நிஜமாகும் நிழல்கள்...

      அந்த நகரத்தின் வளர்ச்சியின் ஒரு பகுதியாக அருகில் இருந்த கிராமங்கள் கட்டாயமாக அதோடு இணைத்துக்கொள்ளப்பட்டு அங்கிருக்கும் கிராமியத்தன்மையை வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டு நகரமாக்கும் வேலையை அரசாங்கம் மெதுவாக செய்ய தொடங்கியிருந்தது. மக்களுக்கும் அது பிடித்துபோய்தான் இருந்தது. எதோ வயதான உடலைவிட்டுவிட்டு புதிய உடலுக்கு கூடு விட்டு கூடு பாய்வதை போல.பின்வரும் சம்பவங்கள்  நடந்தேரியதும் அப்படியொரு கிராமியம் அழிந்துகொண்டு இருக்கும் ஒரு நகரத்தில்தான்.

      மேம்படுத்தும் பணி என்ற பெயரில் சாலையின் இருபுறம் இருந்த மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு வெறிச்சோடி போய் இருக்க சில வீட்டுக்கு முன்னால் இருந்த மாட்டு தொழுவம் எல்லாம் இடம் மாறியிருந்தது. புகை கக்கிகொண்டு சில பேருந்துகள் வந்து போய்க்கொண்டு இருந்தன. புதிதாய் சில கடைகள். இன்னும் சில அறிகுறிகளோடு அந்த கிராமம் நகரமாக மாறும் முயற்சியில் இருந்தது.


      அது கிராமமாக இருந்தபோது ..........ஊரின் தொடக்கம் முதல் கடைசிவரை ஒரே சாலை  அல்லது மண் பாதை. ஊரின் நுழைவு ஒரு பெரிய பெருமாள் கோயிலோடு ஆரம்பித்து அதே நேர்சாலையில் கொஞ்சதூரம் தள்ளி ஒரு சிவன் கோயிலோடு தொடரும் அந்த சாலையின் இருபுறங்களிலும்  வீடுகள் என அழகாக அமைத்திருக்கும் கிராமத்தை இன்னும் அழகாக்கும் விதத்தில் அதை சுற்றி வளைந்து ஓடியது ஒரு ஆறு.


       பெரிய அளவில் வசதிகள் ஏதும் இதுவரை அந்த ஊரில் இருந்ததில்லை. ஒரு ஆரம்ப சுகாதார மையம் மட்டுமே. அதிலும் இரண்டு செவிலியர்கள் இருப்பார்கள் மருத்துவர் ஒருநாளைக்கு சில மணிநேரங்கள் மட்டும் வந்துவிட்டு போவார். இன்றுவரை அதை நம்பாமல் அருகில் இருக்கும் நகரத்தின் மருத்துவமனையை நாடியவ்ரே அதிகம்.  சில சிறிய அவசர சிகிச்சைகளுக்கு அங்கு சென்று வந்தார்கள்.


      அந்த ஆரம்ப சுகாதார மையத்தை பற்றி பேசும்போது கண்டிப்பாக புனி யை பற்றி சொல்லித்தான் ஆகவேண்டும். அவள் சிறுமியாக இருக்கும்போது அதன் கட்டுமான பணிகள் நடந்தது. அது முடிந்து செயல்பட தொடங்கிய காலத்தில் அவளின் ஊருக்கு வந்த செவிலியர்கள், அங்கு இருந்த மருத்துவ உபகரணங்கள் எல்லாமே அப்போது பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த புனிக்கு மனதில் ஒரு புதிய ஆர்வத்தை உண்டாக்கியது.




       பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடுமுறை நாள் ஒன்றில் சும்மாவே அந்த மையத்துக்கு போய் இருந்தாள். அங்கு வேலை பார்த்தவர்கள் ஊர்க்கதை பேசிக்கொண்டு இருக்க அவர்களோடு புனி யும் சேர்ந்தாள். அழகான முகம் துறுதுறுவென்று கண்கள் பார்த்தவுடனே யாருக்கும் பிடித்துபோகும் அளவில்தான் புனி இருந்தாள்.அவள் வந்த வேலை வரும்வரை காத்து இருந்தாள். பேச்சுவாக்கில் அவர்கள் இவளின் படிப்பை பற்றி கேட்கும்போது அவள் கேட்க வந்ததை எல்லாம் கேட்டுவைத்தாள். அவளின் ஆசை எல்லாம் எப்படியாவது மருத்துவ வேலைக்கு போக வேண்டும் என்பதே. பேச்சின முடிவில் அவளுக்கு தெளிவு இருந்தது அவர்கள் வெறும் செவிளியர்களதான் நன்றாக படித்தால் மருத்துவராகக்கூட வாய்ப்பு இருப்பதாக அவர்கள் சொல்லி அனுப்பினார்கள்.

       ஒரு மாலையில் தன அப்பாவிடம் சொல்லிவைத்தாள்  மருத்துவ படிப்பு படிக்க விரும்புவதாகவும் அதுவும் முடித்துவிட்டு நம்ம ஊருலயே பணி செய்ய போவதாகவும். அதுக்கு அவர் முதலில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் வரட்டும் அதுக்கு பிறகு பார்க்கலாம் என்றார். பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் வர அடுத்து மருத்துவத்துக்கு வசதியான பிரிவையே மேல்நிலைப்பள்ளியிலும் படித்தாள். அதே நேரத்தில் ஊரில் விஷயம் கொஞ்சம் கிண்டலாக பரவி இருந்தது. புனி நமது ஊருக்கு மருத்துவராக வரத்தான் படிப்பதாக.


   
     இதுவரை சுகாதார மையத்தோடு புணியை இணைத்து பேசிவந்தவர்களுக்கு புதியதாக ஒன்று கிடைத்து இருந்தது. அது புனியின் காதல்
புனியை பற்றி பேசிவிட்டு கணேசை பற்றி சொல்லாமல் போவது சரியில்லைதான். அவள் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும்போதுதான் அது நடந்தது. ஒரே ஊரோக இருந்தாலும் அவன் எதிரில் வருகையில் ஒருபார்வை பார்த்துவிட்டு தலைகுனிவதும், அவள் பார்வையில் படும்படியாகவே அவன் எங்கேயும் செல்வதும்  இருவருக்குளும் மறைமுகமான சில விசயங்களை உறுதிபடுத்தி இருந்தன. அதுவரை சந்தித்தால் கொஞ்சமாக பேசிக்கொள்ளும் அவர்கள் ஒருகாலகட்டத்தில் வெறும் பார்வை பரிமாற்றங்களையே செய்தது, ஒருகட்டத்தில் கணேஷ் காதலை சொன்னபோது வெறும் சிரிப்பை மட்டும் தந்துவிட்டு ஓடியவள் மறுநாள் வந்து நானும் என்று மட்டும் சொல்லி காதலை சம்மதித்து அவர்களின் ஒரு வருட காதலின் வளர்ச்சி அருமையான ஆற்றங்க கரையிலயே நடந்தது.

     அப்படி ஒரு சமயத்தில்தான் சில பார்த்துவிட அவர்களின் வீடு உட்பட எல்லோர்க்கும் தெரிய வந்தது. இரு வீட்டாரும் உறவினர்கள் என்பதால் கொஞ்சம் கண்டித்ததோடு இப்போது காதல் முக்கியமில்லை முதலில் இருவரும் ஒழுங்க படியுங்கள் என்று காதலுக்கு சொல்லாமல் சொல்லி சம்மதம் தெரிவித்ததில் கணேஷ் மற்றும் புனிக்கும் அளவில்லா சந்தோசம்.

