ஒரு முடிவு....

     சத்தம் இல்லாமல் அழுவது என்பது அவளுக்கு நன்கு பழக்கம் ஆகியிருந்தது..... இன்றும் அவள் அதைத்தான் செய்து கொண்டிருந்தாள்...
அந்த திருமணதிற்கு சென்றுவந்ததுதான் பிரச்சினை....இந்த திருமணம் மட்டும் இல்லை..... எந்த ஒரு சுபகாரியத்திற்கு சென்று வந்தாலும் அவளுக்கு இதே நிலைதான்.....

   அதிகம் அழுது கண்கள் வீங்கி தலையை குணிந்து உட்கார்ந்து இருந்தவளின் அருகில் வந்து  கணவன் உட்கார்வதை பார்த்த அவள் சற்று நொறுங்கிய குரலில் ஏங்க நமக்கு மட்டும் இப்படி......என்று தான் சொல்ல வந்ததை முழுமையாக சொல்லும் முன் சத்தமாக அழுதேவிட்டாள்....

   நன்கு படித்தவள் ..எதையும் சிந்தித்து பிரித்துபர்த்து கொள்ளும் திறமை கொண்டவள்...இருந்தும் அந்த நிலையில் அவளுக்கு ஏதும் உதவவில்லை.....

  அவர்களுக்கு திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகியிருந்த்தன...நல்ல வசதியான வாழ்க்கை,நிறைவான குடும்பம்..அவளுக்கு குழந்தை இல்லை என்ற குறையை தவிர.

   அதன் மூலம் அவள் வாழ்க்கையில் பட்டிராத துன்பங்களை கடந்த மூன்று வருடங்களில் அனுபவித்து இருக்கிறாள்.

  முதல் வருடத்தில் குழந்தை இல்லை என்று இருவருமே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்கள்.சோதனையில் கணவனுக்குத்தான் சில குறைபாடுகள் இருப்பதாக தெரியவந்தது..அவளுக்கு இல்லை.

   இது அவர்களின் வீட்டிற்கு தெரியாது....அதற்க்கு காரணம் இவளே.....அவள் தன் கணவனிடம்.....அதான் கொஞ்ச நாள் மருந்து சாப்பிட்டால்...சரியாகி விடும் என்று மருத்துவரே சொல்லி இருக்கிறாரே..பின்ன என்ன எல்லாம் இன்னும் கொஞ்ச நாளில் சரியாகிவிடும் என சொல்லி அவனை தடுத்து இருந்தாள்....
அதற்க்கு பரிகாரமாய்..இன்று அனுபவிக்கிறாள்...

   எந்த ஒரு சுபகரியங்களிலும் இவளை பார்ப்பவர்கள் எதோ வேற்றுகிரகவாசியை போலத்தான் பார்த்தார்கள்.

    பார்த்ததோடு இல்லாமல்..அவள் காது படும்படியே....இவள் ராசி இல்லாதவள்....அதான் கடவுள் இவளுக்கு இப்படி செய்துவிட்டான்.....இவள் போன இடம் ஏதும் விளங்காது..இன்னும் சில நல்ல வார்த்தைகளை தவறாமல் சொல்லி வந்தார்கள்...எதோ அவர்கள் பெற்ற பிள்ளைகள் இந்த நாட்டை ஆள்வது போல நினைத்துக்கொண்டு....

   அவளுக்கென இருக்கும் சில நலவிரும்பிகள்..நி கவலைப்படாதே...கடவுள் உன்னை கைவிடமாட்டான்...என்று சொன்னதோடு மட்டும் இல்லாமல் சில கடவுள்கள்,கோயில்கள்,,குளங்கள்,,பரிந்துரைத்து வைத்தார்கள்..

   அவளும் எதோ ஒரு நம்பிக்கையில்..அங்கெல்லாம் சென்று விழுந்து,மூழ்கி...உருண்டு..எல்லாம் பார்த்துவிட்டாள்....

   குறை அவளுக்கு இல்லை என்று தெரிந்தும் அனைத்தையும்செய்து இருந்தாள்...பரிகாரமாய் கடவுளிடம் இருந்து கிடைத்தது என்னமோ ஒன்றும் இல்லைதான்...இதில் இருந்து கடவுள் உண்மையா? இல்லையா? என்பது வேறு விசயமாக இருந்ததாலும்...அவளுக்கு உண்டான...தியாகம்,காதல்,போன்ற பெண்மையின் சிறப்புகள் இருந்தது உண்மை.

