திரும்பி போகிறேன்...

      அந்த இயந்திரம் தயாராக இருந்தது..ஏறி அமர்ந்தான்.. எந்த ஆண்டுக்கு  பின்னோக்கி போகவேண்டுமோ அதில் அழுத்தினான்..கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் பயணிக்கும்போதுதான் நினைவு வந்தது கிளம்பும் தருணத்தில்  அவன இருந்த நிகழ்காலத்தை குறித்து வைக்க மறந்து விட்டான்...விமானம் தொடர்ந்து இலக்கை நோக்கி வேகமாக பறந்தது..

      தலைப்பை வைத்தவுடன் எழுத தூண்டியது இதை மையமாக வைத்து ஒரு கதையை ஆனால் சில கடந்த நினைவுகளை எழுத சொல்லி இருப்பதால் இதை மற்றொன்றில் பார்க்கலாம்..நான் வலைப்பூ ஆரம்பித்து ஒருவருடம் ஆகின்றது..தொடங்கியதில் இருந்து சொல்வதும் கடந்த ஆண்டில் நடந்தவற்றை சொல்வதும் ஒன்றுதான்...

   சரி கடந்த வருடத்தில் உருப்படியாக என்ன எழுதினாய் என்று தனிமடலில் கேட்டு இருந்தால் ஒண்ணுமே இல்லைஎன்று சொல்லி முடித்து இருப்பேன்..ஆனால் அக்கா கௌசல்யா அவர்கள் பதிவாக எழுத சொன்னதால் இரண்டு  வார்த்தையில் ஒரு பதிவு எழுதி சாதனை படைக்கவிரும்பவில்லை..

தொடங்க காரணம்

      புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உண்டென்பதால் அது சம்பந்தமான சந்தேகங்களை இணையத்தில் தேடிபடித்து...சில நல்ல விசயங்களை தேவைக்கு பிரதி எடுத்துகொள்வதுமுண்டு..இந்த பழக்கம் அதிகமாக....பின்  இணையத்திளியே சேமித்து வைத்து தேவையான போது படிக்கலாம் என்ற எண்ணம வர..இந்த வலைப்பூ என்ற ஒன்றை தொடங்கினேன்..

      தொடக்கத்தில் எனக்குத் தேவையான சில அறிவியல் விசயங்களை சேகரித்து பதிவாக வைத்து இருந்தேன்..அபோதைக்கு வலைப்பூ பற்றி முழுவிசயம் தெரியாது.....அடுத்து சிலரது வலைப்பூக்கள் படித்து நானும் இந்த மாதிரி எழுதினால் என்ன என்று முயற்சிதததின் விளைவு இப்போது இதை எழுதி கொண்டு இருக்கிறேன்..

     நான் முதலில் எனக்காக சேகரித்த விசயங்கள் இன்றும் முதல் பதிவாக இருக்கின்றன..சரி எழுத ஆரம்பித்தது பற்றி சொல்கிறேன்...

      சுஜாதா என்ற ஒரு மாபெரும் மனிதரின் உபயம் எனக்கு பிடித்த அறிவியலை இன்னும் எளிமையாக புரியவைத்தது...இங்கு நான் எழுதியது எழுத போவதுக்கும் காரணகர்த்த அவர்தான்...நிறைய கற்றுகொடுத்திருக்கிறார்..அறிவுரைகள்.....இதை படிக்கலாம்,படிக்க கூடாது...இப்படி செய்யலாம்,கூடாது...இன்னும் நிறைய....அவர் எழுத்துகளில் குறிப்பிட்ட புத்தக பெயர்களை குறித்து வைத்து எவ்வளவு சீக்கிரம் அதை படிக்க முடியுமோ முடித்து விடுவேன்..

       இப்படித்தான் தொடங்கியது எனது வாசிக்கும் பழக்கம்..அறிவியல் மீது இருந்த ஆர்வம அறிவியல் புனைவு கதைகளின் மீது செல்ல..நானே பல புத்தகங்கள் தேர்ந்து எடுத்து படிக்க ஆரம்பித்தேன்..

