. அவரும் ஒரு அருமையான கதையை எழுதியிருந்தார்.

    சின்னதாக கதை எழுதியிருந்தாலும் ஒரு குறிபிட்ட விதியை கொண்டு எழுதியிருக்கவில்லை.இது கொஞ்சம் ஆர்வமானதும் கூட. இதை பற்றி buzz ல் போட்டபோது சில கதைகள் கிடைத்தன அதையும் இங்கே கொடுத்து இருக்கிறேன்.

முதலில் ஜெயந்த் கிருஷ்ணா அவர்களின் கதை

                                                              நிலா 

     பல இரவுகள் பல நிறங்களில் என்னை கடந்து சென்றிருக்கின்றன. அதில் ஏராளமான இரவுகளில் என்னுடன் இருந்திருக்கிறாள். ஆரம்பத்தில் அதிகமாக பேசியதில்லை, பின்னர் கொஞ்சம் சகஜமாக பேச ஆரம்பித்தாள். ஆரம்பத்தில் வித விதமாய் உடையணிந்து வந்தவளை முதல் முதலாய் சேலையில் வந்த அவளை பார்த்த கணம் என்றோ என்னை மறந்து போன என் அவளின் முகம் தோன்றி மறைய முதல் முறையாய் அவளிடம் உன் பெயரென்ன என்று கேட்டேன். நிலா என்றாள். மாலையில் தோன்றி காலையில் மறைவதால் இருக்கலாம்

*******


அடுத்து அனு அவர்களின் கதை 


                                                                அவன்

           மூன்று வருடங்களாக தான் அவனைத் தெரியும் எனக்கு.. ஆனால், உயிரோடு கலந்து விட்டான்..

           சந்தோஷ உலகை காட்டியவன், இன்று தன் பிரிவால் அமிலத்தை வாரி இறைக்கிறான்..

சோகத்தை சிரிப்பால் நீக்கியவன், இன்று என் அழுகைக்கு காரணமாகிறான்..

           கோபத்தை முத்தத்தால் அழித்தவன், இன்று இதயத்தில் வெறுமையை நிரப்புகிறான்..

           அவனில்லாத நேரங்களை நினைக்கவும் முடியாமல், என்னெதிரில் வந்த பஸ்ஸை நெருங்கினேன்..

           பஸ்ஸை நிறுத்தி, “டாடா மம்மி” என்று அழுதபடியே முதல் முறையாக பள்ளி செல்லும் என் மகனை கண்ணீருடனே வழியனுப்பினேன்.


*******

என்னுடையது  ..


                                                    ஒரே ரகசியம்

     வேறுவழியில்லாமல் லில்லிபூனையை இச்சோதனைக்கு உட்படுத்த வேண்டியதிருந்தது. மூளையோடு தொடர்பை ஏற்படுத்தினேன்.

     கேள்விகளை உள்ளனுப்ப அதன் சேமித்து வைக்கபட்ட்ட தகவல்களில் இருந்து எனக்கு பதில் கிடைக்கும். இதுவரை இந்தமுறை மனிதமூளைக்குள் மட்டுமே சோதித்து பார்க்கப்ட்டிருக்கிறது. விலங்கின் மூளையை அறிய முயற்சி.

“உங்களுடைய அறிவுத்திறமை எந்த அளவு?”

“எங்களின் பிறப்பின் ரகசியம் தெரிந்து இருக்கிறோம்”

“என்ன உங்களுக்கும் அந்த பிரச்சினையா?”

     “பிரபஞ்சத்தின் ரகசியத்தையும் கண்டறிய எங்களினம் முயல்கிறது பலவிதிகளுண்டு நெருங்கிவிட்டோம்”

“பிரபஞ்சத்தை தோற்றுவித்தது யார்? உங்களுக்கு கடவுள் இருக்கிறாரா?”

"............"

(54 வார்த்தைகள் என்னுடையது கடைசி வார்த்தை உங்களது அது “ஆம்” “இல்லை“ கதை முடியும் ... (வி.சொ.பொ. முடிவை போல )


 *****

இரண்டாம் கதை  

                                                             ஒரு தேடல்...

    பிரபஞ்சத்தில் வேற்றுகிரகத்தில் உயிரினம் இருக்கிறதா என்பதை கண்டறியும் தானியங்கி விண்கலமது.

     அம்சம் என்றால் தனாகவே தனதுவழியை தீர்மானிக்கும்.விண்வெளியில் தனக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையில்.

    நீரின் அமைவு ஆதாரத்தை வைத்தே ஒருகிரகத்தை நெருங்கி இறங்கி சோதனை செய்து தகவலை அனுப்பும்.

    ஏவினார்கள். பல வருடங்கள் கடந்த நிலையில் ஒருவருடமாக அதை கண்காணிக்கும் பணியை கைவிட்டிருந்தார்கள்.

    திடிரென்று வினகலத்தில் இருந்து தகவல் வந்தது எல்லோர்க்கும் ஆச்சர்யம். அது இருக்கும் தொலைவு இருப்பிடம் கண்டறியும் முயற்சிக்காக தூரத்தை பார்த்தபோது

550km என்றிருந்தது
.