  அவள் என்னதான் வெளி நிகழ்ச்சிகளை தவிர்க்க நினைத்தாலும்...கட்டாயம் போகவேண்டிய நிகழ்ச்சிகளுக்கு போகும்போது....அங்கு கேட்க்கும்.... அவளின் மனதை கிழிக்கும்.....அந்த நல்லவர்களின் கூர்மையான கடுஞ்ச்சொறகள்....அவளின் படித்த புத்தி கூர்மையை மலுங்கச்செய்தது என்பது உண்மை.

   அவள் அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற எண்ணத்திற்கு அவளின் மனதை செல்ல விடாமல்..அவளை துக்கத்திலேயே கட்டி போட்டுவைத்து இருந்தது.....

   அது வெகுநாள் நீடிக்கவில்லை...அன்று இரவு அவ்ள கணவனிடம் கேட்டே விட்டாள். நாம் ஏன் செயற்கையான முறையில்...கருத்தரிப்பு செய்து குழந்தை பெற்றுகொள்ளக்கூடது? என்று.......அவளுக்கு நன்றாக தெரியும்..அவன் இதற்க்கு மறுப்பு தெரிவிக்க மாட்டன் என்று...

  தினமும் அவள் மனதளவில்..நொந்து புலம்புவது அவனுக்கே தாங்கமுடியவில்லை.......தவறு அவன் பக்கம் இருந்தும் தினம் தினம் அவள் தண்டனை அனுபவிப்பதற்கு ஒரு முற்றுபுள்ளி கிடைத்து இருக்கின்றது..எனபதை உணர்ந்த்தவன்..சரி என்று சொல்லிவிட்டான்.

  மருத்துவமனை சென்று செயற்கை கருத்தரிப்பு முறையை பற்றி வழிமுறைகள்,விளக்கங்களை கேட்டு தெரிந்துகொண்டுவந்தார்கள்.

  அதற்க்குபின் ஒருநாள் இது சம்பந்தமாக சில தகவல்களை தேடும் போதுதான்..அவளுக்கு அது கண்ணில் பட்டது.

அது...SYNTHETIC GENOME..

  அதை பற்றி விளக்கமாக படித்து தெரிந்துகொள்ள முயன்று நேரம் செலவிட்டு...கொஞ்சம் தெரிந்தும் கொண்டாள்...அவள் தெரிந்து கொண்டது...

   SYNTHETIC GENOME எனபது அமெரிக்காவை சேர்ந்த VENTER  என்பவர் MYCLOPLASMA GENITALIUM என்ற ஒரு பாக்டிரியாவின் DNA வை நீக்கி விட்டு அதற்க்கு பதிலாக செயற்கையாக (GENOME )வடிவமைக்கப்பட்ட ஒரு DNA வை அந்த செல்லில் பொருத்தினார்..அது சாதரண செல்களை போல வெற்றிகரமாக தன்னை பிரதி எடுத்துக்கொள்ள ஆரம்பித்தது. இதை அவள் படித்த போது கொஞ்சம் ஆச்சர்யத்தில் மூழ்கினாள்.

  அவளுக்குள் இது எந்த ஒரு பெரிய மாற்றத்தையும் கொண்டுவரவில்லை.......அவள் சில நாள்களுக்கு முன் படித்த ஒரு விஷயம் அவளுக்கு நினைவுவரும்வரை....

   அது ஒரு LONDON மருத்துவமனையில்...mtDNA பாதிப்பு உள்ள தாய் ஒருவள் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட..அது நிறைவேறியது....

  அந்த பாதிப்படைந்த தாயின் கருமுட்டையில் இருந்த பாதிப்படைந்த mtDNA வை நீக்கி விட்டு வேறொரு பெண்ணின் கருமுட்டையில் இருக்கும் நல்ல mtDNA வை பொறுத்தி..பிறக்கும் குழந்தையை mtDNA SYNDROME ள் இருந்து காப்பற்றி இருந்தார்கள்.

  அதுவரை mtDNA SYNDROME என்பது ஒரு குணப்படுத்த முடியாத GENETIC வியாதிகளில் ஒன்றாக இருந்துவந்தது...அதை இப்போது மாற்றி இருந்தததை அவள் படித்து இருந்தாள்.

  அன்று இரவு வெகு நாள்களுக்கு பிறகு கொஞ்சம் சந்தோஷம்,மன நிறைவோடு படுக்க சென்றாள்....

  காலையில் எழுந்து அந்த விஷயத்தை தன் கணவனிடம் சொன்னபோது அவன் சற்று அதிர்ந்து போனது என்னமோ உணமைதான்....

  இதை கட்டாயம் செய்யவேண்டுமா? என்று அவன் கேட்டான். இத்தனை நாள் நான் பட்ட கஷ்டத்திற்கு இது ஒன்றுதான் எனக்கு பெரிய ஆறுதல் என்றாள் அவள்.

