THE CLONING

      உணமைக்காதல் என்ற தலைப்பில் கொஞ்சம் க்ளோனிங் சேர்த்து நான் எழுதியிருந்த  கதையை படித்து இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா என்ற சந்தேகம் வரலாம்...

   அந்த  கதையில் வரும் காதல் உணமையில் நடக்குமா இல்லையா என்று என்னால் உறுதியாக சொல்ல முடியாது. காதலுக்காக காதலன் க்ளோனிங் செய்து பின் அவர்களை இணையவைப்பது இப்படி எல்லாம்  செய்வது என்பது கொஞ்சம் முடியாத காரியம்.
   
    ஏற்க்கனவே காதல் ஹார்மோன்களின் வேலை, காதல் அபத்தமானது என்று நிறைய எழுதிவிட்டதால்..காதல் பற்றிய புராணத்தை..விட்டுவிடுவோம்.


கொஞ்சம் க்ளோனிங் பற்றி பார்ப்போம்...


   குளோனிங் என்பது ஏற்க்கனவே இருக்கும் இருந்த ஒரு உயிருள்ள ஒன்றை அப்படியே பிரதி எடுப்பது. இந்த பிரதி எடுப்பில் பிரதி எடுக்கப்பட்டது அது எதில் இருந்து பிரதி எடுக்கப்பட்டதோ அதே குணங்களை கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


சரி பொதுவாக பின்பற்றும்  குளோனிங் முறைகளை பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

  பொதுவாக அதிகமாக ARTIFICIAL EMBRYO TWINNING  மற்றும் SOMATIC CELL NUCLEAR TRANSFER என்ற முறைகள் பயன்படுத்த படுகின்றன.

  இதில் ARTIFICIAL EMBRYO TWINNING என்பது ஒரு சாதாரண  முறை.இது இயற்கையான கருத்தரிப்பு முறையை அப்படியே கொஞ்சம் ஒன்றிபோகும்முறையும் கூட..

   பொதுவாக இயற்க்கையில் ஆண் விந்து அணுவும பெண்ணின் அண்ட அணுவும இணைந்து முதலில் ZYGOTE உருவாகின்றது. பின் அது EMBRYO எனப்படும் கருவாக மாறும். இந்த EMBRYO தான் சில நேரங்களில் அரிதாக இரண்டாக பிரிந்து தனித்தனி கருவாக வளர ஆரம்பிக்கும். அப்படி தனியாக வளரும் இரண்டு கருக்களும் ஒரே முட்டையில் இருந்து வந்தது என்பதால் அது இரண்டுமே ஒரே மாதிரியாக இருக்கும். இது இயற்கையாக இரட்டையர்கள் பிறக்க காரணமாக இருக்கும் ஒரு காரணம். 

  இந்த ARTIFICIAL EMBRYO TWINNING முறை என்பது இயற்கையில் எப்படி தாயின் கருவறைக்குள் அந்த EMBRYO இரண்டாக பிரிகின்றதோ அதை அப்படியே தனியாக வெளியில் ஆய்வுக்கூடத்தில் பிரித்து பின் அதை ஒரு தாயின் கருப்பையில் வளர வைப்பார்கள். இதில் உருவாக்கப்படும் இரண்டு உயிரியும் ஒரே மாதிரி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

  அடுத்து SOMATIC CELL NUCLEAR TRANSFER(scnt) முறை. இதை சொல்லுவதற்கு முன் SOMATIC CELL மற்றும் GERM CELL இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை கொஞ்சம் பார்த்துவிட்டால் புரிவதற்கு கொஞ்சம் எளிதாக இருக்கும்.

   GERM CELL என்பது ஆண் மற்றும் பெண்ணின் REPRODUCTIVE CELL களான SPERM மற்றும் EGG CELL  போன்றவைகள். இதில் ஒவ்வொன்றிலும் ஒரு இணை ஜோடி குரோமோசோம்களே இருக்கும்.(23 குரோமோசோம்கள் மட்டும்தான்..எனவேதான் இதனால் தனியாக பல்கி பெருகி ஒரு குழந்தையாக வளர முடியாது..எப்போது மற்றொரு ஜோடி குரோமோசோம்கள் உடன் இணைகின்றதோ அப்போதுதான் செல்கள் உருவாகி பல்கி பெருகி உயிர்கள் உருவாக முடியும்))


   SOMATIC CELL என்பது இனப்பெருக்க(GERM CELL) செல்கள் இல்லாமல் உயிரியின் உடம்பின் மற்ற பகுதியில் எடுக்க படும் செல்கள் ஆகும்.( மேலே சொன்ன கதையில் அந்த பெண்ணின் கையில் இருந்து எடுக்கப்படுவது SOMATIC  CELL)

   இதில் இரண்டு ஜோடி குரோமோசோம்கள் இருக்கும் மொத்தம் 46. அதாவது ஒன்று ஆணிடம் இருந்து வந்தது,மற்றொன்று பெண்ணிடம் இருந்து வந்தது.

