தொடக்கமில்லாத முடிவுகள்..

                                                                   1

The messenger theory:

       John R Samuel  என்பவர் fifth annual conference on astronautics and communication பேசியதில் இருந்து ...

        மற்ற கிரகத்தில் உயிர்கள இருக்கிறதா என்பதை அறிய நம்மிடம் இருக்கும் தொழிநுட்பம் மிக குறைந்தது. மற்ற தூரகிரகங்களை  அலசிப்பார்க்க இன்னும் நாம் வளரவேண்டும் அல்லது சில வித்தியாசமான முறைகளை முயற்சிக்க வேண்டும்.

       அதோடு மொத்தம் இரண்டு வழிகளே  இருக்கிறது ஒன்று நாமே அவர்களை தேடிப்போவது அல்லது அவர்களே இதோ நாங்கள்  இங்கு இருக்கிறோம் வந்து பாருங்கள் என்று சொன்னால் ஒழிய வேற்றுகிரகவாசிகளின் இருப்பிடம் நமக்கோ அல்லது நமது இருப்பிடம் அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

       சரி இப்போதைய நிலையில் நம்மிடம் இருக்கும் அறிவியல் வளர்ச்சியில்  இருக்கும் சில வசதிகளை வைத்து முடியுமா என்று பார்த்தால்  Radio வைத்து? வாய்ப்பு  இல்லை, மிகவும் நேரம் எடுக்கும், செலவு அதிகமானதும் கூட . Tv வைத்து? இது radio வை விட சக்தி இழந்தது. இருக்கிற ஒரே வாய்ப்பு என்று பார்த்தல் அது ஒளி   மட்டுமே. இதையும் வெகுதூரம்  சென்று திரும்புமாறு உருவாக்குவது  மிக கடினம். அப்படியே உருவாக்கி விட்டாலும் இடையில் இருக்கும் பெரிய நட்சத்திரங்கள், வெளியில் இருக்கும் radiation   போன்றவற்றை கடந்து சென்று  திரும்பும் அளவுக்கு செய்வது மிக கடினமே.

      ஆக  இயற்பியலில் இருக்கிற சாத்தியக்கூறுகள் வெகுதுரம் சென்று தகவலை பெற்றுவரும் தகுதி இல்லாத பட்சத்தில் அல்லது இன்னும் கண்டுபிடிக்கபடதா படசத்தில் ஏன் உயிரியல் முறையை பயன்படுத்தி பார்க்ககூடாது. இந்த முறையில் உருவாக்கப்படும் ஒன்றானது தூரம்  மற்ற காரணிகளால் பாதிக்கபடாமல் இருக்கவேண்டும் .

     அதாவது உருவாக்கப்படும் செயற்கை உயிரியானது self replicating, குறைந்த செலவு, குறிப்பிட்ட  எண்ணிக்கையில் உருவாக்கிய பின்னர் அதுவே தானாக பில்லியன் அளவில் வளரும் தன்மையுடையாத இருக்க வேண்டும். அதோடு விண்வெளியில் நிலவும் வெப்பம், மற்ற காரணிகளால் எந்தவிதத்திலும் அதன் வளர்ச்சி பாதிக்கபடாதவாறு   இருக்க வேண்டும்.

     அந்த மாதிரியான ஒரு உயிரியை உருவாக்கி  விண்வெளியில் பரவவிட்ட பிறகு அது பகுப்படைந்து சென்று கொண்டே இருக்கும், தொலைவு என்பது அதுக்கு இல்லை.  எப்போது அது ஒருகிரகத்தில் உயிரினம் வளர்வதுக்கு உண்டான சூழ்நிலை நிலவுகிறதோ அதுவரை அதன் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும். அப்படி வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் அங்கு அந்த உயிரினம் இன்னும் அதிகமாக பகுப்ப்டைந்து பல பில்லியன் செல்களாக அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு வளர்ந்து ஒரு முழுமையான மூளை  உள்ள ஒரு உயிரினம் வந்து அது அங்கு உள்ள நிலமையை அலசி ஆராய்ந்து புரிதலை தான்  செல் நிலையில் அனுப்பிய  இடத்தை நினைவில் கொண்டுவந்து அந்த இடத்தை பற்றிய தகவலை  அனுப்புமாறு இருக்கவேண்டும்.
                                                            
                                              2

        அந்த கிரகத்துக்கு இன்னும் பெயர் ஏதும் என்னால் வைக்கப்படவில்லை என்பதால் அதை இந்தக்கதை முழுதும்  வெறுமனே கிரகம் என்றே குறிப்பிடுவது உத்தமம். அந்த கிரகம் உருவான முறை , அதில் உயிரிகள் தோன்றியவிதம், அவற்றின் வளர்ச்சி, இனப்பெருக்க முறை இவைகளை தெளிவாக எழுத நினைத்தால் இந்த சிறுகதை ஒரு பெரிய நாவலாகவோ அல்லது அறிவியல் கட்டுரையாகவோ மாற வாய்ப்பு இருப்பதால் இந்த கதைக்கு தேவையானதை மட்டும் படிக்க கொடுக்கிறேன்.