      நான்கு வருடம கடந்த நிலையில் கணேஷ் தான் படித்த படிப்புக்க்கு வேலை கிடைக்க சென்றான். புனி தனது மருத்துவ படிப்பை முடித்து இருந்தாலும் அவளுக்கு இருந்த ஆர்வம காரணமாக உயிரியல் துறையில் சிறப்புபிரிவை தேர்ந்து எடுத்து படிப்பை தொடர்ந்தாள். நான் தொடக்கத்தில் சொன்ன கிராமியத்தை வெளியேற்றி நகரத்தை புகுத்தும் வேலை இந்த நான்கு வருடத்தில் தான் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறிக்கொண்டு இருந்தது.

                                                                   *****----*****


     தே நேரத்தில் அந்த ஊர் மற்றொரு விசயத்திற்கு பெருமை வாய்ந்ததாக மாறியிருந்தது. காரணம் சிவன் கோயிலுக்கு அருகில் அமைக்கபட்ட ஒரு சாமியாரின் ஆசிரமம்.சரியாக ஒருவருடம் இருக்கும் அந்த கோயிலுக்கு ஒரு சாமியாரும் மற்ற சிலரும் வந்து தனக்கு கனவில் கடவுள் வந்து இந்த ஊரில் ஆசிரமம் அமைத்து மக்களுக்கு சேவை செய்ய சொன்னதாக சொல்லி ஒரு ஆசிரமத்தை கட்டினார்கள். அது கோயில் இடம் என்பதாலும் தெய்வ காரியம் என்பதாலும் யாரும் ஒன்றும் சொல்லாமல்விட ஒரு கட்டிடம் ஆசிரமம் என்ற பெயரில் எழும்பியது.

     அது பிரபலம் ஆனதுக்கு காரணம் அங்கு இருந்த சாமியார். பிரச்சினை என்று செல்பவர்களுக்கு தியானத்தின் மூலம் தீர்வுகளை அவர்களின் மனக்கண்ணில் தோன்றவைப்பதுதான். முதலில் உள்ளூர் மக்களுக்கே ஆச்சர்யமாக இருந்தாலும் அனுபவித்தவர்கள் சொல்லும்போது எல்லோரும் நம்பித்தான் போனார்கள். அப்படியே மெல்ல பரவி சுற்றியுள்ள ஊர்களுக்கு எல்லாம் தெரிய வந்து போனார்கள்.

      அங்கு சில விதிகள் இருந்தன. தீர்த்தமோ, பிரசாதாமோ வழங்கப்பட மாட்டாது. அந்த சாமியாரை ஒரு குளிர்சாதன முறையில் குளிர்விக்கப்ட்டு இருக்கும் அறையில் சென்றுதான் பார்த்து பேசவேண்டும். அங்கு இருந்து எதையும் எடுக்கவோ ஏன் தொடக்கூட அனுமதியில்லை. உள்ளே வரும்போதும் சரி வெளியே போகும்போதும் அழுத்தம் நிறைந்த காற்றால் சுத்தபடுத்தபட்டே அனுப்பினார்கள். இது எல்லாம் கொஞ்சம் வித்தியாசமாக தெரிய சிலர் கேட்டு வைக்க அதுக்கு ஆசிரமாத்தாரின் பதில் எல்லாம் சாமியின் சுகாதாரம் மற்றும் மன அமைதி கருதியே என்றார்கள்.` 


      அந்த சாமியார் அங்கு பிரச்சினை என்று வருபவர்களிடம் நடந்துகொள்ளும் விதம்தான் அவர்களை எல்லாம் தெய்வச் செயல் என நம்பவைத்தது. அவருக்கு முன்னால் இருந்த இருக்கையில் அமர வேண்டும். மெதுவாக நமது பிரச்சினைகளை கேட்டுக்கொள்வார் முதலில். அதுக்குப்பிறகு சில நிமிட அமைதி இந்த நேரத்தில்தான் அவர் கடவுளிடம் தொடர்பு கொண்டு அறிந்துகொள்வார் என நம்பினார்கள். அந்த சில நிமிடங்கள் முடிந்த பிறகு எதிரில் அமர்ந்து இருப்பவர் கண்களை மூடி இருக்க அவரின் மனதில் என்ன செய்யவேண்டும் என்ற காட்சி அழகாக விரியும்.அப்படியே நிகழ்கால தோற்றம் எல்லாமே அதிலிருக்கும். இறுதியாக ஏதாவது ஒரு கடவுளிடம் உருவம் தோன்றி மறையும். சாமியார் அந்த சாமியிடம்தன் உதவியை நாடினார் என்றார்கள்.


