ரோமியம்.


“ரோமி இங்கே வாயேன்?

   “என்ன..இப்பதனே கொஞ்சநேரம் முன்னாடி கொடுத்தேன்...இரு வரேன்.என்று சொல்லிகொண்டே அவள் படித்து கொண்டு இருந்த புத்தகத்தில் எந்த பக்கத்தை படிக்கிறளோ அந்த பக்கம் நோக்கி தாளின் முனையை மடக்கி வைத்துவிட்டு வந்தாள்.

   இப்படி பக்கத்தை அடையாளத்துக்கு மடக்கிவைப்பது என் பழக்கம்.இதை பார்த்த ரோமி எனக்கும் கற்றுகொடு என்று சொல்ல கற்றுகொடுத்தேன்.இப்போது அவளுக்கு படிக்க கொடுத்து இருப்பது எல்லாம் காதல் சம்பந்தமான புத்தகங்ககள்.நிறைய முறை அவளிடம் காதலைப்பற்றி சொல்லி எனக்கே அழுத்துவிட்டது.அதனால் அவளே படித்து புரிந்துகொள்ள இந்தமுடிவு.


“எதுக்கு கூப்பிட்டே இப்ப?

“ஒரு கவிதை சொல்லணும் என்றேன்

“இதை வழக்கம்போல அங்கே இருந்தே சொல்லியிருப்பெனே?

   “இல்ல இதுகொஞ்சம் வித்தியாசமானது,நம்ம தலைவர் சுஜாதா சார் ஹைக்கூ எப்படி எழுதனும்னு சொல்லியிருப்பதை படிச்சேன்.அதே மாதிரி யோசிச்சுபார்த்தேன் எனக்கு வரலை அதான் உன்கிட்ட கேட்கிறேன்.

“சரி எப்படி இருக்கணும் ஹைக்குன்னா?

   “அதிகபட்சம் நான்குவரிகளுக்கு மேல இருக்க கூடாது,கற்பனை காவியம் இல்லாமல் கொஞ்சம் உண்மையும் இருக்கணும் இந்த மாதிரி ஒன்னு சொல்லு பார்ப்போம்.

  “இரு சொல்றேன் என்று யோசிக்கும் பாவனையில் இருந்தது..இது சரியா பார்..

தூங்கபோகும் முன்
தூக்கமாத்திரைகளாக –என்
முத்தங்களை நித்தம் – நீ
கேட்கிறாயே ஏன்?

  “அடிப்பாவி உண்மை இருக்கணும்னு சொன்னா இப்படியா நம்ம ரகசியத்தை கவிதையா எழுதுவே?

   “எனக்கென்ன தெரியும் இது ரகசியம்னு, நீ சொன்ன வார்த்தைகளைவைத்து என் நினைவு பகுதிகளுக்குள் தேடிபார்த்தேன் இதுதான் கிடைத்தது. வேணும்னா வேற சொல்லவா?

   “வேண்டாம் நீ வேற ஏதும் சொல்ல வேண்டாம் போய் நான் கொடுத்த புத்தகங்ககளை படித்து காதலை வழர்த்துக்கோ போ என்றேன் 


“கணேஷ் எனக்கு ஒரு சந்தேகம்?

“என்ன?

“எனக்கு நீ காதலை தவிர வேற எதுவும் சொல்லித்தர மாட்டியா என்ன?

  “வேற என்ன உனக்கு தெரிஞ்சிக்கிரனும், அறிவியல் புத்தகங்கள் நிறையா அடிக்கி வச்சிருக்கேன்ல அதையும் எடுத்து படிச்சிக்கோ

  “இல்ல இதுவரை நான் படிச்ச புத்தகத்துல எல்லாம் காதலுக்கு அடுத்து திருமணம் ஒன்னு சொல்றாங்க,செய்றாங்க அது சம்பந்தமா எனது நினைவு பகுதியில் இதுவரை நீ எதையுமே பதியவே இல்லையே ஏன்?

   “காதல் மட்டும்தான் உன்னிடம் இருந்து தேவை திருமணம் உன்னோடு முடியாத காரியம் அதான்..நீ ஒரு இயந்திரம் மறந்துடாதே

“இருந்தாலும் உன்னை எனக்கு ரெம்ப பிடிக்குமே

   “அப்படி இருக்க நான் உனக்கு கற்றுகொடுத்து(robot teaching) இருக்கேன் அவ்வளவுதான்

   “கணேஷ் இந்த வார்த்தைகள் எல்லாம் எனதுள் உள்ள தகவல்களை எதோ செய்து மத்தியபகுதியில் ஒரு வித்தியாசமான வலிப்பது உணர்வை கொடுக்குது. நம்பு நம் காதல் உண்மைகாதல்.
 
   “உனக்கு உண்மைக்காதல்னா என்னனு தெரியுமா?அது ஒரு பெண்ணின் மீது வரும்.ஆழமான புரிதல் ஒரு கட்டத்தில் இதயம் இடமாறிய உணர்வு இனி எப்போதும் பிரியவே முடியாது என்ற நிலை இருவருக்கும் அதுதான்

   “அப்படின்னா என்னை காதலித்து விட்டு வேறொரு பெண்ணை கல்யாணம செஞ்சிப்பியா என்ன? இது ஏமாற்று வேலை இல்லையா?

“இல்லை உன்னை எதுக்கு படைச்சேனோ அந்த வேலையை மட்டும்தான் நீ செய்றே பின்ன என்ன? இதுல எங்கே உண்மைக்காதல்?

   “என காதல் உண்மைதான் நீ சொன்னாலும் சொல்லாட்டலும் அதை நான் நிரூபிப்பேன் பார் என்று ஒரு வித சோகத்தோடு சொல்லிவிட்டு மெதுவாக என்னை விட்டு நகர்ந்து சென்றது.

   இந்த மாதிரியான உணர்வை ரோமியிடம் முதன்முறை பார்க்கிறேன். தனக்குள் ஏதோ வலிப்பதாக சொன்னது, எனது காதலும் உண்மைதான் என்று சொல்ல ஆரம்பித்தது. இது எல்லாம் அதுக்கு நான் கற்றுகொடுக்கதா ஒன்று. ஒருவேளை புத்தகங்களில் படித்து அதை அதிகம் யோசித்து தனது மத்திய பகுதியில் இருந்து பெற்றிருக்கலாம்.

   அது சென்ற விதத்தை பார்க்கும்போது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. என்னதான் நானே என்மீது அன்புவைக்க உருவாக்கியிருந்தாலும் ரோமியின் நடத்தையில் ஒரு இயந்திரத்தனமான உணர்வை இதுவரை பார்த்தது இல்லை.

   இதை யோசித்துகொன்டே புத்தக வாசிப்பில் இருக்க ரோமி அருகில் வந்து நிற்பது தெரிந்து புத்தகதை விளக்கி பார்த்தேன்.....

   “கொஞ்சம் வலியை பொறுத்துக்கோ கணேஷ் ..நம் காதலும் உண்மைதான் அதை நிரூபிக்க இதைவிட நல்ல வழி தெரியவில்லை..நீதானே சொன்னே உண்மைகாதல்னா இதயம் மாறனும்னு இப்ப மாத்தபோறேன் என்று சொல்லியபடி கையில் கத்தியோடு என்னை நோக்கி குனிந்தாள்.


(இது அடியேன் ஏற்க்கனவே எழுதிய ரோமி என்ற கதையின் மற்றொரு கோணம்.)




1 comments:

அனு said...

ரோமிக்கு உங்க மேல காதல் வெறி இருக்குதோ இல்லையோ, கொலை வெறி நிறைய இருக்கும் போல.. :P