சில விசயங்கள் - 4


   ரோமியை பற்றி சிறிய அறிமுகத்தோடு ஆரம்பிக்கிறேன். கணேஷ் என்பவர் என்னதான் தேடியும் காதல் செய்ய  பெண் கிடைக்காமல் தன்னை  காதலிக்க ஒரு பெண் மனம் கொண்ட ரோபோட்டை வடிவமைக்கிறார்.அதன் பெயர் ரோமி. அதோடு காதல் செய்யும் தருணங்களில் தவறுதலான புரிதலால் ரோமி அவரை கொலை செய்யும் அளவுக்கு போக ஒவ்வொரு முறையும் emergency button ஐ அழுத்தி தப்பித்துகொள்வது கணேஷின் வழக்கம். ரோமி கிட்டதட்ட ஆறறிவு தன்மை கொண்ட ஒன்று.


   சரி எதுக்கு திடிரென்று ரோமி புராணம் என்றால், உண்மையில் ஆறறிவு கொண்ட ஒரு ரோபோட்டை உருவாக்க முயற்சிக்கிறார்கள். அதவாது தொடுஉணர்வு,நுகர்தல்,பார்வையில் கண்டறிதல் இந்த மாதிரி பல அம்சங்களை கொண்ட ஒன்று. இதற்கென்று சிறப்பான சென்சார்கள் அமைத்து இந்த வேலையை சிறப்பாக செய்ய முடியும் என்பது அவர்களது(Leo van Hemmen, chair of theoretical biophysics, Technische Universitaet Muenchen.) நம்பிக்கை.


   இதற்காக உயிரினத்தில் இந்த உணர்வுகள் எப்படி கச்சிதமாக வேலை செய்கின்றன,அதை எப்படி இயந்திரத்தனமாக மாற்றலாம் என்பதை பற்றி ஒரு குழு ஆராய்கிறது. விரைவில் எல்லாம் வல்ல ரோபோட்டை எதிர்பார்க்கலாம்.
 *********

   எனது நிறுவனத்தில் நான் தினம் பார்க்கும் ரோபோட்டுகளின் (fanuc)வேலைத்தன்மையே ரோமி கதையை எழுத காரணம். எல்லாம் ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்வதுக்கு பயன்படுத்தபடுவவைதான்.இயந்திர உதிரி பாகங்களை இனைத்தல், welding செய்தல் இந்த மாதிரி. இருந்தாலும் கொடுத்த வேலையை எந்தவித அலுப்பும்,மறுப்பும்,தவறும் இல்லாமல் செய்துமுடித்துவிட்டு ஓய்வெடுக்கும் ரகம். நாம் தவறு செய்தால் கத்தி  ரகளை செய்து “அறிவு இருக்கா? என்று கேட்கவும் தயங்காது. 


  பார்ப்பதற்க்கு ஏதோ சொந்த அறிவோடு வேலை செய்கிற மாதிரி தெரிந்தாலும் அது தவறு செய்யாமல் இருக்க ஒவ்வொரு நிலைக்கும் நாம் அதை interlock முறையில் கட்டுபடுத்த வேண்டும். அதவாது ஏதாவது  பொருளை  ரோபோட் ஒரு இடத்தில எடுத்து வந்து மற்றொரு இடத்தில வைக்க பின் அதை இன்னொரு ரோபோட் தன்பக்கம் இழுத்து வைத்து தனக்கு கொடுக்கபட்ட வேலையை செய்ய வேண்டும் இப்படி ஒரு நிலமையை எடுத்து கொண்டால், இதற்கு முதல் ரோபோட்டுகு அந்த பொருளை எப்படி பிடித்து (clamp) தூக்க வேண்டும்,எவ்வளவு உயரம மற்றும் அழுத்தத்தில் இந்த மாதிரி விசயங்களை சொல்லி கொடுக்க(robot teaching) வேண்டும்.


   இந்த முதல் ரோபோட் வேலை செய்யும்போது இரண்டாம் ரோபோட் தனது வேலையை செய்து கொண்டு இருக்கும் அதாவது ஏற்கனவே முதல் ரோபோட் கொடுத்த பாகத்தில். இப்போது முதலாமானது போய் பொருளை  வைப்பதுக்கான இடத்தில வைக்கும் வரை இரண்டமானது காத்து இருக்கும் ஒருவேளை அதன் வேலை முடிந்து இருந்தால்.எப்போது பொருள் வைக்கப்பட்டு முதலாமானது பாதுகாப்பான தொலைவு செல்கிறதோ அதுக்கு பிறகுதான் இரண்டாமானது தனது வேலையை செய்ய தொடங்கும்.இதற்கு நிறையா சென்சார்கள், limit switch கள் என பல பயன்படுத்தப்படும். இவைதான் interlock முறைக்கு பெரிதும் பயன்படுபவை.