   முந்தைய நாள் அவள் சில விசயங்களை தேடிக்கொண்டிருக்கும்போதுதான் அந்த விஷயம் கண்ணில் பட்டது...

அதாவது ஒரு GENETIC ஆராய்ச்சிக்கு ஆள் தேவை.

   இவள் செய்ய ஒத்துக்கொண்ட ஆரயச்சி..மனிதனின் கடவுள் நம்பிக்கையை அறவே அகற்றும் முயற்சி. அவள் முதலில் இதை நம்பவில்லை...அதற்க்கு பிறகு அங்கு கிடைத்த விளக்கங்களை பார்த்தபின்னர்தான் நம்பினாள்...

  அதாவது மனிதனின் ஆன்மிக எண்ணங்களுக்கு துணைபோகும் VMAT2 என்ற GENE ஐ கொஞ்சம் மாற்றி அமைப்பதன் மூலம் மனிதனுக்குள் ஆன்மிகம் சம்பந்த்தமான ,கடவுள் சம்பந்த்தமான எண்ணங்களையே முற்றிலுமாக நீக்கிவிட முயற்சிப்பது.

  இதற்காக அவர்கள் VENTER ன் SYNTHETIC GENOME முறையை உபோயோகித்து அந்த VMAT2  GENE ல் (அது உள்ள DNA வில்)  செயற்கையான GENOME அமைப்பதன் மூலம் இதை செய்யமுடியும் என நம்பினார்கள்.

  இதை mtDNA SYNDROME மாற்றத்தை செய்தது போல கருமுட்டையிலியே செய்து அதை வளர்க்க முடிவு செய்யப்பட்டிருந்தது. அதாவது கருமுட்டையில் உள்ள அந்த GENE களின் தன்மையை மாற்றி அதை வளரவைப்பது.

  இது அதிகம் சிக்கலான செலவான விசயம்தான்..இருந்தும் அவளுக்குள் இருந்த சமுகத்தின்,கடவுளின் மீது இருந்த  கோபம்தான் அவளை இதை செய்ய வைத்தது.

  அவளைபொறுத்தவரையில் இதை செய்வதன் மூலம் அவளை குறை கூரிய சமூகத்தையும்,கடவுளையும் பழிவாங்குவதாக நினைதிருந்த்தாள் என்பது தான் உண்மை.

  சில நாட்களில் மருத்துவர்கள் VMAT2 GENE ல் செயற்கையான GENOME ஐ மாற்றி அமைத்து அந்த கருவை அவளுக்குள் வளரச்செய்தனர்.
  கருவின் வளர்ச்சியை கண்காணிக்கும் பொருட்டு அவள் பத்து மாதத்தில் பெரும்பாலான் நாட்களை மருத்துவ மனையிலே கழிக்க நேர்ந்தது.

  மருத்துவர்களின் வெற்றியாக கடவுள் என்றாள் யார் என்று கேட்ககூடிய ஒரு குழந்தை நல்லவிதமாக பிறந்ததது. அவளின் ஆசைப்படியே பெண்குழந்தை. கருமுட்டையிலே பிறக்கவேண்டியது.. ஆனா?பெண்ணா என்பதை அமைத்துவிட்டதால்  அந்த ஆர்வம இல்லாமல்..பிறந்த குழந்தை எப்படி இருக்கின்றது என்பதில் அனைவரின் கவனமும் இருந்தது.

 சில மாத தொடர் பரிசோதனைக்கு பின் அவளை வீடு செல்ல அனுமதித்தனர். எந்த வித பிரச்சினை என்றாலும் உட்டன்டியாக வந்து சோதித்து பார்த்துகொள்ளும்படி சொல்லி அனுப்பி இருந்ததார்கள்.

  குழந்தைக்கு கடவுளின் நம்பிக்கை இல்லாமல் இருந்ததுதான் காரணமோ தெரிய வில்லை...பிள்ளை நல்லவிதமாக வளர்ந்தது..
வளர்க்கப்பட்டது...மிகுந்த போராட்டத்திற்கு பிறகு...பெற்ற குழந்தை.....என்பதால்....

    இப்போதெல்லாம் வீட்டை விட்டு கடைக்கு செல்வதாக இருந்ததாலும் அவ்ள அந்த குழந்தையை தூக்கி கொண்டே சென்றாள்.....
   அப்படியே அவள் தாய்பாசத்தில் அந்த குழந்தை தனது நான்கு வயதினை முடித்து இருந்தது.

