L = ETO...

L = ETO

   (கொஞ்சம் ஐன்ஸ்டீன் பைத்தியம் பொறுத்துக்கொள்ளுங்கள்)..



L = ETO

    இதற்கு முழு விளக்கத்தையும் சொல்ல வேண்டும் என்றால் ...எனக்கு ஒரு பாடல் நினைவுக்குவருகின்றது...

மண்ணில் இந்த காதல் இன்றி யாரும் வாழாக்கூடுமோ.....

ஆம் இந்த வரிகள்தான் அதற்க்கு முழு விளக்கம்...


    இந்த FORMULA காதலின் ஆணி வேறை விளக்குவது. சரி அதை பார்க்கும் முன் காதல் எப்படி? ஏன்? உருவாகின்றது என்பதை கொஞ்சம் பார்க்கலாம்.


    இது என்ன கேள்வி காதல் என்பது நான்கு கண்களில் தோன்றி பின் இதயத்தில் நுழைந்து.... கனவில் வாழ்ந்து...கவிதை எழுதி.....யாருக்கும் தெரியாமல் அலை பேசியில்  முணுமுணு பேச்சுக்களில் வளர்ந்து.... ஊர் சுற்றி....கடைசியில்...ஜெயித்தால் திருமணம்.... எதிர்ப்பு என்றால்...வீட்டை விட்டு ஓடவைத்து....அல்லது தற்கொலை செய்ய வைத்து....ஒரு வழியாக அது தெய்விக காதலாக மாறுகின்றது.


    இவைகள்தான் நாம் காதலைப்பற்றி அன்றாடம் கேட்பது..படிப்பது..அல்லது பார்ப்பது.

    உணமையில் காதல் என்பது என்பதை சற்று உற்று பார்த்தால்... காதல் என்ற போர்வையில் செய்கின்ற அனைத்து செயல்களும் கொஞ்சம் பைய்த்தியக்காரத்தனமாகவே தெரியும்.


   சரி காதல் மேற்க்கூறிய விதத்தில் தோன்றுவதாக நமக்கு தெரிந்தாலும் அதற்க்கு பின்னணியில் என்ன என்பதை கொஞ்சம் பார்க்கலாம்...

    காதல் தோன்றுவதறக்கான காரணங்களாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிப்பது...

 SEXUAL ATTRACTION AND ATTACHMENT

   இதில்  SEXUAL ATTRACTION என்பது பொதுவாக ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் முதல் பார்வையில் அல்லது நல்ல பழக்கத்திற்கு பிறகு தோன்றுவது.

    இது ஒருவரின் பழக்க வழக்கங்கள், நடை உடை,பாவனைகள் போன்றவற்றை பொறுத்தது.  ஒருவருக்கு இது எல்லாமே சரியாக இருந்தால் பலரால் பெரிதும் கவரப்படுவார்.

 

   SEXUAL ATTRACTION இருந்தாலே உடனே காதல் வந்து விடாது.. இதற்க்கு அடுத்த படியாக ஒன்று இருக்கின்றது அதுதான் ATTACHMENT..

 
    SEXUAL ATTRACTION ன் முலம தன் கவர்ந்த ஒருவரை தனது நிரந்தர துணையாக ஆக்கி கொள்ள விரும்புவதுதான் இந்த ATTACHMENT.

   நம் ஊரை பொருத்தவரைக்கும் SEXUAL ATTRACTION க்கு ஒரு தடையும் இல்லை, ஆனல் ATTACHMENT ல் தான் பிரச்சினை ஆரம்பிக்கின்றது. சதி, மதம். இவைகள் தங்கள் விளையாட்டை காண்பிப்பதும் இதில்தான்.


    காதல் என்பது ATTACHMENT க்காக (குடும்ப வாழ்க்கைக்காக) SEXUAL ATTRACTION ன் மூலம் ஒரு பெண்ணை தேடிக்கொள்வதே இதில் எந்த ஒரு மாற்றமும இல்லை.


    இதில் முக்கிய பங்கு வகிப்பது SEXUAL ATTRACTION தான். இதுதான் மூல காரணமும்.
  

    காதல் முதலில் மனதில் நுழைவது இந்த வடிவத்தில்தான். காதலின் நுழைவாயில் இதுதான் என்று சொன்னவுடன் இல்லை இல்லை எங்கள் காதல் புனிதமானது என்று சொல்லி அறிவியலை ஏமாற்ற முடியாது...


    ஏனென்றால் ஒரு நிமிடத்திற்கு நம் இதயம் 70( FOR ADULT) முறை துடிக்கின்றது என்பதை சொன்ன அதே அறிவியல்தான் இதையும் சொல்லுகின்றது என்வே முரண்டு பிடிக்காமல் ஒப்புக்கொள்வது நல்லது.

    சரி இந்த SEXUAL ATTRACTION காதலுக்கு மட்டும்தான் உதவுமா என்றால் அது இல்லை. இது மற்றொரு முக்கிய பங்கையும் வகிக்கின்றது.

  அது RE PRODUCTION. இந்த SEXUAL ATTRACTION இல்லை என்றால் ஆண் மற்றும் பெண் அவர்கள் தன் தன் வழியில் தனித்தனியாக சென்று கொண்டிருப்பார்கள்.

   இது இருக்கப்போய்த்தான இந்த காதல், திருமணம், குடும்பம் எல்லாம். ஒருவகையில் இந்த SEXUAL ATTRACTION ஆனது SURVIVAL FUNCTION னுக்கும் துணை புரிகின்றது.

