நாம்


  (புத்தி உங்களுக்கு புதியவர் என்றால் ஒரு சிறிய அறிமுகம். அறிவியல் குறிப்பாக விண்ணியல் துறையில் உலகில் தலைசிறந்து விளங்கும் அறிவியலர்களில் இவரும் ஒருவர். தனியாக ஆய்வுக் கூடம் வைத்து ஆராய்ச்சிகள் செய்து வருபவர்)

   புத்தி அவரது அறையில் இருக்கிறாரா? இல்லையா? என்பதை அங்கு இருந்து வரும் புகையினை வைத்தே சொல்லிவிடலாம்.அதிக புகைபழக்கம் கொண்டவர்.  அந்த அறையில் நான்கு சுவர்களுக்குப்  பதிலாக புத்தகங்கள் வரிசையாக அடுக்கப்ட்டிருக்கும்.கிட்டத்தட்ட 500 க்கும் மேற்பட்ட புத்தகங்கள். அவரிடத்தில் பொறாமை கொள்ளும் விசயங்களில் இதுவும் ஒன்று.

   அவரது பதிலளிக்கும் விதம்  வித்தியாசமானது. கேள்விக்கு வெளிப்படையாகப்  பதிலைச் சொல்லாமல் அந்த விசயத்தை பற்றி நான் எவ்வளவு எப்படித்  தெரிந்து வைத்து இருக்கிறேன் என்பதை முதலில் தெரிந்துவிட்டு அதுக்கு தகுந்த மாதிரிப் பதிலளிப்பார்.

  நான் இந்த முறை போனபோது வாசலிலேயே நின்று இருந்தார். பார்த்தவுடன்..

“என்ன கணேஷ் நீ மட்டும் தனியா வாரே புனியை எங்கே?”

   “எப்போதும் அவளோடு சுத்தும் பழக்கம் இல்லை ..எனக்குப் பிடித்தாலும் அது அவளுக்கு பிடிக்காது என்றேன்.

   “சரி என்ன இந்த பக்கம் காரணம் இல்லாமல் வரமாட்டியே? ஏதாவது புத்தகம் வேணுமா என்ன?

   “இல்லை ஒரு சந்தேகம் அதான் கொஞ்சம் பேசிவிட்டுப் போகலாம்னு வந்தேன்

“அப்படியா இப்ப என்ன புதுசா சந்தேகம்? என்றார்

   “உங்களுக்குத் தெரிஞ்சவரையில் வேற்றுகிரக வாசிகள் இருப்பது உண்மையா? அப்படியே இருந்தாலும் நமது பூமிக்கு வருவது சாத்தியாமா என்ன?

   “கொஞ்சம் கஷ்ட்டமான கேள்வி..சரி நீ சொல்லு வேற்றுக்  கிரகங்களில் உயிர் வாழ்வதுக்கான சாத்தியம் இருக்கா இல்லையா?

   “கண்டிப்பா இருக்கு, ஆனால் அது நம்ம மாதிரி இருக்கணும்னு அவசியம் இல்லை அங்கு இருக்கிற தட்ப சூழ்நிலைக்கு ஏற்றமாதிரி இருக்கலாம். அதை நாம் கற்பனை செய்து பார்த்து சொலவது கஷ்ட்டம் என்றேன்

   “நீ சொல்வது சரிதான். அப்படியே இருந்தாலும் நமது கிரகத்தில் நம் இருப்பைக் கண்டுபிடித்து அவர்கள் வருவது நடக்கின்ற காரியம்னு நினைக்கிறியா?

    “இதில்தான் எனது சந்தேகம். குறிப்பாக கண்டுபிடித்து வருவதக்கு வாய்ப்பு மிக மிகக் குறைவு. தற்செயலாக நிகழ்ந்தால் உண்டு. அதுவும் விண்வெளியில் இருக்கும் பயணச் சிக்கல்கள், பயண நேரம் இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும்போது தற்செயலாக மட்டுமே நிகழ வாய்ப்பு இருக்கிறது


    “ஏன் அவர்களிடத்தில் நாம் கற்பனை கூட செய்து பார்க்கமுடியாத அளவுக்கு முன்னேற்றம் இருந்தால், அதாவது நாம் நினைத்துக் கொண்டு இருக்கிற அதிக வேகம் கொண்ட  ஒளியின் வேகத்தைவிட பயணிக்கும் வசதி இருந்து அதன் மூலம் வேகமா வர வாய்ப்பு இருக்கிறதே?”என்றார்

    “இந்த விதத்தில் பார்த்தாலும் நமது பூமிக்கு குறிப்பாக வருவது என்னை பொறுத்தவரை தற்செயல்தான் என்றேன்

“சரி திடிர்னு இதைப்பற்றிய சந்தேகம்  உனக்கு எதுக்கு?

   “மனிதர்கள் வேற்றுகிரகவாசிகள் சிலரைப் பிடித்து சோதனை செய்வதாக சில புகைப்படங்களை பார்த்தேன் அதான் உங்களிடம் வந்தேன்.என்றேன்

“அந்தப் புகைப்படங்ககள் எப்படி இருந்தது?

   “அவர்கள் கிட்டதட்ட நம்மை போலவே இருந்தார்கள்,கால்கள்,கைகள், ஏன் விரல்கள் கூட,உடலமைப்பும் அப்படியே நம்ம மாதிரியே.. என்றேன்

   நான் சொன்னவுடன் புத்தி சிரிக்க ஆரம்பித்து இருந்தார். எனக்கு புரியவில்லை ஏன் என்று...

