விடை...


((உங்களுக்கு வைத்தி, புனி புதியவர்கள் என்றால் ஒரு அறிமுகம்..வைத்தி மிகப்பிரபலமான ஒரு மருத்துவர்..தனது மருத்துவமனையில் செய்ய முடியாதவற்றை தனது ஆய்வுகூடத்தில் செய்பவர்..அவருக்கு உதவியாக இருப்பவள் புனி எனும்  ஒரு மாணவி))


   பலமாத உழைப்பு முடிவுக்கு வரும் தருவாயில் இருந்தாலும் இறுதிக்கட்டத்தை நெருங்க நெருங்க வைத்திக்கும்,புனிக்கும் மனதுக்குள் பயம் அதிகமாகியதுதான் உண்மை.

   உலகத்தில் இல்லாத புதியமுறை அதுவும் மனித உயிர் சம்பந்தப்பட்டது. தோல்வியில்முடிந்தாலும் பிரச்சினையில்லை, இதனை உபயோகித்து உயிர் சேதம் ஏதும் ஏற்ப்பட்டால்தான் பிரச்சினை.

    இதில் புனியின் பங்கு கடந்த காலத்தைவிட மிகஅதிகம். இயந்திர வடிவமைப்பில் இருந்து வைத்தியின் சிறு சிறு கவனக்குறைவு, பிழைகளை சுட்டிகாட்டி திருத்துவதிலும் அவளின் பங்கு இருந்தது.இதன்மூலம் வைத்தியின் பாராட்டுக்கும் அவருக்கு மிக பிடித்தமானவளும் ஆகியிருந்தாள்.

   அவர்களின் ஆய்வுகூடத்தில் ஒரே மாதிரியான இரண்டு ஆள்உயர கண்ணாடி குடுவை போன்று இருக்க, ஒன்றன் பின்னாடி மட்டும் சில சிறு கண்ணாடி குடுவைகள் இருந்தன. மற்றொன்றில் அந்த இடதில் இருந்து அதற்கு பதில் வெறும் வயர்கள் மட்டும் பொருத்தப்பட்டு இருந்தன.ஒன்று ஆய்வுகூட கணினியில் பொருத்தப்பட்டு அதில் எதையோ புனி சரிபார்த்துகொண்டு இருந்தாள் மற்றொன்றில் வைத்தி வேலை பார்த்துகொண்டு இருந்தார்.எல்லாம் இறுதிகட்ட சரிபார்பப்பு.அடுத்த நாள் சோதனைக்கு முடிவு எடுத்து இருந்தார்கள்.

   மறுநாள் காலையில் வைத்தியும்,புனியும் ஒருவித பயம் கலந்த கவலையில் வேலையை பார்த்துகொண்டு இருந்தார்கள். மேஜையில் வைக்கப்பட்டு இருந்த பூனைகுட்டி அடுத்து என்ன நடக்கபோகின்றது என்பதை அறியாமல் அதன் கூண்டுக்குள் கத்தியபடி சுற்றி வந்துகொண்டு இருந்தது.


   வைத்தி புனியின் உதவியுடன் அதில் இருந்த ஒருகுடுவையை தூக்கி கொஞ்ச தூரத்தில் இருந்த மற்றொரு அறையில் வைத்து அதை கணினியுடன் இணைத்து இயங்கும் தன்மையை சொதித்துபார்த்துவிட்டு மற்றொரு குடுவையை அவரது அறையில் இருந்த கணினியுடன் இணைத்து அதையும் இயக்க துவங்கினார்.

   மற்றொரு அறையில் வைக்கபட்டு இருக்கும் குடுவையின் பின்பக்கம் பொருத்தப்பட்டு இருந்த சின்ன குடுவைகளில் ரத்தம் மற்றும் சில அமிலங்கள் என அதிகமாக நிரப்பப்பட்டு இருந்தது.அந்த இரண்டு குடுவைக்கும் பொதுவாக நடுவில் ஒரு வட்டவடிவ இடம் இருந்தது. அதை சுற்றி ஒரு வளையத்தில் இனைக்கப்பட்ட லேசர் ஒளி பாச்சும் கருவிகள் இருந்தன.அது நீளவாக்கில் மேலும் கீழும் நகரும்படி அமைக்கபட்டு இருக்க அதுக்கு  அடுத்த பகுதி அந்த குடுவையை மூடும் கண்ணாடி கதவு இருந்தது.

    கையில் இருந்து திமிர பார்த்த பூனையை அழுத்திபிடித்து அந்த குடுவைக்குள் விட்டார் வைத்தி.கதவு முடியதும் பயத்தில் பூனை நகத்தால் கண்ணாடி கதவை பரண்டியது. வைத்தி சிறு தயக்கத்தோடு  புனியை பார்க்க, அவள் ஏதும் சொல்லாமல் அதே பார்வையை பார்த்தாள். வைத்தி அந்த குடுவையை இயக்கத்திற்கு கொண்டு வந்தார்

   அதுவரை பரண்டிகொண்டு இருந்த பூனையின் மீது மேல் இருந்து வந்த லேசர் ஒளிக்கற்றை பட்டதும் அப்படியே அசையாமல் நின்றது. அந்த ஒளிக்கற்றை திரும்பி மேலே போய் கீழே திரும்பியது இப்போது பூனையின் உருவத்தில் கொஞ்சம் மாற்றம இருந்தது. இந்த செயல் தொடர்ந்து நடக்க அதற்கு ஏற்றாற்போல பூனையின் உருவத்திலும் குறைவு வந்துகொண்டே இருந்தது.லேசர் ஒளி மேலேபோய் கடைசியாக நின்றபோது கிழே பூனை இருந்த இடத்தில அது காணாமல் போய் இருந்தது.