      வாசிக்கும் பழக்கம அதிகமானதால் என்னவோ கொஞ்சம் எழுதும் ஆர்வமும் வந்தது..அறிவியல் சார்ந்த விசயங்களையே படித்ததால் அதையே எழுத எண்ணி தொடக்கத்தில் சில கட்டுரைகள் எழுதினேன்...அறிவியல் கட்டுரைகள் எழுதினால் யாரும் நேரம் ஒதுக்கி படிப்பதில்லை...அதற்கு பதில் அவர்களுக்கு பெரியம்மா,மருமகள் போன்ற நெடுந்தொடர்கள்,அல்லது படங்கள் பார்ப்பதே ஒரு சிறந்த விசயமாக இருந்து இருக்கலாம்..

எனது வலைப்பூ

      நான் எழுத ஆரம்பித்தபோது நான்கு மாதங்கள் வரை என்னை பின்பற்றியவர்கள் எண்ணிக்கை மொத்தம் 3 பேர்தான்..எனக்கு வந்த முதல் பின்னுட்டம் நினைவிருக்கின்றது..நமது பட்டாஜி எழுதியது..

    பின்னர்தான் தெரிந்து கொண்டேன் எழுதினால் மட்டும்போதாது..மற்ற இடங்களுக்கு சென்று வாக்கு,கருத்துக்கள் இடவேண்டும் அப்போதுதான் அவர்களும் எனது பதிவுகளை படிப்பார்கள் என்று...

     தொடக்கத்தில் கொஞ்சம் முயற்சி செய்து பின் அதையும் கைவிட்டேன்..என் மனநிலை தான் காரணம்..அடுத்த வந்த காலத்தில்  மாதங்களுக்கு ஒன்று இரண்டு அல்லது நான்கு பதிவுகள் வரை எழுதினேன்..

     வாக்குகள்  அதிகம் பெறுவதில் சுத்தமாக எதிர்பார்ப்பு இல்லை..பல நாட்கள் கழித்தே  இன்டலி போன்ற தளங்களில் இணைந்தேன்..இன்னும் எனது பல பதிவுகள் இணைக்காமலேயே இருகின்றன..

      இந்தநிலையில்  தொடர்ந்து பதிவுகள் எழுத காரணம் சுஜாதா சொன்ன ஒரு  விசயம் ஒருவரால் வருஷத்தின் 365 நாள்களும் மொக்கையாக எழுத முடியாதுஎன்பதே . மேலும் மற்ற பதிவர்களை படித்ததில் இருந்து நான் கொஞ்சம் சரியாகதான் எழுதுகிறேன் என்பதை தெரிந்து இருந்தேன்..

     வாக்குகள் பின்னுட்டங்கள் மீது எதிர்பார்ப்பு இல்லையென்றாலும் மற்றவர்கள் நான் எழுதுவதை படிக்கவேண்டும் என்ற எண்ணம நிறைய இருந்தது..அதே நேரத்தில் நான் நன்றாக எழுதினால் கண்டிப்பாக படிப்பார்கள் என்பதில் தெளிவாக இருந்தேன்... ...காரணம் சுஜாதா சொல்லுவார் எனக்கு இருக்கும் புகழ் பெயர் இது எல்லாம் எனக்கு இல்லை நான் எழுதும் எழுத்துக்கு..படிப்பவர்களுக்கு என் எழுத்துதான் பிடித்து இருக்கின்றதே தவிர நான் இல்லைஇதே போல என் எழுத்து நன்றாக இருந்தால் எப்படியும் படிப்பவர்கள் படிப்பார்கள்..இதை இன்று வரை பின்பற்றுகிறேன்

     அதோடு இல்லாமல் ஐன்ஸ்டீன்  "உங்களுக்கு ஒரு விசயம நன்றாக புரிந்து இருக்கின்றது என்றால் அதை உங்களது பாட்டியிடம் விளக்கி அதை அவர்கள் புரிந்து கொண்டு விட்டால்  அந்த விசயத்தை நீங்கள் புரிந்து இருப்பதாக எடுத்துகொள்ளலாம்" என்று சொல்லியிருக்கிறார் எதிர்காலத்தில் என் பேரனோ பேத்தியோ என்னைபோலவே ஐன்ஸ்டீன் விரும்பியாக இருந்துவிட்டால் நான் எழுதும் அறிவியல் பதிவுகள் எல்லாம் வரப்போகும் மனைவிக்கு கொஞ்சம் உதவியாக இருக்கும்...அவள் சிரமப்படாமல் புரிந்து கொள்வாள்... அல்லது இதோ உன் தாத்தா மெனக்கட்டு இதை எழுதி இருக்கார் படித்து தெரிந்துகொள் என்று சொல்லி தப்பிக்கலாம்.. மேலே சொன்ன காரணங்களுக்காகவது நான் எழுதியாக வேண்டும்...


     எழுதுவதால் வாசிக்கும் பழக்கம் குறைந்து இருக்கின்றது...ஆனாலும்.என்னால் சுஜாதாவின் தாரக மந்திரமான தினமும் ஒரு பக்கம் கண்டிப்பாக எதையாது படிக்கவேண்டும் என்பதை ஒருநாளும் மீற முடியாது...

பி(ப)டித்தவை

   வலைப்பூக்களில் படிக்க  விசயங்கள் இருக்கின்றன. நான் தொடரும் நபர்களில் அறிவியல் விசயங்களை நண்பர் சமுத்ரா அழகாக எழுதுகின்றார்.இவரின் கவிதையும் வித்தியாசமானவை...பட்டாஜி விசயங்களை நாசூக்காக புரிய வைப்பது பிடிக்கும்,பிரியமுடன் ரமேஷ் எழுதும் சிறுகதைகள் படிக்க பிடிக்கும்,கவிதைகளில் வெரும்பயன் எழுதுவது பிடிக்கும், அடுத்து உருகி உருகி காதல் கவிதைகள் எழுதும் கௌசல்யா அக்கா,கவிநா போன்றவர்களின் கவிதைகள் பிடிக்கும்.

     நான்கு சுவற்றுக்குள்  புத்தகம் மட்டும் படிக்கும் பழக்கமதான் என்னுடையது, வலைப்பூவின் மூலம் நிறையா உறவுகள் கிடைத்து இருக்கிறார்கள்..அருமையான அக்கா ஆனந்தி.  நிறையா அறிவுரைகள் கொடுப்பார்கள்,இவர் எழுதும் யதார்த்த கவிதை பிடிக்கும்.அடுத்து சௌந்தர் நல்ல நண்பன்...இன்னும்பலபேர்...நீளும் என்பதால் போதும்...

   என் எழுத்து என்றால்,....இலக்கியத்துக்கும் எனக்கும் தூரம் அதிகம்,முயற்சி செய்தும் வரமாட்டேன் என்கிறது..அதனால் சொல்லவருவதை மற்றவர்கள எளிதாக புரிந்து கொள்ள சாதாரண எழுத்தே போதுமானது என்றாகிவிட்டது...,கொஞ்சம் அறிவியல் கொஞ்சம் கற்ப்பனை சேர்த்து கதையாக எழுதுவதால்  கட்டுரைகளை படிப்பதைவிட கொஞ்சம்  படிக்கிறார்கள்..

நன்றிகள்

    உலவு தலத்தில் இருந்து என்னை செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த பதிவரக தேர்ந்து எடுத்து இரண்டு அருமையான புத்தகங்களை பரிசளித்தார்கள்..என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து வைத்த ப.ராமசாமி, ரமேஷ் அவர்களுக்கும் என் நன்றிகள்

    எதிர்பார்ப்பு என்றால் இன்னும் உருப்படியாக நிறைய எழுத வேண்டும்..நல்ல விசயங்களை மற்றவர்கள் விரும்பி படிக்கும்படி கொடுக்கவேண்டும் என்பதுதான் ..அதைத்தான்  முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்..

