சில விசயங்கள் - 3

    கொஞ்சம் அறிவியல், galaxy என்றவுடன் உங்கள் மனதில் தோன்றுவது பெரிய நட்சத்திர தொகுதிகள்,கோள்கள,வாயுக்கள் அதிகமாக போனால் வேறொரு galaxy ல நமது பூமி போல ஒன்று இருந்து அங்கும் கணேஷ் மாதிரி யாராச்சும் ஒருத்தன் கதை எழுதலாம்..இதுதான்..

      இது எல்லாம் இல்லாமல் சில galaxy இருக்கிறது என்கிறார்கள். அவைகளை dark galaxy என்கிறார்கள்.  galaxy எப்படி உருவாகியது என்ற கேள்விக்கு கொஞ்சம் உறுதியளிக்கும் வகையில் இது இருகிறது.. பொத்தம் பொதுவாக கடவுள் வந்தார் இந்த பிரபஞ்சத்தை படைத்துவிட்டு ஒரு இடத்தில உட்கார்ந்து அது எப்படி செயல்படுகிறது என்பதை பார்த்து கொண்டு இருக்கிறார் என்பதை சந்தேகமாக்கியிருகிறது.

     முதலில் galaxy உருவாவது, big bang பிறகு  hydrogen,ilium,dark matter மற்றும் தூசுகள் இவைகள் எல்லாம் கொஞ்ச காலம் அமைதியாக குளிர்ந்து கொண்டு இருக்க, அவைகளுக்குள் ஈர்ப்பு விசையினால் இறுக்கம் ஏற்ப்பட்டு வாயுக்கள் dark energy யோடு சேர்ந்து எரிந்து முதலில் நட்சத்திரங்கள் உருவாகி, பின் இந்த நிகழ்வு மில்லியன் ஆண்டுகள் தொடர புதிய நட்சத்திர தொகுதிகள் உருவாகியது.

       இப்படி பிறந்த நட்சத்திரங்கள் இறப்பின் போது வெடித்து சிதறி கோள்கள உருவாகி பிரப்ஞ்சதுக்கான ஒரு வடிவத்தை கொடுத்தது..இன்னும் இந்த நிகழ்வுகள் நிற்காமல் நடந்து கொண்டுதான் இருக்கின்றன

      சரி இதில் dark galaxy என்னவென்றால், நட்சத்திரங்கள் ஏதும் இல்லாத வெறும் ஒரு புது galaxy உருவாவதற்க்கு முன்னாடி இருக்கும் hydrogen,helium, dark matter இவைகளை கொண்ட ஒன்று. இது ஒளிரும் நட்சத்திரங்களை கொண்டு இருக்கவில்லை என்பதால் சாதாரண telescope கொண்டு பார்ப்பது முடியாது. radio telescope கொண்டு கண்டு பிடித்து இருக்கிறார்கள்.

      முதலில் இதை கண்டுபிடித்த போது வெறும் நட்சத்திரங்கள் குறைவாக கொண்ட dark matter அதிகமாக உள்ள ஒரு அமைப்பு என்றுதான் அறிய பட்டது.இது 2005 ஆம் கண்டுபிடிக்கப்பட்டு VIRGOHI21 என்ற பெயரும் வைத்தார்கள்.நமது பூமியில் இருந்து 50 million light year துரத்தில் இருக்கிறது.

     ஆனால் இப்போது இதுபோன்ற நிறையா dark galaxy கள் milky way ல் சுற்றுவதாக சொல்கிறார்கள் எல்லாமே இன்னும் மோதி atom fusion நடக்க ஆரம்பிக்காத நிலையில் இருப்பவை.இதன் மூலம் galaxy கள் எப்படி உருவாகியிருக்கும் என்பதில் இருந்த சந்தேகம் கொஞ்சம் விலகியிருக்கிறது

    இப்படி சும்மா இருக்கும் dark galaxy களில் atom fusion நடந்தால் அது கிட்டத்தட்ட 100 மில்லியன் நட்சதிரங்ககளை உருவாக்ககூடுமாம்.பின்ன என்ன இன்னொரு புதிய குழந்தை galaxy பிறந்து அதிலும் கோள்கள் உருவாகும்.இபோதைய இந்த கண்டுபிடிப்பை வைத்து  dark matter யையும் தோண்டி துலாவுகிறார்கள்.இதன் மூலம் dark mater சம்பந்தமான சில ரகசியங்கள் தீரலாம் என்ற நம்பிக்கையிருகிறது


*****

     பதிவர் ஒருவர் பின்னுட்டத்தில் "நீங்கள் கதை சொலவது திக்குவாய்க்காறார் கதை சொல்வது போல் இருக்கிறது"என்றிருந்தார்.. வாக்கிய அமைப்புகள் நான் உபோயோகிக்கும் புள்ளிகள்,கமா இவற்றை வைத்து அவர் இதை கணித்து இருப்பதாக சொல்லியிருந்தார்.அவர் சொன்னபிறகு நான் எழுதிய சில பதிவுகளை படித்து பார்த்தேன். நான் எழுதியது என்பதால் அடுத்து என்ன இருக்கும் என்பது எனக்கு தெரிந்து விடும்,எனவே வேகமாக வசித்து விட்டு அப்படி ஒன்றும் தெரியவில்லையே என்று குழம்பினேன்.