    இதுவரை இதை பார்த்துகொண்டு இருந்த வைத்தியும் புனியும் ஒரு பெரு மூச்சோடு கணினியை நோக்கி ஓடினார்கள். கணினி சில தவல்களை இவர்களுக்காக தயாரிக்கும் பணியில் இருக்க முடிவுக்காக காத்து இருந்தார்கள்.

 Sequence name            Length (bp) including gaps 
chrA1             279,330,936 
chrC1             231,559,387 
chrA2            217,619,046 
chrB1            216,457,954 
chrA3            170,549,644 

   இப்படி பலபக்கங்ககளுக்கு தொடர்ந்து கொண்டே செல்ல கடைசியாக அந்த பூனையின் ஜினோம் படித்து முடிக்கப்பட்டு கணினி திரையில் காட்டப்பட்டது.எத்தனை செல்கள்,என்னென்ன ஜீன்கள் என எல்லா தகவல்களும்.  இது வைத்தி கண்டு பிடித்திருக்கும் புதியமுறை.சாதராண முறைப்படி ஒரு பூனையின் ஜினோமை படிக்க பல மாதங்கள் ஆகும்.ஆனால் இந்த முறையில் சில நிமிடங்கள்தான்.

   கணினி திரையில் அந்த தகவலை அனுப்ப அனுமதிகேட்க..வைத்தி புனியை மற்றொரு அறையில் கணினியோடு இணைக்கப்பட்டு இருக்கும் அந்த குடுவைக்கு சென்று இயக்கத்தை சரிபார்க்குமாறு சொல்லிக்கொண்டே பூனையின் ஜினோமை அனுப்பினார்.

   வந்து இருந்த அந்த தகவலை புனி பதற்றத்தோடு அந்த குடுவைக்கு அனுப்பினாள். அடுத்த நிமிடத்தில் அந்த குடுவையின் உள்ளே வேகமாக வேலைகள் நடக்க ஆரம்பித்தன.கொஞ்சம் ரத்தம்,அமினோ அமிலங்கள், ஹோர்மொன்கள் எல்லாம் குறைந்து இருந்தன.குடுவையின் இயக்கம் நின்று இருந்த போது அந்த கண்ணாடி கதவை பூனை பரண்டிகொண்டே கத்தியது.

   இருவருக்கும் சொல்லமுடியாத சந்தோசம்.புனியின் கண்களில் கண்ணீரே வந்து இருந்தது.வைத்தி வேகமாக சென்று குடுவையின் கதவை திறந்து அதை கையில் எடுத்து சோதித்து பார்த்தார்.சற்று முன்னர் வேறொரு குடுவையில் விட்ட அதே பூனை.

“எதாவது மாற்றம் இருக்கா? கேட்டாள் புனி

“ஆமாம் இருக்கு. முடியின் நீளம் கொஞ்சம் கம்மியா இருக்கு என்றார்

   “ஒருவேளை லேசர் ஒளிகற்றை தொடங்கும்போது கொஞ்சம் வெப்பத்தில் கருகி இருக்குமோ?

“இருக்கலாம் என்றார்

   அடுத்த வந்த நாள்களில் அவர்களின் கண்டுபிடிப்பை நிலையான ஒன்றாக கொண்டுவர முயற்சி எடுத்தார்கள்.அடுத்த இரண்டு மாத கடின உழைப்பில் அவர்களின் இந்த ஒளியின் வேகத்தில் உயிரை அல்லது மனிதனை அனுப்பும் முறை தேரியிருந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் பல பூனைகளை இடம் மாற்றியிருந்தார்கள்.

   அவர்களின் அடுத்த இலக்கு மனிதர்களை இடம் மாற்றி பார்க்க வேண்டும்.அதுக்கு இவர்களின் மற்றொரு குடுவை அதாவது ஜினோம் தகவல்களை வைத்து உயிர்களை உருவாக்கும் குடுவை மற்ற இடங்களில் இருப்பது அவசியம்.

   அதற்கு வைத்தி பெரும்முயற்சி எடுத்து சில முக்கியமான இடங்களில் அந்த குடுவையை இதில் தேர்ச்சி பெற்றவர்களோடு நிறுவியிருந்தார்.ஆனால் யாரும் இதை நம்பி வரவில்லை என்னதான் விளம்பரம் அதிகமாக செய்து இருந்தும்.

   பல மாதங்கள் கடந்த நிலையில் ஒருவன் அதில் பயணிக்க வந்து இருந்தான்.வைத்திக்கு நம்பிக்கையில்லை இதன் முறைகளை பற்றி கேட்ட பிறகு யாருமே சம்மதிப்பதில்லை என்பது அவரது கவலை.வந்தவனிடம்..

   “எங்கு போக வேண்டும் என்று சொன்னால் அங்கு எங்கு கிளை இருக்கிறதா என உறுதிசெய முடியும் என்றார்

“கோவில்பட்டிக்கு போகணும் எவவளவு நேரம் ஆகும்?

    “கிளை இருக்கு அதிக பட்சம் 4 நிமிடம். அதற்குமுன் இந்த முறை பற்றி சொல்லிவிடுகிறேன். இது முதலில் லேசர் ஒளிகற்றையின் மூலம் உங்களின் ஜினோமை படிப்போம்,அப்ப்போது உங்களின் முழு உடலும் அழிந்து விடும் அதாவது லேசர் உங்களை உருக்கி ஜினோமை படித்து அதை கோர்வையாக எங்களுக்கு கொடுக்கும். நாங்கள் வேற ஊரில் இருக்கிற மற்றொரு குடுவையின் மூலம் உங்களின் ஜினோம் தகவலை வைத்து மீண்டும்  உருவாக்குவோம்.