     இதுவரை எழுதியதில் பிடித்தது என்றால் இந்த பதிவுதான் பல நாட்களாக சொல்ல நினைத்த விசயங்களை ஒரே  இடத்தில சொல்லி விட்டேன்.இதுவரை யாரும் தொடர்பதிவுக்கு அழைத்தது இல்லை..இது என் முதல் தொடர்பதிவு..

     என் வலைப்பூவுக்கு வந்து படித்துவிட்டு ஏதாவது கருத்துகள் சொன்னால் உடனே அதை ஏற்றிருக்கிறேன் ..வாசிப்பவ்ர்களிடம் வேறேதும் எதிர்பார்ப்புகள் இல்லையென்பதால் நான் இன்னும் நன்றாக எழுத நல்ல கருத்துகள் இருந்தால் உதவியாக இருக்கும்.

     அதோடு இதுவரை பலபேர் நான் எழுத மிக உதவியிருக்கிறார்கள் அவர்களுக்கும் என் நன்றிகள். என்னால் முடிந்தவரை நல்ல விசயங்களை இனி வரும் காலங்களில் எழுதுகிறேன்.

  வலையுலகத்தில் சில விதிகள் இருக்கின்றதாம்...ஒரு தொடர்பதிவு எழுதினால் சிலரை எழுத அழைக்கவேண்டும் எனபதுதான் அது..நானும் சிலரை அழைக்கிறேன்..அதோடு இதேமாதிரி யாருவேண்டுமானாலும் கடந்த கால நினைவுகளை எழுதலாம்..யாரும் அழைக்க வேண்டும் என்றில்லை...எழுதுங்கள்.

சமுத்ரா
டெரர் பாண்டியன் 
ஆனந்தி அக்கா
லட்சுமி அம்மா
சசிகுமார்
பிரபாகரன்

46 comments:

ஆனந்தி.. said...

//நான்கு சுவற்றுக்குள் புத்தகம் மட்டும் படிக்கும் பழக்கமதான் என்னுடையது, வலைப்பூவின் மூலம் நிறையா உறவுகள் கிடைத்து இருக்கிறார்கள்..அருமையான அக்கா ஆனந்தி. நிறையா அறிவுரைகள் கொடுப்பார்கள்,இவர் எழுதும் யதார்த்த கவிதை பிடிக்கும்.//

என்னடா என் அன்பு தம்பி...நெஞ்சு வலி வரமாதிரி செண்டிமெண்ட் டச் குடுத்துட்ட..முடியல சாமி...:))))))

கணேஷ் said...

சரி சரி..நெஞ்சு வலி வந்து நின்ன பிறகு இந்த பதிவை தொடருங்க..no escape)))

ஆனந்தி.. said...

தோழி கவுசல்யா உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..கணேஷ் கிட்டே இருந்து இப்படி கூட ஒரு பதிவு போடமுடியும்னு நீங்க கண்டு பிடிச்சதுக்கு...:)))

ஆனந்தி.. said...

/தொடக்கத்தில் கொஞ்சம் முயற்சி செய்து பின் அதையும் கைவிட்டேன்..என் மனநிலை தான் காரணம்..//
ம்ம்...நானும் கவனிச்சிருக்கேன்...ஆனால் நல்ல பதிவுகளை படிச்சு ஊக்கபடுத்த முயற்சி பண்ணலாம் நீ...:))

ஆனந்தி.. said...

/மேலும் மற்ற பதிவர்களை படித்ததில் இருந்து நான் கொஞ்சம் சரியாகதான் எழுதுகிறேன் என்பதை தெரிந்து இருந்தேன்..//

ஓகே..புரிஞ்சுடுத்து...:)))...என்னை தான் நீ சொல்ற...தேங்க்ஸ் டா :)))))))))))

சௌந்தர் said...

டேய் கணேஷ் நீ செய்த நல்ல காரியம் ஆனந்தி அக்காவை எழுத சொன்னது தான் சூப்பர் டா நான் சொன்ன மாதறியே செய்துட்டே

கணேஷ் said...

அய்யோ பெயர் போட மருந்துட்டேனே)))

புரிதலுக்கு நன்றி அக்கா..

ஆனந்தி.. said...

/என்னால் முடிந்தவரை நல்ல விசயங்களை இனி வரும் காலங்களில் எழுதுகிறேன்.//

ஹீ..ஹீ...இந்த கொடுமை வேறயா...ரைட்...நடக்கட்டும்..நடக்கட்டும்...:)))

சௌந்தர் said...

ஆனந்தி.. said...
/மேலும் மற்ற பதிவர்களை படித்ததில் இருந்து நான் கொஞ்சம் சரியாகதான் எழுதுகிறேன் என்பதை தெரிந்து இருந்தேன்..//

ஓகே..புரிஞ்சுடுத்து...:)))...என்னை தான் நீ சொல்ற...தேங்க்ஸ் டா :)))))))))))////

ஏன் ஏன் ஏன் கணேஷ் அவங்க ஊருக்கு போயிட்டு வந்து உனக்கு எனக்கு கதை சொல்றாங்க உனக்கு அது பிடிக்கலையா

Kousalya Raj said...

அழைத்ததிற்காக பதிவு எழுதியதுக்கு நன்றி கணேஷ்.

உன்னை பற்றி இன்னும் அதிகமாக தெரிந்து கொண்டேன் இந்த பதிவின் மூலம்...

//உலவு தலத்தில் இருந்து என்னை செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த பதிவரக தேர்ந்து எடுத்து இரண்டு அருமையான புத்தகங்களை பரிசளித்தார்கள்.//

வாழ்த்துக்கள் கணேஷ். இன்னும் பல சிறப்புகள் பெற என் பிராத்தனைகள்.

ஆனந்தி ரொம்ப ஐஸ் வைக்கிறான் எங்க போய் முடியுமோ தெரியல...கவனமா இருங்க உங்களை வச்சும் ஏதாவது கதை எழுதிட போறான்(அனுபவம்பா...?!) :))

ஆனந்தி.. said...

/Blogger கணேஷ் said...

அய்யோ பெயர் போட மருந்துட்டேனே)))

புரிதலுக்கு நன்றி அக்கா..//


அட பாவி மக்கா....:)))))) நான் தான் அப்போ உளறிட்டேனா :))))

Kousalya Raj said...

@@ஆனந்தி

//ம்ம்...நானும் கவனிச்சிருக்கேன்...ஆனால் நல்ல பதிவுகளை படிச்சு ஊக்கபடுத்த முயற்சி பண்ணலாம் நீ.//

இதை மட்டும் செய்யவே மாட்டான். சொல்லியும் திருந்த மாட்றான்...!

Kousalya Raj said...

@@ஆனந்தி.. said...

/மேலும் மற்ற பதிவர்களை படித்ததில் இருந்து நான் கொஞ்சம் சரியாகதான் எழுதுகிறேன் என்பதை தெரிந்து இருந்தேன்..//

//ஓகே..புரிஞ்சுடுத்து...:)))...என்னை தான் நீ சொல்ற...தேங்க்ஸ் டா//

அவன் கிண்டல் பன்றான்பா :))

சௌந்தர் said...

Kousalya said...
அழைத்ததிற்காக பதிவு எழுதியதுக்கு நன்றி கணேஷ்.

உன்னை பற்றி இன்னும் அதிகமாக தெரிந்து கொண்டேன் இந்த பதிவின் மூலம்...

//உலவு தலத்தில் இருந்து என்னை செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த பதிவரக தேர்ந்து எடுத்து இரண்டு அருமையான புத்தகங்களை பரிசளித்தார்கள்.//

வாழ்த்துக்கள் கணேஷ். இன்னும் பல சிறப்புகள் பெற என் பிராத்தனைகள்.

ஆனந்தி ரொம்ப ஐஸ் வைக்கிறான் எங்க போய் முடியுமோ தெரியல...கவனமா இருங்க உங்களை வச்சும் ஏதாவது கதை எழுதிட போறான்(அனுபவம்பா...?!) :))///

ஹலோ Kousalya அவன் ரொம்ப நல்லவன் ஆனந்தி கா இவங்க சொல்வதை நாம்பாதீங்க நான் சொல்றேன் கணேஷ் நல்லவன் தான்

ஆனந்தி.. said...

//ஆனந்தி ரொம்ப ஐஸ் வைக்கிறான் எங்க போய் முடியுமோ தெரியல...கவனமா இருங்க உங்களை வச்சும் ஏதாவது கதை எழுதிட போறான்(அனுபவம்பா...?!) :))//

ஐயோ..கௌஸ் ...உங்களுக்கு இந்த விஷயம் தெரியாதா...போன கதை என்னை வச்சு தான்....:)) அனுபவம் எனக்கும் கூட...:((((

ஆனந்தி.. said...

/////ம்ம்...நானும் கவனிச்சிருக்கேன்...ஆனால் நல்ல பதிவுகளை படிச்சு ஊக்கபடுத்த முயற்சி பண்ணலாம் நீ.//

இதை மட்டும் செய்யவே மாட்டான். சொல்லியும் திருந்த மாட்றான்...!///

கௌஸ்...அவரு scientist ல..தலிவருக்கு அதுக்கெல்லாம் நேரமில்ல போல..:)))

கணேஷ் said...

அக்கா இது எல்லாம் ரெம்ப ஓவரு..வேண்டாம் விட்ருங்க நான் பாவம்..))))

Kousalya Raj said...

@@ஆனந்தி

//ஐயோ..கௌஸ் ...உங்களுக்கு இந்த விஷயம் தெரியாதா...போன கதை என்னை வச்சு தான்....:)) அனுபவம் எனக்கும் கூட...:((((//

ஐயோ பாவமே இது தெரியாதே எனக்கு...ரொம்ப வருத்த படுறேன் உங்களுக்காக...அடுத்த பார்ட் கூட போட்டு தொடரும் போடுவான் இவன்... :))

கணேஷ் said...

Kousalya said...//

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அக்கா..

ஆனந்தி.. said...

//ஆனந்திகா இவங்க சொல்வதை நாம்பாதீங்க நான் சொல்றேன் கணேஷ் நல்லவன் தான்//

என் இன்னொரு அன்பு தம்பி சௌந்தர்...கௌஸ் க்கும் தெரியும் கணேஷ் உத்தம புத்திரன்னு..ரொம்ப புகழ்ச்சி உடம்புக்கு ஒத்துக்காதுன்னு தான் அப்படி சொல்லிருக்காங்க...நிஜமாவே உன்ன மாதிரி நல்ல புள்ள கணேஷ் ...:))) (இப்ப என்ன பண்ணுவ..இப்ப என்ன பண்ணுவ..??)

ஆனந்தி.. said...

//ஐயோ பாவமே இது தெரியாதே எனக்கு...ரொம்ப வருத்த படுறேன் உங்களுக்காக...அடுத்த பார்ட் கூட போட்டு தொடரும் போடுவான் இவன்... :))//

ஹ ஹ...அதான் அந்த பார்ட் லையே நான் மிரட்டி இருக்கேன் வெடி குண்டு போடுவேன்னு...நாமளும் எத்தனை நாள் தான் சூப்பர் னு பொய் சொல்லிட்டு இருக்கிறது கௌஸ்...:)))

கணேஷ் said...

நாமளும் எத்தனை நாள் தான் சூப்பர் னு பொய் சொல்லிட்டு இருக்கிறது கௌஸ்...:)))//

இப்பதான் உண்மை வெளியில் வருது)))

சௌந்தர் said...

ஆனந்தி.. said...
//ஆனந்திகா இவங்க சொல்வதை நாம்பாதீங்க நான் சொல்றேன் கணேஷ் நல்லவன் தான்//

என் இன்னொரு அன்பு தம்பி சௌந்தர்...கௌஸ் க்கும் தெரியும் கணேஷ் உத்தம புத்திரன்னு..ரொம்ப புகழ்ச்சி உடம்புக்கு ஒத்துக்காதுன்னு தான் அப்படி சொல்லிருக்காங்க...நிஜமாவே உன்ன மாதிரி நல்ல புள்ள கணேஷ் ...:))) (இப்ப என்ன பண்ணுவ..இப்ப என்ன பண்ணுவ..??)////

அட இவன் என்னை விட நல்ல பையன்....