     புதியதாக படிப்பவர்களுக்கு ஒருவேளை நான் எழுதியது அபப்டி தெரிந்து இருக்கலாம். அதை எப்படி திருத்துவது என்பதை பற்றி பார்க்க வேண்டும். சந்தோசம் என்னவென்றால் அவர் நான் எழுதுவதை கதை என்று நினத்தரே அதே பெரிய விசயம்.

    பொதுவாக நான் மனதில் தோன்றுவதை அபப்டியே ஒரு கோர்வையாக டைப் செய்து விடுவேன். பின்னர் எழுதியதை புரியுதா என்பதற்காக வசித்து பார்ப்பேன். புரியாவிட்டால் சில விசயங்களை கொஞ்சம் மாற்றி அமைப்பேன். எனக்கு புரிந்துவிட்டால் அவ்வளவுதான் போட்டுவிடுவேன். மற்றவரின் பார்வையில் இருந்து பார்க்காதது இந்தமாதிரி பிரச்சினைக்கு காரணம் நினைக்கிறேன்.

    திரும்பவும் படிக்கும்போது தவறுகள் தெரியாததுக்கு காரணம்,சொன்னது போல் நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பது தெரிந்து விடுவதால் வேகமாக படித்து நகர்ந்து விடுவேன். எங்கு என்ன வாக்கியங்கள் எந்த நிலையில் இருக்கிறது என்பது போய் சொல்ல வந்த விசயம் சரியாக இருக்கிறதா என்பதை மட்டும் பார்க்கும் நிலமைதான் இப்போது. இதை மாற்ற வேண்டும்


 *******

     புது என்ற கதையை தொடர எண்ணம இருக்கிறது. கடவுள் வேற்றுகிரகவாசி என்பதை மையமாக வைத்து எழுதும் ஒன்று. இதை நான் எழுதுவது கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பதுக்கு பதில் சொல்ல வருகிறேன் என்பது போல் சிலர் நினைத்து இருகிறார்கள்.



   கடவுள் இருக்கிறாரா?இல்லையா? என்பதை பற்றி கவலை இல்லை. சிலரின் கருத்துபடி கடவுள் இருந்தாலும் அவரால் நமக்கு என்ன நன்மை? கடவுள் நமக்கு உதவுகிறார் என்பதில் எனக்கு துளியளவும் நம்பிக்கை இல்லை. 

     இருக்கிறாரா இல்லையா? என்ற கேள்விக்கு போகும் முன் அப்படியே இருந்தாலும் அவர் நம்மில் எப்படி பங்கெடுக்கிறார் என்பதை யோசித்து பார்க்கலாம் கொஞ்சம் தெளிவு கிடைக்கும்.


    அதை விடுத்து எல்லாம் அவன் செயல் அவன்  இன்றி அணுவும அசையாது என்பது அபத்தம். எனக்கென்று ஒரு வாழ்க்கை பாதை,அதில் யாருக்கும் துன்பம் கொடுக்காமல்,மனதை சிதைக்காமல் எனது பாதையில் அமைதியாக பயணிப்பதால் கடவுள் எனக்கு தேவையில்லை அவ்வளவுதான்.அவர் இருந்தாலும்,இல்லாவிட்டாலும் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை.


     வாழ்க்கை நல்லா போகும் போது கடவுள் தேவையில்லை,வாழ்க்கையில் உள்ள சிக்கலுக்கு உதவி,ஆறுதல் செய்ய கடவுள் தேவை என்றால், அதுக்கு உங்களின் மீது அக்கறை,அன்பு கொண்டவர்களே போதுமானவர்கள் கடவுள் இல்லை.அதுக்கு நீங்கள் மற்றவர்களுக்கு இந்த அன்பை கொடுத்து இருக்க வேண்டும்

    இப்படி நாம் செய்ய மறப்பதுதான் நம்மை விடுத்து ஒரு மூன்றாவது இடமான கடவுள் உருவாகிவிடுகிறார் நமக்கு உதவி செய்ய.  நமக்குள் அன்பாக எல்லா பிரச்சினைகளை விட்டு கொடுத்து தீர்த்து கொண்டால் எனக்கு மட்டும் இல்லை யாருக்குமே அவர் தேவை இல்லை.

   இன்னும் சிலர் கடவுளை அடைய போகிறேன்.முக்தி தேடுகிறேன் இதுக்கு கடவுள் தேவைதானே என்று கதவைதிற "......." வரட்டும் போன்றமுறையில் முயற்சசிக்கிறார்கள்  இந்த முக்தி சம்பந்தபட்ட விசயங்கள் எல்லாம் மூளைக்குள் சில ஹோர்மோன்கள்,அமினோ அமிலங்கலாள்  நடக்கும் அல்லது கொடுக்கும் ஒருவித உணர்வு இதைப்பற்றி அப்புறம் பார்ப்போம்  
 

1 comments:

கவிநா... said...

கணேஷ், வாசித்துவிட்டேன். வந்து கருத்துச் சொல்கிறேன்.