“இதுதான் உங்க முறையா என்ன?

“ஏன் உங்களுக்கு ஏற்க்கனவே தெரியுமா என்ன? என்றார்

   "ம்ம் தெரியும் எங்க ஊருக்காரர் கணேஷ் ஏற்க்கனவே இதைப்பற்றி விடை என்ற கதை  எழுதியிருந்தார் படித்திருக்கிறேன்.ஆனால் அப்போது அதை நம்பவில்லை அவருக்கு வேற வேலையில்லை என நினைத்தேன்.ஆனால் இன்று அவரது கற்ப்பனை உணமையாயிருக்கிறது சந்தோசம். சரி எனது பயணத்தை தொடங்கலாமா...இதை போய் கணேஷிடம் சொல்லணும். என்றான் வந்தவன்

   வைத்திக்கு கணேஷ் யரேன்று தெரியாததால் கொஞ்சம் குழப்பத்தோடு அவனை அந்த குடுவைக்குள் நிற்க செய்துவிட்டு,கோவில்பட்டியில் உள்ள கிளைக்கு தொடர்புகொண்டு இந்த பயண விபரத்தை சொல்ல அங்கும் குடுவை தயாராய் இருக்க இயக்கத்தை ஆரம்பித்தார். அடுத்த ஒரு நிமிடத்தில் அவனது ஜினோம் படிக்கபட்டு கணினியில் வர அதை புனி கோவில்பட்டிக்கு அனுப்பினாள்.

    அங்கு இருந்த குடுவையில் அவன் உருவாகிக்கொண்டு இருக்க வைத்தி அலைபேசி இணைப்பில் நிலைமையை சோதித்து கொண்டிருந்தார்.முழுஉடல் சேர்ந்தாயிற்று என்பதை கேட்டவுடன் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டபடி இருக்கையில் அமர..

   கடைசியாக சில  தவறுகள் காட்டுவதாக மறுமுனையில் உள்ளவன் சொல்ல வைத்திக்கு பயம்.

“என்ன தவறு வருவதை படி  என்றார்

HEART -00000001-MISS-PASSWORD INCORRECTஇந்த தப்புதான் வருகின்றது என்றான்.

   இதை புனியிடம் காட்டி என்ன தவறு என்று பார்க்க சொல்ல அவளும் பயத்துடன் வேகமாக பார்த்தாள்.தவறு புரிந்தது.

   “இதயத்தின் எல்லா செல்களும்,தகவல்களும் சரியாக போய் இருக்கு ஆனால் அதுக்கு இயக்கத்துக்கான ஒரே ஒரு தகவல்மட்டும் இல்லை.ஆச்சர்யம் அது இயங்க PASSWORD கேட்குது.இந்த மாதிரி ஒரு முறையை நாம் பதியவே இல்லையே நமது முறையில்? கேட்டாள் புனி

“பூனைக்கு எல்லாம் இதுமாதிரி கேட்கவில்லையே? என்றார்வைத்தி

  “ஆமாம் அதான் எனக்கு புரியவில்லை என்று சொனபடி குழப்பமாக யோசித்து கொண்டிருந்த வைத்தியை பார்த்தாள்.

“எனக்கு புரிஞ்சி போச்சி அந்த PASSWORD யாருடையதுன்னு

  “யாருடையது ஏதவது மூன்றாவது மனிதர்கள் குழப்பம் செய்கிறார்களா என்ன? என்றாள்

   இல்லை அது கடவுளின் PASSWORD..அதுதான் உயரின் ரகசியம்..அது அவருக்கு மட்டும் தெரிந்த ஒன்று.அதான் அது துடிக்க மறுக்கின்றது. என்றார்

என்...


   இப்போதைய கண்டுபிடிப்பு தொழிநுட்ப சிக்கல் நிறைந்தது என்பதால் அதை பெரியதாக விளம்பர படுத்தாமல் ஆய்வுகூடத்திலேயே வைத்து இருந்தேன். மனநிறைவுக்காக அது சம்பந்தாமான சில விவரங்களுடன் வெளியில் ஒரு பலகை வைத்தேன்

   நான் நினைத்தது போல அதை வைத்ததில் இருந்தது யாருமே நம்பி வரவில்லை.இது எனக்கு ஒன்றும் புதிதும் இல்லை என்பதால் எனது அடுத்த முயற்சியான மனிதனை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஒளி வேகத்தில் இடமாற்றுவது  சம்பந்தாமான ஆராய்ச்சியை தொடங்கியிருந்தேன்.

   அன்று மதியத்திற்கு பிறகு ஒரு பெண் தயங்கி தயங்கி உள்ளே எட்டிபார்ப்பது போல இருக்க யாராவது நமது இயந்திரத்தை வேடிக்கை பார்ப்பார்கள் என்று கண்டுகொள்ளவில்லை.அடுத்த சில சில நிமிடத்தில் அவள் என எதிரில் இருந்தாள்.

ஏதும் பேசவில்லை கண்கொட்டாமல் பார்த்துகொண்டு இருந்தவளை..

“நீங்கள் யார் என்ன வேண்டும்?கேட்டேன்

“என்னை யாரென்று தெரியவில்லையா?

   அப்போதையா நிலையில் சட்டென்று எதையும் நினைவுக்கு கண்டுவர முடியாததால்..