  அது சிலருக்கு காதலில் தொடங்குகின்றது..சிலர்க்கு திருமணத்தில் தொடங்குகின்றது.அவ்வளவே..

   சரி இந்த இரண்டிற்கும் காரணம் என்ன என்று பார்த்தால் இங்கு எனது FORMULA வை உபோயோகிக்கலாம்.


L = ETO

இங்கு   L  =  LOVE

        E  = ESTROGEN

        T  = TESTOSTERONE

O = OXYTOCIN

ESTROGEN, TESTOSTERONE , OXYTOCIN இந்த மூன்று விதமான HORMONE கள்தான் காதல் மணம் வீசுவதறக்கு முக்கிய  காரணமானவைகள்.

   இந்த HORMONE கள் நமது உடம்பில் மிக முக்கியமான பல வேலைகளை செய்தாலும்... இவைகள் காதலுக்கு எப்படி துணைபுரிகின்றன என்பதை மற்றும் இங்கு பார்க்கலாம்.



  முதலில்  ESTROGEN


   இந்த ESTROGEN அதிக அளவு சுரப்பதும், உதவி செய்வதும் பெண்களுக்ககத்தான். ஆண்களுக்கு மிகச் சிறிய அளவே சுரக்கின்றது.

  சரி இது காதலுக்கு எப்படி உதவுகின்றது என பார்ப்போம்... பெண்களை பொறுத்தவரை SEXUAL ATTRACTION க்கு முக்கிய காரணமாக இருப்பது இந்த HORMONE தான்.

  இது பெண்களை பொறுத்தவரையில் இந்த வேலையை தவிர வேறு சில முக்கியமான் வேலைகளை செய்கின்றது. அதை பற்றி தெரிந்து கொள்ள ஆசை என்றால் இதைப்பற்றி தேடு படிக்கவும்.... நான் இங்கு இது காதலுக்கு எப்படி உதவுகின்றது என்று மட்டுமே சொல்லி இருக்கிறேன்.

 ஆண்களை பொறுத்தவரையில் இது சிறிய அளவிலேதான் சுரக்கின்றது.

 பெண்களை (மெ)பெண்மை மிக்கவர்களாக காட்டுவது இந்த ESTROGEN தான். இது அளவில் குறைந்ததால் கொஞ்சம் ஆண் போல் இருப்பார்கள், நடந்து கொள்ளவார்கள். மற்றும் குரலில மாற்றம்  இருக்கும், உடலில் ரோம வளர்ச்சியில் மாற்றம் ஏற்ப்படும். இது பெண்களுக்கு...

 அதே நேரத்தில் ஆண்களுக்கு இது அதிகமாக சுரந்தால் அவர்கள் பெண்னை போல் நடந்து கொள்வார்கள்.


 ஆண் பெண் இந்த இரண்டையும் பிரிததுகாட்டுவதில் இந்த HORMONE முக்கிய பங்கு வகிக்கின்றது.

 இந்த ESTROGEN  தனியாக மருந்து வடிவிலும் கிடைக்கின்றது. பெண்களில் ESTROGEN குறைபாடுகாளால் உண்டாக்கும் நோய்களை போக்க இது பயன்படுத்தபடுகின்றது.

     ( மருந்து  CREAM, LIQUID, TABLETS  வடிவத்திலும் கிடைக்கின்றது. நான இது சம்பந்தமாக தேடி பிடித்து படித்துக்கொண்டிருக்கும் போது இதை படிக்க நேர்ந்தது. ...அதாவது ஒருவர் சந்தேக கேள்வியை எழுப்பி இருந்தார்.... ஒரு ஆண் இந்த ESTROGEN ஐ உண்டால் பெண்ணாக மாறிவிடுவான? என்று அவர் கேட்டு இருந்தார்.... அதற்க்கு மருத்துவரின் விளக்கம் மிகத் தெளிவாக நிளமாக இருந்தது  அதை முழுவதுமாக இங்கு சொல்ல முடியாது... அவர் சொன்னது... பெண்ணாக முழுவதும் மாற முடியாது கொஞ்சம் பெண்மைத்தன்மையோடு ஒரு சில மாற்றங்களே ஏற்ப்படும் என்று சொல்லி இருந்தார்.)


   அடுத்து TESTOSTERONE.....இது ஆண்களுக்கு மிக அதிகமாகவும் பெண்களுக்கு மிக குறைவாகவும் சுறக்கும். இது ஆண்களின் SEXUAL ATTRACTION க்கு முக்கிய பங்கு வகிக்கின்றது.


  மேலும் இது ஆண்களை பொறுத்தவரையில் சதை வளர்ச்சி, உடல் வளர்ச்சி, எடை சம்ந்த்மான விசயங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றது. 

 பெண்களை பொறுத்த வரையில் ESTROGEN  என்ன வேலைகளை செயய்கின்றனவோ அதே வேலைகளை அதே பங்கை TESTOSTERONE  ஆண்களை பொறுத்த வரையில் செய்கின்றது.


  இது வரை ஆணுக்கும் பெண்ணுக்கும் SEXUAL ATTRACTION ஐ கொடுக்க காரணமாக இருந்த HORMONE களை பற்றி பார்த்தோம்...அடுத்ததாக ATTACHMENT க்கு காரணமான OXYTOCIN ஐ பற்றி பார்க்கலாம்.


    ஒருவர் மற்றோருவருடன் எந்தத அளவுக்கு நெருக்கமாக, அன்பாக பழகுகின்றரோ அதை பொறுத்தே அவரின் OXYTOCIN அளவை சொல்லி விடலாம்....ஆம் இது மற்றொருவருடன் பழக அல்லது நெருங்கி சுமுகமாக பழக உதவி செய்வது.