 அவள் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்று இருந்தாள்...அவளை மிகவும் புகழ்ந்தவர்களின வாய் பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளியாக அந்த குழந்தை இருந்தததால் அவர்கள் வாய் திறக்கவில்லை......இப்போது அவர்களுக்கு இவளைபோல வேறொரு பெண் கிடைத்து இருந்திருப்பாள் ...அவர்களின் மேன்மையான விமர்சனங்களை சொல்லுவதற்கு........அவ்ளிடதிலும் இவளுக்கு ராசியில்லை...இவள் போன இடம்..........இப்படி தொடங்குவார்கள்..இது அவர்களின் தவிர்க்க முடியாத வேலைகளில் ஒன்று....

   இவளது நலம் விரும்பிகள் இவளை கையில் குழந்தையுடன் பார்த்தவுடன்...நான் அன்றைக்கே சொன்னேன்..!!!!.அந்த கடவுள் உன்னை கைவிட மாட்டார் என்று!!!!!!..பார்த்தாயா..உன்னை போலவே ஒரு அழகான பெண் ......என்று  தொடர்ந்து அவர்களின் இஷ்ட தெய்வங்களுக்கு பெருமை சேர்த்துக்கொள்ள தொடங்கி இருந்தார்கள்...இவள் அதை கேட்க்கும் போது.. தன் மனதிற்க்குள் சிரித்துக் கொண்டாள்...

   வீட்டிற்கு வரும்போது அந்த குழந்தை அவளிடம் கேட்டது...அம்மா அங்கு அவர்கள் கடவுள்.... கடவுள் என்று கேட்டார்களே அப்படின்னா என்னம்மா? ஏன் அவர் உனக்கு உதவி செய்ய வேண்டும் எனக்கேட்டாள் அந்த குழந்தை....

  அதற்க்கு இவள் அது ஒன்னும் இல்லை.....மனிதர்கள் பொதுவாக எது மறைக்கப்பட்டு இருக்கின்றதோ அல்லது எந்த ஒன்று இல்லையோ அதையே அதிக ஆர்வமாக பின்பற்றுவார்கள்..அதில் என்ன இருக்கின்றது என  பார்ப்பதற்க்கு.....கடைசியில்தான் தெரியவரும் அதில் எந்த் ஒரு பயனும் இல்லையென்று....அப்படி ஒரு விசயம்தான் கடவுள்...இது ஒரு பெரிய கதை....இதெல்லாம் இப்ப நான் உனக்கு சொன்னால் புரியாது...நி வளர்ந்த பிறகு அது உனக்கு தானாகவே... புரியும்...என்றாள்...

அதற்க்கு பிறகு அந்த குழந்தை அந்த கேள்வியை அம்மாவிடம் கேட்கவே இல்லை....அவளிடத்தில் கடவுளும் இல்லை.... அவள புரிந்து இருந்தாள் என்பதைவிட...அவள் கடவுளை புரிய வேண்டிய அவசியம் அவளுக்கு இருக்கவில்லை....



குறிப்பு:

SYNTHETIC GENOME என்ற ஒன்றை VENTER என்பவர் தனது ஆராய்ச்சி கூடத்தில் செய்து நிருபித்து உள்ளார்.

LONDON ல் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒரு முன்னேற்றமாக mtDNA வை மாற்றி பிறக்கும் குழந்தையை mtDNA SYNDROME ல் இருந்து காப்பாற்ற முடியும் என்பதை நிருபித்து இருக்கிறார்கள்.

மற்றபடி நான் சொன்ன அந்த VMAT2 GENE ல் மற்றம் என்பது என் கற்பனையே....என்னைபொறுத்தவரையில் இந்த மதிரியான விசயம் நடக்க வெகு காலம் இல்லை என்பது தான் உண்மை...ஒருவேளை நான் சொன்ன முறையிலேயே நடக்க வாய்ப்பு இருக்கின்றது.

ஆனால் நம் கடவுள் நம்பிக்கை சார்ந்த விசயங்களுக்கு காரணமாய் இருப்பது VMAT2 என்ற GENE தானே தவிர கடவுள் இல்லை.. .....
  


1 comments:

TERROR-PANDIYAN(VAS) said...

@கணேஷ்
//மனிதர்கள் பொதுவாக எது மறைக்கப்பட்டு இருக்கின்றதோ அல்லது எந்த ஒன்று இல்லையோ அதையே அதிக ஆர்வமாக பின்பற்றுவார்கள்..அதில் என்ன இருக்கின்றது என பார்ப்பதற்க்கு.....கடைசியில்தான் தெரியவரும் அதில் எந்த் ஒரு பயனும் இல்லையென்று....அப்படி ஒரு விசயம்தான் கடவுள்... //

நீ ரொம்ப நாளா காமடி பண்ணிட்டு இருக்க. வில் மீட் அட் ரைட் டைம்... :)