“இல்லை எனக்கு தெரியலயே என்றேன்

   “சரி விடுங்க எனக்கு உங்க உதவி வேண்டும். வெளியில் விளம்பர பலகை பார்த்தேன். உதவி கிடைக்குமா?

“கண்டிப்பாக. எப்போ நீங்க தயார்?

“ஏன் இப்பயேதான் என்றாள்

   “சரி அதுக்கு முன்னாடி இதை பற்றி கொஞ்சம் விளக்கமாக சொல்லிவிடுகிறேன் அதுக்கு பிறகு உங்கள் முடிவை சொன்னல் போதும்

  “எப்படினாலும் நான் இதை செய்துதான் ஆகவேண்டும்.இருந்தாலும் நீங்கள் சொல்வதை சொல்லுங்கள் என்றாள் அவளிடத்தில் எந்த ஒரு பயமோ கவலையோ இல்லை தான் செய்யபோவதை எண்ணி.

  “ம்ம் சரி..இது ஒரு கால இயந்திரம் மாதிரி. மனிதன் தனது கடந்த காலத்தில் செய்த மிகப்பெரிய தவறுகளுக்கு இப்போது மனம் வருந்தினலோ,அதக்குரிய பலனை அனுபவித்து கொண்டு இருந்தாலோ அதை இந்த இயந்திரத்தில் இறந்த காலத்திற்கு பயணம் செய்து செய்த தவறை திருத்திகொள்ளலாம்.

   “பயண காலம் எவ்வளவு? அதிகபட்சமாக எத்தனை நாள்கள இறந்த காலத்தில் இருக்கலாம்?

   “ஒளிவேக பயணம் என்பதால் பயண நேரம் மிக குறைவு.அதே மாதிரி பயணிப்பவரின் விருப்பத்தை பொருத்து எத்தனை நாள்கள் வேணுமானாலும் இருக்கலாம்.என்றேன்

“சரி எப்ப நான் கிளம்பணும்?” கேட்டாள்

   “உங்களுக்கு ஏதும் பயம் இல்லையா?ஒளிவேக பயணம். தவறு நேர்ந்தால் அடுத்த விநாடி காற்றில் கலக்க நேரிடும்

“எனக்கு உங்களின் மீது நம்பிக்கை இருக்கிறதுஎன்றாள்

இந்த பதில் மிக ஆச்சர்யமாக இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல்..

   “அதேநேரம் இந்த இயந்திரம் உங்களை விருப்பமான இடத்தில் இறக்கிவிட்டுவிட்டு என்னிடம் வந்துவிடும். நீங்கள் என்னை மட்டும் தொடர்புகொள்ள ஒரு சிறப்பு சாதனம் கொடுப்பேன் உங்கள் வேலை முடிந்தவுடன் என்னை தொடர்புகொண்டால் அடுத்த சில நிமிடங்களில் உங்களை இயந்திரம் அழைக்கவரும் என்றேன்

“சரி என்று தலையாட்டிவிட்டு கிளம்பட்டுமா?” என்றாள்

   இதுவும் எனக்கு ஆச்சர்யம்தான் இப்படியும் இரு தைரியாமான பெண்ணா என்று நினைக்க தோன்றினாலும் அவளுக்கு என்ன ஆகுமோ என்ற பயம் எனக்குள் இருந்தது. எதாவது தொழிநுட்ப பிரச்சினை என்றால் அவள உயிர் அவளுக்கு இல்லை. யோசித்து கொண்டே இயந்திரத்தை தயார் செய்தேன். அவள் ஆர்வமாக நான் செய்வதை வேடிக்கை பார்த்துகொண்டு இருந்தாள்.

   கிளம்புவதுக்கு முன் சில நிமிடம் என்னையே பார்த்து கொண்டு இருந்துவிட்டு  இருக்கையில் அமர்ந்தாள் வந்ததில் இருந்து அவளின் நடவடிக்கைகள் ஒன்றும் புரிந்துகொள்ளமுடியாதபடி செய்யும் செயலுக்கு பின்னாடி எதோ ஓர் காரணம் இருப்பதாக தோன்றியது ஒருகட்டத்தில் இறந்த காலத்தில் சென்று என்ன செய்ய போகின்றீர்கள் என்று கேட்க நினைத்து வேண்டாமென்று விட்டேன்.

  அந்த இயந்திரம் இயக்கத்துக்கு வந்து எம்பி பறந்து கண்ணில் இருந்து மறைந்தது. அதன் இயக்கம் சரியாக இருக்கிறதா என்பதை கணினியில் சரிபார்க்க அத சரியாக அவளின் விருப்பமான இருப்பிடத்தில் சென்று இறக்கிவிட்டுவிட்டு கிளம்பிவர தயராக இருந்தது.இது எல்லாம் நடந்து முடிக்க  மூன்று நிமிடங்கள் முடிந்து இருந்தன.

   ஒருபுறத்தில் எனது முயற்சி வெற்றியடைந்த சந்தோசம் இருந்தாலும் அவளுக்கு ஏதும் ஆகிவிடுமோ என்ற கவலைவேறு.எல்லாமே எதுவுமே யோசிக்காமல் நடந்தது போல இருந்தது. அவள் வந்தவுடன் பயணிக்க சம்மதித்தது எல்லாம் நான் நினைத்து பார்க்காதது. அப்படியே இரண்டு நாள்கள் கழிந்து இருக்க வாசலில் தாபால்காரன் ஒரு கடிதத்தை வீசி செல்ல எடுத்து படித்தேன்....தலை சுற்றாத குறை அதை அப்படியே கொடுக்கிறேன்.....