(சரி இந்த மனிதர்களில் ஆண் பெண் வித்தியாசம் எப்படி என்றால் .....கொஞ்சம் பார்ப்போம் ...குரோமோசோம்களில் பெண்களில்(EGG) எப்போதும் ஒரு ஜோடி "X" குரோமோசோம்கள் மட்டுமே  இருக்கும்.ஆனால் ஆண்களுக்கு(SPERM) "X" அல்லது "Y" இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை கொண்டு இருப்பார்கள்.

      இணையும் போது  "XX" என்றால் அது பெண். "XY" என்றால் ஆண். இது இணைவதை பொறுத்துதான் ஆண்  மற்றும் பெண் குழைந்தைகள் கருப்பையில் உருவாகின்றன. ........ஆண் மற்றும் பெண்ணை வேறுபடுத்தி  கருவில் பிரிப்பதில் ஆண்களுக்கே முழு உரிமை )

       சரி இப்போது இந்த முறையில் எப்படி குளோனிங் சாத்தியம் என்று பார்க்கலாம். இந்த முறையில் DOLLY என்ற செம்மறி ஆடு முதன் முதலில் உருவாக்கபட்டது என்பது குறிப்பிடதக்கது. அதுவும் 270 க்கும் மேற்ப்பட்ட முயற்சிகள் செய்த பின்னர்தான் அந்த ஆடு உருவாக்கப்பட்டது.இதுதான் இப்போது இருக்கும் குளோனிங் முறையில் உள்ள குறைபாடு  இதுதான்...   அடுத்து நடக்கும் என எதையும் முடிவாக குறிப்பிட்டு சொல்ல முடியாது.....  ஆனாலும் பல  சோதனைகள் ஆராய்ச்சிகள் செய்து ஒரு நல்ல நிலையை க்ளோனிங் முறையில் நெருங்கி கொண்டு இருக்கிறர்கள் நம் மனிதர்கள்.


    சரி இந்த SCNT முறையில் எப்படி குளோனிங் செய்வது  என்று பார்க்கலாம். முதலில் யாரை குளோனிங் செய்ய வேண்டுமோ எடுத்துகாட்டாக என்னை குளோனிங் செய்ய வேண்டும் என்றால் என் கை,முகம் போன்ற எதாவது ஒரு இடத்தில இருந்து  ஒரு செல்லை தனியாக பிரித்து எடுக்க வேண்டும். எப்படி கதையில் வரும் பெண்ணின் கையில் இருந்து அந்த செல் எடுக்கப்பட்டதோ அப்படி....

      அதற்க்கு முன் என் செல்லை வளர வைப்பதற்கு ஒரு வாடகைத்தாய்,மற்றும் ஒரு கருமுட்டை தேவை..அந்தகருமுட்டையில் உள்ள nucleus ஐ நீக்கிவிடவேண்டும் ஏனென்றால் அந்த இடத்தில தான் என் nucleus வைத்து வளர வைக்க வேண்டும். அப்படி nucleus நீக்கப்பட்ட முட்டையில் என் உடலில் இருந்து எடுக்கப்பட்ட செல்லை பொருத்தி அதை ஒரு வாடகைத்தயின் கருப்பையில் முறையாக வளரவைத்தால் அடுத்த கணேஷ் தயார் ஆவான்.

       இங்கு நீங்கள் படிப்பது போல இது ஒன்றும் அவ்வளவு எளிது இல்லை...இந்த முறையில் உருவாக்கப்பட செம்மறி ஆடு கிட்டதட்ட 275 முறை முயன்றபிறகுதான் உருவானது.  இதில் எங்கு பிரச்சினைகள் வரும் என்றால்...அந்த nucleus ஐ பிரிக்கும் போது அதை திரும்பி சரியாக முட்டையில் உல் செலுத்தும் போது. அப்படியே சரியாக செழுத்திவிட்டாலும் அது அடுத்து வரும் நாள்களில் செல்கள் பிரிந்து பல்கி பெருகவேண்டும்.அப்படியே பல்கி பெருகினாலும் அதில் உருவாக்கப்படும் உயிர் எந்தவித குறைபாடு இல்லாமல் இருக்கவேண்டும்.