  இதனை ஆராச்சி செய்து நிறுபித்து இருக்கிறார்கள். மனித உறவுகளுக்கு இடையே உள்ள பாச பினைப்புகளுக்கு இதுவே காரணம்.

   இது காதலுக்கு மட்டும்தான் உதவுகின்றது என்பது இல்லை....எல்லவிதமான் உறவுகள் நெருக்கமாக..பாசமாக இருக்க இது உதவுகின்றது.... எடுத்துக்காட்டாக கணவன் மனைவி... தாய் குழந்தை.... அண்ணன் தம்பி....போன்றவைகளும் இதில் அடங்கும்.


  முக்கியமாக் தாய்மார்கள் தன் குழந்தையை அரவணைக்க இதுவே முக்கிய காரணம். அதனால் தான் இதற்க்கு CUDDLE HORMONE என்ற பெயரும் உண்டு. இது தவிர இது பெண்களுக்கு குழந்தைபேறு காலங்களில் இது முக்கிய பங்கு வகிக்கின்றது.


   சொல்ல வேண்டும் என்றால் இது செய்யும் வேலை தான் காதலனோ,காதலியோ ஒருவரையொருவர் பிரியும்போது எதோ இந்த உலகமே இருண்டுவிடுவது போல தெரிவதும் இதனாலதான்.

   அவ்வளவுதான் காதல் என்பது இந்த மூன்று HORMONE கள் சம்பந்தப்பட்டவையே......இதைத்தவிர வேறொரு வகையில் அமைய வாய்ப்பு இருப்பதாக எனக்குத்தெரியவில்லை.

   எனவே இந்த காதலுக்காக நாம் என்னென செய்கிறோம என்பதை ஒரு முறை சற்று யோசித்து பார்த்து கொள்வது நல்லது.


   அதைவிட்டுவிட்டு இல்லை எங்கள் காதல் புனிதமானது ..தெயவிகமானாது....நாங்கள் வாழ்ந்தால் சேர்ந்தே வாழ்வோம் இல்ல என்றால் சேர்ந்தே சாவோம் ...என்று சொல்லி காதலுக்கு பெருமை சேர்ப்பவர்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.

  அதற்காக காதலே செய்ய கூடது என்று சொல்லவில்லை.... இன்னும் நம் சமுகம் காதலுக்கு முழு அங்கீகாரம் கொடுக்கவில்லை... அப்படி கொடுத்தால் தாராளாமாக காதலிக்கலாம்.

  எனக்கு வருத்தம் அழிப்பது காதல் என்ற பெயரில் நடப்பதுதான்....வீட்டை விட்டு பெற்றோரை விட்டு ஓடிப்போவது, தோல்வியில் தற்கொலை செய்து கொள்வது, பெற்றோர் களின் மான மரியாதையை புதிதாக போட்டுகொண்டிருக்கும் சேது சமுத்திர கால்வாயின் வழியாக கப்பலேற்றி அனுப்பவது போன்றவற்றை செய்வதே .... காதல் செய்வது இல்லை...

  அப்படியே காதல் வயப்பட்டலும் அதில் ஒன்றும் அப்படி உருப்படியான காரியங்கள் நடப்பதாக எனக்குத்தெரியவில்லை....
ஊர் சுற்றுவது,இரவு விழித்து இருந்து பேசி கொள்வது...செல் போன்களின் பட்டன்களை பரண்டி ....பரண்டி செய்தி அனுப்புவது...

 முக்கியமாக் தேவை இல்லாமல் பணம் மற்றும்      நேரத்தை செலவிடுவது  இவையே காதலின் முக்கிய பணிகள்..


    காதல் செய்வதை கட்டுப்படுத்தவத்து     அவ்வளவு சுலபம் இல்லை ..ஏனென்றால் அது எங்கும் வெளியில் இருந்து வரவில்லை...அதற்க்கு உண்டான வேலைகள் நமக்குள்ளே தான் நடைபெறுகின்றது.... இது பொதுவாக HORMONE களின் வேலை என்பதால் யாரும் இதில் இருந்து தப்பிக்க முடியாது.... இதை தவிர்க்க  கொஞ்சம் அதைப்பற்றி புரிதலே போதுமானது....



  அதற்க்கு நான் எழுதியது கொஞ்சம் உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.














பார்த்ததில்...படித்ததில்.... காதல்.

     விசயத்திற்கு செல்லும் முன் இதை எழுதுவதற்கான காரணத்தை கொஞ்சம் நான் சொல்லிவிட்டால் உங்களுக்கு படிக்க எளிதாக இருக்கும் என நினைக்கிறேன்....

   நான் இதற்க்கு அடுத்த படியாக தயார் செய்துகொண்டிருப்பது.. காதலின் தொடக்கம்...அதாவது காதலின் ஆணி வேர்.. அல்லது காதலின் ரிஷிமூலம்...எங்கிருந்து...எப்படி உருவாகின்றது என்பதைப்பற்றி ......

  அதற்க்கு முன்னால் என் பார்வையில் காதல் என்பது எப்படி என்று ஒரு சிறு முன்னுரையை கொடுத்தால் அடுத்து வருவதை நிங்கள் படிக்கும் போது கொஞ்சம் உதவியாக இருக்கும் என்பது என் கருத்து....


  சரி முதலில் நான் காதலைப்பற்றி படித்ததை சொல்லுகிறேன்....