கணேஷ்...

   உன் பெயர் எப்படி தெரியும் என்ற ஆச்சர்யபட்டால், நீ என முகத்தை மறந்தது அதைவிட எனக்கு ஆச்சர்யம்.

  நன்கு வருடங்களுக்கு முன் சென்னையில் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்தபோது என்ன காரணம் என்றே தெரியாமல் உன்னை பிடித்து போக என்னையறியாமல் உன்னை காதலிக்க ஆரம்பித்து ஆனால் கடைசிவரை சொல்லாமல் சொல்ல தைரியம் இல்லாமல் இப்போது இந்த மரண போராட்டத்துக்கு எனக்கு தைரியம் வந்து இருக்கிறது.

  தவறு என்னிடம் மட்டும் இல்லை கணேஷ்.நான் எத்தனையோ முறை குறிப்பால் உணர்த்தியும் நீதான் புரிந்து கொள்ளவில்லை.

  பலமுறை மதிய உணவுக்கு நான் கொண்டு வந்த உணவை இரண்டாக பங்கிட்டு சாபிடுபோதாவது நான் சொல்லியிருக்கலாம்...

  இல்லை ஆயுதபூஜை அன்று நான் உடுத்தி வந்த புது பட்டுபுடவை பற்றி நான் எப்படி இருக்கிறது என்று கேட்டும் நீ பதில் சொல்லாம் சென்றதுக்கு நான் விசும்பளோடு உன் கண்முன்னாடியே அழுதபோதாவது நீ உணந்து இருக்கலாம்.

  தினம் காலையில் ஆயிரம் வேலைகள் இருந்தும் உன் வருகைக்கு காத்து இருந்து உன்னிடம் சில  வார்த்தைகள் பேசிய பிறகே நான் வேலையை பார்க்க சென்றது என நிறையா சொல்ல இருந்தாலும் அதை சொல்லுவதால் இப்போது ஓரு பயனும் இல்லை..இவ்வளவு செய்தவள் வாய் திறந்து உன்னை காதலிக்கிறேன் என்று சொல்லியிருக்கலாம்தான்.


   இதோ எனக்கு கிடைத்த இறுதி வாய்ப்பு உனக்காக காத்து இருந்த இந்த நான்கு வருடங்களில் நான் அதிகம் யோசித்தது உன்னை எப்படி சந்திப்பது, என காதலை எப்படி சொல்வது என்பதுதான் இதோ அந்த வாய்ப்பு.


   நான் உன் இயந்திரம் இறக்கி விட்ட இடத்தில் இருந்து எங்கும் செல்லவில்லை. நான் திரும்பி வருவதுக்கான செய்தியை உனக்கு ஒருபோதும் ன் நானாக அனுப்ப போவதுமில்லை...


   நீ என் காதலை புரிந்து ஏற்றுகொண்டால் எப்போது வேண்டுமானாலும் அந்த இயதிரந்தை என்னிடம் அனுப்பு நான் வரத்தயார். இல்லையென்றால் விடு நான் உன் பழைய இனிய நினைவுகளோடு இந்த காலத்திலயே இருந்து விடுகிறேன்.


  உன்னிடம் இருந்து வேறெந்த பதிலையும் இப்போதைக்கு எதிர்பார்க்கவில்லை...


  முதலியே அவளை அடையாளம் கண்டு கொண்டு இருந்தால் இந்த பயணத்தை தடுத்து இருக்கலாம். என் தவறு. அதோடு நான்கு வருட மாற்றம் அவளை வெகுவாக மாற்றியிருந்தது.


  அருமையான பெண். அவளோடு பழகிய நாட்களை பலமுறை வாழ்கையில் இனிமையான தருனங்களாக நினைத்துபார்ததுண்டு. காதல் என்ற இடம் கொடுக்கவில்லையே தவிர என் மனதுக்குள் உயர்வாய் இருந்தவள்.


  கண்டிப்பாக அவளின் காதலை மறுப்பதில் அர்த்தம் இல்லைஎன்பதால் அந்த இயந்திரம் திரும்பி செல்வதற்க்கான கட்டளையை பிறப்பித்தேன். கிளம்பி சென்றது


  சென்ற நேரத்தில் இருந்து நான் ஒவ்வொரு நிமிடத்தையும் எண்ண தொடங்கியிருதேன்....

1..

2.......

3........... 



காதலிப்போமே...


   எங்களின் சந்திப்புகளை சுகமாக்கும் அதே ஆற்றில் நான் மணலை கூட்டி அதில் தலை வைத்து படுத்து இருக்க அவள் அருகில் உட்கார்ந்து இருந்தாள்.மாலை இருள்சூழ அந்நேரத்துக்கான காற்று வேகமாக வீசி தூரத்தில் விளையாடிகொண்டிருந்த சிறுவர்களின் சத்தத்தை இழுத்துவந்து போகிற வழியில் அவளின் கூந்தளையும் கலைத்துவிட்டு செல்ல அதை கையால் விளக்கிவிட்டுகொண்டே மணலில் எதையோ எழுதி மீண்டும் அதை  அழித்துக்கொண்டு இருந்தாள். 

“கணேஷ்

“என்ன?

