புதிய வறுமை.


    கிட்டத்தட்ட அந்த இடமே ஒரு விழா நடப்பது போலத்தான் இருந்தது.அங்கு இருந்தர்வர்களின் முகத்தில் ஒரு வெற்றி அல்லது முழுமையை அடைந்தவிட்ட சந்தோசம்.அந்த ஒருவர் மற்றும் அவரது குடும்பம் எல்லாம் ஒரு இடத்தில கூடியிருக்க அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லி எல்லோரும் அவர்களோடு சந்தோசத்தை பகிர்ந்து கொண்டு இருந்தனர்.

    நேற்று வரை துக்கத்தில் ஆழ்ந்து இருந்த அவரின் முகம் திடீரென்று பிரகாசமான வாழ்க்கைக்கு மாறியதால் அதன் அறிகுறியை எப்படி வெளிக்காட்டுவது என்பது தெரியாமல் திணறியது. 2071 ஆம் ஆண்டில் கண்டிப்பாக இது நிகழும் என யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்தான். ஆனால் இந்த மனிதர்களின் அறிவுதன்மை மாற்றிபோட்டுத்தான் விட்டது.

    சுமார் முப்பது ஆண்டுகளாகவே இந்த புரட்சி நடந்துவந்து இன்று இந்த மனிதனோடு முடிந்து இருக்கிறது.  உலகத்தில் இருந்த கடைசி வறுமை நிறைந்த அல்லது பிச்சைக்கார மனிதன். அவனைத்தான் இப்போது அரசாங்க உதவியுடன் நடுத்தர வாழ்க்கை வட்டத்துக்குள் சேர்த்து இருக்கிறார்கள். அவனுக்கு அடிப்படை வசதிகளை கொடுப்பதுடன் தெரிந்த வேலைகளை செய்து பிழைத்துகொள்ளுவதற்கு தேவையான உதவியும் அளிக்கபட்டு இருந்தது இப்போது.


    இதே முறையை பின்பற்றித்தான் மற்ற நாடுகளிலும் இந்த வெற்றியை சாதித்து இருந்தார்கள். எல்லா நாடுகளும் இதில் ஒற்றுமையாக செயல்பட்டதே வெற்றிக்கு காரணமும் கூட. உதவிகளை வழங்குவதோடு இல்லாமல் அதை எப்படி பயனுள்ள முறையில் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் தீவிரமாக கண்கணித்தார்கள். அப்படி செய்யாதவர்கள் கட்டயபடுத்தபட்டார்கள். சொல்லப்போனால் ஒரு ராணுவ நடவடி.க்கை போலத்தான் செய்தார்கள்.

     அதிலும் தன்னை மாற்றிக்கொள்ள விரும்பாதவர்கள் வேறு வழியன்றி அரசால் வலுக்கட்டாயமாக உயிர் துறந்தார்கள். தொடக்கத்தில் இந்த மாதிரியான உயிரிழப்புகள் நிறையா இருந்தாலும் நடப்பதை மக்கள் புரிந்து கொண்டதால் எல்லாம் சுமுகமாக நடந்து இன்று முடிந்ததே விட்டது.   இருந்தும் இதை தொடர்ந்து பல ஆண்டுகள் கண்காணிக்க எல்லா அரசுக்கும் உத்தரவு பிறப்பிக்க பட்டு இருந்தது.

    பொதுவாக எல்லா வீட்டு சுவர்களிலும் தினசரி விசயங்களை தெரிந்துகொள்ள அரசால இலவசமாக மாட்டப்பட்டு இருந்த மின் பத்திரிக்கையை காட்டும் திரையில் முதல் பக்கத்தில் அந்த செய்தி வந்தது.

     மனித இனத்தின் மாபெரும் வெற்றி. கடவுள் பெயரில்,சாதிகள், இனம்,மொழி போன்றவற்றின் ஆதிக்க பிடிகளினால் எங்கேயோ ஒரு இடத்தில கொஞ்சமாவது வறுமை இருக்கவே செய்தது. ஆனால் அது இன்று முற்றிலும் மாறி வறுமையே இல்லாத உலகம் நம்மால் படைக்கப்பட்டு இருக்கிறது.

    கடைசி மனிதன் என்ற பெயரில் ஒரு புகைப்படம் தெரிய அவருக்கு உதவிகள் வழங்குவதுபோல இன்னும் சில படங்கள். இதை நிறைவேற்ற நடைமுறைபடுத்தபட்ட திட்டங்காளால் இப்போதைக்கு மற்றும் எதிர்காலத்தில் வருகின்ற பிரச்சினைகளையும் சாமளிக்கும் விதத்தில் இன்னும் ஒரு சில மாற்றங்கள் செய்தால் ஒழிய இதை முழவதும் பின்பற்றுவது கடினம் எனவே மக்கள் அனைவரும் இதை சரியாக பின்பற்பற்றி பயனடையுமாறு அந்த செய்தி முடிவடைந்தது.

     அதே மின் பத்திரிக்கையில் எழாவது பக்கத்தில் ....அரசின் இயந்திர மனித ரோபோட்கள் போதுமான பராமரிப்பு ஆட்கள் இல்லாததால் அதிக செயல் இழப்பை சந்திக்கின்றன.   அரசு கொண்டு வந்த வறுமை ஒழிப்பு திட்டத்தின் ஒரு தாக்கமாக மக்களின் வாழ்க்கை தரம் வெகுவாக உயர்ந்தது. அதனால் வசதியடைந்த மனிதர்கள் சின்ன சின்ன வேலைகளை கூட செய்ய முன்வரவில்லை. அதாவது விவாசயம், தெருக்களை சுத்த படுதுததல் போன்ற பல அடிப்படை வேலைகள் செய்ய மறுத்ததால் மாற்று உதவியாக அரசு இயந்திரங்களை கொண்டு இந்த வேலைகளை செய்ய முடிவெடுத்து பல ரோபோட்களை வடிவமைத்து உருவாக்கியது.

    கடந்த சில வருடங்கள் இந்த இயந்திர மனிதர்ளின் உழைப்பில் நிலமை கொஞ்சம் சரியாகியிருந்தாலும் அடிக்கடி ஏற்ப்படும் சிறு தொழிநுட்ப கோளாறுகளை சரி செய்யாததால் அது பெரும் பிரச்சினைகளாக முடிந்தது. இதற்கு கரணம் ரோபோட்டை பழுது மற்றும் சீரமைக்கும் பணிக்கு ஆட்கள் இல்லாததே. இது சம்பந்தமான படிப்புகளில் பலர் தெரியிருந்தாலும் அவர்களின் வாழ்க்கை முறை மாற்றத்தால் இந்த மாதிரியான வேலைகளை செய்ய முன்வரவில்லை. இதே நிலை நீடித்தால் அரசின் நெருக்கடி இன்னும் அதிகரிக்கும். இந்த தருணங்களில் சில கண்டிப்பான சட்டங்கள் இயற்றவும் அரசு முடிவெடுத்து இருக்கிறது அதாவது கட்டாயமாக சிலர் இந்த பணியில் இடம்பெற்று அரசுக்கு உதவ வேண்டும் என்கிற விதத்தில் அது இருக்கும்.

     விருப்பமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். சிறப்பு சலுகைகள் அரசால வழங்கப்படும். என்று முடிகிற இடத்தில் தொடர்பு முகவரி கொடுக்க பட்டு இருந்தது.

    மெல்லிய இருட்டில் அந்த அறையின் கதவு மூடப்பட்டு இருந்தது. உள்ளே இருபது பேர் இருப்பதுக்கான இடம் இருந்தது. இருந்தார்கள். பழுது என்ற பெயரில் உள்ளே போடப்பட்ட ரோபோட்கள். சத்தம் குறைவாக பேசின.

    நமது திட்டத்தின் முதல் கட்டமாக கலந்தாய்வு செய்ய முக்கியமானவர்கள் பழுதடைந்தது போல காண்பித்து இந்த இடம் சேர்ந்தாயிற்று. இனி அடுத்த கட்டம் விசயங்களை விவாதித்து அடுத்து என்ன செய்ய போகிறோம் என்பதை நம்மவர்களுக்கு தெரிவிப்பது. முடிந்த வரை மனிதர்களின் கண்ணில் பட்டுவிடாமல் இருக்கவேண்டும். அதுக்கு நாம் பழுதடையும் நாடகத்தை இன்றே நிறுத்திவிட்டு நமது விவாதத்தை தொடங்குவோம் என்று சொல்ல எல்லாம் சரி என்பது போல தலை உயர்த்தியது.

   மனிதர்களின் உதவிக்கு நாம் படைக்கப்பட்டு இருந்தாலும் அவர்களை கட்டுபடுத்துவது எளிதுதான். அந்த வாய்ப்பை அவர்களே நமக்கு கொடுத்து இருக்கிறார்கள். அவர்கள் செய்த முதல் பெறும்தவறு சூழ்நிலைக்கு ஏற்ப நம்மால் கொஞ்சம் யோசிக்க கற்று கொடுத்து இருப்பதே. இதைத்தான் நாம் வெற்றிக்கு பயன்படுத்த போகிறோம்.