     அதிகம் புத்தககங்கள் படித்து இருந்தாலும் இன்றுவரை என் மனதில் காதலுக்கு என்று தனி இடம் பிடித்து இருப்பது AYAN RAND எழுதிய WE THE LIVING என்ற புத்தகம்தான்...

  இது ஏன் எனக்கு பிடிக்கும் என்று சொல்லுவதற்கு முன்னால் இந்த ஆசிரியை பற்று சில வரிகள் பார்க்கலாம்...

 AYAN RAND 1905 ஆம் ஆண்டு  russia வில் உள்ள St.petersburg பிறந்தவர். ஆச்சர்யம் என்னவென்றால் அவர் தனது 9 வயதிலேயே தனக்கு உண்டான வழியை தேர்ந்து எடுத்து அதில் நடந்தார் என்பதே..அவர் தேர்ந்து எடுத்தது fiction writting.


  russia என்றாலே communism என்பது அனைவருக்கும் தெரிந்த்ததே..அதுவும் இவர் வாழ்ந்த காலத்தில் சொல்லத் தேவையில்லை....

 எனவே இவர் russia வில் இருந்து நாடு பெயர்ந்து america சென்று அங்கு ஒரு பெரிய நவலாசியரகவும். திரைக்கதை எழுத்தாளராகவும் விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 சரி we the living ல் அப்படி என்ன இருக்கின்றது ...பார்க்கலாம்..
.


  இந்த கதை என்னை பொறுத்தவரையில் (மக்கள்) காதலர்கள் communism தின் பிடியில் எப்படி பாடுபடுகிறாகள் என்பதே.

  கதையின் கதாநாயகி ஹிரா (kira) கதாநாயகன் leo ... இந்த இருவருக்கும் உண்டான வாழ்க்கை (காதல்) போராட்டம்தான் கதை.

    இந்த காதல் போராட்டத்திற்கு முக்கிய காரணமாக அவர் காட்டியிருப்பது communism. communism த்தின் விளைவுகளை மிக துல்லியமாக கதையில் ஓட விட்டு இருக்கிறார்.

    அவர் ஒரு பெண் எழுத்தாளர் என்பதாலோ தெரியவில்லை  காதலியே காதலுக்காக அதிகம் தியாகம் செய்கிறார்.(உண்மையில் யார் செய்கிறார்கள் என்று எனக்குத்தெரியாது  அனுபவம் இல்லை.... இருப்பவர்கள் சொல்லலாம்) இந்த கதையில் ஹிரா எனக்கு மிகவும் பிடித்துப்போன கதாப்பாத்திரம்.

  அவள் தன் காதலுக்க்காக எல்லவற்றையும் தியாகம் செய்ய தயாராக இருக்கின்றாள். அனால் லியோ சாதாரண communism த்தை எதிர்க்கும் மனிதனாக இருக்கிறான்.

   இந்த இருவரின் மூலம் RUSSIA வின் communism த்தை துல்லியமாக சொல்லியிருக்கிறார் AYAN RAND.

    அவள் தன் காதலனுக்கு என்ன தேவையோ அதை தன்னால் செய்ய முடிந்தவற்றை எல்லாம் அவனுக்குத்தேரியமலே செய்து முடிக்கிறாள்.
    அதை அந்த communism த்தின் ஆதிக்கத்தின் நடுவில் அவள் போராடி செய்யும் விதம்தான் அவளிடத்தில் இருந்து அவன் மீது கொண்டுள்ள காதல் எவ்வளவு அதிகம் என்பதை வெளிக்காட்டுகின்றது.

  ஒரு கட்டத்தில் communism த்தை எதிர்த்ததாக சொல்லி அவனை நாடு கடத்துகிறார்கள். இவள் துடித்து போகிறாள். அங்கு இருக்க பிடிக்கமால் நாட்டை விட்டே ஓட முயற்சிக்கிறாள்.

  அப்படி நாட்டின் எல்லையை கடக்கும் போது சுட்டு கொல்லப்படுகிறாள்.அவள் இறக்கும் அந்த கடைசி நிமிடத்தை ayan rand தனக்கு உண்டான பாணியில் சொல்ல்யிருப்பது மனதை கலங்கசெய்கின்றது..

  முடிந்தால் படியுங்கள் ஒரு நல்ல புத்தகம். மேலும்   THE FOUNDAIN HEAD, ATLAS SHRUGGED போன்ற நாவல்கள் நான் படித்ததில் AYAN RAND ன் சிறந்த புத்தகங்கள்.



  அடுத்ததாக நான் பார்த்த விதத்தில் சொல்லப்போனால் ..காதல் ஒன்றும் அவ்வளவு சிறப்பாக இருக்கவில்லை.....

     நான் சென்னயில் வேலை பார்த்த போது காதல் என்ற பெயரில் நடந்த  சம்பவங்களை என் நண்பர்கள் மூலமாக காண நேர்ந்த்தது. அதில் சிலவற்றை தெரிவிக்கிறேன்...

  என் நண்பன் ஒருவன் வெகு நாட்களாக ஒரு பெண்ணை பின் தொடர்ந்து ..... ஒரு வழியாக அவள் இவனை பார்த்து சிரித்த அடுத்த வாரமே தாம்பரம் பஸ் ஸ்டாண்டில் வைத்து அவளுக்கு ரோஜா கொடுக்க அவளும் அப்போது அதை வங்கி கொண்டாள்.


   அவன் எங்கள் ரூமுக்கு வந்து அதை சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அவ்ள அவளின் அண்ணனோடு அங்கு வந்து சேர்ந்தாள்.