  இந்த முறைகள் க்ளோனிங் முறைகளில் பொதுவாக பயன்படுத்தபடும் முறைகள். இதில் இன்னும் பலவிதமான முறைகளை மனிதன் தினமும் கண்டுபிடிக்கிறான். உறுதியாக இன்னும் சில ஆண்டுகளில் குழந்தை பெறுவது போல எளிதாக  இந்த க்ளோனிங் வந்து விடும் என நினைக்கிறேன்.

கடைசியாக therapeutic க்ளோனிங் பற்றி சிலவரிகள்.

   இந்த therapeutic க்ளோனிங்கும் ஒரு விதத்தில் சாதாரன க்ளோனிங் முறையை சார்ந்ததுதான். ஆனால் இதன் மூலம் ஒரு முழுமையான உயிரை உருவக்கமுடியாது அதற்க்கு பதிலாக உடலில் உள்ள பாதிப்படைந்த உறுப்புகளை(organs,tissue) புதிப்பிக்க இயலும்.

   இதுவும் நான் மேலே சொன்ன scnt என்ற முறையில்தான் செய்வார்கள் ஆனால் அந்த கரு முழு வளர்ச்சி அடைவதற்கு முன் அதில் இருந்து sten cells பிரித்து எடுத்து அதை மனிதனின் பாதிப்படைந்த இடத்தில வைத்து அதை வளரச்செய்து அந்த இடத்தில இருக்கும் குறையை(பதிக்கப்பட்ட செல்களை) நீக்குவர்கள்.

  அதவ்ர்து முட்டைக்குள் புகுத்தப்பட்ட  nucleus பிரிந்து வளர்ச்சி அடையும் போது அதவது நான்கு முதல் ஐந்து நாள்களுக்குள் வளர்ச்சி அடைந்த அந்த செல்களை பிரித்து எடுத்தால் அதுதான் stem cells. கருவில் வளருவதை இடையிலேயே தடுத்து எடுப்பதால் இதுவும் ஒருவித கொலைதான். சொல்லப்போனால் கருக்கலைப்புக்கு நிகரானது.இருந்தாலும் இதுல இருந்து மிகப்பெரும் நன்மைகள் கிடைக்கும் என்பதால் செய்யவேண்டிய அவசிய நிலை.

     இதில் இன்னும் வளர்ச்சி அடைந்து தனியாக ஒரு உறுப்பையே உருவாக்க முடியும் என நம்புகிறார்கள்.அப்படி உருவாக்க ஆரம்பித்தால் எவ்வளோ பிரச்சினைகள் தீர்ந்துவிடும் அதுமட்டுமின்றி ஒரு மனிதனுக்கு என்னனென்ன உறுப்புகள் அதிகமாக வேண்டுமோ அதை உருவாக்கி கொள்ளலாம். அதவது எனக்கு புத்தகம் படிக்க இரண்டு கண்கள் போதவில்லை என்றால் காசுகொடுத்து இன்னொரு கண்ணை நெற்றியிலோ அல்லது கன்னத்திலோ வளர்த்துக்கொள்ளமுடியும்.

(ஆனால் அது வேலை செய்யுமா என்று எனக்கு தெரியாது)

4 comments:

Gayathri said...

நல்ல பதிவு...க்ளோனிங் முறை உண்ணும் வளர்ச்சியடைந்து சாதாரண மக்களின் ரீச்சுக்கு வந்துட்டா நல்ல முன்றம் நிச்சயம் நமது மருத்துவ துறையில்...நமக்கு வேண்டியவர்களும் நம்முடன் எப்போதும் இருப்பார்கள்...

நல்ல போகுது கணேஷ் உங்க பதிவு தொடருங்கள்

கணேஷ் said...

நல்ல போகுது கணேஷ் உங்க பதிவு தொடருங்கள்\\\\

வளர்ச்சி அடையும் என்று நம்பலாம்...உங்களின் கருத்துக்கு நன்றி..

Gayathri said...

கண்டிப்பாக அடையும்

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

உங்கள் பதிவு அருமை.வாழ்த்துக்கள். ஆங்கிலச் சொற்களுக்கு அருகிலேயே அதற்கு இணையான தமிழ்ச் சொற்கள் எழுதினால் இன்னும் நிறைய பேரைச் சென்றடையும் என்பது என் கணிப்பு. உங்களுக்கு தேவையான தமிழ் கலைச் சொற்களுக்கு இந்த முகவரியை சொடுக்கவும்.



http://www.tamilvu.org/coresite/html/cwhomepg.htm