யார் இந்த Neanderthals....

யார் இந்த neanderthalis...

 கடவுள் மனிதர்களை படைத்தார் எனபதில் எனக்கு கொஞ்சம்கூட உடன்பாடில்லை....

   ஏதேன தோட்டத்தில்  விலா எலும்பில் இருந்து மற்றொரு உயிரை படைப்பதாக நான் ஒரு கிறிஸ்துவ கல்லூரியில் படிக்கும் போது விவிலிய நூலில் படித்து இருக்கிறேன்...

  அது எந்த அளவிற்கு உண்மை என்று எனக்குத்தெரியாது...அப்போதே குளோனிங் முறை இருந்திருந்தால் என்னால் நம்ம்பமுடியும்...இல்லாவிட்டால் அது காதில பூ சுற்றும் வேலையே....

   அடுத்து இந்த உடல் அழியக்கூடியது...ஆனால் அதில் உள்ள ஆன்மா அழியாது..அது என்றும் நிலைத்து இருக்க கூடியது...செய்யும் பாவங்கள் அதில் சேராது...மனிதன் மட்டுமே தனது பூத உடலை இழக்கிறான்... அவன செய்த கருமத்திற்கு ஏற்றாற்போல் அடுத்தவரும் பிறவியில் தகுந்த குளத்தில் பிறக்கின்றான்... ஆத்துமா அப்படியே இருக்கின்றது.....போன்ற வசனங்களை பகவத்கீதையில் படித்து இருக்கிறேன்....... இதுவும் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாது....

   நான் படித்த இரண்டு மத நூல்கள் இந்த இரண்டு மட்டுமே...மற்றவற்றில் எப்படி என்று படிக்கவில்லை...

   என்னை பொறுத்தவரையில் இந்த இரண்டுமே நடக்க அல்லது நடந்து இருக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை....

   அறிவியலின் படி மனிதன் ஒன்றும் ஒரே நாளில் படைக்கப்பட்டு பூமியில் விட்டுவிடவில்லை என்பதே...அதற்க்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன....

 அது பரிணாம வளர்ச்சி... பூமியில் முதல் உயிர் தோன்றியதில் இருந்து இன்று இருக்கும் மனிதன் வரை நடந்தவற்றை பரிணாம வளர்ச்சியின் மூலம் விளக்க முயல்கின்றது அறிவியல்....

 முதல் உயிர் எப்படி தோன்றியது...என்பதை மற்றொன்றில் பார்ப்போம்..இப்போது இந்த மனிதனுக்கு முன்னோர் என சொல்லப்படும் neanderthal ஐ பற்றி கொஞ்சம் பார்த்துவிடுவோம்...

   இந்த neanderthal ஐ நான் ப(பி)டித்தது ஒருவருடத்திற்கு முன்னால் michael crichtion எழுதிய NEXT எனும் நாவல் படிக்கும் போதுதான்...அதற்க்கு முன்னால் எனக்கும் இந்த neanderthal க்கும் ஒரு சம்பந்தமும் இல்லை...

 அந்த நாவலில் neanderthal ஐ ப்பற்றி ஒரு இடத்தில கொஞ்சம் விளக்கமாக சொல்லிருப்பார் மனிதர்....

அவர் அதில் neanderthal genome project ஐ பற்றி சொல்லி இருப்பார். அதாவது இந்த neanderthal genome project ஆனது ஜெர்மனியில் உள்ள MAX PLANCK INST. FOR EVOLUTIONARY ANTHROPOGY  இல JULY 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது முடிவடைந்த்தது MAY -2010.

  இதற்க்கு பின்னர்தான் neanderthal களை பற்றி பல உண்மைகள் தெரியவந்தது.

  இவரின் புத்தகங்கள் படிப்பதே கொஞ்சம் தலையை பிய்த்துகொள்ளும் விசயமாகவே இருக்கும்....இவரை பற்றி சில வரிகள்...(எனக்கு நிறையவே உதவியிருக்கிறார் தனது எழுத்தின் மூலம்).

   இவர் 1942 ஆம் ஆண்டு chicago வில் பிறந்தவர்...என்னை பொறுத்தவரை இவரது science fiction novel கள் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் கொஞ்சம் கஷ்ட்டப்பட்டு புரிந்துகொண்டு எப்படியாவது படித்துவிடுவேன்...அப்படி படித்தது...THE STATE OF FEAR, NEXT, THE RISING SUN...

 இவர் எழுதிய நாவல்களில் பெரும்பான்மையானவை அரசியல் ரீதியாக, சமுக ரீதியாகவும் பெரும் பரபரப்பை ஏற்ப்படுதியவை.... தனது எழுத்தின் மூலம் பெரும் புகழுக்கும்.. பெரும் விமர்சனத்துக்கும் ஆளானவர்.

 மனிதர் 2009 ஆம் ஆண்டு இறந்துவிட்டார்...ஐந்து திருமணம் செய்தவர்...இவரது இறப்பிற்கு பின் அவரது கணினியில் இருந்த அவரது நாவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது... அதன் பெயர். PIRATES LATTIUDE.

சரி இனி neanderthalai ப் பற்றி பார்க்கலாம்...

Neanderthal ன் தோற்றம்.


    neanderthal கள் பொதுவாக 120000 இருந்து 30000 வருடத்திற்கு முன்னால் இருந்திருக்கலாம் என் கணக்கிட்டுள்ளனர்.

  இதன் எலும்பு படிவங்கள் முதன் முதலில் 1856 ஆம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள neander thal என்னும் இடத்தில உள்ள feldhoter குகையில் கண்டுஎடுக்கபட்டது.

  அதற்க்கு பின் பல்வேறு இடங்களில் இது சம்பந்த்தமான படிவங்கள், எலும்புகள்,மண்டை ஓடுகள். மற்றும மற்ற தகவல்கள் கிடைக்கபெற்றன.

    neanderthal ன் உருவ அமைப்பு அனைத்தும் நம்மைப்போல இருந்தாலும் அது நம்மை விட பலத்திலும் உடல் கட்டிலும் பலம் வாய்ந்தது என்று சொல்லுகிறார்கள்.

     அவர்களின் வளர்ச்சி விகிதமும் நம்மைவிட அதிகம்.அதாவது அவர்களின் குழைந்தைப்பருவதில் இருந்து இளைஞ்சர்களாக வளவதர்க்கு எடுத்துக்கொள்ளும் காலம் நம்மை விட குறைவு .மட மட என வளர்ந்திருக்கிறார்கள்.

    அதே போல்தான் அவர்களின் மூளையும். அவர்களின் மூளை சாதாரண மனிதர்களின் மூளையை விட அதிக எடை  கொண்டது. சிந்திக்கும் திறன் எப்படி இருந்தது என்று தெரியவில்லை.

    அவர்களின் கைகள் சாதாரண் மனிதனின் கைகளைவிட சற்று நீளமாக இருந்தததாக சொல்லுகிறார்கள்.

    சரி அவர்கள் எந்த விதத்தில்  மன்திர்களோடு ஒததுபோகிறார்கள் என்று பார்த்தால்..மனிதனின் genome (chromosome sequense) அமைப்பும் அவர்களின் genome அமைப்பும் 99.5% முதல் 99.9% வரை ஒத்து போகின்றதாக கண்டுபிடித்து உள்ளனர். .  

   neanderthal களின் எலும்பை பொடியாக்கி அதில் இருந்துதான் இந்த genome தகவல்களை கண்டுபிடித்து உள்ளனர்.

    பொதுவாக ஒரு இனத்துக்கும் மற்றொரு இனத்துக்கும் இடையே உள்ள தொடர்பு மற்றும், கால இடைவெளி,வேறுபாடு போன்றவற்றை கணக்கிடுவதற்கு ஆராய்ச்சியாளர்கள் mitochondrial DNA (mtDNA) வை சோதிக்கிறார்கள்.

   mtDNA  இது எல்லா உயிர்களிடமும் சாதரணமாக இருப்பது. இதன் பொதுவான வேலை என்பது நாம் உண்ணும உணவை சக்தியாக மாற்றி நம் உடலில் உள்ள cell களுக்கு கொடுக்கின்றது.

    இதன் மற்றொரு முக்கியமான வேலை என்னவென்றால், இதில் உள்ள gene கள் பரம்பரை குணங்களை கடத்துவது. இது அதிகமாக (பெண்களிடம்) அம்மாவிடம் இருந்தே மற்ற (குழந்தைகளுக்கு) உயிர்களுக்கு கடத்தப்படுகின்றது.

    வெவ்வேறு உயிர்களிடத்தில் இருந்து எடுக்கப்பட்ட mtDNA வை ஆராய்ந்து அதுக்கும் அதற்க்கு முன் அல்லது பின் உள்ள உயிர்களுக்கிடையே உள்ள  வேறுபாடு இடைவெளி போன்றவற்றை துல்லியமாக கணக்கிடுகிறார்கள்.

   அதற்க்கு காரணம் mtDNA வின் mutation rate மிக அதிகம். இது தன்னை வெகு விரைவில் மாற்றிக்கொள்வதால் ஒரு நிலையில் இருந்து மற்றொன்றுக்கு எவ்வாறு,எப்படி மாறி இருக்கின்றது என்று எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

  இது எந்த விதத்தில் அதிகமாக நன்மை செயய்கின்ரதோ அதைவிட அதிகமாக நோய்களையும் தருகின்றது.

   இதில் எதாவது குறை ஏற்பட்டால் மனிதர்களை பெருமளவில் பதிக்கின்றது. அது mtDNA disease (syndrome). இது உடல்வளர்ச்சி,மனவளர்ச்சி,பார்வைக்கொளறு இன்னும் அதிகம்ன genetic disease களை உண்டாக்குகின்றது.

   neandathal க்கும் நமக்கும் இடையே உள்ள வித்தியாசங்களை சொன்னதும் இதைவைத்துதான்.

இந்த mtDNA neanderthal க்கும் நமக்கும் வேறுபட்டு காணப்படுகின்றது.

    மேலும் உலகின் பல்வேறு இடங்களில் இருந்து gene கள் எடுக்கப்பட்டு சோதித்து அதை neanderthal ன் genome வோடு ஒப்பிட்டு பார்க்கும் போது neanderthal களின் genome ஆனது ஆப்ரிக்காவில் உள்ளவர்களின் genome ஐ விட ஆப்பிரிகா அல்லாத மக்களின் genome வோடு அதிகமாக் பொறுந்துகின்றது.

   இதைவைத்து சுமார் 60000 ஆண்டுகளுக்கு முன்னரே homo sapians (modern humans) ஆப்ரிக்காவை விட்டு இடம்பெயர்ந்திருக்கலாம் என்று கண்டுபிடித்து உள்ளனர்.

    சுத்தமான அறிவியலில் சொல்ல வேண்டும் என்றால்.. homo neanderthalensis என்ற இனத்தவர்கள் நேரிடையாக அதற்க்கு முன்னால் இருந்த homo erectus என்ற இனத்தவரிடம் இருந்து interbreed ஆனவர்கள். இந்த homo neanderthalinsis இருந்து இப்போது உள்ள நாம் (homo sapians) interbreed ஆகி உள்ளோம்.

   சரி இந்த neanderthal கள் என்னென்ன செய்தார்கள் என்று நான் ஆர்வமாக தேடினேன்... அவர்களும்  மனிதர்களைப்போலவே வாழ்ந்து இருக்கிறார்கள். கற்களால் ஆயுதம் செய்து வேட்டையாடி, தங்களுக்குண்டான உணவை தேடியுள்ளனர்.

    அவர்களின் வேட்டையாடும் மற்றும் பயன்படுத்திய கருவிகளின் முறைக்கு mousterian tradition என்று பெயர்வைதது உள்ளனர்

   சரி அவர்கள் மனிதர்களை போல பேசினார்களா என்றால் இல்லை. அவர்களுக்கு மனிதர்கள் பேச காரணமாய் இருக்கும் FOXP2 என்ற gene கள் அவர்களிடத்தில் இல்லை. இது மனிதர்களுக்கு neanderthal இல இருந்து மனிதர்கள்  interbeed ஆகும்போது வந்திருக்கலாம் என்று சொல்லுகிறார்கள்.

  சரி அவர்கள் சைவமா அசைவமா என்று கேட்டால் அடித்து சொல்லுகிறார்கள் அவர்கள் அசைவம் என்று.

  நி கதைவிடதே யார் சென்று பார்த்தார்கள் என்று நிங்கள் கேட்டால் தொடர்ந்து படியுங்கள்.

  முதலில் இந்த அசைவம்,சைவம்,நடுநிலை, போன்றவற்றிக்கு அறிவியல் பெயர் என்ன என்று பார்ப்போம்.

carnivoros  - அசைவம்

herbiroros  - சைவம்.

omnivoros  - அசைவம்,சைவம்.

   சரி ஒரு உயிர் அசைவமா சைவமா என்று எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்றால் அவற்றின் எலும்பு மஜ்சை (collagen) இல உள்ள nitrogen,carbon,and isotopes போன்றவற்றை ஆராய்ந்து அதில் இருந்து கண்டு பிடிக்கிறார்கள்.

   இன்றைய மனிதர்களில சிலரிடம் நிங்கள் அசைவமா, சைவமா என்றால் கொஞ்சம் கோபமாக அந்த கவிச்சி வாசமே பிடிக்காது.... போங்கள்..... என்று சொல்லுவார்கள்..என்னுடைய ஆசை அவர்களுக்கு இந்த சோதனை செய்து உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே.

   சரி இந்த neanderthal கள் எப்படி அழிந்தார்கள் என்று கேட்டால் ..அவர்கள் எங்கே அழிந்தார்கள் அவர்கள் நம்மில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள். ஆராய்ச்சியாளர்கள்.

   இருந்தும் அழிந்த்தறக்கு காரணம் என்று சொன்னால் தட்பவேட்பநிலையே காரணம் என்கிறார்கள். அவர்கள் அதிக குளிரில் வாழக்கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தட்பவெட்ப நிலையில் ஏற்பட்ட மாற்றத்தை சாமளிக்க முடியாமல் அவர்கள் இறந்திருக்கலாம் என்கிறார்கள்.

   மற்றொன்றில் homo sapians (நாம்) அவர்களை படுகொலை செய்து விட்டோம் என்கிறார்கள் சிலர்.

  இன்னும் தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன ....இன்னும் neanderthal பற்றிய பல நல்ல செய்திகளை எதிபார்க்கலாம்.


    
சரி இந்த பெண்ணுக்கும் Neanderthal க்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால்  ஒரு இடத்தில் கிடைத்த ஒரு Neanderthal சிறுமியின் எலும்பு கூட்டை எடுத்து அதற்க்கு செயற்கையாக உருவம் கொடுத்துள்ளார்கள்....  









5 comments:

Abdul said...

Please read Q'uran.

கணேஷ் said...

Abdul said...
Please read Q'uran.////


வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக படிப்பேன்...

muslim said...

நன்பரே! சமீபத்தில் இஸ்லாத்தில் ஏற்றுக் கொண்ட பெரியார்தாசன் சொற்பொழிவை கேளுங்கள். தங்களுக்கு அது பிரயோஜனமாக இருக்கும்.
http://www.readislam.net/dasan.shtml
மேலும் தங்கள் சிந்தனைக்கு
http://en.wikipedia.org/wiki/List_of_converts_to_Islam

ஜெயந்தி said...

இவங்க நம்மோட முன்னோர்களா? இல்ல வேற இனமா? இல்ல இவங்க இனமும் நம்ம இனமும் கலப்பாயிருச்சா? இவங்களும் குரங்கிலிருந்து வந்தவர்களா?

எத்தன கேள்வி.

கணேஷ் said...

ஜெயந்தி said...

இவங்க நம்மோட முன்னோர்களா? இல்ல வேற இனமா? இல்ல இவங்க இனமும் நம்ம இனமும் கலப்பாயிருச்சா? இவங்களும் குரங்கிலிருந்து வந்தவர்களா?///

ஆமாம், வேற இனம், கலப்பு என்பதை விட அவங்களில இருந்துதான் நாம் பிரிந்தோம்...ஆமாம் குரங்கில் இருந்து வந்தவர்கள்...நன்றி