நீங்களே சொல்லுங்கள்......

     நீங்கள் தான்  சொல்லணும் ..உங்களைத்தான் ஒரு உதவியாளராக  நினைத்து என் பிரச்சினையை சொல்லுகிறேன்....
நான் ஒரு தவறு செய்து விட்டேன் .......இல்லை....இல்லை இதோடு சேர்த்து இரண்டு தவறுகள் ...முதல் தவறு கணேஷ் என்பவன் சுஜாதாவை உலகமாக நினைத்து ..கண்டதை படித்து.....ஒரு வலைப்பூ உருவாக்கி அதில் L = ETO என்ற தலைப்பில் ஒரு பதிவை போட்டு இருந்தான் அதை நான் முதலிலேயே பார்த்து படித்து இருந்தால் இந்த இரண்டாவது தவறு நடந்து இருக்காது.... என்ன செய்ய என் கெட்ட நேரம்...அதை படித்தது இரண்டாவது தவறை செய்த பின்தான்....

    அப்படி என்ன நீ பெரிய இரண்டாவது தவறு செய்து விட்டாய்? என்று நீங்கள் கேட்டால் அந்த கொடுமையை சொல்லுகிறேன் .....

   அவளுக்கும் எனக்கும் கொஞ்சம் இடைவெளிதான் இருந்தது....அந்த தூரத்தில் நான் அவளை பின் தொடர்ந்தேன்...

    அவள் ஒரு முறை என்ன பின்னால் திரும்பி பார்த்து விட்டு மீண்டும் அவள் வழியில் நடந்ததாள்....சற்று தூரம் சென்ற பிறகு மீண்டும் திரும்பி பார்த்தவள் அப்படியே நின்று என்னையே பார்த்து கொண்டிருந்தாள்....
அதை பார்த்தவுடன் என் நடையின் வேகம் குறைந்தது.....நான் சற்று தயங்கி தயங்கி அவளின் அருகே செல்ல....உனக்கு என்ன வேண்டும் நானும் பார்க்கிறேன் நீ தினமும் என் பின்ன்னாடியே வருகிறாய்.....என்று கோபமாய் கேட்டாள்.

   எனக்கு சற்று பேச பயமாய் இருந்தது...நாக்கு உளறியது..என்ன சொல்ல்வதென்று என்னக்கு அப்போது தெரியவில்லை..அதனால் ...சும்மாதான் என்று மட்டும் சொல்லி விட்டு அவளை பிரிந்து வேகமாக நடக்க ஆரம்பித்தேன்...

   அவள் சற்று நேரம் அதே இடத்தில நின்று விட்டு பின் அவளும் என்ன பின்னாடியே நடந்து வர ஆரம்பித்தாள்.

  மற்றொரு நாளும் அப்படியே நான் பின் தொடர்ந்தேன்......சற்று தூராம் சென்றவுடன் அவள் திரும்பி பார்த்தாள்..நான் வருவதை பார்த்தவுடன்...ஒரே இடத்தில நின்று என்னையே முறைத்து பார்த்தாள்....

   நான் ஏதும் அவளை கண்டு கொள்ளாதது  போல அவளை விலகி நடந்தேன்...

   இப்படியே பல நாட்கள் நான் அவளை பின் தொடர்வதும்...அவள் என்னை பார்த்து கண்டிப்பதும் தொடர்ந்த்தது...

   நிங்கள் கேட்ட்கலாம் அவளை நீ ஏன் காரணம் இல்லாமல் பின் தொடர்ந்தாய் என்று? காரணம் இல்லாமல் இல்லை ...அதற்க்கு ஒரு பெரிய காரணம் இருக்கின்றது.

  அவள் வேலை பார்ப்பது நான் வேலை பார்க்கும் கம்பெனிக்கு அருகில் உள்ள ஒரு கம்பெநியில்தான் அவளுக்கும் வேலை.

 தினமும் காலை வரும்போதும் போகும்போது நாங்கள் உபோயோகிப்பது அந்த ஒரே சாலையைத்தான்...

  நான் அவளை தினமும் காலை மாலை பார்ப்பதோடு சரி அதற்க்கு பிறகு அவளை வேறு எங்கும் பார்க்கமாட்டேன்.....

..அந்த இருமுறை பார்த்த பொழுதே அவளால் என் மனதில் காதல் எனும் பட்டாம் பூசசி பறக்க ஆரம்பித்தது.இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும் நான் ஏன் அவளை பின்தொடர்ந்தேன் என்று....

   ஆனால் ஒன்று இதுவரை அவள் பின்தொடர்ந்ததறக்கு அவளிடத்தில் இருந்து எதிர்வினையே எனக்கு கிடைத்ததே தவிர நன்மை ஒன்றும் இல்லை....

  இருந்தாலும் என் விடாமுயற்சிக்கு ஒருநாள் பயன் கிடைத்தது.....பாருங்க .....யார் யாரோ எதில் எல்லாம் விடாமுயற்சி செய்கிறார்கள் நான் என்னடா என்றால் இதில் விடாமுயற்சி செய்து இருக்கிறேன்.....

  என்ன இருந்தாலும் அந்த நாளை என்னால் மறக்க முடியாது .......

  அன்றும் அப்படியே நான் அவளின் பின்னால் செல்ல...அந்த சாலை கொஞ்சம் வெறிச்சோடி இருந்தது.... அன்று கொஞ்சம் அதிக இடைவெளி எங்களுக்குள் இருந்தது...எல்லாம் என் பயம்தான்....

     அவள் எப்போதும் போல நடந்து கொண்டிருந்த்தவள்..திடிரென்று..உட்கார்வது போல் உட்கார்ந்து அப்படியே கிழே சரிந்தாள்....
 
     நான் சற்று வேகமாக ஓடிப்போய் என்னவென்று அருகில் சென்று பார்த்தால் அவள் மயங்கி இருக்கிறாள்....அவள் பையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து கொஞ்சம் அவள் மூஞ்கியில் தெளித்த இரண்டு நிமிடத்தில் அவள் கண்களை திறந்தாள்....

    சற்று வேகமாக எழுந்து தனக்கு என்ன ஆனது என்பதை உணர்ந்து கொண்டாள்....என் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை பிடிங்கி கொண்டு வேகமாக நடக்க ஆரப்பித்தாள்....

    நிங்கள் ஒன்றும் அவள் இந்த கதைக்ககத்தான் மயங்கி விழுந்ததாள் என்று நினைக்க வேண்டாம்....அன்று வெள்ளிக்கிழமை அவள் அன்று முழு விரதமாம்...அதான் விழுந்து இருக்கிறாள்..இது அவளுடன் நான் நன்றாக பழகிய பின்னர்தான் ஒருமுறை கேட்டு தெரிந்துகொண்டேன்.....

  அடுத்த நாள் நான் வரும்போது அவளேதான் பேசினாள்...அவள் என்ன சொல்லி இருப்பாள் என்று நீங்களே சொல்ல முடியும்......

     அன்று நான் அவளுக்கு செய்த உதவிக்கு நன்றி சொன்னாள்...நானும் கொஞ்சம் பல்லை இழித்துவைத்தேன்...அதோடு மட்டும் இல்லாமல் என்ன வேலை செய்கிறாய்....எங்கிருக்கிறாய்....போன்ற நாட்டுக்கு முக்கியமான கேள்விகளை நாங்கள் இருவருமே கேட்டுக்கொண்டோம்.

அடுத்து வந்த நாள்களில் நான் முதலில் வந்தாலும் சரி இல்லை அவள் முதலில் வந்தாலும் சரி இருவரும் ஒருவருக்காக காத்திருந்து நாங்கள் போக வேண்டிய இடம் நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.....இங்குதான் ஆரம்பித்தது வினை...


அவளது நடத்தையிலும் சரி ஏன் நடத்தையிலும் சரி கொஞ்சம் மற்றம் ஏற்பட்டது...ஒருநாள் அவளை பார்க்க வில்லை என்றாலும் கூட எதோ இந்த உலகமே இருண்டு போய்விட்டதுபோல் எனக்கு இருந்தது...

அதிகமாக கனவில் வந்தாள்...தூக்கம் கெடுத்தாள்....எதோ என் மனதில் இனம் புரியாத மற்றம் மற்றும் வலியினை கொடுத்தாள்....

அவளுக்கும் அப்படித்தான் இருந்து இருக்கும் என நான் நினைத்ததுதான் மிகப்பெரிய தவறு....

இருந்தும் அவள் பழ்கும்போது அவள் மனதில் என்ன இருக்கின்றது என்பதை கொஞ்சம் கூட கணிக்க முடியவில்லை....

இருந்தும் அவள் நன்றாக பழகினாள்.... முண்பைவிட அதிகம் கனவில் வந்து தொல்லைகொடுத்தாள்...காதல் கவிதை எழுத வைத்தாள்...

எதோ எனக்குள் நான் ஒரு புதிய மனிதனாக ஆகியது போல உணர வைத்தாள்....இது எல்ல்லாம் ஒரு மண்ணும் இல்லை என்பது பிறகுதான் எனக்குத் தெரிய வந்தது...


என்னுள் இருந்த இந்த மாற்றங்களை வைத்து இது காதல் என்று நினைத்து இருந்ததால் நிங்கள் அறிவாளி.... இதற்க்க்காகத்தனே அவள் பின்னாடி நான் சுற்றியது....

