நம்பிக்"கை"

    வைத்தியின் அண்மைய சாதனை என்றால் ஸ்டெம் செல்களை வைத்து ஒரு உறுப்பை உடலிலேயே  வளரச்செயவதுதான்..ஏற்கனவே இதே ஸ்டெம் செல்களை வைத்து  செல் குறைபாடுகளை ஜீன்தெரபி மூலம் சரி செய்து கொண்டு இருந்தார்கள்..... ஸ்டெம் செல்களை தேவையான திசுக்களாக அல்லது உறுப்புகளாக மட்டுமே  தனியாக வளரவைத்து பின் அதை பாதிப்படைந்தோரின் உடலில் பொருத்தி அந்த குறையை சரி செய்தனர்...

       இந்த முறையில் ஒரு முன்னேற்றமாக வைத்தியின் முறை இருந்தது...அது..ஸ்டெம் செல்களை தனியாக வெளியே வளர வைக்காமல் நேரடியாக அதை உடம்பிலேயே வளர வைப்பது அதாவது ஒருவருக்கு இன்னொரு காது வேண்டும் என்றால் அதுக்கு தேவையான ஸ்டெம் செல்களை பிரித்து எடுத்து அதில் உள்ள ஜீன்களை செயற்கையான கட்டுப்பாட்டில் வைத்து  அதான் மூலம் உருவாக்கும் ப்ரோடின்களை சரியான வகையில் கட்டுபடுத்தி ஒரு புதிய காதை உருவாக்கிவிடுவார்...இதற்கு அந்த ஆள் அவரது ஆய்வுகூடத்தில் சில மணிநேரங்கள இருந்தால் போதுமானது...  அவருக்கு உடம்பில் எந்த இடத்தில காது வேண்டுமோ அங்கு கிடைக்கும்...

     வைத்தி இதை சில எலிகளின் மீது மட்டும்தான் செய்து பார்த்து இருந்தார்...என்னதான் வைத்தி பெரிய ஆளாக இருந்தாலும்.இந்த ஆராய்ச்சிகளை மருத்துவமனைகளில் செய்ய முடியவில்லை..சட்டபிரச்சினை ஒருபுறம் இருந்தாலும்..சில மதவாத சக்திகள் இந்த முயற்சியை விரும்பவில்லை..எனவே  யாருக்கும் தெரியாமல் அவரது ஆய்வுகூடத்தில் இதனை செய்தார்

     மொத்தம் மூன்றுபேர் வைத்தியோடு சேர்த்து.... ஒருவள் புனி..கல்லுரி முடித்து விட்டு ஆய்வுசெய்யும் மாணவியாக சேர்ந்தாள்..இப்போது வைத்தியின் கண்டுபிடிப்பில் பாதி அறிந்தவள்..மற்றொருவள் பணியாள்.. சிறு சிறு மருத்துவ வேலைகள் செய்வாள்...

      புனியை வைத்தி தனது சொந்த மகள் போலத்தான் வைத்து இருந்தார்..ஆனால் புனிக்கு விளையாட்டுத்தனம் அதிகம்.....முதலில் அவளுக்கு எதையும் கற்றுகொள்ள ஆர்வம இல்லையென்றாலும் வைத்தியின் இந்த ஸ்டெம்செல் ஆராய்ச்சி புனிக்கு கொஞ்சம் புதுமையாக ஆர்வமாக இருந்தது..சந்தேகங்களை கேட்டு ஒருவழியாக அவளும் இதை கொஞ்சம் படித்து இருந்தாள்...

    இந்த முறையை ஒரு மனிதன் மீது செய்து பார்க்கவேண்டும் என்பதே அவரின் இப்போதைய விருப்பம்...அதை புனியிடம் சொன்னபோது..

    "அதில் ஏதும் பிரச்சினை ஏற்ப்பட்டால் என்ன ஆகும் என்பதையும் நினைத்து பார்க்கவேண்டும்" என்றாள்

      "ஆமாம் பெரிய பிரச்சினை...இதை யாருக்கும் தெரியாமல் செய்யவேண்டும் முடிந்த வரை நமது ஆராய்ச்சியை பற்றி தெரியாதவராக இருந்தால் நல்லது... பேசி சம்மதிக்க வைக்கலாம்" என்றார்

      "அதைவிட யாருக்கு ஒரு குறை இருக்கோ அவரிடம் உங்க குறையை நீக்குகிறோம் என்று சொல்லி இதை செய்ய முயற்சிக்காலமே" என்றாள்

     "ஆமாம் இதுவும் நல்ல யோசனைதான்... அந்த ஆளும் தானாக முன்வந்து ஒத்துகொள்ள வாய்ப்பு இருக்கின்றது உடனடியாக இதுக்கு தேவையான ஆளை தேட வேண்டும்" என்றார்

      அன்று மாலையில் எல்லோரும் கிளம்பும் முன் அந்த பணியாளிடம்  ஏதாவது உடல் குறை இருப்பவர் உங்களுக்கு தெரிந்தவர் என்றால் அழைத்துவருமாறும் அந்த குறையை சரி செய்யலாம் என்று சொன்னார்..அவளும் சரி என்றாள்

      இரண்டு நாள்கள கழித்து அந்த  பெண் தனக்கு ஒருவனை தெரியும் அவன் சிறுவயதில் வலது கை பாதியை இழந்தவன்..இப்போது வீட்டில் சும்மாதான் இருக்கிறான்..நீங்கள் சம்மதித்தால் நாளைக்கு அவனை அழைத்து வருகிறேன் என்று சொல்ல வைத்தியும் சம்மதித்தார்...

     அவன் வந்தான்...ஒல்லியாக இருந்தான்..புனியை கண் கொட்டாமல் பார்த்தான்...அவனது உடல் நிலையில் சில பொதுவான சோதனைகள் செய்யபட்ட பின்னர்...வைத்தி அவனிடம்

"நீங்கள் இழந்த கையை திருப்பி வளர வைக்க முடியும் நீங்கள் சம்மதித்தால்"

      "அது எப்படி அதான் முடிஞ்சு போச்சே...இது என்ன மரமா? கிளை ஓடிந்தவுடன் அந்த இடத்தில இருந்து தானாக ஒரு புது கிளை தளிர்த்து வர." என்றான் சிரித்து கொண்டே..

     "ஆமாம் நமதும் உடம்பிலும் அது சாத்தியம்தான்...அந்த மாதிரி தளிர்த்து வரும் அதிசயத்தைத்தான் நான் இப்போது
உனக்கு செய்ய போகிறோம்" என்றார்

"எப்படி மந்திரம் சொல்லியா? இல்லை ஏதாவது பூஜை செய்தா?"

"இல்லை இது அறிவியல்.... மந்திரம் இல்லை தந்திரம் இல்லை..முழுவதும் நம்பலாம்"என்றார்

"சரி என்னை என்ன செய்வீர்கள் ..எனக்கு ஏதாவது ஒன்று ஆனால்?"கேட்டான்

     "ஒன்றும் ஆகாது..ஏற்கனவே சோதித்து இருக்கிறோம்...என்ன ஒருவேளை கை வளராமல் போகுமே தவிர மற்றபடி ஒரு தீங்கும் இருக்காது...இது உண்மை நம்பலாம்" என்றார்

     அருகில் இருந்த புனித..."ஒரு தடவை முயற்சி செய்து பாருங்களேன் கை கிடைத்தால் உங்களுக்குத்தானே நல்லது" என்று சொல்ல அவளை உற்று பார்த்தான்

"சரி சம்மதிக்கிறேன் எனக்கு எதுவும் ஆககூடாது" என்றான்


     அடுத்த வந்த நாள்களில் வைத்தியும் புனியும் நிறையா உழைத்தார்கள்..செல்களின் வளர்ச்சி விகிதம்..அதுக்கு தேவையான ப்ரோடின்கள்...அதை கொடுக்கும ஜீன்கள்..அதை எப்படி தகுந்த நேரத்தில் கட்டுபடுத்துவது போன்றவிசயங்களை சேகரித்தார்கள்..

    அன்று மாலை  அவனை ஒருமுறை சோதித்து பார்த்துவிட்டு...எல்லாம் தயாராய் இருந்த அந்த அறைக்குள் கொண்டு போனார்கள்..வெட்பநிலை முழுவதும் சரியாக கட்டுபடுத்தபட்டு இருந்தது...ஒரு சிறிய நீண்ட கண்ணாடி குடுவை அவனது கையில் பொருத்த பட்டது..அதன் மேல் சில துவாரங்கள்..இருந்தன...சில வயர்கள் அருகில் இருந்த கணினியில் இணைக்கு பட்டு இருக்க...அவன் மிரண்டு போய் இருந்தான்...

       வைத்தி அந்த கண்ணாடி குடுவையில் இருந்த துவாரத்தில் ஒரு ஊசியை   அவனது கையில் ஒடிந்து இருந்த முனையில் அதை செலுத்தினார்...அருகில் இருந்த புனி சரியாக எப்போது செலுத்த பட்டது என்ற நேரத்தை குறித்து கொண்டாள்...

   முழுவதும் அந்த செல்கள் வளர்ச்சி அடைய ஆகும் நேரத்தை முன்னரே அவர்கள் கணித்து இருந்தார்கள்..போதுமான வளர்ச்சி அடைந்த பிறகு அந்த செல்களின் வளர்ச்சியை நிறுத்த ஒரு ஊசி போடவேண்டும்...அதாவது அந்த செல்கள் பல்கி பெருகாது...இவர்களின் கணக்குப்படி அதிகாலையில் ஐந்து மணிக்கு அந்த ஊசி போட்டு செல்லின் வளர்ச்சியை நிறுத்த வேண்டும...

     அவனை முழுவதும் மயக்கபடுத்தி இருந்தார்கள்..சிறிது நேரம் தொடக்க நிலை செல்கள் பல்கி பெறுகி வளர்ச்சி அடைவதை உறுதி செய்துவிட்டு வைத்தியும் புனியும் ஒரு அறைக்கு செல்ல..அந்த பணியாள் அங்கு இருந்தாள்...


       வைத்திக்கு தூக்கம் வரவில்லை..அவ்வப்வோது போய் பார்த்துவிட்டு வந்தார்.....

     "இதுமட்டும் நிறைவேறி விட்டால் என் வாழ்கையின் லட்சியம் நிறைவேறின மாதிரி" என்றார்

"இதில் என்ன சந்தேகம் கண்டிப்பாக நிறைவேறும்" ..

"பார்ப்போம் இன்னும் சில மணி நேரம் இருக்கு"என்றார்



அந்த ஊசியை போடவில்லை என்றால என்ன ஆகும்?கேட்டாள்



       "அவன் கையின் வளர்ச்சி நிற்காமல் தொடர்ந்துகொண்டே இருக்கும் அவ்வளவுதான்" என்றார்

    கொஞ்ச நேரத்தில் புனி அப்படியே சாய்ந்து தூங்கியே விட்டாள்..வைத்தி அந்த ஐந்து மணிக்காக காத்து இருந்தார்...

  ஐந்து மணிக்கு முன்னரே புனியை எழுப்பி..அந்த மருந்தை எடுத்துக்கொள்ள சொல்லி இருவரும் கிளம்பி அந்த அறையை நோக்கி சென்றார்கள்..அங்கே..அவன் இல்லை..ஒரு ஓரத்தில் அந்த பணியாள் விழுந்துகிடந்தாள்...

அவசரமாக அவளை மயக்கத்தில் இருந்து எழுப்பி.

அவன் எங்கே?

"என்னை தாக்கிவிட்டு போய்ட்டான்?

"அதான் ஏன்?"என்றார் கோபமாய்

    "அவனுக்கு முழு கையும் நல்லா வளர்ந்து இருந்தது...எழுந்தவுடன் உங்களை அழைத்துவருவதாக சொன்னேன்..ஆனால் அவன் வேகமாக எல்லாத்தையும் நீக்கிவிட்டு...வேண்டாம்..நான் போகிறேன்..அவர் வந்தால் துட்டு கிட்டு கேட்பார்...அதோடு என்னை வைத்து விளம்பரம் செய்வார்கள்...அதுக்கு நான் இப்படியே போய்விடுகிறேன் என்றான்..நான் தடுத்தேன் தள்ளிவிட்டு ஓடிட்டான்".என்றாள்




(இப்போது உள்ள (genetic) மருத்துவ துறையில் அதிகமாக ஆராயப்படுவது இந்த ஸ்டெம்செல்கள்தான்...அண்மையில் AIDS யை ஸ்டெம் செல்களை வைத்து குணப்படுத்தி இருக்கிறார்கள்...இன்னும் நிறையா எதிர்பார்க்கலாம்..அதில் ஒன்றுதான் மேலே சொன்ன கற்ப்பனை....
    திசுக்களை,செல்களை  வெளியில் வளர்த்துதான் பயன்படுதுகிறார்கள்...வரும் காலங்களில் சில முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம்..))))) 

9 comments:

Ramesh said...

Maruthuvakadhai splista irupeenga pola. Kadhai arumai. Mudiva vera madhiri yosichu innum swarasya paduthirukkalamnu thonudhu.

ஆனந்தி.. said...

super..super.super...ganesh..!!செம சுவாரஸ்யம் இந்த கற்பனை...புனி தான் ஏதோ ஆராய்ச்சியில் லொள்ளு பண்ண போகுதுன்னு நினைச்சேன்...முடிவு சூப்பர்...நல்ல பதிவு...எனக்கு புடிச்ச பதிவு...குட் கணேஷ்...:)))

கணேஷ் said...

பிரியமுடன் ரமேஷ் said.//

...ஆமாம் முடிவை கொஞ்சம் சுவாராசியமாக கொடுத்து இருக்கலாம்..அடுத்த கதைகளில் கவனித்து கொள்கிறேன்..

கருத்துக்கு மிக்க நன்றி

கணேஷ் said...

ஆனந்தி.. said...//

புனி நல்ல பொண்ணு லொள்ளு பண்ண மாட்டா..))
ரெம்ப நன்றிக்கா..

ஆனந்தி.. said...

ஓகே..ஓகே..:)))

ஆனந்தி.. said...

இதை தொடர்கதையா கூட போட்டு இருக்கலாம் கணேஷ்...ramesh சொல்றது கூட கரெக்ட் தான் ...அவனுக்கு கை அதிகமா வளர்ந்து என்ன பண்ணுறான்னு இன்னும் கொஞ்சம் நகர்த்தி இருக்கலாம் தான்...ஆனால் short ஸ்டோரி க்கு இந்த முடிவு நீட்...:)))

கணேஷ் said...

ஆனந்தி.. said... //

இப்பவும் தொடர் கதையாக எழுதலாம் ..ஆனால் யாரவது படிக்க வேண்டுமே)))

sathishsangkavi.blogspot.com said...

Nice...

கணேஷ் said...

சங்கவி said... //

கருத்துக்கு நன்றி..