       அந்த கிரகத்தில் உள்ள உயிரிகளுக்கு ஒருகால கட்டத்தில் முக்கிய பணியாக இருந்தது என்றால் தங்களை போலவே இன்னும் பிற கிரகத்தில் உயிர்கள் இருக்கிறதா என்பதை கண்டறிவதே. இதற்கு அவர்களுக்குள் பெரும் தொழிநுட்பபோட்டியே நடந்து கொண்டு இருந்தது. ஒவ்வொருவரும் வித்தியாசமான முறையை சோதனை செய்துகொண்டு இருந்தனர். எல்லா சோதனைகளும் பெரும்பாலும் ஒரே முடிவையே கொண்டு இருந்தன அது தோல்வி. கரணங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு மாதிரியாக இருந்தது.  

      பெரும்பாலும் ஒளியை வைத்தே சோதனை முயற்சி இருந்தது. பல்வேறு திசைகளில் பல்வேறு அதிர்வெண் அளவுகளை கொண்ட ஒளியை அனுப்பி மறு தகவலுக்கு காத்து இருந்தனர். அவர்களுக்கு இந்த மாதிரியான முறை பெரும்பாலும் தேறாது என்று தெரிந்து இருந்தாலும் கிடைக்கின்ற ஒரு சிறு வாய்ப்புகள்  இதன் மூலம்  கிடைக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தது.

     மற்றொரு முறையில் செயற்கையாக உருவாக்கப்பட்ட உயிரிகளை அதன் பகுப்படைதலை கட்டுக்குள்  கொண்டு வந்து அதனை ஒரு தொடர்ச்சியாக இருக்குமாறு அமைத்து அதனை விண்வெளியில் செலுத்தினர். எதிர்முனையில் ஏதாவது செய்திகள் கிடைத்தால் முதலில் இருக்கும் உயிர் அதன் தொடர்சியாக  இருக்கும் உயிர்களின் மூலம்  உடனே தகவலை அனுப்பும். அதாவது  ஒரு செல் உயிரி ஒன்று பகுப்படையும்போது அது ஒரு தொடர்ச்சியாக நீண்டு கொண்டே ஒன்றன்   பின் ஒன்றாக சங்கிலி போல சென்று கொண்டு  இருக்கும்.எப்படி பூனையின் வாலை  தொட்டால் அது தலையை திரும்பி பார்க்கிறதோ அதுமாதிரி முதலில் இருக்கும் உயிரி அங்கு எதாவது  தகவல் கிடைத்தாலோ அல்லது சூழ்நிலை உயிரிக்கு சாதகமாக இருந்தாலோ உடனே அதன் பின் இருக்கும் மற்ற செல்களின் தொடர்ச்சியின் வழியாக தகவலை அனுப்பும்.

        இதில் இருக்கும் ஒரு குறை  என்னவென்றால் சில   காரணங்களால் தொடரும் உயிரிகளுக்கு இடையில் ஏற்ப்படும் அழிவு தொடர்பை துண்டித்து அதனை வேறு திசையில் திருப்பி எங்கோ செல்ல வைத்ததுதான். ஒருமுறை இறந்த செல்களை நீக்கிவிட்டு தானாவே இணைத்துக்கொள்ளும் முறைக்கான விடை இதுவரை கிடைத்தபாடில்லை.

       இந்த சோதனையின் முடிவை   அடிப்படையாக வைத்து மற்றொரு குழு விசித்திரமான ஆய்வை சோதித்து பார்க்க முயன்றது.அதன்படி உருவாக்கிய செயற்கையாக செல்களை ஒரு தொடர்ச்சியாக இல்லாமல் அதிக எண்ணிக்கையில் உருவாக்கி அதனை அப்படியே பல்வேறு திசையில் இலக்கில்லாமல் பரவ விடுவது. அப்படி விடப்படும் நுண்ணுயிரிகள் எங்காவது தொடர்ந்து வாழ சூழ்நிலை இருந்தால் அங்கு தனது இனப்பெருக்கத்தை தொடர்ந்து பல் செல் உயிரியாக மாற்றி   எதோ ஒரு தருணத்தில் தன்னை தானே ஏன்?எதற்கு? எப்படி? யோசிக்கும் தருவாயில் இன்னும் அந்த இடத்தை அடையாத வெளியில் சுத்திகொண்டு இருக்கும் நுண்ணுயிரிகளை அடையாளம் கண்டு அது எங்கு இருந்து அனுப்பப்பட்டது என்ற தகவலை அறிவதன் முலம் தங்களை தொடர்புகொள்ளுமாறு அமைத்து இருந்தனர்.

       இது கிட்டத்தட்ட நம்பிக்கையான முறை இல்லை  என்றாலும் கூட  நடப்பதற்க்கான  சாத்திய கூறுகள்  அதிகமாகவே இருந்தன. அந்த சோதனையும் நிறைவேறியது.அதன்படி பில்லியன் உயிரிகள் விண்ணில் கலந்துவிடப்பட்டன். தகவலுக்கு காத்து இருக்கும் வேலை பாக்கி இருக்க   அதையும் செய்ய  தொடங்கி இருந்தார்கள்.