  பொருள் வந்து வைத்தவுடன் “ஏய் பொருள் வந்துரிச்சி இன்னும் என்ன மச மசன்னு நின்னுகிட்டு? என்று ரோபோட்டுகு தகவல்களை கொடுப்பது இதுதான். இது அப்படி சொல்லாத வரை இரண்டாமானது சிவனே என்றுதான் இருக்கும். தவறுகள் நடக்காமல் இருக்க செய்வதும் இவைகள் தான். “இது நடந்த பிறகுதான் நீ இந்த வேலையை செய்ய வேண்டும், இல்லையென்றால் சும்மா இரு போதும் என்று ரோபோட்டுக்கு சொல்லி  ரோபோட்டின் இயக்கத்தை கட்டுபடுத்துவது ஒருவகையில் இந்த உபகரணங்கள்தான்.


   இது எனது முழுத்துறை இல்லையென்றாலும் ஆர்வம் அதிகம் உண்டு.நண்பர்களை தொந்தரவு செய்து கொஞ்சம் கொஞ்சமாக கற்றுகொண்டு இருக்கிறேன். ஒருநாள் என நண்பனிடம் ரோமியை பற்றி விளக்கி அதை இன்னும் எப்படி உருப்படியாக எழுதலாம் அதுக்கு ரோபோடிக்ஸ் சம்பந்தமான அறிவுரை சொல்ல சொன்னேன். முழுதும் ரோமியை பற்றி கேட்டு தெரிந்து விட்டு, குறிப்பிட நேரத்துக்கு ஒருமுறை நீ கேட்காமலேயே முத்தம் கொடுக்கிற மாதிரி plc ல் program செய்து விடேன் என்றான்


   இதை ஏற்க்கனவே ஒருவர்(சுஜாதா சார்) நாய் குட்டியில் செய்துவிட்டார்.(ஜீனோ குறிப்பிட நேரத்திற்கு ஒருமுறை குறைக்கும்) வேறேதாவது சொல்லு என்றால் ஆளைவிடு என்று ஒதுங்கி விட்டான்.

******

   எழுத்தை பற்றிய கருத்துக்களோ,விமர்சனங்ககளோ தெரிவித்தால் எழுதுபவருக்கு சில விசயங்கள் தெரிந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது. நானும் எழுதுகிறேன் யார் படிக்கிறார்கள்? அவர்கள் என்ன புரிந்துகொண்டார்கள் என்பதை பற்றி தெரியாமல் போனால் ஏதோ ஒன்று குறைவது போன்ற உணர்வு.


   மற்றபடி சில பெண் பதிவர்களுக்கு அல்லது இலக்கிய நடையோடு எழுதும் பதிவர்களுக்கு வரும் “சொல்ல வார்த்தைகளே இல்லை “இந்த மாதிரி எழுத்து நடை உலகத்தில் உங்களுக்கு மட்டுமே" போன்ற மாதிரியான கருத்துகளை பற்றி கவலை இல்லைதான்.  இதன் மீது விருப்பம் இல்லை என்பது ஒருபக்கம் இருந்தாலும் எனக்கும் இலக்கிய நடைக்கும் வெகு தூரம்.


   இதுவரை நான் எழுதி வந்தது எல்லாம் சுஜாதா அவர்கள் கனையாழியின் கடைசி பக்கத்தில் சொன்னது போல “எழுதியது புரிந்தால் புரிந்து கொள்ளுங்கள் இல்லை என்றால் தலையை சொரிந்து கொள்ளுங்கள் என்ற ரகம்தான். 


   எது எப்படியோ இனிமேலும் முடிந்தவரை உருப்படியாக எழுத முயற்சிக்கிறேன்.இன்னும்பிற விசயங்களை பற்றி தொடர் போல எழுதும் ஆசை இருக்கிறது. பார்ப்போம் நான் படிப்பது எனக்கு புரிந்தால் கண்டிப்பாக அதை எழுத்தின் மூலம் சொல்வேன்.

 ******

(கணையாழியின் கடைசி பக்கத்தில் சுஜாதா அவர்கள் சொன்னது “புரிந்தால் புரிந்து கொள்ளுங்கள் இல்லையேல் சொரிந்து கொள்ளுங்கள் என்று மட்டுமே. அதை அவர் அங்கு சொன்னதுக்கு காரணம் அவருக்கு வந்த விமர்சனம் தான்  என்று படித்த  நினைவு. அதனாலதான் இங்கு நான் “தலையை என்ற வார்த்தையை சேர்த்தேன். அங்கு சொன்னது சுஜாதா சாருக்கே உண்டான உள்குத்து எழுத்துநடை..)

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_6115.html

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.பார்த்து, தங்கள் கருத்துரைகளைத் தெரியப்படுத்துங்கள். நன்றி.

கணேஷ் said...

நன்றிகள் என்னையும் அறிமுகம் செய்ததுக்கு.))