காலத்தின் காலம்



    தொடரும் முன்  சில  விசயங்களை ஒருமனதாக நீங்கள் நம்பியாகவேண்டும்...

- ஒரு கதையில் நான் எழுதியது போல இறந்த காலத்தை நாம் கடந்து வந்துவிட்டாலும் இப்போது உள்ள தொழில்நுட்ப வசதிகளை கொண்டு கால இயந்திரத்தில் பின்னோக்கி சென்றால் இறந்த கால உலகம் என்பது நிகழ்காலமாக இருந்துகொண்டு இருக்கும். அதாவது அந்த குறிப்பிட்ட காலத்தில் இருந்த  இடம்,பொருள் என எல்லாமே சரியாக இருக்கும். ஆனால் நீங்கள் மட்டும் புதியவர். அதனால் அவர்களுக்கு நீங்கள் ஒரு வேற்றுகிரக வாசியைப்போல.

- இயற்பியல் விதிகள் என்பது எல்லா இடங்களுக்கும் பொதுவானது. அதுக்கு கால மாற்றங்கள் ஒரு பொருட்டல்ல. இறந்த காலத்திலும் நீங்கள் சென்று இப்போது உள்ள விதிகளை நிரூபிக்கலாம் அல்லது அதை வைத்து எதாவது செய்யலாம்
.
- விடை கிடைக்காத கேள்விகளில்தான் எப்போதும் ஒரு மர்மம மறைந்து இருக்க முடியும். எடுத்துக்காட்டாக கடவுள். உங்களுடைய எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிட்டால் அதில் ஒரு கேள்விக்கான விடையை கண்டிப்பாக அந்த கடவுள் சொல்லி இருப்பார்.  இங்கும் உங்களுக்கு விடையில்லாத சில கேள்விகளை விட்டே செல்கிறேன். அதற்கு விடை இல்லை என்பதைவிட எனக்கு தெரியாது என்பதே சரி.

இனி தொடரலாம்....

       எப்போதுமே தேடல்களில் தோல்வி கிடைப்பதில்லை. அலுப்பு தோன்றுமே தவிர தீவிராமான தேடலில் கண்டிப்பாக ஒரு நேரத்தில் வெற்றியே கிடைக்கும். காலம் தள்ளி போகலாம்.  அப்படியான தேடலில் ஒன்றுதான் இந்த பிரபஞ்சத்தின் தோற்றத்தை அறிவதற்க்கான தேடல்.
மொத்தமாக பார்த்தால் இரண்டு வகை தேடலில் இருந்தார்கள். ஒன்று பூமியில் மட்டும் அதுவும் மனிதனின் மனதுக்குள் கடவுளை உணர்ந்தால் எல்லா ரகசியமும் தெரிந்து விட்டதாகவும் இனி அறிய ஒன்னும் இல்லை என்ற வகையில் ஒரு பிரிவினர் இருந்தனர்.

    இதில் முக்கிய பங்களிப்பு என்றால்  உங்களுக்கு பரிச்சயமான உண்மையான கடவுள், சாமியார்கள், போலியான சாமியார்கள்  எல்லாம் அடங்குவார்கள். கடவுளின் கிருபை, சாமியார்களின் திறமையான செயல்களை நேரிலோ அல்லது தொலைக்காட்சியிலோ அல்லது மறைத்து வைக்கபட்டுள்ள கேமராக்கள் மூலம் நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் இதைப்பற்றி தொடராமல் அடுத்த வகை தேடலுக்கு செல்கிறேன்.

     மற்றொன்றான  பூமியில் இருந்து கொண்டு பிரபஞ்சத்தை ஆராயும் இலக்கில் வெளியில் தேடுவதில் எனக்கு இதில் நிறையா நம்பிக்கை உண்டு. முதலாம் ஒன்றில் சுத்தமாக இல்லை.

    அதாவது இந்த பிரபஞ்சத்தை சில விதிகளை கொண்டு விளக்குவது , இது இப்படி இருக்கலாம் என்று முதலில் அனுமானித்து சொல்லிவிட்டு பின்னர் அதனை கணித சமன்பாடுகள் கொண்டோ சில விதிகளை மையமாக வைத்தோ  இப்படித்தான் என்று நிரூபிப்பது  என்பது எப்போதுமே என்னை கவரும் ஒன்று.

     ஏனென்றால் இப்போது ஒரு விதியோ அல்லது சிறு கணித சமன்பாடோ இந்த பிரபஞ்சம் முதலில் இப்படித்தான் உருவாகியது என்று உங்களுக்கு நிருபித்துவிட்டால் அதுதான் கடவுள்  என நம்பியாக வேண்டும். இல்லாமல் இந்த விதியில்தான் உருவாக வேண்டும் என்று யாரோ ஒருவர் செய்து இருக்கிறார் என்றால் ஏற்க்கனவே நான் சொல்லி நீங்கள் ஒருமனதாக நம்பியபடி  எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்க கண்டிப்பாக உங்களுக்கு கடவுள் ஒரு கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டும். எனவே இந்த கேள்வியை அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள்.

   இந்த தேடல் முறையில் பல முயற்சிகள் நடந்து கொண்டு இருந்தாலும்  இங்கு ஒன்றை மட்டும் பார்க்கலாம்.

     பிரபஞ்சத்தின் பிறப்பை அது உருவாகிய காலத்துக்கு பின்னோக்கி சென்று பார்ப்பது என்பது கொஞ்சம் சிரமமானது. ஆனால் அந்த இடத்துக்கு நமது கற்பனை நிறைந்த அறிவின் மூலம் பயணித்து இப்படி இருந்திருக்கலாம் என்று இப்போதைக்கு சொல்லிவிட்டு அதை யாரவது வந்து நிரூபிப்பார்கள் என்ற நம்பிக்கையில் காத்து இருக்கிறோம்.

      அதோடு ஏன் பின்னோக்கி செல்கிறோம் முன்னோக்கி சென்றால் என்ன நடக்கும் என்ற கேள்விக்கு விடையை காணத்தான் ஒரு பிரிவினர் சில  முயற்சிகளை  செய்துகொண்டு இருந்தனர்.

      அதன்படி காலத்தில் முன்னோக்கி சென்று அப்போது இருக்கும் பிரபஞ்ச மாற்றங்களை வைத்தும், ஏற்க்கனவே இருக்கும் பிரபஞ்ச விளக்க விதிகளை அதனோடு ஒப்பிட்டுப்பார்த்து தெளிவு பெறுவது. இதன்மூலம் சில முடிவுபெறாத விஷயங்கள் விளங்க வரலாம் அல்லது எதாவது புதியதாக நிகழ்ந்து நாம் இதுவரையில் நம்பிக்கொண்டிருக்கும் விஷயங்கள் பொய்யென மாறி புதிய  ஒன்று கிடக்கலாம்.

     அந்த நம்பிக்கையில் இரண்டு பேர் அந்த இயந்திரத்தில் ஏறி பறக்க தயாராய் இருந்தார்கள். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகள் என்றால் அங்கு இருக்கும் நிலையை அப்படியே இங்கு இருப்பவர்களுக்கு விவரிப்பது அதன்பின் ஆய்வுகளுக்கு பின் இங்கு இருந்து அனுப்பப்படும் ஆணைகளுக்கு ஏற்ப்ப அங்கு செயல்படுவது.

      இந்த வேலைக்கு ஏன் ரோபோட்டை அனுப்ப கூடாது என்றால் எல்லா நிலைமையிலும் யோசித்து செயலப்டுவது என்பது அவைகளுக்கு இன்னும் கற்றுத்தரவில்லை. ஒருவேளை மனிதனின் பாதுகாப்புக்காகவும் இருக்கலாம்.

அவர்களுக்குள் நடந்த உரையாடலை இங்கே தருகிறேன்...

"எல்லாம் சரியாக இருக்கிறதா? பிரபஞ்சம்? நமது  பூமி?

     "பிரபஞ்சம் ரெம்பவே விரிவடைந்து இருக்கிறது...ஆனால்..நமது பூமி இருக்கிறது அங்கு மனிதர்கள் இல்லை?"

"அப்படின்னா எங்கே போனது மனித இனம்?"

(நீண்ட மணிநேர இடைவெளி)

"புதியதாக கிரகம் இருக்கிறது அதுவும் சூரியனை சுற்றுகிறது அதில் இருக்கிறார்கள்"

"ஏற்கனவே இருந்த ஒன்றா?"

"இல்லை புதியது..அதோடு சூரியன் ரெம்ப பெருசா விம்மி இருக்கிறது"

"அதான் அவர்கள் கிரகம் மாற்ற காரணம். எப்படி மாற்றினார்கள் என்று அறிய முடிகிறதா?"

(நீண்ட மணிநேர இடைவெளி)

"ஈர்ப்பு விசைக்கான  துகளை கண்டறியும் சாத்தியம் இருக்கிறது, அதை அவர்கள் கண்டு பிடித்து இருக்கலாம் அதன் உதவியோடு இந்த கிரக மாற்றத்தை செய்து இருக்கலாம்"

"எப்படி?"

"இங்கு நிறைய அடிப்படை அணுத்துகள்கள் புதியதாக இருக்கின்றன, ஒருவேளை பிரபஞ்ச விரிதலிலும், கால மாற்றத்திலும் இவைகள் வந்து இருக்கலாம். அதை ஆராய்ந்து அவர்கள் கண்டு பிடித்து இருக்கலாம்"

"சரி அது ஒருபுறம் இருக்கட்டும் பிரபஞ்சத்தின் தோற்றத்தினை அறியும் வேலையை ஆரம்பியுங்கள்"

(நீண்ட மணிநேர இடைவெளி)

"நமது விதிகளின்படி சரியான அளவில் விரிந்து இருக்கிறது, அதோடு பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை கிட்டத்தட்ட நமது விதிகளின் முடிவு சரியாக இருக்கும்"

"அப்படியென்றால்  big bang முறையை சரியானதாக எடுத்துக்கொண்டால் அந்த முதல் அணுவை யார் தோற்றுவித்தது என்பதுக்கு விடை கிடக்கிறதா? "

"ஆய்வில் வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை நான் கொடுக்கும் தகவல்களை வைத்து  நீங்களே முயற்சி செய்து பாருங்கள்."

(பூமியில் இருந்து நீண்ட மணிநேர இடைவெளி)

"சரியாக வரவில்லை. சரி அப்படியே அந்த புதிய கிரக நமது வாசிகள் என்ன ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை கவனித்தால் உதவியாக இருக்கும்"

"முயற்சிக்கிறோம்."

   அந்த  எதிர்காலத்தில் இருக்கும் கிரகத்துக்கு சென்றபோது சில மாற்றங்களை காண முடிந்தது. முதலில் இவர்களின் ஆவலான எப்படி புதிய கிரகத்தை சூரிய மண்டலத்தில் உருவாக்கினார்கள் என்பதற்கான விடையை தேடினார்கள், கிடைத்தது....

     ஈர்ப்பு விசைக்கான துகளை கண்டுபிடித்தபிறகு அவர்களால் விரும்பிய இடத்தில் ஈர்ப்பு விசையை அதிகபடுத்தவோ குறைக்கவோ முடிந்து இருக்கிறது. அப்படி  செய்து வேறு எங்கோ சுற்றிகொண்டிருந்த வாழத்தகுந்த கிரகம் ஒன்றை நகர்த்தி இங்கு வந்து சுத்த விட்டு இருக்கிறார்கள்.

    அதாவது  அந்த கிரகத்தின் முன்னால் ஈர்ப்பு விசையை அதிகபடுத்தி அதுக்கு ஒரு வழியை அமைத்து இழுத்துவந்து இருக்கிறார்கள். நாய்க்குட்டிக்கு பிஸ்கட் கொடுத்து அழைத்து வருவது போல.

     அடுத்து முதல் அணு எப்படி வந்து இருக்கும் என்பதுக்கும் அவர்களிடத்தில் விடை இருந்தது. கண்டுபிடித்தது என்னவென்றால் parallel universe இருக்கிறது.அதாவது நமக்கு இணையான ஒரு பிரபஞ்சம் நமக்கு பக்கத்திலேயே இருக்கிறது.

    அங்கும்  சிலர் இருக்கிறார்கள். அவர்கள் அவர்களின் பிரபஞ்சம் எப்படி உருவாகியது என்பதற்கான விதியை கண்டுபிடித்து விட்டார்கள். அதனை சோதனை செய்யும் பொருட்டு முயற்சி செய்த்ததில் நமது பிரபஞ்சம் உருவாகியிருக்கிறது.

     அதன்படி அவர்களுக்கு பிரபஞ்சம் எப்படி உருவாகியது அல்லது எப்படி உருவாக்குவது என்பது தெளிவாகியிருக்கிறது. ஆனால் யார்? ஏன்? உருவாக்கினார்கள் என்பதற்கான விடை இன்னும் நமது இனத்துக்கோ ஏன் அவர்களுக்கோ தெரிந்து இருக்காது.

     அதுவரை நமது பிரபஞ்ச பிறப்பு என்பது  மற்றவர்களின் சோதனை முயற்சியில் உருவானது. சுருக்கமாக நமது கடவுள் இப்போதைக்கு பக்கத்து பிரபஞ்சத்தில்  அவர் எப்படி உருவானார் அல்லது உருவாக்கப்பட்டார் என்பதை ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்.

ஒருவேளை காலம் அனுமதித்தால் அவர்கள் நம்மிடம் வந்து சொல்லலாம் அலல்து நாம் முயற்சி செய்து அவர்களிடம்  சென்று அறிந்துவிட்டு வரலாம்.

எப்போதும்  எப்படியேனும் ஒரு கேள்வி விடை இல்லமே இருக்கிறது. அதற்க்கான சரியான விடை சொல்லுபவர் வந்து சொல்லாதவரையில்







0 comments: