இரண்டாவது சூரியகுடும்பம் (EXTRA SOLAR PLANETS)

        அறிவியலின் மற்றுமொரு வெற்றியாக நமது பிரபஞ்சத்தில் இருக்கும் இன்னுமொரு (EXTRA SOLAR PLANETS) சூரியக் குடும்பம் இருப்பதை கண்டுபிடித்து இருக்கின்றார்கள்.

       இதை EXTRA SOLAR PLANETS வகையில் சேர்த்தாலும்  இந்த EXTRA SOLAR PLANET வகையில்  அதிக கோள்களை கொண்ட ஒரு நட்சத்திரம் இதுதான்..எனவேதான் இதை இரண்டாவது சூரியக் குடும்பம் என் கருதுகிறார்கள். .


      ஆனால் இதன் உணமையான அறிவியல் பெயர் HD10180... இது இருப்பது நாம் இருக்கும் இடத்தில இருந்து 127 ஒளி ஆண்டுகள் தொலைவில்.... இதை கண்டுபிடித்தவர்கள் European Southern Observatory சேர்ந்த ஒரு அறிவியல் அய்வுக்கூட அறிவியலர்கள்.

     இந்த சூரிய குடுப்ம்பத்தில் மொத்தம் ஏழு கோள்கள இருப்பதாக கண்டு பிடித்து இருக்கின்றார்கள். இதில் ஐந்து கோள்களை உறுதி படுத்தப்பட்டு இருக்கின்றன..மற்ற இரண்டு கோள்கள இருப்பதற்கு உண்டான  தடயங்கள் அங்கு இருப்பதால்  மொத்தம் ஏழு கோள்கள  இருக்கலாம் என நம்புகிறார்கள்.. ..இந்த ஏழுகோள்களும் நமது சூரியனை போன்ற ஒருநட்சத்திரத்தை சுற்றிவருவதாக சொல்லுகிறார்கள்.

       அந்த நட்சத்திரம் கிட்டத்தட்ட நமது பூமியை போல 1.5 மடங்கு பெரியது.இதனை அந்தகோள்கள ஒருமுறை முழுவதும் சுற்றிவர 6 முதல் 600 நாட்கள் ஆகின்றன என்பதை தோராயமாக கணக்க்கிட்டுள்ளார்கள்

       இப்பொது அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன..ஆராய்ச்சிகள் தொடர்ந்துகொண்டு இருக்கின்றன.. கட்டாயம் நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம்....


   கிழே உள்ள இணைப்பில்  அந்த EXTRA SOLAR PLANETS எப்படி இயங்குகின்றது என்பதை செயற்கையாக உருவாக்கி இருக்கிறார்கள் முடிந்தால் பாருங்கள்.... 

http://www.youtube.com/watch?v=5kHJMnWPKdI&feature=player_embedded

8 comments:

singam said...

நண்பர் கணேசுக்கு,
உங்களின் இந்தப் பதிவுக்கு நன்றி, ஆனால் இதைப் படித்தவுடன் என்னைப்போல் பலரும் சிரித்திருப்பார்கள் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. முதலில் ஒரு விசயத்தை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அதாவது வானவெளியில் நாம் காணும் அத்தனை நட்சத்திரங்களும் ஒரு சூரியன். ஒவ்வொரு சூரியனைச் சுற்றிலும் சில பல கோள்கள் சுற்றிகொண்டிருக்கின்றன. பிரபஞ்சத்தில் மொத்தம் எதனை சூரியன்கள் உள்ளன, அவைகளைச் சுற்றி எதனை கோள்கள் வலம் வருகிறன என்பதை மனிதனாலும், மனிதன் கண்டுபிடித்துள்ள சூப்பர் கம்ப்யூட்டரினாலும் ஒருநாளும் கணித்து கூற இயலாது. ஏனென்றால் பிரபஞ்சம் என்பது எல்லைகள் இல்லாதது.. அதிலுள்ள சூரிய குடும்பங்களும் அப்படியே எண்ணிலடங்காதது..

நீங்கள் இணைத்துள்ள you tube இணைப்பின் தலைப்பை ஒருமுறை நீங்கள் சரியாகப் படித்தால் உங்களுக்குப் புரியும். "நமது சூரியனைப் போன்ற நட்சத்திரமான HD 10180 சுற்றியுள்ள கோள்களின் "அனிமேஷன்"". பலகோடி நட்சத்திரங்களில் ஒன்றை பற்றிய ஒரு பதிவை பதிவு செய்துவிட்டு அதற்கு "இரண்டாவது சூரியக்குடும்பம்" என்று தலைப்பு வைத்தால் படிக்கும் அனைவரும் சிரிக்காமல் என்னசெய்வார்கள்? முடியல...

கணேஷ் said...

நண்பர் சிங்கம் அவர்களே..உங்களின் கருத்துக்கு நன்றி....
மனிதன் சிரிப்பது ஒன்றும் அவ்வளவு பெரிய விசயம் இல்லை என நினைக்கிறேன்...

முதலில் சூரியனில் இருந்து ஆரம்பிக்கிறேன்..
\\\அதாவது வானவெளியில் நாம் காணும் அத்தனை நட்சத்திரங்களும் ஒரு சூரியன்\\\

இதுவரை நமது பூமி சுற்றும் ஒரு மிகபெரிய நட்சதிரத்துக்குத்தான் சூரியன் என்று பெயர் என் நினைத்து கொண்டு இருந்தேன்..அது உண்மை இல்லை என்று சொல்லி இருக்கின்றிர்கள்...அப்படி என்றால் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அந்த நட்சத்திரத்தையும் சூரியன் என்று அழைக்கலாமா?



\\\\கிழே உள்ள இணைப்பில் அந்த EXTRA SOLAR PLANETS எப்படி இயங்குகின்றது என்பதை செயற்கையாக உருவாக்கி இருக்கிறார்கள் முடிந்தால் பாருங்கள்.\\\

நீங்கள் இதை படிக்கவில்லையா? முக்கியமாக அதில் உள்ள செயற்கையான என்ற வார்த்தையை..]



ஒன்று சொல்ல விரும்புகிறேன் இந்த பிரபஞ்சத்தில் ஒரே சூரியன்தான்...அது நமது நட்சத்திரம்...அதற்க்கு பெயர் வைத்தது மனிதன்தான்..அப்படி மனிதன் இந்த பிரபஞ்சதில் உள்ள ஒரு சில பெரிய நட்சத்திரத்துக்கு பெயர் வைத்துள்ளான்...அப்படி சூரியன் இல்லாமல் இருக்கும் நட்சத்திரங்களுக்கு(நட்சத்திர கூட்டத்துக்கு) தனி பெயர் உள்ளன அவை நமது சூரியனின் நிறை அளவை(SOLAR MASS) கொண்டே அளக்க படுகின்றன...

நீங்கள் சிரித்து முடித்து இருந்தால் கிழே உள்ள எழுத்துக்களை GOOGLE ல் போட்டு தேடிப்பாருங்கள்....
Eta Carinae,
Canis Major,
Monoceros, Lepus, Columba and Puppis.

BS,HR
DM: BD/B;CoD/CD/C;CP(D)/P
FK5
G,GD,GR Gl,GJ,NN ...

இதில் இருந்து எனது தவறை நீங்கள் உணர்ந்து இருக்கலாம்....)))))))

அப்படியே இதையும் கொஞ்சம் படித்துவிட்டு சிரிங்கள்..சந்தோசப்படுவேன்....

http://ganeshmoorthyj.blogspot.com/2010/03/corot-9b.html

ஐன்ஸ்டீன் தாத்தா எனக்காக ஒரு வார்த்தையை இந்த உலகத்திற்கு சொல்லி விட்டு பொய் இருக்கின்றார் அது உங்களுக்காக..இங்கே கொடுத்து இருக்கின்றேன்...


If A is a success in life, then A equals x plus y plus z. Work is x; y is play; and z is keeping your mouth shut.


மிக்க நன்றிங்க எனது இந்த சிரிப்புவரும் பதிவை படித்ததுக்கு..உங்களிடம் இருந்து நிறைய கற்று கொண்டேன்...

]

ஜெயந்தி said...

நல்ல தகவல்தான். உங்கள் முந்தைய பதிவு பூமி உருவானதைப் பற்றி

// நமது பூமியும் அப்படி உருவான ஒன்றுதான். அப்படி வெடிக்கும் போது CARBON---- NEON... OXYGEN....SILICON....IRON. போன்ற உயிர் வாழ தேவையான் கனிமங்களும் தூக்கி எறியப்படும். அப்படி தற்செயலாக நட்சத்திரத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட பொருள்கள் சரியாக தற்செயலாக இணைந்து ஒரு உயிர் உள்ள MOLECULES உருவாகி அது பல்கி பெருகி ..பரிணாம வளர்ச்சி பெற்று...மனிதனாக வளர்ந்து இங்கே இதை எழுதிக்கொண்டிருக்கின்றது //
கூறியிருந்ததைப்போல் இன்னொரு சூரியக்குடும்பத்தில் இன்னொரு பூமி இருந்தால் எப்படி இருக்கும்?

கணேஷ் said...

கூறியிருந்ததைப்போல் இன்னொரு சூரியக்குடும்பத்தில் இன்னொரு பூமி இருந்தால் எப்படி இருக்கும்?////

நல்லாத்தான் இருக்கும்.... பார்ப்போம் st. hawking மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்து இருக்கின்றார்..கட்டாயம் வேற்றுகிரகத்தில் உயிரினம் இருக்கலாம் என்று....

Gayathri said...

appo naama thani bhoomi illa..haahaa...super info ganesh

கணேஷ் said...

appo naama thani bhoomi illa..haahaa...super info ganesh/////


ஆமாம் நமது சொந்தகாரங்கள் அல்லது முனோர்கள் எங்கோ ஒரு இடத்தில இருக்கலாம்...என்ன நாம் இன்னும் அவர்களை சந்திக்காமல் இருக்கின்றோம் அவ்வளவுதான்...

Kousalya Raj said...

//இதுவரை நமது பூமி சுற்றும் ஒரு மிகபெரிய நட்சதிரத்துக்குத்தான் சூரியன் என்று பெயர் என் நினைத்து கொண்டு இருந்தேன்..அது உண்மை இல்லை என்று சொல்லி இருக்கின்றிர்கள்...அப்படி என்றால் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அந்த நட்சத்திரத்தையும் சூரியன் என்று அழைக்கலாமா?//

நானும் அப்படி ஒரு சூரியன் என்றுதானே இத்தனை நாள் நினைச்சுட்டு இருந்தேன்.....!? இது என்ன குழப்பம் ?? அதற்கு உங்கள் விளக்கம் பிரமாதம் கணேஷ்.

ம்...தெரிஞ்சுக்க வேண்டியது நிறைய இருக்குப்பா...

:))

Kousalya Raj said...

//ஆமாம் நமது சொந்தகாரங்கள் அல்லது முனோர்கள் எங்கோ ஒரு இடத்தில இருக்கலாம்...என்ன நாம் இன்னும் அவர்களை சந்திக்காமல் இருக்கின்றோம் அவ்வளவுதான்..//


interesting......