அதை சோதிக்கத்தான்...ஒரு நாள் அவளிடம் கேட்டேன்...காதலைப்பற்றி என்ன நினைக்கின்றாய் என்று?

அதற்க்கு அவள் காதல் புனிதமானது...தெயவிகமானது....இரண்டு உடல் ஒரு மணம் கொண்டு வாழ  முடியும் என்றால் அது காதலில் மட்டும்தான்..இன்னும் அந்த நாசமாய் போன காதலைப்பற்றி நிறையா சொன்னால் அந்த கருமம் எல்லாம் எனக்கு இப்போது நினைவுக்கு வரமாட்டேங்கின்றது....

அன்று இரவு என் மனதில் ஆயிரம் பட்டம்புச்சிகள் இங்கும் அங்கும் பறந்து எனது தூகக்கத்தை முற்றிலும் கெடுத்து தொலைத்தன.....

அன்றுதான் இந்த முடிவையும் எடுத்தேன்..அது அவளிடம் என் காதலை சொல்ல வேண்டும் என்று....

அன்று மாலை இருவரும் நடந்து வரும்போது நான் தான் ஆரம்பித்தேன்....எப்படி ஆரம்பிப்பது..எப்படி முடிப்பது என்று தெரியாமல் எனக்கு உன்னை பார்க்கும்போது என்னுள் எதோ ஒரு மாற்றம் ஏற்படுகின்றது...எனக்கு உன்னை ரெம்ப பிடித்து இருக்கின்றது...என்று சிறு பிள்ளை மாதிரி உளறியப்டியே எப்படியோ சொல்லி முடித்தேன்....

இதற்க்கு அவளின் பதிலை எதிர்பாத்து அவள முகத்தை பார்த்தேன்...ஆனால் அவளோ என்னை முறைத்து பார்த்துவிட்டு என்னைவிட வேகமாக நடந்து சென்று விட்டாள்....

எனக்கு அது பெரிய ஏமாற்றமாக இருந்தது ..இருந்தாலும் மனதில் ஒரு நம்பிக்கை இருந்தது....அவள் எப்படியும் ஒத்துக்கொண்டு விடுவாள்..என்று..ஆனால் எனக்கு மிஞ்சியது ஏமாற்றமே .......

மறுநாள் மாலை அவள் எனக்காக காத்திருக்க வில்லை... அவள் சற்று தூரத்தில் சென்று கொண்டிருந்தாள்....நான் வேகமாக சென்று அவளிடத்தில் என்ன நேற்று ஒரு பதிலும் சொல்லாமல் போய்விட்டாய்? என்றேன்....

அதற்க்கு அவள் இனிமேல் என்னை பின்தொடரதே....உன்னிடம் பேச எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டு அவள் வழியில் நடக்க ஆரம்பித்தாள்......


 இப்போதுதான் உங்களின் நேரம் ஆரம்பிக்கின்றது...இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று நிங்களே சொல்லுங்கள்...

ஏனென்றால் நான் படித்த காதல் செய்வது எப்படி என்ற புத்தகத்தில் இதற்கு அல்லது இந்த மாதிரி ஒரு பெண் சொல்லி விட்டால் அடுத்து என்ன செய்யவேண்டும் என்று அதில் கொடுக்க வில்லை...

இதுதான் ஏன் பிரச்சினை...அந்த புத்தகம் படித்ததற்காக..அவளை காதலித்து பார்க்க பொய் அவள் அதை மறுக்க ...உணமையில் பாதிப்பு என்னவோ எனக்குத்தான்....



அந்த புத்தகத்தில் காதலிக்க மட்டும்தாம் சொல்லி கொடுத்து இருந்தார்கள்....அதற்கு பிறகு அவள் கனவில் வந்து தொல்லை கொடுத்தால் அதை எப்படி சாமளிப்பது....இல்லை அவள் காதலை மறுத்தால் என்ன செய்வது என்று அதில் சொல்ல வில்லை....

இந்த புத்தகத்தை முதலில் படிக்கும் முன் அந்த கணேஷ் எழுதிய L = ETO  என்ற பதிவை படித்து இருந்தால் இதை முயன்று இருக்க மாட்டேன்...

எப்படியோ இதில் மட்டிவிட்டேன்...இன்னும் அவள் என் மனதை அதிகம் துன்பபடுத்துகிறாள்....கனவில் வருகிறாள்..ஆனால் நிஜத்தில் என்ன விலகி ஓடுகிறாள் ..இதற்க்கு பதில் அந்த புத்தகத்தில் இல்லை ..



சொல்லுங்கள் நான் அடுத்து என்ன செய்ய?

0 comments: