அறியா உலகம் (சவால் சிறுகதை-2011 )


    அந்த நீளமானபெட்டி கரையில் வைக்கப்பட்டிருக்க அதனைசுற்றி ஒரு சிறுகூட்டம். அதில் பாதிபேர் இந்த கடல் ஆராய்ச்சி சம்பந்தபட்டவர்கள் மீதி அந்த பெரியபெட்டியை கரைசேர்க்க உதவியவர்கள்,வேடிக்கைபார்க்க வந்தவர்களென கூடியிருந்தார்கள்.

    பெட்டியை ஆராய்ச்சிகூட வண்டியில் ஏற்றும்போதே அதைப்பற்றிய வதந்தி காற்றில் ஏறியிருந்தது. கடலில் இருந்து ஒருபெரிய புதையல் கிடைத்து இருப்பதாகவும், வேற்றுகிரகத்தில் இருந்து பூமியில் விழுந்த ஒருபெட்டி என்றும் மக்களின் கற்பனை வளம் வேகமாக  விரிந்துகொண்டு  இருந்தது.

   வந்துசேர்ந்தவுடன் அதன் நீளம் அகலம, உயரம, எடை போன்றவை கணக்கிடபட்டன. இதுவரை ஊடகசெய்திக்கு சொல்லவில்லை. பணியாளர்கள் அதனை துடைக்க உத்தரவு இடப்பட்டு இருந்தார்கள். மேழேபடர்ந்து இருந்த கடல்பாசிகளை துடைத்து கழுவி நீக்கியபின்  ஒரு மஞ்சள்நிறத்தில் கொஞ்சம் பளுப்பக இருந்தது.

    அதனை திருப்பி பார்த்தபோது மூன்றுபக்கம் வெறுமையாக இருக்க அதன் ஒருபக்கத்தில் ஒருசின்னம் இருந்தது. சின்னம் என்பதைவிட ஒரு முத்திரை வடிவம். இரண்டு பெரிய மீன்கள் அலையில் எழும்பி குதிப்பதுபோல.அதைத்தவிர அந்தபெட்டி முழுதும் சமபரப்பே எங்கு எப்படி  மூடி இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்பதைகூட கணிக்கமுடியவில்லை. காரணம் அதன் நான்கு மூலைகளிலும் வளைவு (radius) கொடுக்கபட்டிருந்தது.

    அந்தஇரண்டு மீன்களின் சின்னத்துக்கு கிழே சின்ன எழுத்துக்களாக பொரிக்கபட்டு இருந்தன. இணைப்புகளை கண்டுபிடிக்க எல்லா மூலைகளிலும் சுரண்டிபார்க்கப்பட்டு ஏதுமில்லாமல்போக அடுத்தகட்ட வேலைக்கு தடைசெய்யபட்டிருந்தது. பெரிய அதிகாரிகள் வருவதாகச்சொல்லி அதைமூடினார்கள்.  


   சிறிய ஆய்வுக்குப்பின் ஒருவித பவளபாறைகளால் ஆனது என்று கண்டுபிடித்தார்கள்.அந்த இரண்டு மேலதிகாரிகளில்  ஒருவர் மீன்முத்திரையும்  எழுத்துக்களையும் பார்த்தபிறகு சங்கேதபாசை இருக்கிறது என தனக்குள் முனுமுனுத்தர்ர்.     

     சிறிய உரையாடலுக்கு பிறகு அதைஎப்படி திறப்பது என யோசிக்கபட்டது.. இந்தபெட்டி சில சங்கேதபசைகளால் மூடப்பட்டுள்ளது.முதலில் அது சம்பந்தபட்டவர்கள் கொண்டு முயற்சிசெய்துவிட்டு பின் உடைக்கலாம். அதோடு நமது உயிரியல் பிரிவில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுங்கள். திறக்கும்போது அவர்கள் இருப்பதும் முக்கியம்.


“புனி என்ன பண்றே?

“என்ன பண்றேன்னு   நீயே சொல்லேன்

  “என்னசெய்ய போற உன் செல்லபூனை லில்லியை கொஞ்சி விளையாடிட்டு இருப்பே

“ஆமா அதுஇருக்கட்டும் இப்ப எதுக்கு திடீர் அழைப்பு உனக்கும் அந்தபெட்டியை பத்தி தகவல் வந்துச்சா என்ன?

“ஆமாம் அதுக்குத்தான் நானும் உனக்கு போன் பண்ணேன். எப்பபோகலாம் சொல்லு சேர்ந்தேபோகலாம்

“ நான் வரலை முடிஞ்சா அங்க சந்திக்கலாம்

“ஏன் இப்படி பண்றே?
 
“சரி அழுகாதே வரேன் எப்பபோகலாம் சொல்லு?

“நாளை காலையில் 9 மணிக்கு இங்க வந்துடு


  புனி உயிரியல் பிரிவில் ஆராய்ச்சி பணிகள் செய்யும் குழுவில் இருப்பவள். அந்த பெட்டியை பற்றிய ரகசிய தகவல் அவளுக்கு வந்து இருந்தது அதுவும் வெளியில் யாருக்கும் தெரியபடுத்தவேண்டாம் என்ற அறிவுரையோடு. அப்போதே அவளுக்கு அதன்மீது ஒரு ஆர்வம்கலந்த ஆச்சர்யம்

   கணேஷ்  அதே ஆய்வுகூடத்தில் cryptography   துறையில் இருப்பவன். அங்கு சேரும் முன்னரே புனி பின்னாடி சுற்றி அவளை காதலித்துக்கொண்டு இருப்பவன். அவர்கள் காதலிக்கிறார்கள் என்பதைவிட சண்டை போடுகிறார்கள் என்றே சொல்லவேண்டும்..

  மறுநாள் காலையில் இருவரும் சேர்ந்தே ஆராய்ச்சி கூடத்துக்கு வந்தார்கள். பார்த்த இருவருக்குமே ஆச்சர்யம்.அவர்கள் நினைத்து இருக்கவில்லை இந்த அளவு வித்தியாசமாக இருக்குமென. இருவருக்கும் அது கண்டுபிடிக்கபட்டதில் இருந்து கடைசியில் செய்தவேலைகள் பற்றிய தகவல்கள் அனைத்துமே கொடுக்கபட்டன. கணேஷ் அதன் அளவுகள் எடை மற்றும் அது என்ன பொருளால் ஆனது போன்ற தகவல்களை வாங்கிகொண்டான்.

   கணேஷின் முதல்வேலை அந்தபெட்டி ரகசிய எழுத்துக்களால் மூடபட்டுள்ளதா இல்லையா என்பதை கண்டறிய வேண்டும். அந்த மீன்முத்திரைக்கு கிழே இருந்த எழுத்துக்களை முதலில் எழுதியவன் அந்தபெட்டி முழுவதும் பூதகண்ணாடி கொண்டு தேடினான் வேறெங்கும் எழுத்துக்கள் இருக்கிறதா என்று. தென்படவில்லை. அவன் குறிப்பெடுத்த எழுத்துகள் SWH26F


   சிறிதுநேர யோசனையில் அவனுக்கு தெரிந்து இருந்தது மிகவும் பழமையான கஷ்ட்டமான எழுத்துக்களை கொண்டு சங்கேதபாசையால் அமைத்து மூடப்பட்டபெட்டி அதென்று. வெளியில் வந்தான் அங்கிருந்த அதிகாரிகளிடம் அந்தபெட்டி ரகசிய எழுத்துக்களால் பூட்டப்பட்டுள்ளது என்பதையும் அதனை திறக்க தனக்கு கொஞ்சம் அவகாசம்தேவை என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.   
வெளியில் வரும்போது .புனியை வீட்டுக்குவருமாறு அழைக்க முதலில் மறுத்தவள் பின்சம்மதித்தாள்.

     ஆய்வுகூடத்தில்  சில முக்கயமான முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்தபகுதியில் இருக்கும் காவல்நிலையத்துக்கு இதுசம்பந்தமாக சொல்லி  பாதுகாப்புவசதி கோரப்பட்டது. அதோடு ஊடகங்களுக்கு செய்திகளை அளிப்பதில் கட்டுபாடுகளை கையாள ஒருநபரை நியமிப்பது என முடிவாகியிருந்தது.

     S W H2 F6 கண்டிப்பாக அந்தபெட்டியை மையமாக வைத்துதான் இது இருக்க வேண்டும் என்பதால் அந்த கோணத்திளியே யோசிக்க ஆரம்பித்தான். அதை திறப்பதற்கு ஒருஇடம் இருக்கவேண்டும்.  ஒரு செவ்வகவடிவில் உள்ள  பொருளில் குறிப்பிட்ட பகுதியை சரியாக குறிக்க நீளஅகல முறைகளை கொண்டுதான் கண்டிப்பாக உணர்த்தவேண்டும். அப்படிபார்த்தால் இதில் இருக்கும் W,H2 என்ற எழுத்துக்கள் கொஞ்சம் பொருந்துவதாக இருந்தது. அதாவது ஒரு புள்ளியில் இருந்து WIDTH, HEIGHT போன்றவற்றை இவை உணர்த்தவேண்டும். அப்படியே இருந்தாலும் H2 என்பதில் ஒருஅளவை குறிக்கும் எண் இருக்கிறது. ஆனால் WIDTH க்கு இல்லை.

    அதுக்கு பொருத்தமான எண்ணை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அதில் உள்ள மற்றவவை எண்களுடன் தொடர்புகொண்டு இருக்க   S மட்டும் எந்த எண்ணோடு தொடர்பு இல்லாமல் இருப்பது கொஞ்சம் குழப்பியது. ஆனால் அந்த எழுத்தை எதுக்கு கொடுக்கபட்டு இருக்கிறது என்பதை கண்டுபிடித்தபோது அது  எளிதானது. அந்த எழுத்து குறிப்பது நீள உயர அளவுகளை எந்தபக்கத்தில் இருந்து அளக்கவேண்டும் என்பதை அது குறிக்கிறது.அதாவது அந்த பெட்டியில் இருக்கும் நான்கு பக்கங்களில் ஒன்றை குறிப்பாக உணர்த்த அந்த எழுத்து. இப்பொது அந்த எழுத்துக்கும் ஒரு எண்ணை கொடுக்க வேண்டிய கட்டாயம். அப்போதுதான் அவனுக்கு நினைவுக்கு வந்தது அந்த மீன்முத்திரை அதை பார்த்தால் எதாவது கிடைக்கலாம் என்ற எண்ணம் அவனுக்கு.

    மறுநாள் அங்கு போனபோது இரண்டு புதியவர்கள் அவனுக்கு அறிமுகமானார்கள். ஒருவர் பாதுகாப்பு பணியினை மேற்கொள்ளும் எஸ்.பி கோகுல்  மற்றொருவர் செய்தி  தகவல்களை கட்டுபடுத்தும் விஷ்ணு. இதில் விஷ்ணுவின் பணி கொஞ்சம் கணேஷ்க்கு தேவை. அதாவது எந்த காரணத்தை கொண்டும் இந்த ரகசிய எழுத்து முறைகளை வெளியில் சொல்லகூடாது. அப்படி சொன்னால் மக்களுக்கு ஆர்வம் அதிகமாகி பிரச்சினை வேறுமாதிரி போகலாம். அதோடு தவறான சிலரின் கைகளுக்குபோக வாய்ப்பு இருக்கிறது. எனவே விஷ்ணுவை கூப்பிட்டு தனியாக இதைப்பற்றி விளக்கினான்.

    அவனுக்கு தேவையான எண்கள் அந்த மீன்முத்திரையில் இருக்கிறதா என்பதை தேடினான். இல்லை. அந்த எண் எழுதுகளுக்கிடையேதான் இருக்கிறது என்று முடிவாகினான். வெளியில் போகும்போது கோகுல் எதிரில் வந்தார். ஏற்க்கனவே நன்கு பழக்கம் உடையவர். அவரது சிலபிரச்சினைகளில் இருந்த ரகசிய எழுத்துக்களை தீர்க்க கணேஷ்ஐ சந்தித்தது உண்டு.

    கணேஷ் அவரை தனியாக அழைத்துச்சென்று அந்த ரகசியஎழுத்துக்கள் சம்பந்தமாக பேசினான். அதன் முக்கியத்துவம் பற்றிசொன்னான்.  அது விஷ்ணுவுக்கும் தெரியும் அவன் அந்த எழுத்துகளை எந்தக்காரணம் கொண்டும் வெளியில் சொல்லாமல் இருக்கவேண்டும் என்ற தனது கருத்தை சொன்னபோது.

 “அப்படி என்ன எழுத்து அது எனக்குதெரியாம? என்றார் கோகுல்

“இப்போதைக்கு வேண்டாம் விஷ்ணுவை கொஞ்சம் பார்த்து கொள்ளுங்கள் எங்காவது சொல்லிவிடபோகிறார் என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

    அந்த S க்கு உதவும் எண் எது என்பதை யோசித்தான்.அதில் மீதம் இருக்கும் எண்கள் 6, 2 இதில் 2 என்பது H ஓடு சேர்ந்து உயரத்தில் இருந்து 2 அடி என்ற அர்த்தத்தில் வருமென தோன்றியது. மீதி இருப்பது அகலம் எந்தபக்கம். அந்த இரண்டின் கூட்டுதொகை 8. மற்ற இரண்டு எழுத்துக்களின் கூட்டு தொகையும் அதுவாகவே இருக்கவேண்டும். காரணம் இந்தமாதிரியான ரகசிய எழுத்துக்கள் அமைப்பதின் நோக்கம் இது சாதாரணமானவர்களின் கையில் கிடைத்து சேதம்அடையகூடாது என்பதே. எனவே அனுமானம் செய்ய எளிதாக ஒன்றையே இன்னொன்றிலும் தொடர்வது சங்கேத பாசையில் பொதுவானஒன்று.

   அந்த இரண்டு எழுத்துக்களுக்கும் இரண்டு எண்களை கொடுத்தால் அதன் கூட்டுதொகை 8 வரவேண்டும். எளிதாக பாதியாகபிரித்து S4, W4 கொடுத்தான். காரணம் மேலேசொன்னதுதான். கண்டுபிடிப்பவரின் சிறிய அனுமானத்திற்குகேற்ப எளிதானமுறை. இப்போது அந்தஎழுத்துக்களை அமைத்தால் S4 W4 H2 F6 அதாவது பெட்டியின் நான்காவது பக்கத்தில் நான்கடி அகலத்தில், இரண்டடி உயரத்தில் எதாவது ஒன்று இருக்கவேண்டும் 

   ஆனால் அந்த F6க்குமுடிவு இன்னும் இல்லாமல்இருந்தது. F சேர்ந்தபடி இருக்கும் 6 எண்ணை மட்டும் வைத்துபார்ப்பது சரியாகாது ஏனென்றால் இதன் அடிபப்டை எண் 8.எனவே F8 என அர்த்தம்கொள்ள தீர்மானித்தான். அந்த 6 என்ற எண் ஒரு உதவிக்குமட்டுமே என்பது அவனது எண்ணம்.F8 என்பதை Fல் இருந்து 8வது எழுத்தை முன்னோக்கிபார்த்தால் அதில் அர்த்தமில்லை ஆனால் பின்னோக்கி பார்க்கும்போது 8 எழுத்துக்கள் முடிந்து 9வதாக வரும்எழுத்து o. இது எதையாவது உணர்த்தவேண்டும். அந்த F6 க்கு பதிலாக o எழுத்தை பொருத்திபார்த்தபோது அவனுக்கு ஆச்சர்யம்  S4W4H2o அதாவது H2o நீரை குறிக்கும் ஒரு குறிப்பு. கணிப்பு சரியாக இருந்தால் பெட்டியில் திறக்கும் இடத்தை கண்டுபிடித்தபிறகு தண்ணீரின் தேவையிருக்கும் என்ற முடிவுக்குவந்தான்.

   அந்தநேரத்தில்தான்  கோகுலிடமிருந்து அலைபேசி அழைப்புவந்தது. அதை கேட்டபோது கொஞ்சம் அதிர்ந்துதான்போனான். காரணம் கோகுல் விஷ்ணுவிடம் ஒரு சோதனைக்காக அந்தஎழுத்துக்கள் பற்றிகேட்க கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் அதை எழுதி அவன் அனுப்பியதே. கோகுல் கூடவே ஒரு விண்ணப்பம் வைத்தார்  தன்மூலம் இது தெரிந்தது என்று விஷ்ணுக்கு தெரியவேண்டாம் என்பது.

    சிறிது நேரம்கழித்து கணேஷ் விஷ்னுவுக்கு போன்செய்தான் அவனிடம் அந்த ரகசிய எழுத்துக்கள் பற்றி கேட்டபோது நான் யாரிடமும் சொல்லவில்லை என்பதயே திரும்பதிரும்ப சொன்னான். ஒருகட்டத்தில் கோபம அடைந்த கணேஷ் ஆதாரத்தை காட்டினால் என்னசெய்வாய் என்றபோதுதான் அவனுக்கு புரிந்தது. எங்கு மாட்டினோம் என்று. அதற்குபிறகு அவனிடம் வெறும் மௌனமே.

    கணேஷ்  புனியோடு அந்த இடத்திற்கு போனபோனது அவனது மேஜையில் ஒரு துண்டுகாகிதம் இருந்தது. அதில் விஷ்ணு தான் கோகுலிடம் அந்த ரகசிய எழுத்துகளை சொன்னதாகவும்  அது தவறானதுதான் என்பதை எழுதி வைத்திருந்தான். ஆனால் கணேஷ் வரும்போதே கோகுலிடம் இருந்து அவன் கொடுத்த அந்த எழுத்துக்கள் அடங்கிய சீட்டை வாங்கிவந்து இருந்தான்.அது சரியான எழுத்துதான் என்பது அவனுக்கு தெரியும்.


    இப்போது அவன் கவனம் முழுவதும் அந்தபெட்டியில் திறப்பதில் இருந்ததால் அதற்கு தேவையான வேளையில் இருந்தான். அளப்பதற்கு தேவையாக ஒரு அளவுகோல்(steel rule) வரவழைத்தான். அதன்மூலம் துல்லியமாக எழுத்துக்களில் பொதிந்திருக்கும் அளவுகளை அளக்க முடிவாகியிருந்தான்.அந்தநேரத்தில்தான் அவனுக்கு விஷ்ணுவிடம் இருந்து போன்வந்தது. கணேஷ்க்கு தெரியும் அவன் இப்போது என்ன பேசுவான் என்று. மன்னிப்பு கேட்பான் இனிமேல் கவனமாக இருப்பதாக சொல்வான் என்பதால் சிறிதுநேரம்  யோசித்த கணேஷ் இணைப்பை துண்டித்துவிட்டு அருகில் இருந்த அளவுகோலை எடுத்துக்கொண்டு பெட்டியை நெருங்கினான்.

    அருகில் இருபவர்களை வெளியில் அனுப்பிவிட்டு முக்கியமானவர்கள் மத்தியில் அதைதிறந்து முதலில் நான்காவது பக்கத்தை தேடும் முயற்சி செய்து அந்த மீன்முத்திரை இருக்கும் பக்கத்தை முகப்பு பக்கமாக கொண்டு அதில் இருந்து நான்காவது பக்கம் எனபார்த்தால் அதன் இடதுபக்கம் இருக்கிற பகுதிவந்தது. அதன் மேற்புறத்தில் இருந்து H2 என்பதுக்கு இணங்க இரண்டடியில் ஒரு குறிப்பை வைத்தான் அடுத்து W4 என்பதுக்கு பக்கவாட்டில் இருந்து நான்கடியில் ஒரு குறிப்பை வைக்க அது இரண்டும் ஒருஇடத்தில சேர்ந்தது.

   ஒருசிறிய சுத்தியல் வாங்கி மற்ற இடங்களில் தட்டி ஒலியின் தன்மையை சோதித்துப்பார்த்துவிட்டு அந்த குறிப்பு செய்த இடத்தை தட்டியபோது மாற்றமான சத்தம்வர எல்லோர் முகத்திலும் சந்தோஷம். அங்கிருந்த புனிக்கு கணேஷ்க்கு எதாவது கொடுக்கலாம் போல இருந்தது. அந்தப்பெட்டியில் திறப்புக்கான இடம் தெரிந்தவிட்டாலும் அதை எப்படி திறப்பது என்பதில் பிரச்சினை இருந்தது

   காரணம் இந்தமாதிரியான சங்கேதபாசைகள்  கொண்ட பெட்டிகளை வடிவமைக்கும்போது முறையான வழியில் திறக்காமல் தவறாக திறந்தால் அதன் உள்ளேஉள்ள பொருள்கள் அழிந்திடுமாறு அமைப்பார்கள்.கணேஷின் பயத்துக்கும் இதுதான் காரணம். ஒரு முடிவுக்கு வந்தவனாக ஒரு துளையிடும் கருவியும்(DRILLING MACHINE), மறைபோடும் (TAP) கேட்டுவாங்கி அந்த இடத்தில குறைந்த ஆழத்துக்கு துளையிட்டு மறையிட்ட பின்னர் அதில் ஒரு SCREW வை இணைத்து கொஞ்சம் அழுத்தமாக இழுத்து பார்த்தான். அந்த இடம் மெதுவாக விலகி வெளியில்வந்தது. கிட்டதட்ட சிறிய சதுரவடிவ பாகம்  முழுவதும் வெளியில்வர அதைதொடர்ந்த உட்பகுதி ஒரு துளைபோல உள்ளேசென்றது.

    அடுத்து நீரை எடுத்துவரச்சொன்னவன் அந்த துளைவழியாக செல்லுமாறு ஊற்றினான். நீர் நிரம்பி வெளியில்வர ஆரம்பித்த நிலையில் நிறுத்த அந்தபெட்டியில் ஒருமாற்றமும் இல்லாதது அதுவரை எல்லவாற்றையும் ஆச்சர்யமாக பார்த்துகொண்டு இருந்தவர்களுக்கு ஒரு ஏமாற்றமாக இருந்தது. கணேஷ்க்கும் குழப்பம். சிலவினாடிகள் கரைந்த நிலையில் அதன் எதிர்புற பக்கம் சிறுசப்பதத்துடன் விலகி வெளியில் விழுந்தது. எல்லோரும் அந்தபக்கம் பொய்ப்பார்த்தார்கள். ஊற்றிய தண்ணீர் வெளியே வடிந்து கொண்டு இருக்க இப்போது அதன்மேல் மீன்முத்திரை பதித்திருக்கும் ஒருபக்கத்தை விளக்க அந்தபெட்டியில் இருப்பது வெளிப்படையாக தெரிந்தது.

   ஒருவகைதுணியால் சுற்றப்பட்டு அந்தபெட்டிக்கு மத்தியில் தனியாக அதுக்கேன்று ஒரு இடம் அமைக்கபட்டு வைக்கபட்டிருந்தது. அதுக்குகிழே கொஞ்சம் இடைவெளி அதில் நீரால் விரிவடையும் ஒருபொருள் இருக்க அந்தபொருள் விரிவடைந்தால் அதுகொஞ்ச உயரத்தில் இருக்கும் நான்கு பக்கங்களையும் இணைக்கும் ஒரு பிரதான இணைப்பு பகுதியை அழுத்தி விளக்குவதாக அமைக்கபட்டு இருந்தது.

   தவறான முறையில் திறக்க முற்பட்டால் நான்குபக்கசுவரில்  இருக்கும் ஒருவகை அமிலம் உடைந்து அதிலுள்ள பொருளை யாருக்கும் கிடக்கலாம் சிதைத்துவிடும். அதன் மத்தியில் உள்ள அந்த பொட்டலம் போன்ற ஒன்றை வெளியில் தனியாக எடுத்து அவில்க்கும்போது துர்நாற்றம் வீசியது. புனி வேகமாக சென்று தன் உபகரணங்களை எடுத்து வந்து அதன்மீது சுற்றியிருந்த ஒருவிதமன் துனிபோன்ற ஒன்றை முழுதும்விலக்க அந்த உருவம் கண்ணுக்கு புலப்பட்டது.          

    உடல்பகுதி டால்பின்போல இருந்தாலும் அதன் கால்பகுதி மத்தியில் இருந்தே இரண்டாக பிரிந்திருந்தது. எப்படி மனிதனுக்கு இடுப்பில் இருந்து கால் பிரிகிறதோ. அனைவரின் ஆச்சர்யமும் அதன் தலை அமைந்த விதம்தான். கிட்டதட்ட மனிதஉருவ அமைப்பை பெற்றிருந்தது முடியில்லாமல் வழுவழுப்பாக இருக்க தலயின் நுணி கொஞ்சம் கூராக இருந்தது.

   அந்ததுணியில் ஒட்டினாற்போல ஒருகடிதம்.பாதுகாப்பான முறையில் மடித்து வைக்கப்பட்டிருந்தது. அதை சுத்தம்செய்து கணேஷ் படிக்கஆரம்பித்தான்.

    எங்களது பலகால கடல்பயணத்திலும் ஆராய்ச்சியிலும் நாங்கள்  கண்டசில உண்மைகள்.... மனிதன்  குறைந்தபட்ச நிலமே உலகம் என் நம்பிக்கொண்டு இருக்கிறான். அப்படியில்லாத பெரும்பகுதியான நீர்பகுதியில் ஏன் இன்னொரு உலகம் இருக்ககூடாது என்பதை கற்பனை செய்யமறுத்துவிட்டான் என்பதுக்கான பதில்தான் இது. நீர்பகுதியில் நிலப்பகுதியில் வாழ்வதைவிட ஒருபெரிய உலகம் இயங்குகிறது. நம்மைபொருத்தவரை வெறும் மீன்களும், வேறுசில உயிரனங்களும்தான்  நீர் உலகம் எனநம்புகிறோம். அது இல்லாத ஒருபெரிய வாழ்வு ஒன்று உள்ளே நமக்கு தெரியாமல் நடக்கிறது. அப்படிபட்ட ஒன்றுதான் இந்தஉயிர். இதுவரை இந்தபூமி பார்த்திராத ஒரு உயிர் அதுவும் இதேபூமியில். மனிதனின் ஆராய்ச்சி வேற்றுகிரகதுக்கு சென்றாலும் தனது கிரகத்தில் இருக்கும் ஒருபெரிய உயிரின் வாழ்க்கையையே காணமுடியாதவனாக தோற்றுபோய் இருக்கிறான். இதைகண்டு பிடித்தவர்கள் சில ஆராய்ச்சிகள் செய்வதின்மூலம் அந்த உலகம் சம்பந்தமாக தெளிவுகள் பெறலாம். 

எச்சரிக்கை : இந்த ஒரு உயிரனத்தை பிடிக்க நாங்கள் அப்போது பலஉயிர்களை பலிகொடுதோம்.நம்மைவிட எல்லாவிதத்திலும் மிகுந்த சக்திவாய்ந்தவைகள் ஆராய்ச்சியில் கவனம் இருக்கட்டும்.

படித்து முடித்தபோது அனைவரின் கண்களிலும் பயமிருந்தது.

   புனி அந்தஉடலில் பல்வேறு இடங்களிருந்து திசுக்களை சேகரித்தாள். கணேஷ் அந்தகடிதத்தை அங்கிருந்த அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டு மௌனமாக வெளியேறினான். அங்கு இதுவரை நடந்தவை எல்லாம் ஒரு நம்பமுடியாத கனவுபோல இருந்தாலும் இன்னும் கொஞ்சநாளில் புனியின் ஆராயச்சியில் இருந்து இந்த உலகம் ஒருபுதிய முடிவை சந்திக்கபோவதில் உறுதியாக இருந்தான்.  

  
                                             

14 comments:

SURYAJEEVA said...

அந்த சங்கேத எழுத்துக்களை கோர்க்க கொஞ்சம் தடுமாரியிருக்கிரீர்கள், இன்னும் அறிவியல் பூர்வமாக உங்களிடம் எதிர்பார்த்தேன்... இருந்தாலும் முடிவும் கற்பனையும் அருமை... deception point நாவலின் கரு உங்கள் கதையில் இருக்கிறது... அருமை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அருமையான கற்பனை, இருந்தாலும் கொஞ்சம் லாஜிக் உதைக்கிறது.... ஏன் அப்படி பெட்டிக்குள் சங்கேத வார்த்தைகள் போட்டு வைக்க வேண்டும்?

கணேஷ் said...

ஏன் அப்படி பெட்டிக்குள் சங்கேத வார்த்தைகள் போட்டு வைக்க வேண்டும்?//

இந்தமாதிரியான ரகசிய எழுத்துக்கள் அமைப்பதின் நோக்கம் இது சாதாரணமானவர்களின் கையில் கிடைத்து சேதம்அடையகூடாது என்பதே. எனவே அனுமானம் செய்ய எளிதாக ஒன்றையே இன்னொன்றிலும் தொடர்வது சங்கேத பாசையில் பொதுவானஒன்

கணேஷ் said...

deception point நாவலின் கரு உங்கள் கதையில் இருக்கிறது..//

கரு ஏற்க்கனவே சவால சிறுகதை போட்டியாளர்கள் கொடுத்தது.))

நன்றி கருத்துக்கு

Unknown said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

கணேஷ் said...

உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்)))

பெசொவி said...

சங்கேத வார்த்தை சரி, ஆனால் கொடுக்கப்பட்டுள்ள வாசகங்கள் (விஷ்ணு கோகுலிடம் சொல்வதும் அப்படி சொன்னது தவறான க்ளூ என்று பின்னர் சொல்வதும்) வேண்டுமென்றே இந்தக் கதையில் திணிக்கப்பட்டுள்ளது போல் தோன்றுகிறது.

By the way, the story is good, no doubt about it!

Unknown said...

அருமையான கற்பனை பாஸ்!

அருண் பிரசாத் said...

நடுவில் கொஞ்சம் குழப்புவது போல இருக்கு கனேஷ்... ஆனால் முடிவு நல்லா இருக்கு

கணேஷ் said...

பெசொவி //

அப்படியா இருக்கு ))

கருத்துக்கு நன்றிங்க

கணேஷ் said...

ஜீ...//

ரெம்ப நன்றி பாஸ் ))

கணேஷ் said...

அருண் பிரசாத் //

குழப்புதா கொஞ்சம் விரிவா எழுதியிருக்கனுமோ ??)

நம்பிக்கைபாண்டியன் said...

நல்ல முடிவு சற்றே பெரிதாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

middleclassmadhavi said...

வித்தியாசமான முயற்சி. வாழ்த்துக்கள்!