  “எதாவது பேசேன் இப்படி எவ்வளவு நேரம்தான் சும்மா உட்கார்ந்து இருக்க? என்றாள்

“பேச ஒன்னும் இல்லை வார்த்தைகள் எல்லாம் காலியாகிவிட்ட மாதிரி இருக்கு

“போச்சு அப்படின்னா இனிமேல் பேசவே மாட்டியா என்ன?
“அப்படியில்லை இப்போதைக்கு ஏதும் இல்லை

“சரி நான் அப்ப போறேன் நீ இருந்துட்டு வா சரியா?என்றாள்


“போகாதே உன்னோடு இருக்கணும்என்றேன்


“அப்ப எதாவது பேசித்தொலை


  நான் வானம் நோக்கி என்ன பேச இவளிடம் என்று  இருக்க வளர்பிறை நிலவு அழகாய் கொஞ்சம் மங்கலாய் இருந்தது...
“உன்னுடன் இருக்கையிலே அந்த நிலவுக்கும் சிறகுகள் முளைக்கிறதேஇதுவரை நான் பார்த்த நிலவா இத்தனை வெளிச்சம் கொடுத்த நிலவா.."இந்த பாடல் வரி இப்ப உண்மையா இருக்கு தெரியுமா? என்றேன்



  “அட நீயா பேசுறது காதல் எல்லாம் ஹோர்மோன் வேலை,அபத்தம் சொல்லிட்டு இப்ப இப்படி வளியிரே என்றாள் சிரித்துக்கொண்டே


   “காதலில் ஒருநிலை வரைக்கும் ஹார்மோன்களின் வேலையும், அபத்தமானதுமாகத்தான் இருக்கும். பெரும்பாலான காதல் இதுலே முடிஞ்சு போய்விடுவதுதான் உண்மை என்றேன்


  “என்ன புதுகதை சொல்றே. அப்படின்னா நம்ம காதல்ல இந்த அபத்த நிலை எது நல்ல நிலை எது?


   “உன்னைகாதலிப்பதே வாழ்க்கையில் பெரிதாக எண்ணியது, உன் பார்வைக்கு ஏங்கியது, கோயில் ,குழாயடி என உண் பின்னாடி சுற்றியது,உன்னை நினைத்து கற்பனை உலகில் சுழன்றது,எப்போதும் உன்கூடவே பேசிகிட்டு இருக்கணும் நினைக்கிறது இந்த மாதிரி நிறையா சொல்லாம் என்றேன்


   “அடப்பாவி நீ இதுவரைக்கும் செய்ததை எல்லாம் அப்த்தம்னு சொல்லிட்டே, பின்னே எப்பதான் காதலிக்க ஆரம்பிச்சே?


  “உண்மைக்கும் இதுவரை இல்லை அதுக்குத்தான் முயற்சிக்கிறேன் என்றேன்


   இதை சொன்னதும் சட்டென்று என்பக்கம் திரும்பி உட்கார்ந்து “நீ கதை எழுதுற மாதிரியே பேசாம கொஞ்சம் புரியுற மாதிரி பேசு கணேஷ். நீ சொல்வதை பார்த்தா ஒரு கட்டத்தில் நாம இதுவரை பண்ணியது காதல் இல்லை ஹோர்மொனின் வேலை அதனால மறப்போம் பிரிவோம் சொல்லுவியோன்னு பயமா இருக்கு. நான் உன்னை அதிகமா உணமையா காதலிக்கிறேன் அப்படி செஞ்சிரதே கணேஷ் என்றாள்


“நான் அந்த அர்த்தத்தில் சொல்ல வரலை


“பின்னே?


   “இந்த மாதிரியான செயல்கள் எல்லாம் காதல் என்ற பெயரில் செய்கின்ற வேற வேலைகள். என்னை பொருத்தவரை உண்மைகாதல் தொடக்கத்தில் தெரியவே வாய்ப்பில்லை என்றேன்


   “பின்னே எப்பதான் தெரியும்? அப்படின்னா நான் உன்னை உண்மையா காதலிக்கலைன்னு சொல்ல வாரியா?


  “நீ எதுக்கு நம்ம காதலையே காரணம் காட்டுறே? நான் பொதுவா சொல்றேன் என்றேன்


“சரி சொல்லு உண்மைகாதல் எப்போ தெரியும்? தொடக்கத்தில் தெரியாம?


  “காதலித்து முழு வாழ்க்கையையும் கடந்து நிரந்தரமாய் ஒருவரையொருவர் உலகத்தை விட்டு பிரியும்போது


  “அப்படின்னா காதல்ங்கிற பேருல தொடக்கத்துல செய்யுறது எல்லாம் காதல இல்லை அபத்தம்னு சொல்றியா?


   “ஆமாம், அதையே சிலர் காதல்னு நினச்சு வாழ்க்கையை தொடங்கி வாழ்றதுதான் காதலில் பிரச்சினைக்கு காரணம்.


   “ம்ம சரி இப்ப புரியுது. இப்போதைக்கு என காதல் உண்மையானது அப்படின்னு நிரூபிக்க முடியாவிட்டாலும் கண்டிப்பா நீ சொன்ன முறையில் நிரூபிப்பேன் கணேஷ் என்றாள்


   “அதைத்தான் நானும் செய்ய முயற்சிக்க போறேன்னு உன்கிட்ட முதல்ல சொன்னேன்


   “சரி அப்ப ரெண்டு பேரும் சேர்ந்தே செய்யலாம் என்றாள் லேசாய் சிரித்துகொண்டே.


  அதுக்கு பிறகு ஏதும் பேசவில்லை. அதிகமாக இருள்சூழ தொடங்க காற்று மட்டும் எங்களின் மௌனத்தின் இடைவெளியில் சென்று கொண்டிருந்தது.  
   

எங்கே?



கணேஷ் எங்கே?
 