ஆனந்தி.. said...

//டேய் கணேஷ் நீ செய்த நல்ல காரியம் ஆனந்தி அக்காவை எழுத சொன்னது தான் சூப்பர் டா நான் சொன்ன மாதறியே செய்துட்டே//

ஓய்..சௌந்தர்...எனக்கு எங்காவது ஊர் சுத்திட்டு:))) வந்தால் தான் தொடர் பதிவு எழுத மூட் வரும்..2022 வில் உலக சுற்று பயணம் முடிஞ்ச பிறகு கணேஷ் விருபடியும்,உன் விருப்பபடியும் எழுதுவேன்...

ஆனந்தி.. said...

//அட இவன் என்னை விட நல்ல பையன்....//
இப்படி சொல்லியே நீ ரொம்ப நல்லவன் ஆயட்டியே...இனி ஒண்ணும பண்ண முடியாது சவுந்தர்..மன்னிச்சுக்கோ..நீ ரொம்ப நல்லவன்...:)))

Kousalya Raj said...

நாம தான் இந்த புள்ளைங்கள நல்லவங்கனு நினைச்சிட்டு இருக்கிறோம் ஆனந்தி... வெளியில கேட்டாத்தான் தெரியும் :)))

ஆனந்தி.. said...

//நாம தான் இந்த புள்ளைங்கள நல்லவங்கனு நினைச்சிட்டு இருக்கிறோம் ஆனந்தி... வெளியில கேட்டாத்தான் தெரியும் :)))//

கௌஸ்..நாம ரொம்ப நல்லவங்க :)) இல்லையா..அதனால் நம்ம தம்பிங்களும் நல்லவனுங்க தான்...:))) வேற வழியே இல்லை..:))))))

ADMIN said...

தொடருங்கள் கணேஷ்..!

கணேஷ் said...

Kousalya said...

நாம தான் இந்த புள்ளைங்கள நல்லவங்கனு நினைச்சிட்டு இருக்கிறோம் ஆனந்தி... வெளியில கேட்டாத்தான் தெரியும் :)))//

ஏன் நல்லாதானே போய்கிட்டு இருக்கு??)))))

கணேஷ் said...

தங்கம்பழனி said...//

மிக்க நன்றிங்க..

டிலீப் said...

வாழ்த்துக்கள் கணேஸ்
தொடருங்கள்.


காவலன் படத்துக்கு மீண்டும் ஆப்பு

கணேஷ் said...

டிலீப் said...//

வாழ்த்துக்கு நன்றிங்க..

குறையொன்றுமில்லை. said...

கணேஷ் பின்னூட்டம்லாம் உங்களுக்கு வந்ததுதானா>?:) ஆளாளுக்கு கதை அடிச்சிகிட்டு இருக்காங்க.எனக்கு ஒன்னுமே புரியலைப்பா. ஆமா என்னை எப்படி தொடர்பதிவுக்கு செலக்ட் பண்ணினீங்க? அதுவும் ஒன்னுமேபுரியலை. தொடர்பதிவை எழுதலாம்னு தான் இருக்கேன் .ஆனா யாரு படிப்பாங்க கணேஷ்?

Philosophy Prabhakaran said...

ம்ம்ம்... படித்தேன்... ஆனால் நீங்கள் எதைப்பற்றி எழுத அழைத்திருக்கிரீர்கள், அதைப் பற்றி என்ன எழுதுவது என்று சரிவர விளங்கவில்லை... எனது பதிவுலக வாழ்க்கையை திரும்பிப் பார்க்க வேண்டுமா...? அது ரொம்ப மொக்கையா இருக்குமே...

எனினும் நிச்சயம் எழுதுகிறேன்...

கணேஷ் said...

Lakshmi said... //

அதாம்மா எனக்கும் தெரியலை..அவங்களா வந்தாங்க..அவங்களுக்குள் ஏதோ பேசிகிட்டங்கா..போய்ட்டாங்க..இதுவரை புரியலை)))

நீங்க நல்லா எழுதுவிங்கன்னுதான்..

கண்டிப்பா எழுதுங்க நான் படிக்கிறேன்..

கணேஷ் said...

Philosophy Prabhakaran sa//

எழுதுங்கள் நண்பரே.

Kousalya Raj said...

@@ganesh said... //

//அதாம்மா எனக்கும் தெரியலை..அவங்களா வந்தாங்க..அவங்களுக்குள் ஏதோ பேசிகிட்டங்கா..போய்ட்டாங்க..இதுவரை புரியலை)))//


அடபாவி கணேஷ்...! நாங்களா வந்தோமா ?? எங்கள யாருன்னு உனக்கு தெரியாதா...? இப்பதான் புரியுது ஏன் திரும்பி போகிறேன்னு தலைப்பு வச்சேன்னு...!!!? :))

ஆனந்தி great insult பா நமக்கு ?

ஆனந்தி.. said...

கௌஸ்...கணேஷ் க்கு அறிவியல் கதை அதிகமா எழுதி அம்னீசியா வியாதி:) வந்திருச்சு...:)))அனேகமா ஏதோ ஹார்மோன் :)ப்ராப்ளம் ஆ கூட இருக்கலாம்...:)) பாருங்களேன்...இதுக்கும் ஒரு கதை ரெடி பண்ணிருவான்...ஹ ஹ...சின்ன புள்ள தானே...மன்னிச்சு விட்ரலாம்...நம்ம ஊரு பக்கம் வரும்போது என்கவுன்ட்டர் வச்சால் சரியாய்டும்...:)))

ஆனந்தி.. said...

//கணேஷ் பின்னூட்டம்லாம் உங்களுக்கு வந்ததுதானா>?:) ஆளாளுக்கு கதை அடிச்சிகிட்டு இருக்காங்க.எனக்கு ஒன்னுமே புரியலைப்பா.//

புரியலையா ஆன்ட்டி..ஹ ஹ...அது தான் வேணும்...கணேஷ் ப்ளாகுக்கு வந்தால் எதுவும் புரியாது...சமயத்தில் கணேஷ் கே புரியாது...:)))பின்னூட்டம் கூட...:)ஸோ நீங்க சரியா தான் சொல்லி இருக்கீங்க...:)))

கணேஷ் said...

ரெம்ப புகாலாதிங்க அக்காஸ்..)))

Kousalya Raj said...

@@ananthi said...

//நம்ம ஊரு பக்கம் வரும்போது என்கவுன்ட்டர் வச்சால் சரியாய்டும்...:)//

நீங்க சொல்றதும் ஒருவகைல சரிதான்... :)) நான் இப்ப மனசை தேத்திட்டேன்பா அதுக்கு தேங்க்ஸ் ஆனந்தி ! :))

monday ஊர் வரான் அப்ப பாத்துக்கலாம் ஆனந்தி...!

:))

கவிநா... said...

ரொம்ப அருமையான பகிர்வு... பதிவு..... நிறைய விஷயங்கள், ரசனைகள் நன்றிகள்.... நல்லா திரும்பி பார்த்திருக்கீங்க....

//உருகி உருகி காதல் கவிதைகள் எழுதும்
கவிநா
போன்றவர்களின் கவிதைகள் பிடிக்கும்.//

இதெல்லாம் ரொம்ப ஓவரு.... இருந்தாலும் ரொம்ப நன்றிங்க...

கணேஷ் said...

சரி சரி..உங்கள் பதிவை எப்ப போட போறிங்க))

கவிநா... said...

கூடிய சீக்கிரமே..... எப்படியும் 2012 -குள்ளே... :)))

Anonymous said...

நல்லா சொல்லி இருக்கீங்க கனேஷ்

கணேஷ் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said//

கருத்துக்கு நன்றிங்க>...