   “சரி என்னை சோதித்தது போதும்அவர்கள் இப்படி வருவது உண்மையா என்ன? என்றேன்

“இதுக்கு விடை நீயே சொன்னியே என்றார் சிரித்துக்கொண்டே..

    “அப்ப குறைவான சாத்தியம் என்றால் இவர்கள் வந்தது தற்செயலான விஷயம்னு சொல்றிங்களா?

   “ஆமாம் அந்த தற்செயலில் எந்த அளவு வாய்ப்பு இருக்கிறது என்றால் ஆயிரத்தில் ஒன்று கூட தேறாது. நமது பிரபஞ்சத்தின் அளவோடு ஒப்பிட்டு யோசிக்கும் போது அவர்கள் இங்கு வருவதுக்கு என்றார்.

“அப்படின்னா இந்த மாதிரி வருபவர்கள் யார்?

“வேற்றுகிரக வாசிகள் இல்லை நம்மவர்கள்தான்

“மனிதர்களா?

   “ஆமாம் கண்டிப்பா. அது மனிதர்களே தான். அதான் நீயே சொன்னியே எல்லாமே நம்மை போலவே இருக்குன்னு

   “இருந்தாலும் இது எப்படி சாத்தியமாகும் நம்மவர்கள் பறக்கும் தட்டுகளில் அல்லது வேறேதாவது விமானத்தில் வந்து வித்தியமாக இறங்குவது?

   “அது கால இயந்திரம் அவர்கள் வசிப்பதும் இதே பூமியில்தான். எல்லாம் காலம் சம்பந்தப்பட்டது என்றார்

“சுத்தமா புரியலை என்றேன்

    “உனக்கு கால இயந்திரத்தின் மூலம் பயணித்தால் காலத்தில் பின்னோக்கி செல்லலாம் என்பதில் நம்பிக்கை இருக்கா?

“இருக்கு

   “அப்படியே போகின்றாய் என்று வைத்து கொள்வோம் நீ போகின்ற இடத்தில வாழும் மக்கள் நீ இருக்கும் இதே நிலையில் இருப்பார்கள் என்று அர்த்தமில்லையே, அதாவது அவர்கள் அந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி இருப்பார்கள்,வாழ்வார்கள். சொல்வதென்றால் அவர்கள் உன்னை பார்த்தால் நீ அவர்களுக்கு ஒரு வேற்றுகிரகவாசி

   “அப்படின்னா இவர்கள் மனிதர்களின் முன்னோடியா இல்லை ஏற்கனவே வாழ்ந்து அழிந்தவர்களா?

   “காலத்தில் அழிவு என்று ஒன்றும் இல்லை நீ எதை வேண்டுமானாலும் கால இயந்திரத்தின் மூலம் சென்று அது இருப்பதை பார்க்க முடியும் போது. அதன் படி பார்த்தால் நமக்கு பிந்தைய உலகம் இன்னும் உயிரோடுதான் இருக்கிறது. எதிர்கால உலகமும் இதே பூமியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்றார்

   “அப்படி என்றால் இவர்கள் மனிதர்களில் இருந்து செல்கள்,ஜீன் களில் mutation ஏற்ப்பட்டு பரிணாம வளர்ச்சி பெற்ற நம்மின் அடுத்த கட்ட இனம் என்கிறீர்களா?

   “கண்டிப்பாக......  காலத்தில் பின்னோக்கி வந்து இருக்கிறார்கள் அவர்கள் வாழும் காலதில் இருந்து. அதாவது அவர்கள் நமக்கு முன்னாடி இருக்கும் காலத்தில் வாழ்பவர்கள்.

   கொஞ்சம் யோசிக்கவே சிக்கலாக இருந்தது. நமக்கு முன்னாடி ஒரு காலம், அதிலும் வாழ்க்கை என்பதை.

   “எனது அடுத்த முப்பது வருஷம் கழிந்த வாழ்க்கையைப்  பார்க்கமுடியும் அப்படித்தானே?”

    “பார்க்க முடியும் ஆனால் அங்கு போய் வாழ, ஏதாவது மாற்றம் செய்யமுடியாது ஏனென்றால் அவர்களுக்கு நீ ஒரு வேற்றுகிரக வாசி. பிடித்துவைத்து சோதிப்பார்கள்

   “இப்படி தொடர்ந்து கொண்டே போனால் முதல் தலைமுறை எது என்று எந்த வருடத்தில் போய் கண்டுபிடிப்பது? என்றேன்

   “அது அவர்களே பின்னோக்கி வந்து சொன்னால் ஒழிய யாருக்கும் தெரிய வாய்ப்பே இல்லை.  

“இதை எல்லாம் நான் எப்படி நம்புவது?

   “நீயும் முன் அல்லது பின் காலத்துக்குச்  சென்று பார்க்காமல் இதை நம்ப முடியாது என்ன போறியா?  பிடித்து வைத்து சோதிப்பார்கள் என்றார் சிரித்துகொண்டே.

3 comments:

NaSo said...

கணேஷ் நான் ரெடி பின்னோக்கி போக. எப்போ என்னை அவரிடம் அழைத்து செல்வீர்கள்..?

manjoorraja said...

interstellar வருவதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பே எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் பெரிய விஞ்ஞானி தான்.

கணேஷ் said...

விஞ்சானி இல்லங்க...கொஞ்சம் நல்லா கற்பனை மட்டும் பண்ணுவேன் அவ்வளவுதான் :)

நன்றி.