  சத்தம் வெளியில் இருந்து வந்தவுடன் அடுப்பாங்கூடத்தில் வேலை பார்த்துகொண்டு இருந்த அவனின் அம்மா யாரென்று எட்டிப்பார்த்து, அவள் இருப்பதை பார்த்தவுடன்..

ஏன் வெளியில் நிக்கிறே உள்ளே வாஎன்றார்

  அவருக்கு தெரியும் அவள் எதுக்கு கணேஷை தேடிவந்து இறுக்கிறாள் என்று.அவனும்,அவளும் நெருங்கி பழகுவது தெரிந்தும். ஏதும் வெளியில் காட்டிகொள்லாமல் காதலை கண்டுகொள்ளதாவாருதான் இருந்தார்.அவள் நல்ல பெண். அவருக்கு மிக பிடிதவள்கூட..

 “எங்கே பார்த்து ரெம்ப நாள் ஆச்சு எங்கே போயிருக்கான்னு உங்களுக்கு தெரியாத?

  “எங்கம்மா, அவன் எதையும் எனக்கு சொல்லிட்டா செய்றான். வீட்டுக்கு பின்னாடி ஆய்வுக்கூடம்னு ஒன்னை கட்டி அதுலதான் எப்ப பார்த்தாலும் அடைஞ்சி இருக்கான்.எதோ பன்றான்.

“ஏன் நீங்க கேட்க மாட்டிங்களா?

  “கேட்டாலும் அவன் சொல்றது எங்கே புரியுது எனக்கு. கொஞ்ச நாளைக்கு முன்னடி ஆய்வுகூடத்தில இருந்து ஒரு பொண்ணு குரல் கேட்டு போய் பார்த்தா ஒரு இரும்பு பொம்மை மாதிரி ஒன்னுகூட தனியா பேசிக்கிட்டு இருக்கான் அதுவும் பேசுது, இவனை அடிக்குது என்னமோ பண்ணுது.

“என்ன பொம்மை அது?

  “கேட்டேன் அது பேரு ரோமியாம்  ஒரு ரோபோட் ன்னு சொன்னான் வேற எதுவும் சொல்லலை.

“இப்ப எங்கதான் இருக்கான்னு தெரியுமா கேட்டாள்

  “தெரியாது போன மாசம் முழுதும் எதோ ஒரு வட்டமா பெருசா ஒன்னை பொருத்திக்கிட்டு இருந்தான். நான் எதும் கேட்டு வைக்கலை

  “சரி அங்கு போய் பார்க்கிறேன் என்று சொன்னவள் ஆய்வுக்கூடம் நோக்கி போனாள்.

  கதவு திறந்து இருத்தது கணினி உயிர்பெற்று இருக்க திரையில் சில எண்கள் இறங்கு வரிசையில் குறைந்து கொண்டே வந்தது. சற்று தள்ளி ரோமி தனக்கு உண்டான இடத்தில பின் முதுகு காட்டி நின்று இருந்தது.ஒரு புற சுவற்றில் ஐன்ஸ்டீனும், மறுபுறத்தில் சுஜாதாவும் சிரித்து கொண்டு இருந்தார்கள்.

  இவள் வரும் சத்தம் கேட்டவுடன் ரோமி இயந்திரத்தனமாக திரும்பி பார்த்து விட்டு மீண்டும் தனது பழைய நிலைக்கு சென்றது எதுமே பார்க்கதா மாதிரி.அவளுக்கு ஆச்சர்யம் அப்போதைக்கு ஒன்றும் செய்யாமல் அவனுடைய அறையில் எங்கு போய் இருக்கிறான் என்ற தகவல் கிடைகிறாதா என்று தேடினாள்.
  
   மேசையில் நிறையா வரைபடங்கள் சிதறிக்கிடந்தன.பார்த்தாள் எல்லாம் ஒரு விண்கலத்துக்கான வரைபடங்கள். பக்கத்தில் இருந்த குறிப்பேட்டில் ஒரு கிரகத்தை பற்றி அவன் தொடக்கத்தில் இருந்து எடுத்த குறிப்புகள் இருந்தன.அதன் கடைசி பகுதியில் அவனுடைய அந்த கிரகத்துக்கான பயண விவரங்கள் இருந்தன.

  அவளுக்கு புரிந்து இருந்தது.  எங்கே போய் இருக்கிறான் என்று.கொஞ்சம் பயம் அவளுக்குள். ஏன் இவன் இப்படி செய்கிறான்? என்று. எல்லாம் அவன் மீது கொண்ட காதல். கோபம அக்கறை ஒன்று கலந்து சோகத்துக்கு தள்ளியது.

  அவன் தாயரித்த பேசும் ரோபோட் பற்றி நினவுக்கு வர எதுவும் அதுக்கு தெரிந்து இருக்கலாம் என்ற நம்பிக்கையில் ரோமியின் அருகில் சென்று .

“கணேஷ் எங்கே போய் இருக்கிறான் தெரியுமா?

  அது தலையை மட்டும் திருப்பி பார்த்து விட்டு எதுவும் பதில் சொல்லாமல் திரும்பி கொண்டது.

  ஓய் உன்னைத்தான் கேட்குறேன் என்றாள் மீண்டும் ரோமியிடம்..அது முன்னர் செய்ததையே இப்போதும் செய்ததது.

   கணேஷ் ரோமியை அவனுடைய சத்தத்திற்கு ஏற்ப இயங்கும்படியே அமைத்து இருந்தான். மற்ற சப்தங்கள் அதனால் உணர முடிந்தாலும் மூல கட்டளைகள் கணேஷின் சபதத்தில்தான் இருந்தாக வேண்டும்.இது ரோமிக்கு பொருத்தப்பட்ட sound synthesizer ல் செய்தவேலை. மற்றவர்கள் என்ன செய்தாலும் ரோமியை கட்டுப்படுத்த முடியாது. 