                                                                           3

     பூமிக்கு வேற்று கிரகத்தில் இருந்தோ அல்லது விண்வெளியில் வேறு எங்கு இருந்தோ  உயிர்கள் தோன்றுவதுக்கான மூலகூறுகள் வந்து இருக்கலாம் என்பதை திடமாக நம்பி அதன் மீது ஆராய்ச்சி  செய்கிறார்கள்.
    அதன் முன்னேற்றமாக சில நுண்ணியிரிகள் பல ஆண்டுகள் விண்ணில பயணிக்கும் தன்மை கொண்டவை என தெறிய வந்துள்ளது. இதை சோதனையாகவும் செய்து பார்த்து இருக்கிறார்கள்.
   இது சாத்தியமாகவே, விண்வெளிகளில் காணப்படும் தூசுகளின் வழியாக கூட இந்த மாதிரியான நுண்ணுயிரிகள் பூமிக்கு வந்து இருக்கலாம் என்பது அவர்களின் கருத்து. ஏனென்றால் இந்த வகை நுண்ணுயிரிகள் பிரச்சினை இல்லாமல் பல நூறு வருடம் விண்வெளியில் பயணிக்கும் தன்மை கொண்டவை என்கிறார்கள்.
   அப்படி என்றால் கண்டிப்பாக நாமெல்லாம் எங்கு இருந்தோ காற்றில் அடித்துவரப்பட்டவர்கள் என்பதுதான் உண்மை. காற்றில் வந்த தூசுகள் வேறு கிரகங்களின் மீது விழுந்து இருந்தாலும் அங்கு நிலவும் தட்ப வெட்ப சூழலில் பிழைத்து வாழ முடியாமல் போய் இருக்க கூடும.


                                                                         4

       சூரிய குடும்பத்தில் ஒரு கோள்,  அந்த ஒரு செல் உயிரி வளர்வதுக்கு தேவையான அனைத்து சூழ்நிலைகளையும் கொண்டு இருந்தது. அதிக பட்சமாக இருந்தது நீர்  பரப்பு என்பதால் விண்வெளியில் இருந்து வந்த நுண்ணுயிரிகள் அதன் அனுப்பிய வேலையை செய்ய ஆரம்பித்தது. ஆம் அதை அனுப்பிய கிரகத்தின்   வடிவமைப்புக்கு ஏற்ப ஒவ்வொரு படிநிலையாக தனது எண்ணிக்கையை பெருக்கிகொண்டே சென்றது.

      வெகுசீக்கிரம்  இல்லாவிட்டாலும் நீரில் உருவான அது கொஞ்சம் முயன்று நிலத்துக்கு வந்து தனது இருப்பை நிலவியது. தொடர்ந்த அதன் செல் பகுப்படைதலுக்கு  ஏற்றவாறு அதன் உருவ அமைப்பு,வாழும் முறை என எல்லா விதத்திலும்  மாற்றத்தை கண்டது.

       அதன் வகையில் சிலது சூழ்நிலைக்கு தாங்காமல் தனது இனத்தை பாதியிலியே அழித்துக்கொண்டது. இதெல்லாம் நடந்தது என்னமோ தற்ச்செயல்  போல தெரிந்தாலும்,  செல்லின்  உள்ளுக்குள்ளே எந்த கிரகத்தில் இருந்து முதல் செல்லை அனுப்பினார்களோ அவர்களின் வடிவமைப்பும்,கட்டளைகளுமே  அடிப்படையாக இருந்தன. ஆதாரமாக  இருந்த, இருக்கப்போகிற எல்லா உயிருகளுக்கும் செல்களின் அமைப்பும்,செயல்பாடுகளும் ஒரே மாதிரியே இருந்தன. எப்போது அதிக அளவிலான செல்களின்  வளர்ச்சி மாறியதோ அப்போது அவைகளுக்குள்   அதிகமான வேறுபாடுகள் தென்பட்டன.

       இப்படி தொடர்ந்த அதன் வளர்ச்சியில் அதை அனுப்பிய நோக்கத்துக்கான காலம் வந்தாதா  என்பது இன்றுவரை தெரியவில்லை. அதாவது  ஒரு செல் உயிரியாக அனுப்பிய கிரகத்தினை தொடர்பு கொள்ள விண்வெளியில்  இருக்கும் மற்ற நுண்ணுயிரிகளை ஆராயதொடர்ந்ததா என்பதுக்கான விடை இன்னும் கிடைக்கவில்லை, ஒருவேளை செய்து கொண்டு இருக்கலாம் அல்லது செய்ய இருக்கலாம்.

      ஆனால்  அவைகளுக்குள் ஒரு பெரிய மாற்றம் நடந்தது என்றால்..... ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பல் செல்களை கொண்ட இரண்டு உருவங்கள் சில சப்த்தங்களை பரிமாறிகொண்டன ..அவை
"உன் பெயர் என்ன?
"என் பெயர் ஆதாம்"
"உன் பெயர் என்னவாம்?"
"என் பெயர் ஏவாள் "

The messenger theory - the Andromeda strain என்ற நாவலில் இருந்து.