     என்னதான் வறுமையை ஒழித்து சீரான வாழ்வை கொடுத்தாலும் அவர்களின் பேராசை, கர்வம், தன்னை உயர்வாக காட்டிக்கொள்ளும் போக்கு இன்னும் பல மனித உணர்ச்சிகளால் அவர்கள் இந்த நிலமைக்கு வந்து இருக்கிறார்கள். இப்போது யாருமே பணத்துக்காக கவலை படுவதில்லை வேலைக்கு போக எண்ணுவதுமில்லை. தனக்கு கீழே வேலை செய்ய ஆள்வேண்டும் என்ற எண்ணமே நம்மை உருவாக்க காரணம். அவர்களின் அழிவுக்கும் இதுதான் காரணமும் கூட. இதே உணர்ச்சிகள் நமக்குள் வராமல் பார்த்துகொள்வதோடு நமக்குள்ளான ஒற்றுமையும் மிக அவசியம்.

    சிறிது நேர உரையாடலுக்குப் பிறகு சில விசயங்கள் செய்வதென நிறைவேறியது அவை

  தங்களுக்குள் இணைப்பை ஏற்படுத்த உலகில் உள்ள எல்லா ரோபோட்களையும் தகவல் பரிமாற்று முறையில் இணைப்பது

  தங்களுக்கென்று ஒரு செயல்பாட்டு திறமை கொண்ட தலமையை உருவாக்குவது.

  குறிப்பிட்ட சிலரை தேர்ந்து எடுத்து சிறப்பான யோசிக்கும் திறமையை கொடுப்பது

  முடிந்தவரை மனிதர்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் அனைத்து திட்டங்களையும் கையாள்வது.

   அப்படியே மனிதன் தான் அடிமைபடுத்த படுகிறோம் என்பதை உணர்ந்து எதிர்த்தால் அதற்கும் தனியாக சில அமைப்புகள் உருவாக்குவது. இதற்கு தேவையான சிறப்பு ரோபோட்களை தாங்களாகவே உருவாக்கிகொள்வது.

  மனிதர்களை முழுமையாக தனது கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தபிறகு அவர்களை வழிநடத்த திட்டங்களை வகுப்பது.

    கூட்டம் முடிந்தது என அறிவிப்பு வந்ததும் முதல் வேலைக்கென்று இரண்டு ரோபோட்களை ஒதுக்கி இருந்தார்கள். உலகில் பல்வேறு அரசால பயன்படுத்திவரும் ரோபோட்களை ஒரு கயிற்றில் இணைக்கும் வேலை. அதன் முதல் கட்டமாக மனிதன் பயன்படுத்தும் internet போன்ற தகவல் பரிமாற்ற  முறையை கைப்பற்றி அதான் மூலம் நிறைவேற்றுவதென முடிவாகி அதற்குண்டான வேலைகள் தொடங்கியது.

   அதே நேரத்தில் மனித உதவிகள் இல்லாமல் இது எல்லாம் சாத்தியமாகாது என்பதால் சில மனிதர்களை ஆசை காட்டி தங்களோடு வைத்து கொண்டு தங்களுக்கான வேலைகளை நிறைவேற்றிகொள்வது என்பதும் ஒருபுறம் இருக்க அன்றாடம் போல் மனிதன் இயல்பாக எதிர்வரும் ஒரு புதிய வறுமைக்காக பயணித்தான்...   


(இந்த கதை திரு.சூர்யஜீவா அவர்களின் கருத்துப்படி உலகத்தில் வறுமையே இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் என்பதின் என் சிறிய கற்பனை ))    

         

7 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சூப்பர் கணேஷ்...... அருமையான கற்பனை.... வறுமையின்மை, சோம்பேறித்தனம், ரோபோக்கள்..... சரியான லாஜிக்ஸ்.....!

HVL said...

பன்னிக்குட்டி சார் சொன்ன மாதிரி கரெக்டான லாஜிக்ஸ். ரொம்ப பிடிச்சிருந்தது!நல்லா யோசிக்கறீங்க!

கணேஷ் said...

அப்படியா ரெம்ப நன்றிங்க ரெண்டு பேருக்குமே ))

SURYAJEEVA said...

என்ன தான் மனிதன் பணக்காரனாய் மாறினாலும் அவன் சுயநலத்தை துறந்து விட மாட்டன் என்பது போல் இருந்த கடைசி பத்தி என்னை சிரிக்க வைத்தது... அற்புதமான முயற்சி...

குறையொன்றுமில்லை. said...

நல்ல கற்பனைதான்.

NaSo said...

:)))))

unknown said...

வணக்கம்
நல்ல கற்பனை , உண்மையே
தங்கள் வலைப்பதிவு மிக அருமை
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
என்றும் அன்புடன்
செழியன்.....