  கணினி திரையில் குறைந்து கொண்டு வந்த எண் இப்போது பத்துக்கு அருகில் வந்து இருந்தது..அது சரியாக 00 என்று வரும்போது வெளியில் பெரிய சப்பதத்துடன் ஒரு வட்டவடிவ விண்கலம் தூசுகளை கிளப்பியபடி இறங்கியது. சிறிது நேரத்தில் கணேஷ் இறங்கி வந்தான்.

அவளை அந்த இடத்தில பார்த்தவுடன் கொஞ்சம் ஆச்சர்யம் கலந்த பயத்தில் ..

“ நீ இங்கே என்ன பண்றே?

   “உன்னை தேடித்தான் வந்தேன், சரி இப்ப எங்கே போயிட்டு வார அந்த வேற்று கிரகத்துக்கா?

“அது எப்படி உனக்கு தெரியும்?

“உன் குறிப்பில் பார்த்தேன்

   “ஆமாம் நான் அங்குதான் போயிட்டு வந்தேன் என்று சொல்லிகொண்டே உள்ளே வரும்போது ரோமி திரும்பி அவனை நோக்கி ஓடிவந்தது. இதை பார்த்த அவளுக்கு புரிந்தது இப்போது, அது கணேஷின் குரலுக்கு மட்டும்தான் இயங்கும் என்று.

  “கணேஷ் வந்துட்டியா நீ இல்லாம எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? பிராயணம் எப்படி இருந்திச்சி? என்றது ரோமி.

   அவள் ரோமி இப்படி ஆசை ஆர்வமாக கேட்பதை ஆச்சர்யமாக பார்த்துகொண்டே..

“கணேஷ் இது என்ன? எதுக்கு உன்மேல இவ்வளவு அதிக ஆர்வம்?

   “அது சும்மா அப்புறம் சொல்றேன் சரி நீ வந்தது அம்மாவுக்கு தெரியுமா என்ன? என்றான்

“ம்ம தெரியும் என்றாள்

   அதுக்குள் ரோமி “ கணேஷ் நான் நேத்துதான் self lubricating பண்ணேன் நீ சொன்ன மாதிரி உதட்டு பகுதிக்கு கம்மியாத்தான் பண்ணியிருக்கேன் பாரேன் என்று அவனுக்கு நெருக்கமாக சென்று உதட்டை சுளித்து காட்டியது

“கணேஷ் இது என்ன இப்படி பண்ணுது..நீ சும்மா இருக்கே? என்றாள்

“அது சும்மா விளையாட்டுக்கு அப்படித்தான் என்றான்.

   “என்னமோ எனக்கு சரியா படலை உன் நடவடிக்கைகள் பார்த்துக்கோ என்றாள்

   “சரி அதை விடு நான் இப்ப போன கிரகத்துல ஒரு அதிசயம் என்ன தெரியுமா? என்று அவளின் மனநிலையை மாற்ற முயற்சித்தான்

“என்ன சொல்லு என்றாள்

   “அங்கு வெறும் பெண்கள் மட்டும்தான்..ஆண்களே இல்லை..பெண்களின் கிரகம்
 
“பொய் சொல்லாதே இது எப்படி சாத்தியம்

“நானும் நம்பலை முதலில் ஆனா பார்த்து ஆராச்சி செஞ்சிட்டு வரேன் ஆணே இல்லை

“பின்னே எப்படி இனபெருக்கம் எல்லாம்? என்றாள்

“எல்லாம் வித்தியாசமான முறை அப்புறம் சொல்றேன்

   “அதுசரி அங்கு வெறும் பெண்கள் மட்டும் இருந்தால் நீ எப்படி திரும்பி வந்து இருப்பே அதை சொல்லு முதல்ல

  “எத்தனை பெண்கள் இருந்தால் என்ன, உன்னை பார்க்காமல் என்னால் இருக்க முடியலை அதான் வந்துட்டேன்

“பொய் சொல்லாதே உண்மையை சொல்லு

“ஏன் நீ மட்டும்தான் என்னை உயிருக்கு உயிரா காதலிக்கனுமா என்ன?

“உண்மையா கணேஷ்" என்ற அவளது குரலில் தாழ்வு இருந்தது

“ஆமாம் நம்பு உன்னை ரெம்ப காதலிக்கிறேன் என்றான்

  அவள் அருகில் வந்தால் கண்களில் காதலுடன். அடுத்து என்ன நடக்கும் என்று அவனுக்கு தெரியும் என்பதால் ரோமியை அந்த பக்கம் திரும்ப சொன்னான். அது பார்த்தால் கோபப்படும், கேள்வி கேட்கும் என்பதால்.திரும்பியது.

  இன்னும் நெருக்கமாக வந்து இருந்தாள்....அவன் போன அந்த கிரகதுக்குள் அங்கு இருந்தவர்கள் உள்ளே நுழைய விடாமல் அடித்து துரத்தியதால் உடனே திரும்பவேண்டிய சூழல். ஆனால் அதை பொய்யாக மாற்றி சொன்னதுக்கான பரிசு இப்போது அவனுக்கு கிடைத்து இருந்தது. 



(இவ்வளவு நாள் காணமல் போனதுக்கு இந்த மாதிரி கதைவிட ஆசைதான்..ஆனால் உணமையான காரணம் சிறியதுதான்..இனி தொடர்ந்து எழுதுகிறேன்)))