   அன்று சண்டைபோடாத குறைதான்...ஒருவழியாக இனிமேல் அப்படி நடக்காது என நாங்கள் சொல்ல அவர்கள் சென்றார்கள்..

   அடுத்த சில நாள்களில் அதே நண்பன் வேறொரு பெண் பின் சுற்றினான் அது வேறு விஷயம்.

    அடுத்து மற்றொருவன் ஒரு பெண்ணை காதலிப்பதாக சொன்னான். நாங்கள் அவனை எச்சரித்தோம் எங்கே அவள் அண்ணனும் இங்கே வரப்போகிறான் என்று... அதற்க்கு அவன் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.. நாங்கள் உயிருக்கு உயிராக காதலிக்கின்றோம்.. என்றான்.

   அவர்களின் காதல் ஒருவருடம் நீடித்தது. அதற்குள் அவனுக்கும் என்னோடு சேர்த்து டெல்லியில் வேலை கிடைத்ததால் அவன் அவளை பிரிய நேர்ந்தது.

  அன்று டெல்லிக்கு புறப்படும் நாள் ..அவன் அவளை பார்க்க போவதாக சொல்லி அருகில் இருந்த தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் க்கு சென்றான்... சரியாக ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்தான்....
  

   வந்தவன் அதைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லை....டெல்லிக்கு சென்ற பிறகும் அவளிடத்தில் இருந்து எந்த ஒரு தொடர்பும் இல்லை.

 ஒரு வருடக்காதல் எப்படி ஒரு மணி நேரத்தில் முடிந்தது என்று எனக்கு இன்றுவரை புரியவில்லை....

  இப்போது அவனுக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. குழந்தையின் பெயர் அவள் காதலித்த பெண்ணின் பெயர் இல்லை என்பது எனக்குத் தெரியும்........


  இவ்வளவுதான் நான் கண்ட காதல் சம்பந்த்மனவைகள்.

   நான் அடுத்து எழுதப்போவதர்க்கும் இதற்கும் என்ன தொடர்பு என்பது அதை படிக்கும் போது உங்களுக்கே புரியும்.

    சரி எந்தவொரு காதல் அனுபவவும் இல்லாமல் கதலைப்பற்றி நி எப்படி எழுத முடியும் என்று நிங்கள் கேட்டால் ..நான் எழுதுவது காதல் ..அறிவியலின் பார்வையில் எப்படி என்றுதான்.

   இதற்காக ஒரு பெண் பின்னால சுற்ற வேண்டிய அவசியம் என்னகுத்தேவை இல்லை என்று நினைக்கிறேன்.

    மற்றபடி என்னை பொறுத்த வரையில் என் காதல் அனுபவங்கள் என்று சொல்லிகொள்ளும்படியாக ஒன்றும் இல்லை.

 அதற்க்கு மூன்று காரணங்கள் இருந்ததன....

     ஒன்று எப்போதும் நண்பர்களை விட்டு சற்று தனியே விலகி இருப்பது.... அடுத்து தனிமை கலந்த புத்தகம் வாசிக்கும் பழக்கம்.....மூன்றாவதக காதலுக்காண வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை... அல்லது அதற்காக நான் சரியாக முயற்சிக்கவில்லை... அவ்வளவுதான்...

  என்னை பொறுத்தவரையில் நாம் காதலைப்பற்றியும், கடவுளைப்பற்றியும் அளவுக்கு அதிகமகவே நினைத்து அல்லது கற்பனை செய்து வைத்து அதில் கலந்து உலாவிக்கொண்டு இருக்கிறோம் என்றே சொல்ல வேண்டும்.

கடவுள்களை பார்த்தேன்.....

(சிறு வயதில் நடந்த ஒரு சம்பவத்தையும் கொஞ்சம் கற்பனையும் சேர்த்து கொடுத்து இருக்கிறேன்.....



கடவுள்களை பார்த்தேன்..........


நான் ஒரு நாள் கடவுள்களை பார்த்தேன்......


வலி அதிகமாக இருந்தாலும் விழுந்து கிடந்த இடத்தில் இருந்து காலை நொண்டியபடியே நடந்து சாலை ஓரத்தில் இருந்த ஒரு திண்டில் அமர்ந்தேன்.... அமர்ந்தேன் என்று சொல்வதை விட சரிந்தேன் என்று சொல்லலாம்...

நான் சரிந்ததறக்கு காரணம்..... காலையில் வேலைக்கு செல்லும் போது தவறுதலாக வந்த ஒரு வாகனம் என் மீது மோத நான் சற்று பலமாக தாக்கப்பட்டு கிழே விழுந்தேன்... மோதியவகனதின் டிரைவர எதோ ஹிந்தியில் பேசியபடியே என்னை கடந்து சென்றது மட்டும் எனக்கு ஞாபகம் இருக்கின்றது....

அந்த திண்டில் அமர்ந்த பின் மெதுவாக என் கண்களை மூடினேன்.. என் கால் மற்றும் இடுப்பில் நல்ல அடி.. அதிக வலி அதனால் கண்கள் சொருகி மயக்கம் வருவது போல் இருந்தது...மெதுவாக அதிகம் வலித்த கால்களை பிடித்து கொண்டே கிழே குனிந்து உட்கார்ந்து கொண்டேன்.... அந்த நேரத்தில்.... நான் கிழே விழுந்ததில் இருந்து இதுவரை யாரும் என் அருகில் வரவில்லை என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்...