      அவரின் புகழ் வெகுவாக அக்க்கம்பக்கம் எல்லாம் பரவி அதிகம்பேர் ஆசிரமம் வந்து சென்றார்கள்.அதோடு வாரம் ஒருமுறை வித்தியாசமான சிலிண்டர்களை சுமந்தபடி ஒரு வாகனம் வந்து போனது. அது சாமியின் மகிமையில் மக்கள் யாருக்கும் பெரியதாக தெரியவில்லை.


                                                      

                                                          ******--------******

    புனி விடுமுறைக்கு வந்து இருந்தாள். அவள் மட்டும் வந்திருக்கிறாள் என்றால் நம்புவது கஷ்டம. ஏற்க்கனவே பேசி முடிவெடுத்து கணேஷ் ம் அதே நாட்களில் விடுமுறை என்று வந்து இருப்பான்.  அதே ஆற்றுப்பக்கம் அவர்களை நடந்தபடி சில நாள்கள் பார்க்கமுடியும். அவள் வந்த மறுநாளே ஆச்சர்யம் அதிக மக்கள் ஊருக்கு வந்துபோவத்தின் காரணம். அந்த சாமியாரின் சக்திகள் அறிந்த போது எல்லாம் பித்தலாட்டம்  என்று பெரியாதாக எடுத்துக்கொள்ளமல் இருந்தாள். நெருங்கிய தோழிகள் உட்பட எல்லோரும் பய பக்தியுடன் சொன்னதால் குழப்பம் அவளுக்கு.

     அதே நேரம் அங்கு இருந்த சுகாதார மையத்துக்கு வாரம் இரண்டு அல்லது மூன்று பேர்  வயிற்றுபோக்கு வாந்தி போன்ற பெரும் பிரச்சினைகளால் வந்துகொண்டு இருந்தார்கள். ஆச்சர்யம் என்னவென்றால்  வந்தவர்களில் அனைவரும் ஒரு வாரம் முன் அந்த ஆசிரமம் சென்று திரும்பியவர்கள்.  









                                                                         இன்னும் நிழல்கள் நிஜமாகும் ......

10 comments:

அனு said...

கதை நல்லா இண்ட்ரஸ்ட்டிங்கா இருக்கு.. முதல் சில பத்திகள் கிராமத்தை கண்முன்னே கொண்டு வந்தது.. ur writings have improved much.. keep up the good work.. :)

ஆமா.. சாமியார் எப்படி தீர்வுகளை மனக்கண்ணில் கொண்டு வர்றாரு??

கணேஷ் said...

நன்றிங்க ..

அது அடுத்த பாகத்துல சொல்றேன் ))

TERROR-PANDIYAN(VAS) said...

@கணேஷ்

//ஒருகட்டத்தில் கணேஷ் காதலை சொன்னபோது வெறும் சிரிப்பை மட்டும் தந்துவிட்டு ஓடியவள் //

பாரதிராஜா காலத்து ஸ்டைல். இப்போ நீ தான் ஓடனும்.

கணேஷ் said...

அது கிராமத்து காதல் அதான் அப்படி ))

குறையொன்றுமில்லை. said...

கதை ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள் அடுத்தபாகத்துக்கு காத்திருக்கோம்.

கணேஷ் said...

ரெம்ப நன்றிங்க

எழுதுகிறேன் ))

Rathnavel Natarajan said...

தொடருங்கள்.
வாழ்த்துகள்.

HVL said...

கதை நல்லாப் போகுது! அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.

கணேஷ் said...

Rathnavel//

நன்றிங்க வாழ்த்துக்கு ))

கணேஷ் said...

HVL //

எழுதுறேன் ..))..

நன்றி