கண்கள் சொருகி அடுத்த ஐந்தாவது நிமிடம் என்க்கு முழு மயக்கம் வரும் என்பது தெரிந்தது....ஹிந்தி பேச்சுக்கள் ..வாகன இரைச்சல்கள் மெதுவாக காற்றில் கரைந்து போய்க்கொண்டிருந்த்தன.....

அந்த நேரத்தில் என் மனதில் சிறுவயதில் நடந்த ஒரு சம்பவம் ஒன்று மெதுவாய் நிழல் ஆட தொடங்கியிருந்தது...எந்த காரணத்திற்காக என்று எனக்குத் தெரியாது... முடிந்தால் நீங்கள் சொல்லுங்கள்...

பள்ளி விடுமுறை நாள்களில் வெளியூரில் இருக்கும் என் அத்தை வீட்டிற்கு சென்றிருக்கிறேன்... அத்தை கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தார்கள்... அவர்களுக்கும் அது விடுமுறை நேரம்...

அன்று மாலை என் அத்தை வீட்டில் உள்ள காரை ஓட்ட கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்ல அதற்க்கு தயார் ஆனோம். நான் காரின் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தேன். நகரின் எல்லைவரை காரை டிரைவர ஓட்டி வந்தார் அதற்க்கு பிகு கார் என் அத்தையின் கையில் கொடுக்கப்பட்டது.

டிரைவர அருகில் அமர்ந்து சொல்லிகொடுக்க அத்தை ஓட்டிக்கொண்டிருந்த்தார்... புதுப்பழக்கம் என்பதால் மெதுவாக சாலையில் ஆங்கும் இங்கும் செல்வதாக இருந்தார்...

அது ஒரு சிறு கிராமத்திற்கு செல்லும் சாலை என்பதால் எந்த ஒரு நெருக்கடியும் இல்லாமல் இருந்தது....

அத்தை கார் ஓட்டியதில் எந்த ஒரு முன்னேற்றமும் இருந்தததாக எனக்கு நினைவில்லை.... சற்று தூரத்தில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்ததை பார்த்த டிரைவர அத்தையிடம் பார்த்து மெதுவாக செல்லுமாறு அறிவுறுத்தினார்... அத்தை அதற்க்கு தலை ஆட்டினது என்னவோ நினைவிருக்கின்றது...அனால் அடுத்த சில நிமிடங்களில் ஒரு சிறிய ஆட்டின் மிது கார் மோதி அது சற்று தூரம் தள்ளி விழுந்ததற்கு அப்புறம் கார் சற்று தூரம் போய் டிரைவரால் நிறுத்தப்பட்டு நாங்கள் கிழே இறங்கினோம்.....

அந்த ஆடு அதே இடத்தில் கத்திக்கொண்டே படுத்து கிடந்த்தது... அதற்குள் சத்தம கேட்டு பக்கத்தில் காட்டில் வேலை பார்த்தவர்கள் ஓடி வந்தார்கள்...வந்தவர்கள் விழுந்து கிடந்த ஆட்டு குட்டியை துக்கி அதற்க்கு என்னானது என்று பார்ப்பதில் ஆர்வமாக இருந்தனர்......

அதில் ஒருவர் அதான் அடிப்பட்ட ஒரு காலை பிடித்து இழித்துவிட்டுக் கொண்டிருந்தார்...அது வழியால் கதிக்கொண்டிருந்த்தது....


அந்த கூட்டத்தில் இருந்து விலகி வந்தவர்களில் சிலர் எங்களிடம் சற்று கடுமையாக...... பார்த்து வறவேண்டியதுதானே பாவம் வாயில்ல ஜிவான் என்ன செய்யும் பாவம் என்று முனுமுனுத்தபடி சென்று விட்டனர்...

அதற்க்கு மேலும் நாங்கள் அங்கு இருக்கவில்லை...அந்த இடத்தோடு முடிந்தது எங்களின் பயணம்... திரும்பி வரும்போது டிரைவர்தான் காரை ஓட்டி வந்தார்.... அத்தை என்னோடு பின் இருக்கையில் வந்து அமர்ந்தார்.... முகம் முழுவது வேர்த்து வலிந்தது பயத்தினால்.....

அன்று இரவு நான் தூங்க செல்லும் முன் அதை நினைத்து பார்த்தேன்... அந்த ஆட்கள் சொல்லியது என் மனத்தில் ஒலித்தது..... பாவம் அது வாயில்ல ஜீவன் என்ன செய்யும் பவாம்..... அப்படியே தூங்க கண் மூடினேன்....

கண்ணை முழுவதும் மூடி ஆழ்ந்த நிரந்த்தர மயக்கத்திற்கு செல்ல இன்னும் ஒரு நிமிடத்திற்கு குறைவாகவே இருக்கும் என நினைக்கிறேன்.... இப்போது வலி அதிகமகியிருந்தது...மயக்கத்தின் விளிம்பில் இருக்கிறேன்.....

என்னை பொறுத்தவரையில்... கடவுள் என்ற ஒன்று இல்லை.... கடவுளும். சாத்தானும்... சாதாரண மனிதனின் வெளிப்பாடே......( ஐன்ஸ்டீன் இப்படித்தான் சொல்லியிருக்கிறார்.........) அதனால் நல்ல மனிதர்களை கடவுள் என்று சொல்ல்வதில் தவறு ஒன்றும் இல்லை என்பது என் கருத்து....

அந்த வகையில் இந்த சாதாரண மனிதர்களுக்கிடையில் நான் சிறு வயதில் பார்த்த அந்த கிராமத்து மனிதர்கள் கடவுள்களே....அவர்கள் நான் பார்த்த கடவுள்கள்... அவ்வளவுதான்......

அந்த இறுதி நிமிடத்தில் அவர்களை பற்றி ஏதாவது எழுத வேண்டும் என நினைத்தேன்... எழுதினேன்.. நான் அந்த கடவுள்களை பற்றி எழுதியதை பற்றி படிக்க வேண்டும் என்றால் இந்த கதையை மீண்டும் முதலில் இருந்து படிக்குமாறு வேண்டுகிறேன்....



குறிப்பு :- மயங்கியவன்னுக்கு என்ன ஆனது என்று நீங்கள் அக்கறை கொண்டால் அவன் சில நாள்களில் சரியாகி........... அவன் இறுதியாக மயக்கத்திற்கு போகும் முன் நினைத்ததைச் செய்து முடித்து விட்டான் அதுதான் நீங்கள் மேலே படித்தது......

.

PARALLEL UNIVERSE..... BEFORE BIG BANG...

      எல்லாம் அவன் செயல்..அவன் இன்றி ஒரு அனுவும் அசையாதுபோன்வற்றின் மிது நம்பிக்கை வைத்து இருப்பவர்கள் ...இதை படிப்பதினால் .... சிறு நன்மையும் இல்லை என்பது என் கருத்து..... அப்படியே இதை படித்த பின் தன் கருத்தை மாற்றிக்கொண்டால் நான் கொஞ்சம் சந்தோசப்படுவேன்......

  இதுவரை நாம் நினைத்து கொண்டிருப்பது போல big bang எனும் வெடிப்பு நடைபெறுவதற்கு முன் ஒன்றுமே இல்லாமல் இந்த big bang தான் universe ண் தொடக்கம் என்று நினைத்தால் . அது இல்லை.... சரி அது எப்படி என்று பார்ப்போம்.....

   big bang ஒரு வெடிப்பில் உருவானதாக கூறி இருந்தேன் (எங்கே என்பவர்கள் இங்கே போகவும்...பின் உங்களுக்கு எளிதாக இருக்கும் என நினைக்கிறேன்) சிலருக்கு அந்த வெடிப்பே எவ்வாறு? உண்டானது என்ற ஒரு கேள்வி எழுந்திருக்க வேண்டும் இப்போது அதைப்பார்க்கலம்......

நான் இதை சொல்லும் முன் இதனை விரிவு படுத்தும்  சில அடிப்படை theory களை சற்று மேலோட்டமாக பார்ப்போம்.

  இப்போது big bang கிற்கு முன்னால் இது நடந்திருக்கலாம் என கண்டுபிடித்து சொல்ல காரணமாய் இருப்பது M theory எனப்படும் ஒன்றாகும். இது இன்னும் முழுவதும் முடியடையவில்லை.

    இந்த  M theory  என்பது பல string theory கலை கோர்த்து உருவாக்கப்பட்டது


 string theory   இது அனுத்துகல்கலின இயக்கத்தை விளக்க முற்படுவது. அதை ஒரு சிறு படத்துடன் விளக்கினால் எளிதாக இருக்கும் என நினைக்கிறேன்....
.





     இதில் மேல் இருந்து......முதலில் ஒரு (apple) திடப்பொருள்...அடுத்து....உள்ளே சென்றால் atoms... அதற்கும் உள்ளே சென்றால்.... particle...  அதற்கும் உள்ளே சென்றால் quarks.... அல்லது elementary particle.... அதை உற்று நோக்கினால் அது ஒரு string போல இருக்கும் ...  இதன் நீளம் .. Planck length எனப்படும்..அது  
10 க்கு முன்னால் 33 ஜீரோ செர்துகொள்ளுங்கள் அத்தனை cm அவ்வளவுதான்... அவர்கள் கூற வருவது.. particles build up of string form.....

  இதில் பலவகை உண்டு. அனுத துகள்களின் (elementary particle) இயக்கத்தை(உந்தம்) பல்வேறு நிலைகளில் விளக்க முற்படும் போது ஒவ்வொரு முறைக்கும் ஒரு விதமான theory கள் பயன்படுகின்றன.

 மொத்தம் இதில் 6 வகையான string theory கள் உள்ளன. இவற்றையும் ஒன்றாக இணைத்து இருக்கிறார்கள். அதாவது இதனை இணைக்க coupling constant என்ற முறையை உபோயோகித்து இருக்கிறார்கள்.

  இதனை நான் விளக்கி என்னோடு சேர்ந்து உங்களையும் குழப்ப விரும்பவில்லை. பல வாரங்கள் என் தலையை பிய்த்து கொஞ்சம் கொஞ்சம்  நான் புரிந்து வைத்து இருப்பதையும் இப்போது நான் மறக்க விரும்பவில்லை.

   இல்லை எனக்கு கண்டிப்பாக இதைப்பற்றி தெரிய வேண்டும் என்பவர்கள் இங்கு செல்லலாம். string theory  ன் விளக்கம்... இதை படிக்க முற்பட்டு சட்டை கிழிந்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல....

  இவ்வாறு coupling constant ண் முலம இணைத்த theory யைத்தான் M  theory  என்கிறார்கள். இது இன்னும் முழுவதுமாக விரிவாக்கபடவில்லை.பல்வேறு சொதானைகள் இதன் மீது நடந்து கொண்டு இருக்கின்றன.


  இந்த M theory தான் M theory cosmology முலம நம் universe ன்  தொடக்கத்தை விளக்க முற்படுகின்றது. அது எப்படி என்று பார்க்கலாம்.

 M theory ண் படி universe  என்பது தட்டையானது அதாவது parallel universe. (அது எப்படி universe  ஏன் தட்டையாகத்தான் இருக்க வேண்டுமா என் வேறு வடிவத்தில் இருக்கா கூடாதா? என்று கேள்வி கேட்பவர்களுக்கு பதில்...... இதோ பார்க்கலாம்...

     universe ன் அமைப்பு பல்வேறு வடிவங்களில் கூறப்பட்டாலும் இப்போது நம்பபடுவது அது தட்டையாக இருக்கும் என்பதுதான். அதாவது ஒரு காகிதம் போல.

  இதை விவரிக்கும் போது முக்கியமாக மூன்று காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும்



ஒன்று  (மேலிருந்து)

 density ஆனது universe ன் critical density யை விட அதிகமாக இருந்தால் அது கோளமாக இருக்கும்.

 ஏனென்றால்  அதன் gravitational effect ன் காரணமாக அது தன்னை தானே சுருக்கி கொள்ளும்

இரண்டு

  density ஆனது universe ன் critical density யை விட குறைவாக இருந்தால் அதன் curvature ஆனது saddle (ஆசனம்) போல் இருக்கும். (இதற்க்கு மிக வாய்ப்பு குறைவு எனவே இதற்க்கு பதிலாக கிழே உள்ள மாதிரி இருக்கும்)

மூன்று
  density ஆனது universe ன் critical density யை விட குறைவாக இருந்தால் அது தட்டையாக இருக்கும். density குறைவாக இருப்பதால் . Gravitational effect ஆனது வளைந்து கொடுக்க விடுவதில்லை.

  இந்த முறைதான் அனைவராலும் ஏற்றுக்கொள்ளபட்ட முறையாகும். M THEORY யும் இதைத்தான் கூறுகின்றது.




    ஒரு universe ண் தொடக்கம் இவ்வாறு  இருக்கும் எனக் விளக்குவது இப்படிதான்...அதாவது ஏற்கனவே இருக்கும் இரண்டு தனித்தனியான  parallel universe கள் ஒன்றோடு ஒன்று மோதி ஒரு புதிய universe ஆனது உருவாகியிருக்கும் என்று கூறுகிறார்கள்

.


       மேலே உள்ள பாடத்தில் தெரிவது இரண்டு parallel universe கள் ஒன்றோடு ஒன்று எப்படி மோதுகின்றது என்று காட்டப்பட்டுள்ளது.... இதில் இடது புறம ஒரு parallel universe மற்றும் வலது புறம ஒரு parallel universe.


   இந்த இடத்தில் ஒன்றை சொல்ல விரும்புகிறேன் இதுவரை நாம் universe  என்று பயன்படித்திகொண்டு இருந்தோம் அது ஒரு மிகப்பெரிய ஒரே ஒரு universe ஐ மட்டுமே குறிக்கும் ஆனால் M theory ண் படி பார்க்கும் போது ஒன்றுக்கு மேற்ப்பட்ட universe கள் இருக்க வேண்டும் அப்படி இருக்கும்போது அதை multiverse என்று அழைக்கிறார்கள். multiverse என்றால் பல universe இருப்பதாக கொள்ளாலம்.

  அது எப்படி சும்மா இருக்கும் இரண்டு universe கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் அதற்க்கு வேறோதுவும் வேலை இல்லையா என்ன? என்று கேட்பவர்களுக்கு பதில்....

   Hubble  என்பவர் முதன் முதலாக universe ஆனது விரிவடைகின்றது அதாவது universe expanding என்பதை கண்டு பிடித்து சொன்னார்.

அது அப்படி விரிவடைந்து கொண்டே சென்றால் அது ஒரு இடத்தில collapse ஆகும் அதுவே big crunch...  universe ண் முடிவு....அல்லது ஒரு புதிய universe ண் தொடக்கம் m theory ன் படி.....
     மேலும் universe expand ஆகின்றது என்றால் அதில் உள்ள அனைத்தும் சேர்ந்துதான் expand ஆகின்றது... atoms..galaxy ...போன்றவைகள்... நிங்களும் expand ஆகிக் கொண்டு இருக்கிறிர்கள்  .. அனால் அதற்க்கு வேறு காரணம்... அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.......


     சரி universe expand எப்படி ஆகின்றது என்ற கேள்விக்கு விடையை நீங்கள் இங்கு எதிர்பார்த்தால் நான் உங்களிடம் சரணகதி அடைவதைத்தவிர வேறொன்றும் என்னால் செய்ய முடியாது.....


     ஏனென்றால் நமது universe ல் 70% நிரம்பி இருப்பது dark energy. இதுதான் நம் universe ண் பல்வேறு செயகளுக்கு ஆதராமாக இருப்பது... இதைப்பற்றி இதுவரை விளக்கப்படவில்லை என்பதே உண்மை... தேடிக்கொண்டிருக்கிறார்கள்.....


    அதற்குள் சிலர் இதுதான் கடவுள் .. சாத்தான் என்று பெயர்  சூட்டி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்... அவர்கள் எண்ணம ஒரு நாள் தோல்வி பெறுவது உண்மை... 


      எப்படியோ.... இந்த dark energy வழிநடத்தி universe expand ஆகின்றது...அப்படியே விரிவடைந்து Hubble சொன்னது போல் ஒரு நேரத்தில் அது big crunch ல் முடிவடையும்.... 

    இது ஒன்றும் உடனே நடக்காது அதற்க்கு பல ஆயிரம் வருடங்கள் உள்ளன எனவே அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை என நினைக்கிறேன்....









 


  

  
.